• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாரிஜாதம் பூவே ........

Apsareezbeena loganathan

Well-known member
Member
கலைந்த ஓவியம்....
பாரிஜாத பூ......

உருவ கேளியில்
உள்ளம் ஏற்கனவே
உடைந்து போய் இருக்க
உன்னை கண்ணாடியில் பார்த்ததில்லையா என்று உரைக்கும் குரலில்
உடைந்து போகிறான்_ மனதால் உறைந்து போகிறான்.. உள்ளுக்குள் ஏதோ இவள்
உன்னவள் என நினைக்க ....
ஊமையாகி அழுதான்....

பார்க்காமலே அண்ணனுக்காக
பிடித்திருக்கு என் சொல்லி
பாவை மனம் இருக்க
பூங்கொடி கூறிய செய்தியில் பரிதவித்தாலும்
பாசமான அண்ணன் காதலுக்காக
பார்த்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறி
புழுங்கி கொள்கிறாள்....

மகியின் நிலை கண்டு
மணம் கேளாமல்
மீண்டும் திருமண பேச்சை
முதலில் இருந்து தொடங்க
முயற்சிக்க...
முதல் பார்வையிலேயே
முட்டிக் கொள்ளும் நிவி சரவணன்
முன் ஜென்ம பந்தம் போல
முன்னே வரும்போதெல்லாம் முறுக்கிக் கொண்டு செல்லும் நிவியை பொண்டாட்டி என்று மகிழ்ச்சியாக வம்பு இழுக்க
முறையாக காதல் சொல்லாமல்
மனதுக்குள் நினைத்துக் கொள்ள
சண்டை கோழிகளாக
சரவணன் நிவேதா....
(சார்க்கு செகண்ட் பார்ட் )

மனதை மாற்ற
மாற்று வழியாக
மகி வேலைக்கு செல்ல
மறுபடியும் நவினுக்கு
மகியை பார்த்ததில்
மகிழ்ச்சி....
மனதுக்குள்ளே பேசி மனதுக்குள்ளே காதல் வளர்க்கும் மன்னன் நவீன்.....

வில்லத்தனம் செய்யும் அத்தை
பிடிக்கவில்லை என்றாலும் தாயிற்காக துணை போகும் பூங்கொடி
சிறு வயது முதலே
நண்பனாய் பழகும்
சரவணன் கிருஷ்ணா....
கிருஷ்ணனின் லீலையால் உண்மைகள் தெரிய வர
விளக்கி சொல்லி
விலகி செல்கிறான்......

கண்ணில் தெரியும்
குறைபாட்டை
குறையாக எண்ணாமல்
கன்னி மனம்
கண்ணியமாய் நடந்து கொள்ளும் விதத்தில்
காதல் கொண்டு திரியும்
காதல் பித்தன் .....
கோவில் பிரகாரத்தில் நவினை
கண்ட நொடி
காதால் கேட்ட விஷயத்தில் கலக்கத்தையும்
காதலையும் சேர்த்து
கண்ணீராக வலியும்
காதலை உணர்ந்து கல்யாணத்தில் முடிகிறது....
கண்களாலும் மனதுக்குள்ளேயும்
காதல் வளர்க்கும்
கண்ணிய காதல்....
கலைந்த மேகம்
மழை தருவது போல்
கலைந்த ஓவியமாய்
அழகான வாழ்க்கை
அர்த்தத்தை கொடுக்கிறது....

வாழ்த்துகள் செல்லகுட்டி😍😍💐
 

Attachments

  • Video_20220822114433482_by_VideoShow.mp4
    6.6 MB

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom