• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே_ எழிலன்பு

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஞாபகம் முழுவதும் நீயே....
ஆசிரியர்: எழிலன்பு Ezhil Anbu

நாயகன்: வினய் (வினு)
நாயகி: பவ்யா (பவி)

பிடித்த திருமணம் தான்
பிடிவாதத்தால் இருவரும்
பிரிந்து வாழ - தன்
பக்க நியாயம் இருந்தாலும்
பிரிவால் வாடி வதங்கி
பல வருடம் கழித்து
பாசத்தில் இணைந்தது.....
💕💕💕💕💕💕
வெளிநாட்டு மோகம் கொண்டு
வாழ்ந்தால் அங்கு தான் என்று
படிக்கும் காலத்தே
பெற்றோரை தவிக்க விட்டு செல்ல.....
தாய் இருக்கும் வரை
அமைதியாக இருக்க
தந்தையிடம் போராடி
தன் விருப்பத்தை சாதிக்க
திருமணம் செய்தால்
தன் மகன் மருமகளுடன்
தன்னுடனே இருப்பார்கள் என
தப்பு கணக்கு போட
வெளிநாட்டால் பெற்றோர்
இழந்த பவியையும்
உள்நாட்டால் மனம்
உடைந்த வினய்யையும்
சேர்த்து வைக்கும் தந்தை....
திருமணத்தில் இருமனமும்
திகட்ட திகட்ட காதல் கொள்ள
இல்லறம் நல்லறமாய் தொடங்கி இனிதாய் சென்ற அவர்கள் வாழ்க்கையில் புயல் போல
வெளிநாட்டு பயண செய்தி.... தன்னவளையும் அழைக்க
தான் வரமாட்டேன் என
பிடிவாதம் பிடிக்க
பிடிவாதத்தால் பிரிந்து செல்ல
பிரிந்த இரு உயிர்கள்
பிரிவின் சோகத்தில் ஆழ்த்த
வினய் மதுவை தேட
பவிக்கு இதமாய் மகன்
பிறக்க
அதன்பின்
அவர்கள் படும்
துன்பங்களும் வேதனைகளும் அதிலிருந்து மீண்டு
மீண்டும் சேருவது என
அவர்அவர்களின்
நியாயத்தை விளக்கி
விட்டு கொடுத்தல் வேண்டும்
என்பதை சுட்டி காட்டிய விதம்
சூப்பர்.....
வினய் ❤️❤️❤️❤️
தன் மனைவி
தன் விருப்பத்தை மதிக்காமல்
தன்னுடன் வராமல்
தவிக்க விட்டு விட்டாள் என
தனக்குள்ளே கோபத்தை பிடித்து
வீண் பிடிவாதம் கொண்டு
தன் வாழ்க்கையை
வீணாக்கி கொள்ளும்
பிடிவாதகாரன்.......
பிள்ளையின் படங்களை கண்டு
பாசத்தால் மனம் மாறி திரும்பி
பவியிடம் செல்வது....
பவி அனுபவித்த வேதனை
பல கஷ்டங்களும் சோகங்களை
கேட்டு துடிக்கும் இடம்
மனம் விட்டு பேசி
மன்னிப்பு கேட்கும் இடம்
கெஞ்சி கொஞ்சி பேசும் இடம் என
அனைத்தும் அருமை.....
பவ்யா _ ஒரு பெண் துணை இல்லாமல் வாழ முடியாதா???
அதுவும் கல்யாணம் ஆன பெண்..
கையில் குழந்தையுடன்....
கணவனுடன் இல்லாமல்
பிரிந்து வாழ்ந்தால்
அவள் சந்திக்கும் இன்னல்கள்...
அவளை பற்றி பேசும் பேச்சுக்கள் ஆண்களின் தவறான பார்வையில் இருந்து
தன்னை பாதுகாக்க ...
எவ்வளவு மன உளைச்சல் போராட்டம் ....
அனைத்தையும் எதிர்த்து
தாண்டி நிற்கும் பவி.....
பெண்ணுக்கு ஒரு எடுத்துக்காட்டு👏👏👏👏
நட்புக்கு ரிதேஷ் ஷீலா.....
அத்தை தாரா, மாமா
அவர்களின் அன்பும் வளர்ப்பும்
அற்புதம்.. 👍👍👍👍👍

பிடிவாதத்தால்
பிரிந்த குடும்பம்
பிடிவாதம் தளர்ந்து
பாசத்துடன் இணைந்த
குடும்ப காதல் கதை.....
💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏👍👍👍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom