ஹலோ மக்களே அடுத்த எபி https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-42/ 43வது எபி வர்றதுக்கு இன்னும் 5 நாள் ஆகும்... நன்றி!
மெய் நிகரா பூங்கொடியே - 35
அவரையும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நகர்ந்தவனை ஸ்ரீநயனி பிடித்துக்கொண்டாள். கூடவே விக்ரமும் நின்று கொண்டிருந்தான்.
“உன் பொண்டாட்டி தான் அந்த கில்லரை வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்திருக்கா... அதுக்கு என்ட்ரன்ஸ்ல இருந்த கார்ட் ஒருத்தர் சாட்சி... இது அவ மட்டும் போட்ட ப்ளானா? இல்ல புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து என் அண்ணனைக் கொலை பண்ண திட்டம் போட்டிங்களா?”
நெருப்பை அள்ளி கொட்டியது போல துடித்துப்போனான் சந்தீப்.
“நயனி” அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான்.
அதற்குள் விக்ரம் அவனது கையைப் பற்றி தடுத்தான்.
“இவங்களை ஏன் சார் அடிக்க வர்றிங்க? அவங்க ஒன்னும் பொய் சொல்லலை... உங்க ஃபேமிலி மேட்டர்ல இன்வால்வ் ஆக எனக்கு விருப்பமில்ல... ஆனா நித்தி என் கிட்ட உங்க ஒய்ப் பத்தி முன்னாடி சொன்னதை வச்சு பாத்தா அவங்க ஏதோ ஒருவிதத்துல இந்த மர்டர் அட்டெம்ப்ட்ல கனெக்ட் ஆகுறாங்கனு தோணுது... ரொம்ப ஸ்மார்ட்டா என்ட்ரன்ஸ்ல இருந்த சி.சி.டி.விய டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு காய் நகர்த்திருக்காங்க உங்க ஒய்ப்... கார்ட்ஸ், சி.சி.டி.வி கன்ட்ரோலர் எல்லாரையும் விசாரிச்சிட்டு தான் நயனி இப்பிடிலாம் பேசுறாங்க மிஸ்டர் சந்தீப்... நீங்க நியாயமானவரா இருந்தா உங்க ஒய்ப் கிட்ட போய் விசாரணை பண்ணுங்க... இவங்க கிட்ட கை நீட்டாதிங்க”
சந்தீப்பின் கையை உதறினான் விக்ரம். மனைவியைக் காப்பாற்ற துடிக்கிறான் என்று அவனும் சந்தீப்பை தவறாக எண்ணிக்கொண்டான்.
“இவன் ஏன் விசாரிக்கப்போறான் விக்ரம்? இவனும் கூட்டுக்களவாணியா தான் இருப்பான்... நாளைக்கு போலீஸ் என்கொயரில புருசனும் பொண்டாட்டியும் என்ன பொய் சொன்னாலும் தப்பிக்க முடியாது... பாவிங்க, என் அண்ணன், அண்ணி, அம்ருவை இல்லாம அழிக்கிறதுக்கு எவ்ளோ கீழ்த்தரமா வேலை பாத்திருக்காங்க... போலீஸ் என்கொயரினு சொன்னதும் இவனும் இவன் பொண்டாட்டியும் எப்பிடி தப்பிக்கலாம்னு ப்ளான் பண்ணுவாங்க பாருங்க”
ஸ்ரீநயனியின் வெறுப்பில் சந்தீப் கண் கலங்கினான். ஏன் தன் மேல் இவ்வளவு வெறுப்பு என இத்தனை நாட்கள் யோசித்தவனுக்கு நிஹாரிகாவின் செயல்பாடுகள் தான் அதற்கு விதை போட்டது என்பது வெகு தாமதமாகப் புரிந்தது.
எதுவும் பேசாமல் தனது அறைக்குப் போனவன் அங்கே நிஹாரிகா உடமைகளை அடுக்கி வைப்பதைக் கண்டதும் சந்தேகத்துடன் அவளை நெருங்கினான்.