• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,881

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 10

    “அனி! யார கேட்டு இங்க வந்த? உன்னை நான் கிட்ஸ் பார்க்ல விளையாடத் தானே சொன்னேன்? இங்க என்ன பண்ணுற?… முதல்ல அதைக் கீழ வை” என்று அவள் கையிலிருந்து புட்டிங் இருந்த தட்டைப் பறித்து டக்கென்று சமையல் மேடை மீது வைத்தவளின் கோபத்தில் அனிகா மருண்டாள்.

    அதைக் கண்ட தனஞ்செயன் பொறுக்காது “ஏன் குழந்தைய திட்டுறிங்க? நான் தான் அவளுக்குச் சாப்பிடக் குடுத்தேன்” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட இப்போது அஸ்வினியின் கோபம் அவன் புறம் திரும்பியது.

    தன்னைப் பற்றி இவனுக்கு நல்லெண்ணம் இல்லை. அப்படி இருக்க தனது மகளிடம் மட்டும் என்ன கரிசனை இவனுக்கு என்ற எரிச்சல் மூண்டது அஸ்வினிக்குள்.

    “நீங்க யாரு சார் என் பொண்ணுக்கு இதெல்லாம் செய்யுறதுக்கு? உங்களோட சகோதரப்பாசம் டிராமாவ ஷானு, தனுவோட நிறுத்திக்கோங்க… என் பொண்ணைப் பாத்துக்க எனக்குத் தெரியும்… அவ அதிகமா ஸ்வீட் சாப்பிடக் கூடாதுனு டென்டிஸ்ட் சொல்லிருக்காரு… இப்பிடி ஆளாளுக்கு எதையாச்சும் குடுத்து வச்சிடுவிங்க… கடைசில நான் தான் அவளுக்குப் பல்வலி, வயிறுவலி, காய்ச்சல்னு வந்ததுக்கு அப்புறம் கஷ்டப்படணும்”
    படபடவென பொரிந்தவளை புருவம் சுழித்து நோக்கிய தனஞ்செயன் எதுவும் பேசாது நின்றான்.

    அஸ்வினி அவனது அமைதியில் எரிச்சலுற்று மகளிடம் திரும்பியவள்
    அவள் முதுகில் பொத்தென்று அடி வைத்து “கண்டவங்க குடுக்கிறதலாம் வாங்கி சாப்பிடக் கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்… வா என் கூட” என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துச் செல்ல அதைத் தடுக்கும் வழியறியாது பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அவன்.


    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-10💞.4289/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 9

    ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் இருக்க முயன்றபடியே “உங்க ஒர்க் முடிஞ்சுடுச்சா அஸுக்கா? வீட்டுக்குக் கிளம்பிட்டிங்களா?” என்று அஸ்வினியிடம் மட்டும் பேசியவள் தனஞ்செயனும் ஷான்வியும் வருவதைக் கவனிக்கவில்லை. அவளுடன் பேசிக் கொண்டிருந்த அஸ்வினியும் தான்.

    அஸ்வினி தன்வியிடம் அவளது முதல் நாள் வேலையனுபவம் மற்றும் சகப்பணியாளர்கள் பற்றி கேட்க அவள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள். வீட்டுக்குச் செல்லவில்லையா என்று அஸ்வினி கேட்கும் போது அவர்களுக்கு மிக அருகாமையில் வந்து விட்டனர் ஷான்வியும் தனஞ்செயனும்.

    “உங்களுக்கு தனு மேல இவ்ளோ அக்கறை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல மிஸ் அஸ்வினி” என்றவனின் குத்தல் குரலில் அஸ்வினி திரும்பிப் பார்த்தாள். அவளைக் கண்டுகொள்ளாது விஸ்வஜித்தை நோக்கிப் புன்னகைத்தவன் தன்வியிடம்

    “கிளம்பலாமா தனும்மா? ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு பாரு… நாளைக்கு யூனிவர்சிட்டிக்குக் கிளம்ப மார்னிங் சீக்கிரம் எழுந்திருக்கணும்ல?” என்று ஆதுரத்துடன் கேட்க தன்வியும் ஷான்வியும் அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினர்.

