"எங்க பையனுக்கு உங்க வீட்டில்தான் பொண்ணு எடுக்கணும்னு எழுதியிருக்கு போலிருக்கு…" என்று பேச்சை ஆரம்பித்தார் உலகநாதன்.
தலையை அசைத்து சிரித்த திருமலை, "மாப்பிள்ளைக்கு இன்னும் எத்தனை நாள் லீவ் இருக்கு? கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவெடுத்திருக்கீங்க?" எனக் கேட்டார்.
"இன்னும் இரண்டு வாரம்தான் ஊரில் இருப்பான். அதுக்குள் கல்யாணம் எல்லாம் வைக்க முடியாதே. இப்ப நாம பேசி முடிச்சு, சின்னதா நிச்சயம் போல வச்சுட்டு, அப்புறம் அவன் அடுத்த லீவில் வரும் போது கல்யாணத்தை வச்சுக்கலாமா?" என்று கேட்டார் உலகநாதன்.
"அப்படியே வச்சுக்கலாம்…" என்று திருமலை சொல்ல,
"அப்பா, ஒரு நிமிஷம்!" என்று இடையிட்டாள் மீனா.
அதுவரை அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரும் அவளின் புறம் திரும்பினர்.
"நம்ம கீர்த்தனாவுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு சரி. அதே மாதிரி மாப்பிள்ளைக்கு நம்ம கீர்த்தனாவை பிடிச்சிருக்கான்னு கேட்டுக்கோங்க…" என்று நயமாகச் சொன்னாள்.
'இவள் உரண்டை இழுக்க முடிவு பண்ணிட்டாள் போல' என்று பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.
மாப்பிள்ளை வீட்டாரை சங்கடமாகப் பார்த்த திருமலை, "ம்ப்ச், என்ன பேசுற நீ? நேத்தே இரண்டு பேரும் தனியா பேசிட்டாங்க தானே? பிடிக்காமலா இவ்வளவு தூரம் வந்திருக்கப் போறார்?" என்று மகளைக் கண்டித்தார்.
அவ்வளவு நேரம் திரும்பாத மணிவர்மனின் பார்வை இப்போதுதான் கீர்த்தனாவின் பக்கம் திரும்பியது.
//திங்கள் மாலை ஐந்து மணி பதிவு வரும்//
தலையை அசைத்து சிரித்த திருமலை, "மாப்பிள்ளைக்கு இன்னும் எத்தனை நாள் லீவ் இருக்கு? கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவெடுத்திருக்கீங்க?" எனக் கேட்டார்.
"இன்னும் இரண்டு வாரம்தான் ஊரில் இருப்பான். அதுக்குள் கல்யாணம் எல்லாம் வைக்க முடியாதே. இப்ப நாம பேசி முடிச்சு, சின்னதா நிச்சயம் போல வச்சுட்டு, அப்புறம் அவன் அடுத்த லீவில் வரும் போது கல்யாணத்தை வச்சுக்கலாமா?" என்று கேட்டார் உலகநாதன்.
"அப்படியே வச்சுக்கலாம்…" என்று திருமலை சொல்ல,
"அப்பா, ஒரு நிமிஷம்!" என்று இடையிட்டாள் மீனா.
அதுவரை அவளைக் கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரும் அவளின் புறம் திரும்பினர்.
"நம்ம கீர்த்தனாவுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு சரி. அதே மாதிரி மாப்பிள்ளைக்கு நம்ம கீர்த்தனாவை பிடிச்சிருக்கான்னு கேட்டுக்கோங்க…" என்று நயமாகச் சொன்னாள்.
'இவள் உரண்டை இழுக்க முடிவு பண்ணிட்டாள் போல' என்று பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.
மாப்பிள்ளை வீட்டாரை சங்கடமாகப் பார்த்த திருமலை, "ம்ப்ச், என்ன பேசுற நீ? நேத்தே இரண்டு பேரும் தனியா பேசிட்டாங்க தானே? பிடிக்காமலா இவ்வளவு தூரம் வந்திருக்கப் போறார்?" என்று மகளைக் கண்டித்தார்.
அவ்வளவு நேரம் திரும்பாத மணிவர்மனின் பார்வை இப்போதுதான் கீர்த்தனாவின் பக்கம் திரும்பியது.
//திங்கள் மாலை ஐந்து மணி பதிவு வரும்//