மெய் நிகரா பூங்கொடியே - 55
நித்திலா கோபத்தில் தான் அவ்வாறு கூறினாள். அவன் மீது காதல்வயப்பட்டவளுக்கு எப்படி அவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கை இனிக்கும்?
உதாசீனமாக கிருஷ்ணராஜசாகர் பேசவும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் அடங்கி ஏமாற்றத்திலும் கழிவிரக்கத்திலும் அழ மட்டுமே தோன்றியது.
மனம் நினைத்ததும் கண்கள் கண்ணீரை உகுக்க ஆரம்பித்தன.
கிருஷ்ணராஜசாகர் அழுபவளைப் பார்த்ததும் சற்று அமைதியானவன் அவனது மொபைல் இசைக்கவும் அழைப்பை ஏற்றான்.
அழைத்தவன் இப்ராஹிம்.
“நான் வந்து அவங்களச் சமாளிச்சிக்குறேன் இப்ராஹிம்”
மொபைலில் பேசியபடியே நித்திலாவிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டான்.
தன்னைச் சமாதானம் செய்யாமல் சென்றவனின் செய்கை இன்னும் உதாசீனமாகத் தோன்ற நித்திலா அழுகையில் கரைய ஆரம்பித்தாள். மனம் குளிர்ந்த நிஹாரிகாவோ ஜாலியான மூடுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அழுதபடியே உறங்கிய நித்திலா நள்ளிரவில் விழித்துப் பார்க்கையில் கிருஷ்ணராஜசாகரின் அணைப்புக்குள் அடங்கியிருந்தாள்.
இவன் எப்போது வந்தான் என்ற கேள்வியோடு அவனது கரத்தை விலக்கிவிட்டு எழுந்தவள் கிருஷ்ணராஜசாகரின் உறக்கம் கலைவதை அறிந்து வேகமாக அங்கிருந்து போக முற்பட்டாள்.
“எங்க போற?”
கரம் அவனது பிடியில் சிக்குண்டது.
“விடுங்க சாகர்”
“உன்னால இந்த ரூமை தாண்டி போக முடியாது”
“உங்க பக்கத்துல இருக்க எனக்குப் பிடிக்கல”
பிடிவாதமாகச் சொன்னவளை வேகமாக அவன் இழுக்க நித்திலா தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
விழுந்தவளை அப்படியே அணைத்துக்கொண்டவன் “நீ கோவத்துல கத்துன... எனக்கும் கோவம் வந்து கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்... இது நமக்குள்ள எப்பவும் நடக்குறது தானே நித்தி... ப்ளீஸ் ஃபர்கிவ் மீ... இங்க வரமுடியாத அளவுக்கு மோசமான பிரச்சனைல நான் சிக்கிட்டேன்... எல்லாம் முடிஞ்சதும் உன் கிட்ட விளக்கமா சொல்லுறேன்டி... நீ அடிக்கடி டிவோர்ஸை ஞாபகப்படுத்தாத... ஐ வாண்ட் டு லிவ் அ பீச்ஃபுல் லைஃப் வித் யூ நித்தி... உனக்கு அந்த ஆசை இல்லையா?” என்று கேட்கவும் அவளது பிடிவாதம் மட்டுப்பட்டது.
வெறுமெனே கண்ணீர் மட்டும் வழிந்தது.
அதை துடைத்தவன் “அழக்கூடாது... நிஹாரிகா எதுவும் சொன்னாளா?” என்று கேட்க ஆமென தலையாட்டினாள் அவள்.
“என்ன சொன்னா?”
“அதை எதுக்கு...”
“சொல்லு”
கட்டளையாய் ஒலித்தது அவனது குரல்.
“நீங்க கடமைக்குக் கல்யாணம் பண்ணிருக்கிங்கனு சொன்னா.. புருசனோட காதலை ஜெயிக்கிறதுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லையாம்... நான் பிறவிலயே அதிர்ஷ்டக்கட்டைனு சொன்னா”
நிஹாரிகாவின் பேச்சு கிருஷ்ணராஜசாகரைக் கோபம் கொள்ள வைத்தாலும் அவளது பேச்சுக்கு அடிப்படையே இல்லை என்பதை அறிந்திருந்ததால் மனைவியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
ஆறுதலாக அவளது சிகையைக் கோதிக்கொடுத்தான்.
“நீ எப்பவோ என்னை ஜெயிச்சிட்ட நித்தி... சாகர் எப்பவுமே நித்திலாக்குச் சொந்தமானவன்... பிரிக்க முடியாதபடி நம்ம இணைஞ்சாச்சு... இன்னுமா அவளோட முட்டாள்தனமான பேச்சை நினைச்சு கண்ணீர் விடுற?”