    மூவரும் கிளம்பிச் சென்ற பின்னர் தனஞ்செயனின் குத்தல் கலந்த பேச்சில் அதிர்ந்திருந்த அஸ்வினி விஸ்வஜித்திடம்

    “நான் ஷானுவ ஃபர்ஸ்ட் டே கால் டாக்சி பிடிச்சுப் போனு சொன்னது அவங்களோட தனா அண்ணாக்குப் பிடிக்கலயாம்… அதனால தான் இப்பிடி பேசிட்டுப் போறாரு… நான் சொன்னத அவரு தப்பா புரிஞ்சிக்கிட்டாருனு நினைக்கேன் விஸ்வா.. எத்தனை நாள் அவரு இவங்களுக்கு பாடிகார்டா இருக்க முடியும்? அந்தப் பொண்ணுங்க உலகத்துல தனியா வாழ கத்துக்க வேண்டாமா?” என்று ஆதங்கத்துடன் சொல்லிவிட அவனும் தனஞ்செயனின் பேச்சே சரியென வாதிட்டான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-9💞.4285/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 8

    வெளியே வந்தவள் கால்களை மார்பிள் தரையில் பதித்து உற்சாகமாக நடந்து செல்ல எதேச்சையாக நிதிப்பிரிவினுள் இருந்து வெளியே வந்த சித்தார்த்தின் மீது மோதிக் கொண்டாள். மோதியவள் கீழே விழும் முன்னர் அவன் அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள இருவரும் சமாளித்து நின்றனர்.

    ஷான்விக்குத் தான் ஏதோ கரும்பாறை மீது தான் மோதிவிட்டோமோ என்ற சந்தேகம். வலித்த மூக்கைத் தேய்த்துவிட்டபடி மன்னிப்பு கேட்க நிமிர்ந்தவள் தன் தோளைத் தழுவியிருக்கும் கரங்களின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்றாள். விலகி நின்றவள் பார்வை அவன் முகத்தைக் கண்டதும் தீயாய் மாறவும் சித்தார்த்துக்குக் குழப்பம்.

    இரு கைகளையும் விரித்து தோளைக் குலுக்கிவிட்டு “வாட் ஹேப்பண்ட்? கீழ விழுந்து மூஞ்சி, மூக்கை உடைக்காம உன்னைக் காப்பாத்திருக்கேன்… அதுக்கு ஏன் உன் கண்ணுல லாவாக்குழம்பு பொங்குது?” என்று கேலியாய் கேட்க

    “அக்கம் பக்கம் யாரு வர்றாங்கனு பாத்து நடக்க மாட்டியா? இவ்ளோ உயரத்துக்கு வளர்ந்திருக்க, ஆனா பாதையில கவனம் இல்ல” என்று எள்ளலாய் பதிலுக்குக் கேட்டவளை பார்த்துப் பொய்யாய் ஆச்சரியப்பட்டவன்

    “இதே மாதிரி நானும் கேப்பேன்… இவ்ளோ குள்ளமா இருக்கிறதால உனக்கு இன்னும் மனசுல குழந்தைனு நினைப்போ? நீ நடந்து வர்றதுக்குப் பதிலா டான்ஸ் ஆடிட்டே வந்து என் மேல மோதுனது தப்பு இல்ல… நான் அவசரமா வெளியே வந்தது தான் தப்பு… அப்பிடி தானே” என்று கேட்கவும்

    “உன் கிட்ட ஆர்கியூ பண்ணி டைம் வேஸ்ட் பண்ணுற அளவுக்கு இப்போ நான் ஃப்ரீயா இல்ல.. சோ ப்ளீஸ் மூவ் அ லிட்டில்” என்று அசட்டையாகத் தோளைக் குலுக்கிவிட்டு வேண்டுமென்றே அவனை விட்டு இரண்டு அடிகள் விலகி நடந்தாள் ஷான்வி.
    அவளை அப்படியே விட்டுவிட மனமின்றி சீண்டிப் பார்க்க எண்ணியது சித்தார்த்தின் மனம்.

