காற்று 11
தன் உதடுகளை மடித்து சிரிப்பை அடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள் நிழலி. அலுவலகம் வந்த பின்னும் முகத்தை மாற்றாமல் ‘உர்ரென்று’ வைத்திருக்கும் சாகரனை பார்க்க பார்க்க தான் அவளுக்கு சிரிப்பு பொங்கி வந்தது. எங்கே வாய்விட்டு சிரித்தால் மேலும் அவனது முகம் கர்ண கொடூரமாக மாறக் கூடும் என்று கஷ்டப்பட்டு அடக்கினாள். “உன் இன்டென்சன் என்ன?” எனக் கேட்டு அவனை வெகுவாய் கோபப்படுத்திருந்தாள் நிழலி… அவனும் பாதி பொய் பாதி உண்மையெனக் கூறி பதிலளித்தாலும்” என்ன பார்த்து ஏன்டா அப்படி […]