☔ மழை 20 ☔
அரசின்கீழ் இயங்கும் நாடானது என்பதை “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு”என்ற குறளில் விளக்குகிறார் வள்ளுவர். அதாவது பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது. –ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், […]