    “எப்போ நீ ஃப்ரீ ஆவேனு சொல்லு… அப்போ வந்து பேசுறேன் ஆங்ரி பேர்ட்” என்று அவன் உரத்தக் குரலில் சொல்ல, சில அடிகள் கடந்தவள் திரும்பி அவனை முறைத்து

    “அவசியம் இல்ல மிஸ்டர்… மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று கத்த, அவன் வேடிக்கையாய் கண் சிமிட்டிச் சிரிக்கவே கோபத்துடன் காலைத் தரையில் உதைத்துவிட்டு அங்கிருந்த மின்தூக்கியை நோக்கி விறுவிறுவென்று சென்றுவிட்டாள் அவள்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-8💞.4271/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 7

    “இந்த அட்வைஸ் எனக்கா இல்ல உனக்கா சித்? பை த வே, ஆல் த பெஸ்ட்.. நான் வில்லியமை மீட் பண்ணப் போறேன்.. பை” என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள்.

    அவள் விடைபெறவும் கிளாராவும் ஷான்வியும் உள்ளே நுழைந்தனர். கிளாரா வேலையைக் கவனிக்கச் சென்றுவிட பர்கர் மற்றும் மஃபின் சுவைக்கும் ஆர்வத்துடன் வந்த ஷான்வி அங்கே சிரித்தமுகமாய் ஆர்வம் ததும்பும் விழிகளுடன் அமர்ந்திருந்த சித்தார்த்தைக் கண்டதும் ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.

    பின்னர் அவனைக் கவனியாது போல அவனுக்கு முதுகு காட்டியபடி ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டாள். சித்தார்த் அவள் செய்த அனைத்தையும் கவனித்தவன் எதற்கும் அசராமல் அவள் அமர்ந்திருந்த அதே மேஜையில் சென்று அமர்ந்தான்.

    ஷான்வி தன் தலையை உயர்த்தாது அவனைத் தவிர்க்க முயல அதற்கெல்லாம் இடம் தராதவனாய் அவள் முகத்தை மறைத்திருந்த மெனுகார்டைத் தணித்துவிட்டு “ஹாய் ஆங்ரிபேர்ட்” என்று கையை ஆட்டவும் கண்ணை இறுக மூடித் திறந்தவள் எதுவும் பேசாது அமைதி காத்தாள்.

    “ஹவ் ஆர் யூ? இப்போலாம் உன்னை ஹோட்டல்ல பார்க்கவே முடியல… மேடம் அவ்ளோ பிசியா? தனா ப்ரோ தான் கிச்சன்ல ஆல் இன் ஆல்னு கேள்விப்பட்டேன்… உண்மைய சொல்லு… நீ சும்மா பட்டரை உருக்குறது, ஓவன்ல பேஸ்ட்ரி ஐட்டம்ஸை வைக்கிறதுனு தானே இருக்க” என்று அவளது வேலையைச் சொல்லிக் காட்டிச் சீண்ட அவள் சீற்றத்துடன் பதிலளிக்க ஆரம்பித்தாள்.

    “வாட்? என்னோட ஜாப் நேச்சர் என்னனு தெரியுமா உனக்கு? சும்மா வாய்க்கு வந்தபடி உளறாத… இவ்ளோ பேசுறியே! நீ மட்டும் என்ன பண்ணுறியாம்? ஃபினான்ஸ் செக்சன்ல உக்காந்து வேலை செய்யுறேனு ஓப்பி அடிச்சிட்டு நீ கம்ப்யூட்டர்ல கேம் விளையாடுறது எனக்கும் தெரியும்”

    அவளது பதிலில் அவன் சிரிக்கவும் “என்ன சொன்னாலும் ஒரு
    சிரிப்பு… உன்னால சிரிக்காம இருக்கவே முடியாதா?” என்று கேட்டவளுக்குக் கிளாரா பர்கருடன் வரவும் கவனம் பர்கரின் மேல் சென்றது.

    அவள் கிளாராவுக்கு நன்றி சொல்ல சித்தார்த்தும் அவளிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு ஆசையாக மஃபினை விழுங்கும் ஷான்வியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

    “நீ எதுக்கு செஃபா ஒர்க் பண்ண ஆசைப்பட்டேனு இப்போ தான் தெரியுது.. ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்” என்று கேலி செய்ய

    “நீ என்ன டிரை பண்ணுனாலும் நான் சாப்பிடறப்போ கோவப்பட மாட்டேன்… சோ டோன்ட் வேஸ்ட் யுவர் எனர்ஜி” என்றபடி சாப்பாட்டில் கண்ணாகிவிட்டாள் அவள்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-7💞.4267/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 6

    அக்காவும் தங்கையும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது புயலைப் போல அந்த அறைக்குள் நுழைந்தாள் அஸ்வினி. அவள் கையில் ராயல் கிராண்டேவின் உணவுப்பொட்டலம்.

    தன்வி அவளைப் புரியாமல் நோக்க அஸ்வினி ஷான்வியின் கையில் அந்தப் பொட்டலத்தை வைத்தவள் “என் பொண்ணுக்கு எதுவும் வேணும்னா செஞ்சு குடுக்கவோ வாங்கிக் குடுக்கவோ நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்… இது தான் கடைசி முறையா இருக்கணும்.. இனிமே அனிகாவுக்கு நீ எதுவும் வாங்கிக் குடுக்க வேண்டிய அவசியம் இல்ல” என்று படபடக்க

    “இல்லக்கா! அனிகுட்டிக்கு ஆப்பிள் பை பிடிக்கும்னு தான் நானே என் கையால செஞ்சு எடுத்துட்டு வந்தேன்” என சொன்ன ஷான்வி இதில் என்ன தவறு இருக்க முடியுமென அவளைக் குழப்பத்துடன் நோக்க

    “தேவையில்ல… என் பொண்ணுக்கு எந்த உரிமைல நீங்க வாங்கிக் குடுக்கிற ஷான்வி? நீயும் உன் அக்காவும் வெறும் பேயிங் கெஸ்ட் மட்டும் தான்… அதை மறந்துடாதிங்க… இது தான் லாஸ்ட் வார்னிங்” என்று வார்த்தைகளை அமிலமாய் அள்ளித் தெளித்துவிட்டு அகன்றாள் அஸ்வினி.

    ஷான்விக்கு முகத்தில் அறைந்தாற்போன்ற அவளது செய்கையில் கோபம் வர தன்வியோ இன்று காலை தனக்கு நம்பிக்கை உண்டாகும்படி பேசியவளா இப்போது தங்கையிடம் இவ்வளவு கடினமான வார்த்தைகளை வெளியிட்டாள் என்ற திகைப்பு.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-6💞.4261/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 5

    சித்தார்த் சொன்னதைக் கேட்டவன் “நேத்து என் கிட்ட ஊர்மிளா லெட்சுமணன்னு கதை சொல்லிட்டு இன்னைக்கு இப்பிடி பண்ணி வச்சிருக்கியேடா! தம்பி உன் போக்கு சரியில்லையே” என்று கேலி செய்தவாறே உடை மாற்றத் தொடங்கினான் விஸ்வஜித்.

    சித்தார்த் சோபாவில் கால் நீட்டிப் படுத்தபடியே “இப்போவும் நான் என் ஊர்மிளாவுக்குத் தான் வெயிட் பண்ணுறேன்... யாருக்குத் தெரியும்? இந்தப் பொண்ணே கூட என் ஊர்மிளாவா இருக்க சான்ஸ் இருக்கு” என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினான் அவனது இளைய சகோதரன்.

