அத்தியாயம் 4
ஹீல்ஸ் செப்பல், முட்டி வரை உடை, குதிரைவால் முடி, அடையாள ஆரம்பத்துடன் ஒய்யாரமாய் நடந்து ARS கம்பெனிக்குள் நுழைந்தாள் அவள் ப்ரியா.
நாளை மதியம் கம்பெனிக்கு அந்த பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என்று பெரிதும் நம்பி இருந்தாள் ரிது.
ஆனந்த் அந்த அளவு துல்லியமாக அனைத்தையும் தயார் செய்து ஒரு மீட்டிங்கும் வைத்து எளிதாய் புரிய வைத்திருந்தான்.
அதற்கான வேலைகளையும் டிசைனையும் தயார் செய்ய காலையில் முன்னதாகவே கிளம்பி வந்து அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தாள்.
அன்று ஆனந்த் வெளியில் வேலை இருந்ததால் ஆபீஸ் வர லேட்டாகும் என முன்பே போன் செய்திருந்தான்.
ப்ரியா வந்ததை ரிது கவனிக்கவில்லை. ஆனந்த் அறை கதவு அறைந்து சாத்தப்பட்ட சத்தத்தில் திரும்பி ரிது பார்ப்பதற்குள் உள்ளே சென்று விட்டாள் அவள்.
ஆனந்த் ஆபீஸ் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து அவன் சீட்டில் அமர்ந்திருந்தாள் ப்ரியா.
'சார் வர லேட்டாகும்னு சொன்னாங்களே?' என்று யோசித்த ரிது சுற்றிமுற்றி பார்க்க, அங்கே யாரும் இன்னும் வந்திருக்கவில்லை.
அதற்குள் வந்துவிட்டாரா என்று யோசித்தவள் டிசைனை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.
அவன் அறைக்கு வெளியே அனுமதி கேட்டு கதவை தட்ட, அவள் கேட்ட குரலில் 'யாராக இருக்கும்?' என்று எண்ணியவாறு உள்நுழைந்தாள்.
அங்கு அமர்ந்திருந்தவளை பார்த்ததும் ஒருவேளை ஆனந்த் தங்கையாக இருக்குமோ என்று நினைத்தவள். பின் இல்லை என்று புரிந்து கொண்டாள். யார் அவள்?
"யார் நீ?" என்று தான் கேட்க நினைத்ததை அந்த பெண் ரிதுவிடம் கேட்டாள்.
'இவளுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்' என்று நினைத்தாலும் அவள் இருக்கும் இடம் ஆனந்தின் இடம் அல்லவா!.
"நான் ரிது பர்ணா. ஆனந்த் சார் செகிரேட்டரி" என்று சுருக்கமாக கூறினாள்.
"ஓஹ்! நியூ ஜாயின் நீ தானா?" என்றதும் எல்லாம் தெரிந்து தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தாள் ரிது.
ஏனோ அவளின் தோற்றம், பேச்சு எதுவும் ரிதுவிற்கு பிடிக்கவில்லை.
ரிதுவை அளவிடுவது போல ஒரு பார்வை பார்த்து விட்டு, "நான் வருகிறேன்" என்று கிளம்பினாள்.
"சார்கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?" என்று ரிது அவளை பற்றி தெரிந்து கொள்ள கேட்க,
அவளோ "வைஃப் வந்து வெயிட் பன்னிட்டு கிளம்பிட்டாங்கனு சொல்லிடு" என்றாள்.
வைஃபா? என்று அதிர்ச்சியில் சிலையாகி விட்டாள் ரிது.
ஆனந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா? அப்பா அப்படி ஏதும் இதுவரை சொல்லி இருக்கவில்லையே?
ஏன் அன்று அப்பாவின் விழாவிற்கு கூட ஆனந்த் அம்மாவும், அப்பாவும் தானே கலந்து கொண்டார்கள்? மனைவி பற்றி யாரும் ஏதும் கூறியது இல்லையே என்று யோசித்தாள்.
அவளது ஆராய்ச்சி செய்யும் மூளையை இதில் வேஸ்ட் செய்தாள். இதற்கு பதில், தனக்கு ஏன் ஆனந்தின் மனைவி பற்றி இவ்வளவு அக்கறை என்று யோசித்து இருந்தால் அவள் காதல் அவளுக்கே புரிந்து இருக்குமோ என்னவோ! அதற்குள் ப்ரியா கிளம்பி விட்டிருந்தாள்.
ரிதுவிற்கு தலை வலியே வந்து விட்டது. அவள் டேபிள் மேல் தலை கவிழ்ந்து படுத்திருக்க அப்போது உள்ளே வந்தான் ஆனந்த்.
"என்ன ஆயிற்று இவளுக்கு? உடம்புக்கு முடிலயா?" என்று எண்ணி கொண்டு அவள் அருகே செல்ல இருந்தவன்,
'தான் அங்கே சென்றால் அங்கே இருக்கும் அனைவருக்கும் தவறாக பேச இது ஒரு வாய்ப்பாக மாறிவிடும்' என்று எண்ணி தன் அறைக்கு சென்று அவளை அழைத்தான்.
உள்ளே நுழைந்த ரிதுவோ முகத்தில் ஏதும் காட்டி கொள்ளவில்லை.
"ரிது அந்த PNM ப்ராஜெக்ட் ஃபைல் கொண்டு வாங்க" என்றான்.
அவன் வேண்டும் என்றே மிஸ்ஸை மிஸ் செய்திருந்தான்.
ஆனால் இப்போது ரிது குழம்பவில்லை. தெளிவாக இருப்பதாக நினைத்து கொண்டாள்.
அவன் கேட்ட ப்ராஜெக்ட் ஃபைலை கொடுத்தவள் "உங்க மனைவி வந்திருந்தாங்க சார்" என்று ஏதோ செய்தி போல வேறு எங்கோ பார்த்து கூறினாள்.
"வாட்? எப்போ" என்று கத்தியே விட்டிருந்தான் ஆனந்த்.
"மார்னிங் சார்" என்று சொல்லி கொண்டே அவள் திரும்பி அவனை பார்க்க, அவன் போன் பேசி கொண்டிருப்பது தெரிந்தது.
அவள் யோசனையில் இருந்ததில் அவன் மொபைல் சத்தம் அவளுக்கு கேட்டிருக்கவில்லை. மொபைலில் வந்த செய்தியில் அவள் கூறியதை அவனும் கேட்டிருக்கவும் இல்லை.
பதட்டதுடன் அவன் கிளம்புவது தெரிந்தது. "யாருக்கு என்ன? ஏன் இப்படி ஓடுகிறன்" என்று யோசிக்கும் முன்,
"ரிது! யார் வந்தாலும் அப்பாக்கு காண்டாக்ட் பண்ணுங்க.டோன்ட் கால் மீ" என்றவன் சென்ற வேகம் கொஞ்சம் அல்ல.
ஆனந்த் நேராக வந்த இடம் கேதார் ஹாஸ்பிடல்.
வாசலில் நின்று இருந்த பெண் அவனை பார்த்ததும் அண்ணா என்று அழ ஆரம்பிக்க அப்போது தான் அங்கிருந்த பெரியவர்களும் அவனை கண்டனர்.
"என்ன ஆச்சு ஜோதி?" என்று ஆனந்த் கேட்க, நடந்ததை கூறினாள் ஜோதி. விக்ரமின் தங்கை.
ஜோதி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருப்பவள்.
விக்ரம் ஆனந்த்தின் நண்பன். விஷம் குடித்து ஹாஸ்பிடலில் அனுமதித்து இருப்பதாக அவன் தங்கை ஜோதி போனில் கூற அதிர்ந்து விட்டான் ஆனந்த்.
விக்ரம் தன்னை விட தன்னம்பிக்கை, தைரியம், யோசித்து முடிவெடுக்க்கும் திறன் அனைத்தும் உடையவன்.
அதைவிடவும் அவன் பேச்சு. பேசியே கொள்ளாதே டா! என்று கூறும் அளவு சிரித்து பேசுபவன்.
அவன் எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தான் என்று நம்பவே முடியவில்லை ஆனந்திற்கு.
விக்ரம் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதால் அம்மா, அப்பா என்றே அழைப்பான் அவன் பெற்றோரை.
அதே போல் தான் ஆனந்த் வீட்டில் விக்ரமை ஆனந்த் போலவே அழைப்பது.
அனைத்தையும் கேட்ட ஆனந்திற்கு, ஒன்றும் புரியவில்லை.
விக்ரம் ஒரு பெண்ணை விரும்பினான் என்பதே ஆனந்திற்கு நம்ப முடியவில்லை.
அவன் எதையும் இவனிடமோ இல்லை மற்றொரு நண்பன் சுரேஷிடமோ மறைத்தது இல்லையே. மூவருமே அவ்வளவு நெருங்கிய நண்பர்கள்.
"அவள் பணக்காரன் கிடைத்தவுடன் இவனை விட்டுவிட்டாள்" என்பதையும் ஆனந்த்தால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
அப்படி என்றாள் அவள் இவனை விரும்பவில்லை. பணத்தை அல்லவா விரும்பி இருக்கிறாள்? இப்படிப்பட்ட பெண்ணை எப்படி விக்ரம் விரும்பினான்?
அதற்கு ஏன் முட்டாள் இப்படி செய்தான்?. இவனை கைகாட்டி தானே தன் வீட்டில் தன்னை குறை சொல்வார்கள்?
அவன் எப்படி ஏமாந்தான். எவ்வளவு யோசித்தும் ஆனந்திற்கு ஏதும் விளங்கவே இல்லை.
அப்போது வந்த டாக்டர் "பேசண்ட் இப்போ கிரிட்டிகள் சிட்டுவேசன் தாண்டிட்டாங்க. இப்போ நீங்க போய் பாக்கலாம். ஏதும் ஸ்ட்ரெஸ் ஆகுற மாதிரி பேசவேண்டாம்" என்றதும்,
விக்ரம் அம்மா, அப்பா உள்ளே செல்ல யோசனையாக அமர்ந்திருந்தான் ஆனந்த்.
ஆனந்த் வரும் வழியிலே அப்பாவிற்கு கூறி இருந்ததால் ரகு சுகன்யாவுடன் ஹாஸ்பிடல் வந்து விட்டனர்.
அப்போது வெளியே வந்த விக்ரம் அம்மா, அப்பாவிற்கு ஆறுதல் கூறி அவர்களும் உள்ளே சென்று பார்த்து வந்தனர்.
ஒரு முடிவுடன் அறைக்குள் விக்ரம் இருந்த நுழைந்தான் ஆனந்த்.
விக்ரம் கண்களை மூடி அமர்ந்திருந்தான். அவன் மேல் கோபம் இருந்தாலும் இங்கு காட்ட வேண்டாம் என்று நினைத்து தான் உள்ளே வந்தான்.
விக்ரம் கண்களை திறக்கும் போது ஆனந்த் நிற்பது தெரிய குற்ற உணர்ச்சியில் அவனை பார்க்க முடியவில்லை விக்ரமிற்கு.
கோபத்தில் ஏதும் பேசி விட கூடாது என்று "உடம்பை பார்த்துக்கோ" என்று விட்டு வெளியே செல்ல முயல,
அவன் கையை பிடித்து தடுத்து 'சாரி டா' என்றான் விக்ரம். ஏதும் சொல்லாமல் கையை விடுவித்து கொண்டு சென்று விட்டான்.
நேரே ஆனந்த் சென்றது விக்ரமின் வீடு. விக்ரம் ரொம்ப அழுத்தம் இல்லை என்றாலும் அவனாக சொல்லாமல் அவனிடம் இருந்து வார்த்தைகளை வாங்கிட முடியாது.
அவனிடம் கெஞ்சியோ, கொஞ்சியோ விஷயத்தை வாங்க முடியாது. அப்படி சொல்வது என்றால் காதலிப்பதை மறைத்திருக்க மாட்டானே.
அந்த பெண் தான் சொல்ல வேண்டாம் என்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்.
அவசரமாக ஹாஸ்பிடல் கிளம்பியதில் வீடு லாக் மட்டுமே போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவன் நேராக விக்ரம் ரூமில் நுழைந்தான்.
அனைத்தையும் அலசி ஆராய்ந்தான். ஆனால் எந்த ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லை.
'அவ்வளவு அழுத்தமாடா நீ' என்று எண்ணிய போது டேபிள் மேல் ஒரு பர்ஸ் கிடந்தது. விக்ரம் பர்ஸ் என நினைத்தவன் அதை பிரித்து பார்த்தான்.
உள்ளே அம்மா அப்பா இருக்கும் போட்டோ இருந்தது. அதை பார்த்ததும் அவன் கோபம் கொஞ்சம் மட்டுபட்டு விட அதை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு திரும்பினான்.
பின் ஏதோ நினைத்தவன் அந்த பர்சை மீண்டும் எடுத்து அந்த போட்டோவை வெளியே எடுக்க அதில் ஒன்றன் பின் ஒன்றாக ஜோதி போட்டோ அடுத்து விக்ரம் சுரேஷுடன் இருக்கும் போட்டோவும் இருந்தது.
ஆனால் அடுத்ததாக அவன் பார்த்த போட்டோவை அவன் கண்களால் நம்பவே முடியவில்லை.
அவன் உதடுகள் மட்டும் தானாக சொல்லியது
ரி... து...!.
காதல் தொடரும்..
ஹீல்ஸ் செப்பல், முட்டி வரை உடை, குதிரைவால் முடி, அடையாள ஆரம்பத்துடன் ஒய்யாரமாய் நடந்து ARS கம்பெனிக்குள் நுழைந்தாள் அவள் ப்ரியா.
நாளை மதியம் கம்பெனிக்கு அந்த பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என்று பெரிதும் நம்பி இருந்தாள் ரிது.
ஆனந்த் அந்த அளவு துல்லியமாக அனைத்தையும் தயார் செய்து ஒரு மீட்டிங்கும் வைத்து எளிதாய் புரிய வைத்திருந்தான்.
அதற்கான வேலைகளையும் டிசைனையும் தயார் செய்ய காலையில் முன்னதாகவே கிளம்பி வந்து அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தாள்.
அன்று ஆனந்த் வெளியில் வேலை இருந்ததால் ஆபீஸ் வர லேட்டாகும் என முன்பே போன் செய்திருந்தான்.
ப்ரியா வந்ததை ரிது கவனிக்கவில்லை. ஆனந்த் அறை கதவு அறைந்து சாத்தப்பட்ட சத்தத்தில் திரும்பி ரிது பார்ப்பதற்குள் உள்ளே சென்று விட்டாள் அவள்.
ஆனந்த் ஆபீஸ் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து அவன் சீட்டில் அமர்ந்திருந்தாள் ப்ரியா.
'சார் வர லேட்டாகும்னு சொன்னாங்களே?' என்று யோசித்த ரிது சுற்றிமுற்றி பார்க்க, அங்கே யாரும் இன்னும் வந்திருக்கவில்லை.
அதற்குள் வந்துவிட்டாரா என்று யோசித்தவள் டிசைனை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.
அவன் அறைக்கு வெளியே அனுமதி கேட்டு கதவை தட்ட, அவள் கேட்ட குரலில் 'யாராக இருக்கும்?' என்று எண்ணியவாறு உள்நுழைந்தாள்.
அங்கு அமர்ந்திருந்தவளை பார்த்ததும் ஒருவேளை ஆனந்த் தங்கையாக இருக்குமோ என்று நினைத்தவள். பின் இல்லை என்று புரிந்து கொண்டாள். யார் அவள்?
"யார் நீ?" என்று தான் கேட்க நினைத்ததை அந்த பெண் ரிதுவிடம் கேட்டாள்.
'இவளுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்' என்று நினைத்தாலும் அவள் இருக்கும் இடம் ஆனந்தின் இடம் அல்லவா!.
"நான் ரிது பர்ணா. ஆனந்த் சார் செகிரேட்டரி" என்று சுருக்கமாக கூறினாள்.
"ஓஹ்! நியூ ஜாயின் நீ தானா?" என்றதும் எல்லாம் தெரிந்து தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தாள் ரிது.
ஏனோ அவளின் தோற்றம், பேச்சு எதுவும் ரிதுவிற்கு பிடிக்கவில்லை.
ரிதுவை அளவிடுவது போல ஒரு பார்வை பார்த்து விட்டு, "நான் வருகிறேன்" என்று கிளம்பினாள்.
"சார்கிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?" என்று ரிது அவளை பற்றி தெரிந்து கொள்ள கேட்க,
அவளோ "வைஃப் வந்து வெயிட் பன்னிட்டு கிளம்பிட்டாங்கனு சொல்லிடு" என்றாள்.
வைஃபா? என்று அதிர்ச்சியில் சிலையாகி விட்டாள் ரிது.
ஆனந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா? அப்பா அப்படி ஏதும் இதுவரை சொல்லி இருக்கவில்லையே?
ஏன் அன்று அப்பாவின் விழாவிற்கு கூட ஆனந்த் அம்மாவும், அப்பாவும் தானே கலந்து கொண்டார்கள்? மனைவி பற்றி யாரும் ஏதும் கூறியது இல்லையே என்று யோசித்தாள்.
அவளது ஆராய்ச்சி செய்யும் மூளையை இதில் வேஸ்ட் செய்தாள். இதற்கு பதில், தனக்கு ஏன் ஆனந்தின் மனைவி பற்றி இவ்வளவு அக்கறை என்று யோசித்து இருந்தால் அவள் காதல் அவளுக்கே புரிந்து இருக்குமோ என்னவோ! அதற்குள் ப்ரியா கிளம்பி விட்டிருந்தாள்.
ரிதுவிற்கு தலை வலியே வந்து விட்டது. அவள் டேபிள் மேல் தலை கவிழ்ந்து படுத்திருக்க அப்போது உள்ளே வந்தான் ஆனந்த்.
"என்ன ஆயிற்று இவளுக்கு? உடம்புக்கு முடிலயா?" என்று எண்ணி கொண்டு அவள் அருகே செல்ல இருந்தவன்,
'தான் அங்கே சென்றால் அங்கே இருக்கும் அனைவருக்கும் தவறாக பேச இது ஒரு வாய்ப்பாக மாறிவிடும்' என்று எண்ணி தன் அறைக்கு சென்று அவளை அழைத்தான்.
உள்ளே நுழைந்த ரிதுவோ முகத்தில் ஏதும் காட்டி கொள்ளவில்லை.
"ரிது அந்த PNM ப்ராஜெக்ட் ஃபைல் கொண்டு வாங்க" என்றான்.
அவன் வேண்டும் என்றே மிஸ்ஸை மிஸ் செய்திருந்தான்.
ஆனால் இப்போது ரிது குழம்பவில்லை. தெளிவாக இருப்பதாக நினைத்து கொண்டாள்.
அவன் கேட்ட ப்ராஜெக்ட் ஃபைலை கொடுத்தவள் "உங்க மனைவி வந்திருந்தாங்க சார்" என்று ஏதோ செய்தி போல வேறு எங்கோ பார்த்து கூறினாள்.
"வாட்? எப்போ" என்று கத்தியே விட்டிருந்தான் ஆனந்த்.
"மார்னிங் சார்" என்று சொல்லி கொண்டே அவள் திரும்பி அவனை பார்க்க, அவன் போன் பேசி கொண்டிருப்பது தெரிந்தது.
அவள் யோசனையில் இருந்ததில் அவன் மொபைல் சத்தம் அவளுக்கு கேட்டிருக்கவில்லை. மொபைலில் வந்த செய்தியில் அவள் கூறியதை அவனும் கேட்டிருக்கவும் இல்லை.
பதட்டதுடன் அவன் கிளம்புவது தெரிந்தது. "யாருக்கு என்ன? ஏன் இப்படி ஓடுகிறன்" என்று யோசிக்கும் முன்,
"ரிது! யார் வந்தாலும் அப்பாக்கு காண்டாக்ட் பண்ணுங்க.டோன்ட் கால் மீ" என்றவன் சென்ற வேகம் கொஞ்சம் அல்ல.
ஆனந்த் நேராக வந்த இடம் கேதார் ஹாஸ்பிடல்.
வாசலில் நின்று இருந்த பெண் அவனை பார்த்ததும் அண்ணா என்று அழ ஆரம்பிக்க அப்போது தான் அங்கிருந்த பெரியவர்களும் அவனை கண்டனர்.
"என்ன ஆச்சு ஜோதி?" என்று ஆனந்த் கேட்க, நடந்ததை கூறினாள் ஜோதி. விக்ரமின் தங்கை.
ஜோதி கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருப்பவள்.
விக்ரம் ஆனந்த்தின் நண்பன். விஷம் குடித்து ஹாஸ்பிடலில் அனுமதித்து இருப்பதாக அவன் தங்கை ஜோதி போனில் கூற அதிர்ந்து விட்டான் ஆனந்த்.
விக்ரம் தன்னை விட தன்னம்பிக்கை, தைரியம், யோசித்து முடிவெடுக்க்கும் திறன் அனைத்தும் உடையவன்.
அதைவிடவும் அவன் பேச்சு. பேசியே கொள்ளாதே டா! என்று கூறும் அளவு சிரித்து பேசுபவன்.
அவன் எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தான் என்று நம்பவே முடியவில்லை ஆனந்திற்கு.
விக்ரம் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதால் அம்மா, அப்பா என்றே அழைப்பான் அவன் பெற்றோரை.
அதே போல் தான் ஆனந்த் வீட்டில் விக்ரமை ஆனந்த் போலவே அழைப்பது.
அனைத்தையும் கேட்ட ஆனந்திற்கு, ஒன்றும் புரியவில்லை.
விக்ரம் ஒரு பெண்ணை விரும்பினான் என்பதே ஆனந்திற்கு நம்ப முடியவில்லை.
அவன் எதையும் இவனிடமோ இல்லை மற்றொரு நண்பன் சுரேஷிடமோ மறைத்தது இல்லையே. மூவருமே அவ்வளவு நெருங்கிய நண்பர்கள்.
"அவள் பணக்காரன் கிடைத்தவுடன் இவனை விட்டுவிட்டாள்" என்பதையும் ஆனந்த்தால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
அப்படி என்றாள் அவள் இவனை விரும்பவில்லை. பணத்தை அல்லவா விரும்பி இருக்கிறாள்? இப்படிப்பட்ட பெண்ணை எப்படி விக்ரம் விரும்பினான்?
அதற்கு ஏன் முட்டாள் இப்படி செய்தான்?. இவனை கைகாட்டி தானே தன் வீட்டில் தன்னை குறை சொல்வார்கள்?
அவன் எப்படி ஏமாந்தான். எவ்வளவு யோசித்தும் ஆனந்திற்கு ஏதும் விளங்கவே இல்லை.
அப்போது வந்த டாக்டர் "பேசண்ட் இப்போ கிரிட்டிகள் சிட்டுவேசன் தாண்டிட்டாங்க. இப்போ நீங்க போய் பாக்கலாம். ஏதும் ஸ்ட்ரெஸ் ஆகுற மாதிரி பேசவேண்டாம்" என்றதும்,
விக்ரம் அம்மா, அப்பா உள்ளே செல்ல யோசனையாக அமர்ந்திருந்தான் ஆனந்த்.
ஆனந்த் வரும் வழியிலே அப்பாவிற்கு கூறி இருந்ததால் ரகு சுகன்யாவுடன் ஹாஸ்பிடல் வந்து விட்டனர்.
அப்போது வெளியே வந்த விக்ரம் அம்மா, அப்பாவிற்கு ஆறுதல் கூறி அவர்களும் உள்ளே சென்று பார்த்து வந்தனர்.
ஒரு முடிவுடன் அறைக்குள் விக்ரம் இருந்த நுழைந்தான் ஆனந்த்.
விக்ரம் கண்களை மூடி அமர்ந்திருந்தான். அவன் மேல் கோபம் இருந்தாலும் இங்கு காட்ட வேண்டாம் என்று நினைத்து தான் உள்ளே வந்தான்.
விக்ரம் கண்களை திறக்கும் போது ஆனந்த் நிற்பது தெரிய குற்ற உணர்ச்சியில் அவனை பார்க்க முடியவில்லை விக்ரமிற்கு.
கோபத்தில் ஏதும் பேசி விட கூடாது என்று "உடம்பை பார்த்துக்கோ" என்று விட்டு வெளியே செல்ல முயல,
அவன் கையை பிடித்து தடுத்து 'சாரி டா' என்றான் விக்ரம். ஏதும் சொல்லாமல் கையை விடுவித்து கொண்டு சென்று விட்டான்.
நேரே ஆனந்த் சென்றது விக்ரமின் வீடு. விக்ரம் ரொம்ப அழுத்தம் இல்லை என்றாலும் அவனாக சொல்லாமல் அவனிடம் இருந்து வார்த்தைகளை வாங்கிட முடியாது.
அவனிடம் கெஞ்சியோ, கொஞ்சியோ விஷயத்தை வாங்க முடியாது. அப்படி சொல்வது என்றால் காதலிப்பதை மறைத்திருக்க மாட்டானே.
அந்த பெண் தான் சொல்ல வேண்டாம் என்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டான்.
அவசரமாக ஹாஸ்பிடல் கிளம்பியதில் வீடு லாக் மட்டுமே போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவன் நேராக விக்ரம் ரூமில் நுழைந்தான்.
அனைத்தையும் அலசி ஆராய்ந்தான். ஆனால் எந்த ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லை.
'அவ்வளவு அழுத்தமாடா நீ' என்று எண்ணிய போது டேபிள் மேல் ஒரு பர்ஸ் கிடந்தது. விக்ரம் பர்ஸ் என நினைத்தவன் அதை பிரித்து பார்த்தான்.
உள்ளே அம்மா அப்பா இருக்கும் போட்டோ இருந்தது. அதை பார்த்ததும் அவன் கோபம் கொஞ்சம் மட்டுபட்டு விட அதை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு திரும்பினான்.
பின் ஏதோ நினைத்தவன் அந்த பர்சை மீண்டும் எடுத்து அந்த போட்டோவை வெளியே எடுக்க அதில் ஒன்றன் பின் ஒன்றாக ஜோதி போட்டோ அடுத்து விக்ரம் சுரேஷுடன் இருக்கும் போட்டோவும் இருந்தது.
ஆனால் அடுத்ததாக அவன் பார்த்த போட்டோவை அவன் கண்களால் நம்பவே முடியவில்லை.
அவன் உதடுகள் மட்டும் தானாக சொல்லியது
ரி... து...!.
காதல் தொடரும்..