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-55.5318/
#மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
நித்திலா கோபத்தில் தான் அவ்வாறு கூறினாள். அவன் மீது காதல்வயப்பட்டவளுக்கு எப்படி அவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கை இனிக்கும்?
உதாசீனமாக கிருஷ்ணராஜசாகர் பேசவும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் அடங்கி ஏமாற்றத்திலும் கழிவிரக்கத்திலும் அழ மட்டுமே தோன்றியது.
மனம் நினைத்ததும் கண்கள் கண்ணீரை உகுக்க ஆரம்பித்தன.
கிருஷ்ணராஜசாகர் அழுபவளைப் பார்த்ததும் சற்று அமைதியானவன் அவனது மொபைல் இசைக்கவும் அழைப்பை ஏற்றான்.
அழைத்தவன் இப்ராஹிம்.
“நான் வந்து அவங்களச் சமாளிச்சிக்குறேன் இப்ராஹிம்”
மொபைலில் பேசியபடியே நித்திலாவிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டான்.
தன்னைச் சமாதானம் செய்யாமல் சென்றவனின் செய்கை இன்னும் உதாசீனமாகத் தோன்ற நித்திலா அழுகையில் கரைய ஆரம்பித்தாள். மனம் குளிர்ந்த நிஹாரிகாவோ ஜாலியான மூடுடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அழுதபடியே உறங்கிய நித்திலா நள்ளிரவில் விழித்துப் பார்க்கையில் கிருஷ்ணராஜசாகரின் அணைப்புக்குள் அடங்கியிருந்தாள்.
இவன் எப்போது வந்தான் என்ற கேள்வியோடு அவனது கரத்தை விலக்கிவிட்டு எழுந்தவள் கிருஷ்ணராஜசாகரின் உறக்கம் கலைவதை அறிந்து வேகமாக அங்கிருந்து போக முற்பட்டாள்.
“எங்க போற?”
கரம் அவனது பிடியில் சிக்குண்டது.
“விடுங்க சாகர்”
“உன்னால இந்த ரூமை தாண்டி போக முடியாது”
“உங்க பக்கத்துல இருக்க எனக்குப் பிடிக்கல”
பிடிவாதமாகச் சொன்னவளை வேகமாக அவன் இழுக்க நித்திலா தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
விழுந்தவளை அப்படியே அணைத்துக்கொண்டவன் “நீ கோவத்துல கத்துன... எனக்கும் கோவம் வந்து கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்... இது நமக்குள்ள எப்பவும் நடக்குறது தானே நித்தி... ப்ளீஸ் ஃபர்கிவ் மீ... இங்க வரமுடியாத அளவுக்கு மோசமான பிரச்சனைல நான் சிக்கிட்டேன்... எல்லாம் முடிஞ்சதும் உன் கிட்ட விளக்கமா சொல்லுறேன்டி... நீ அடிக்கடி டிவோர்ஸை ஞாபகப்படுத்தாத... ஐ வாண்ட் டு லிவ் அ பீச்ஃபுல் லைஃப் வித் யூ நித்தி... உனக்கு அந்த ஆசை இல்லையா?” என்று கேட்கவும் அவளது பிடிவாதம் மட்டுப்பட்டது.
வெறுமெனே கண்ணீர் மட்டும் வழிந்தது.
அதை துடைத்தவன் “அழக்கூடாது... நிஹாரிகா எதுவும் சொன்னாளா?” என்று கேட்க ஆமென தலையாட்டினாள் அவள்.
“என்ன சொன்னா?”
“அதை எதுக்கு...”
“சொல்லு”
கட்டளையாய் ஒலித்தது அவனது குரல்.
“நீங்க கடமைக்குக் கல்யாணம் பண்ணிருக்கிங்கனு சொன்னா.. புருசனோட காதலை ஜெயிக்கிறதுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லையாம்... நான் பிறவிலயே அதிர்ஷ்டக்கட்டைனு சொன்னா”
நிஹாரிகாவின் பேச்சு கிருஷ்ணராஜசாகரைக் கோபம் கொள்ள வைத்தாலும் அவளது பேச்சுக்கு அடிப்படையே இல்லை என்பதை அறிந்திருந்ததால் மனைவியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
ஆறுதலாக அவளது சிகையைக் கோதிக்கொடுத்தான்.
“நீ எப்பவோ என்னை ஜெயிச்சிட்ட நித்தி... சாகர் எப்பவுமே நித்திலாக்குச் சொந்தமானவன்... பிரிக்க முடியாதபடி நம்ம இணைஞ்சாச்சு... இன்னுமா அவளோட முட்டாள்தனமான பேச்சை நினைச்சு கண்ணீர் விடுற?”
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-55.5318/
#மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்