    “அப்போ சார் தெரிஞ்சு தான் எல்லாத்தையும் பண்ணிருக்கிங்க போல… சரி விளையாட்டை விடு… சீரியஸா பேசுவோம்” என்று ஆரம்பித்தவாறே டீசர்ட்டை இழுத்துவிட்டபடி அவனருகில் அமர்ந்த விஸ்வஜித் அஸ்வினி தன்னிடம் சொன்ன ஷான்வி மற்றும் அவள் சகோதரியைப் பற்றிய விவரங்களை தம்பியிடம் பகிர்ந்து கொண்டான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-5💞.4259/
    #நித்யாமாரியப்பன் #யாவும்நீயாகமாறினாய் #மேகதூதம்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 3

    “ஹாய் ப்ரோ! நீங்க தான் சீப் பேஸ்ட்ரி செஃபா? ஓ மை காட்! அப்போ நான் உங்களோட அசிஸ்டெண்டாவா ஒர்க் பண்ணப்போறேன்? ஐ ஜாலி” என்று துள்ளிக் குதித்தவளை பாசம் ததும்பும் விழிகளால் நோக்கினான் தனஞ்செயன். கூடவே அவர்கள் இருவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த அஸ்வினியைக் கண்ணால் சுட்டிக்காட்டியபடியே

    “லுக் தேர்! லேடி ஹிட்லர் நம்ம ரெண்டு பேரையும் தான் பாத்துட்டிருக்காங்க” என்று சொல்லவும் ஷான்வி வாயைக் கையால் பொத்திக் கொண்டு நமட்டுச்சிரிப்புடன் திரும்ப அங்கே கண்ணில் கேள்வியுடன் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்த அஸ்வினி அவளது சிரிப்பில் புருவம் உயர்த்தவும் தானாய் அவளது சிரிப்பு நின்றது.

    “இம்பாசிபிள்” என்று முணுமுணுத்து தலையை இடம் வலமாக அசைத்துவிட்டு அகன்றாள் அவள்.

    ஒரு கணம் அவளது செய்கையைக் கவனித்த தனஞ்செயன் பின்னர் ஷான்வியிடம் வீடு வசதியாக இருக்கிறதா என்று பேச்சை மாற்றினான். பின்னர் தனஞ்செயனுடன் சேர்ந்து ஷான்வியும் ஹோட்டலின் பொது மேலாளரால் கபேயின் ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாள். ஷான்விக்கு அசிஸ்டண்ட் பேஸ்ட்ரி செப், ராயல் கிராண்டே என்ற பொன்னிற பேட்ஜூடன் கூடிய வெள்ளைச் சீருடையை அணிந்த பின் உண்டான பெருமிதத்துக்கு அளவே இல்லை.

    அதிலும் தனஞ்செயனுடன் வேலை செய்வது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது எனலாம். ஒரு அன்பான சகோதரனாக வேலையில் அவளது தவறுகளைத் திருத்தியதுடன் இயல்பாகப் பழகும் அவனது குணத்தில் அவனை ‘தனா அண்ணா’ என அழைக்க ஆரம்பித்துவிட்டாள்.

    அதோடு சமையலறையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ள மனதுக்கு நிறைவாக இருந்தது ஷான்விக்கு. தன்விக்குக் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக அனைவரையும் ஒன்று திரட்டி செல்பிக்குப் போஸ் கொடுக்க செய்ய அவளது பதவியைக் காட்டி அலட்டிக் கொள்ளாத அவளது எளிமை மற்ற ஊழியர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

    தனஞ்செயன் அனைவரிடமும் “இங்க வெறும் மாவும் வெண்ணெய்யும் மட்டும் வச்சு டெசர்ட்ஸ் பண்ணப் போறது இல்ல… நம்ம ஒவ்வொருத்தரும் நம்மளோட கஸ்டமர் மேல வைச்சிருக்கிற அக்கறையும் இதுல கலந்திருக்கணும்… முக்கியமா இக்கட்டான சமயத்துல எல்லாத்தையும் சமாளிக்கிற திறமை இருக்கணும்… சமைக்கிறது நம்ம கடமைனு நினைக்காம ஆசையா ரசிச்சு சமைக்கணும்… ஓகேவா கய்ஸ்?” என்று புன்சிரிப்புடன் கேட்க அனைவருடனும் சேர்ந்து ஷான்வியும் தலையாட்டினாள்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-3💞.4245/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 2

    நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவனின் மொபைலில் அழைப்பு வரவே தோழர்களிடம் சொல்லிக் கொண்டு டிஜேவின் இசை தொந்தரவு செய்யாத வண்ணம் தள்ளி வந்துவிட்டான்.
    “சொல்லுடா அண்ணா” என்றான் எடுத்ததும்.

    மறுமுனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அதற்கு சத்தமாக நகைத்தவன் தோட்டத்தின் புல்தரையை தன் ஷூ கால்களால் செதுக்கியபடியே

    “டேய் அண்ணா! நீ எப்பிடி ஸ்ரீராமசந்திரமூர்த்தி மாதிரி உனக்கு வரப் போற சீதாதேவிக்காக காத்திருக்கியோ அதே போல நானும் லெட்சுமணன் மாதிரி எனக்கு வரப் போற ஊர்மிளாக்காக காத்திருக்கேன்டா… அவங்க எல்லாருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ்… இந்தியாவை விட்டுத் தான் வந்திருக்கேனே தவிர நானும் உன்னை மாதிரி இந்தியன் கல்சரை விட்டுட மாட்டேன்டா.. பிலீவ் மீ ப்ரோ” என்று சொல்லிவிட்டு ஜீன்சின் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டான்.

    மறுமுனையில் இருந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தவன் சில நிமிடங்கள் பேசிவிட்டு மீண்டும் நண்பர்களுடன் கலந்து கொண்டான்.

    ரேயான் கேலியாக “வீ.கே தானே கால் பண்ணுனாரு?” என்று கேட்க ஆமென்றவன்

    “இந்த ஹூஸ்டன்ல என்னை கேள்வி கேக்குற ஒரே ஜீவன் அவன் மட்டும் தான்மா” என்று தோளைக் குலுக்க

    “வீ.கே இஸ் சோ ஹம்பிள் அண்ட் டவுன் டு எர்த்” என்று சிலாகித்தாள் ரேயான்.

    அதைக் கேட்டதும் சித்தார்த்துக்குப் பெருமைபிடிபடவில்லை. அவர்கள் புகழ்வது அவனது உடன்பிறந்த மூத்தவனை அல்லவா!

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-2💞.4238/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 1

    தன்னிடம் ஓடிவந்தவளின் கூந்தலை வருடிக் கொடுத்த அஸ்வினி “அனி பேபி மம்மிய மிஸ் பண்ணுனிங்களாடா?” என்று கேட்க அவள் மத்திமமாய் தலையசைத்து விட்டு “இவங்க யாரு மம்மி?” என்று ஷான்வியையும் தன்வியையும் காட்டி கேட்கவும் அஸ்வினி ஒரு நொடி அமைதியானாள்.

    பின்னர் தெளிவான குரலில் “இவங்க பேயிங் கெஸ்ட் அனி… இனிமே மாடில தான் தங்க போறாங்க” என்று மீண்டும் அவர்களை மூன்றாவது மனிதர்களாக்கிச் சொல்ல ஷான்விக்கும் தன்விக்கும் அதிர்ச்சியுடன் கூடவே ஒரு ஏமாற்றமும் சூழ்ந்தது.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-1💞.4218/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom