• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 14 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 14

தன் தங்கைகளின் திருமணமும், வித்யாவின் டெலிவரியும் நல்ல படியாக முடிந்தது பிரயுவிற்கு மிகபெரிய ரிலீப் என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மெல்ல வடிய ஆரம்பிக்க, அவள் தலை சுற்ற ஆரம்பித்தது.

எல்லோரும் திருமணத்திற்கு பிறகான சடங்குகளில் நின்றிருக்க, ப்ரயு மெதுவாக வெளியே வந்திருந்தாள். பிரியா மட்டும் அவளைக் கவனித்திருக்க , அவளை நோக்கி வேகமாக போனாள்.

நல்லவேளை மணமகள் அறை அருகே ப்ரயு விழ ஆரம்பிக்கவும், பிரியா வேகமாக வந்து அவளை உள்ளே அழைத்து சென்று விட்டாள்.

யாரின் கவனமும் கலையாத வகையில் அவளை அறையில் படுக்க வைத்து விட்டு, முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.

அங்கே முகூர்த்தம் முடிந்து எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை வாங்கி முதலில் பிரயுவிற்கு கொடுத்தாள்.

அதை குடித்தப் பின் சற்று நேரம் அமைதியாக இருந்த பிரயுவை முறைத்தபடி பிரியா நின்றிருந்தாள்.

“ப்ரத்யா என்னடி ஆச்சு? சாப்பிட்டாயா இல்லயா?”

பிரயுவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது வித்யாவை ஹாஸ்பிடல் சேர்த்த அன்று இரவு சாப்பிட்டது. பிறகு நேற்று இரண்டு வேளை காபி தான் குடித்தாள். குழந்தை பிறக்கும் வரை அவளுக்கும் வேறு நினைவு இல்லை பிறகு கான்டீன் போய் பார்த்த போது சாப்பாடு முடிந்து இருந்தது. அதனால் அவளுக்கும், அவள் மாமியாருக்கும் சப்பாத்தியாக வாங்கி வந்திருந்தாள்.

அதையும் வித்யா மாமியார் காரில் வந்த அலுப்பும், பசியும் சேர அவர் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டார்.

இரவு அவள் மாமியாருக்கு வாங்கி கொடுத்தவள், கல்யாணம் பற்றிய எண்ணமும், ஆதியின் நிலைமையும் சேர அவளுக்கு பசியும் தெரியவில்லை தூக்கமும் வரவில்லை.

காலையில் திருமணத்திற்கு வரும் அவசரத்தில் ஒன்றும் சாப்பிடவில்லை இப்போ பிரியா கேட்டதும் தான் நினைவு வந்தது.

அவள் முகத்தை பார்த்த பிரியா, இவள் கண்டிப்பாக சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று எண்ணி அவளை நேராக டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றாள்.

அப்போதும் ப்ரயு “ப்ரியா எல்லோரும் வரட்டும்டா. இன்னும் மாப்பிள்ளை வீட்டில் யாரும் சாப்பிட வரவில்லை போல் இருக்கிறது ஏதாவது நினைச்சுக்க போறாங்க”

“கொஞ்சம் அடங்கறியா அந்த கும்பல் எல்லாம் காலையிலேயே டிபென் வெட்டிட்டாங்க. நீ தான் சோமாலியா பஞ்சத்துலே அடிபட்ட மாதிரி இருக்க ஆமாம் நீ எப்போ சாப்பிட்ட?”

சொன்னால் திட்டுவாள் என்று நினைத்த ப்ரயு “அத விடு. “ என்று சாப்பிட அமர்ந்தவள் , அப்போதும் தன் மாமியாரை அழைத்து ஹாஸ்பிடல் நிலவரம் கேட்டாள். பின் அப்படியே ஆதிக்கு முயற்சி செய்ய. அதிர்ஷ்டவசமாக லைன் கிடைத்தது

அவன் எடுத்ததும்

“ஆதிப்பா” என்று கண்ணீரோடு அழைக்க.

“ப்ரயு சொல்லுடா உனக்கு நியூஸ் கிடைச்சுதா “ என்று அவன் கேட்க, அவள் சற்று சுதாரித்து,

“ஆமாம்பா நேத்திக்கு நெட்லே பார்த்து தெரிஞ்சிகிட்டேன் அதோட உங்க ஆபீஸ்லேர்ந்தும் மெயில் வந்துது உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே? அங்கே எல்லாம் சரியாயிடுச்சா?”

“இல்லமா. இன்னும் சரி ஆகல. இன்னைக்கு கொஞ்சம் பரவால்ல. அதனாலே. கொஞ்ச நேரம் மட்டும் சிக்னல், பவர் எல்லாம் கொடுத்துருக்காங்க. எப்போ வேணா கட் ஆகலாம் “

“ஒஹ் நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க? ஊருக்கு கிளம்பனும்ன்னு ஃபிரிஜ் லே எல்லாம் காலி பண்ணிட்டேன்ன்னு சொன்னீங்களே “

“நியூஸ் கிடச்ச உடனே என் பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் எனக்கும் சேர்த்து சில ஃபுட் ஐட்டம் வாங்கி கொடுத்துட்டாங்க நானும் சமாளிச்சுட்டு இருக்கேன்”

“ஓகே கேர்ஃபுலா இருங்க ஆதிப்பா ”

“சரிடா கல்யாணம் நல்லா முடிஞ்சுதா? நீ மண்டபத்துலே தானே இருக்க. ? அம்மா, வித்யா எல்லாம் வந்துருக்கங்களா? சாரி மா நீ சொன்னத நான் கேட்ருக்கணும். லாஸ்ட் வீக் நான் கிளம்பிருந்தா கல்யாணம் அட்டென்ட் பண்ணிருக்கலாம். ஒன்ன அந்த அம்மா ஒன்னும் சொல்லலேயே உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா? “ என்று வரிசையாக கேள்விகள் கேட்டான்

“கல்ய்ணாம் முடிஞ்சுது. அப்புறம் ஒரு குட் நியூஸ் உங்களுக்கு மருமகன் பிறந்திருக்கான் “ என,

“ஹே எப்போ ? சொல்லவே இல்ல “

“நேத்துதான் பா “

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லைல. வித்யாவும், குழந்தையும் நல்லா இருக்காங்களா? நீ போய் பார்த்தியா ? நீதான் இங்கே இருந்திருப்பியே எப்போ போறே ? இங்கே வேலை எல்லாம் முடிச்சுட்டு போ அங்கதான் அம்மா, வித்யா ஹஸ்பண்ட் எல்லாம் இருப்பாங்க இல்ல” என்றான்.

அவன் ப்ரயு அவள் தங்கைகள் கல்யாணத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினான்

அவன் எண்ணம் புரிந்த ப்ரயு, விரிவாக இல்லாமல் சுருக்கமாக,

“நான் நம்ம வீட்டில்தான் இருந்தேன் ஆதிப்பா. வித்யா வீட்டில் எல்லோரும் வெளியூர் சென்றிருந்தார்கள் நேற்று தான் வர முடிந்தது நானும் அத்தையும் பார்த்துக் கொண்டோம் வித்யாவும், குழந்தையும் நல்லா இருக்காங்க”

“அப்போ நீ எப்போ கல்யாணத்திற்கு வந்தே ?”

“இன்னிக்கு காலையில் தான் “

“நேத்திக்குதான் அவங்க எல்லாரும் வந்துட்டாங்க தானே. நீ நேற்று ரிசப்ஷன் அப்போவாது வந்துருக்க வேண்டியது தானே”

“அது வித்யா வீட்டில் எல்லோரும் தீடிர்னு கிளம்பியதால் ரெஸ்ட் வேணும்ன்னு போய்ட்டாங்க. அத்தைய மட்டும் எப்படி தனியா விடறதுன்னு நானும் அங்கியே இருந்துட்டேன் காலையில் கிளம்பி வந்தேன்”

ஆதி சற்று நேரம் பேசவில்லை அவனுக்கு பிரயுவின் சூழ்நிலை புரிந்தது அவள் மனம் எத்தனை கஷ்டபட்டிருக்கும். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சினை. தானும் வர வில்லை. டெலிவரி, கல்யாணம் எல்லாம் அவளை எவ்வளவு டென்ஷன் ஆக்கியிருக்கும் என்று.

அவன் மெதுவாக,

“சாரிடா ப்ரயு என்னாலே உனக்கு ரொம்ப கஷ்டம் என்னோட பொறுப்பு எல்லாம் நீ பார்த்து, உன் பிறந்த வீட்டிற்கு உன்னாலே எதுவுமே செய்ய முடியல எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு “ என்றான்

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க ? நீங்க வேற நான் வேறயா ? ஒன்னும் பிரச்சினை இல்ல. இப்போதான் கல்யாணத்திற்கு வந்துட்டேனே நீங்க வருத்தப் படாதீங்க”

“சரி அநேகமா இன்னும் கொஞ்ச நேரத்தில் சிக்னல் போய்டும். இனிமேல் நைட் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். நான் அப்போ அம்மாவிற்கு பேசுகிறேன் நீ இப்போ அவங்க கிட்ட தகவல் மட்டும் சொல்லிடு. அதே மாதிரி ஒன்னும் பிரச்சினை இல்லைன்னா, நீ இப்போ ஹாஸ்பிடல் போக வேண்டாம் நைட் போய் அம்மாவிற்கு துணையா இருந்துக்கோ போதும். ஓகே . யா ? டேக் கேர் மா “

“சரிப்பா நீங்க எப்போ லைன் கிடைச்சாலும் பேசுங்க பத்திரமா இருந்துக்கோங்க மற்ற விஷயங்கள் நாம அங்கே புயல் எல்லாம் முடிஞ்சவுடனே பேசிக்கலாம். டேக் கேர் பா பாய் ”

“பாய் “

அவள் சாப்பிட வருவாள் என காத்திருந்த பிரியா, அவள் வராமல் மீண்டும் போன் பேசவும் அவளை முறைத்தாள். அவளிடம் கண்ணால் கெஞ்சிய படி,

“அத்தை அவர் பேசினார் அவர் பத்திரமா இருக்காராம்,, இன்னும் அங்கே சரியாகவில்லையாம்.”

“சரி. அவனிடம் வித்யா விஷயத்தை சொன்னியா ?”

“சொல்லிட்டேன் அத்தை ரொம்ப சந்தோஷப்பட்டார் நைட் கூப்பிட்றேன்னு சொல்லிருக்கார்”

“ஏன் இப்போ பேச வேண்டியது தானே ? விஷயம் தெரிஞ்ச உடனே மாப்பிள்ளை கிட்ட பேச வேண்டாமா”

பிரயுவின் குரல் இறங்கியது “ இல்லை அத்தை அங்கே சிக்னல் எல்லாம் இன்னும் சரியாய் கிடைக்கவில்லை. நான் எதச்சையாய் ட்ரை பண்ணி கிடைச்சது, அவரா ட்ரை பண்ணனும்னா எப்படியும் நைட் ஆகிடும்ன்னு சொன்னார்” என்றாள்.

“ஏதோ ஒன்னு சொல்லு அவனுக்கு வர வர ஒன்னும் புரிய மாட்டேங்குது. எது முக்கியம்ன்னு தெரிய மாட்டேங்குது” என்று வைத்தார்.

பிரயுவிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது நல்ல மனநிலையில் இருந்தவள் இப்போ டல் ஆகி விட்டாள்.

அவளையே கவனித்துக் கொண்டிருந்த பிரியா, என்ன வென்று வினவ, அவளிடம் கொட்டி விட்டாள்.

“அடி போடி உங்க மாமியாருக்கு வேற வேலை இல்லை. வித்யா முக்கியம் தான் தன் பையன் நிலைமையும் யோசிக்கனும். இதெல்லாம் யோசிச்சு நீ மண்டை குழம்பாதே சாப்பிட வா “

“ஏய் நீ என்னடி என் பின்னாடியே சுத்திட்டு இருக்க ? பவி, தாரிணிய பார்த்துக்கோன்னு தானே உன்னை அனுப்பிச்சேன்”

“ஏண்டி உன் மூளை மழுங்கி போச்சா. ? இனிமேல் நாம தேவை இல்லை. அங்கே பாரு ரெண்டு மன்மதனுங்களும், அவங்க அவங்க ரதிய எப்படி கரெக்ட் பண்ணணுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க. வா நாம முக்கியமான வேலைய பார்ப்பம்”

அது என்ன வேலை.

“பந்திக்கு முந்துன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. வா போவோம் உங்க அப்பா ஏற்பாடு பண்ண சமையல் ஆட்கள் தூள். .எல்லா அயிட்டமும் சூப்பர் இருக்கு அந்த மன்மத கும்பல் வந்துச்சின்னா நமக்கு மிஞ்சாது ‘

“நீ இருக்கியே ? போலாம் வா”

அவர்கள் சாப்பிட்டு வரவும், மற்ற உறவுக்காரர்களை கவனித்துக் கொண்டிருந்த, தன் பெற்றோரை சாப்பிட அனுப்பி விட்டு , அவள் மீதி வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அன்றே நாள் நன்றாக இருப்பதால் , மணமக்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்திருந்தனர். ஆதி வந்திருந்தால், பிரயுவும், ஆதியும் அவர்களை கொண்டு விட ஏற்பாடு செய்திருந்தனர் இப்போது அவர்கள் உறவு முறையில் வேறு ஜோடியை அனுப்பி வைத்தனர்.

பவி, தாரிணியும் புகுந்த வீட்டிற்கு செல்வதை எண்ணி கண் கலங்கினர்.

ப்ரயு அவர்களிடம் “ரெண்டு பேரும் கல்யாணத்திற்கு முன்னாடி நடந்த தேவை இல்லாத விஷயங்களை மறந்து விட வேண்டும் இன்றிலிருந்து அது உங்கள் வீடு. அந்த வீட்டின் சந்தோஷம் எந்த வகையிலும் கெட நீங்கள் காரணமாக இருக்க கூடாது. அதோடு இனிமேல் என்னை பற்றி கவலை கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்து கொண்டால்தான் அம்மா, அப்பாவிற்கு பெருமை புரிந்ததா ?” என்றாள்.

அவர்கள் இருவரும் “சரிக்கா “ என இருவரையும் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தாள்.

பிரயு மணமக்கள் இருவரையும் அனுப்பி விட்டு, மண்டபத்தை காலி செய்து , வீட்டில் எல்லாவற்றையும் இறக்கி விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினாள். இதுவே மாலை 5 மணி போல் ஆகி விட்டது.

அது வரை பிரியாவும் அவளோடு இருந்தாள். அவள் கிளம்பவும், அவள் பெற்றோரும் அவளோடு கிளம்பினர்.

“அம்மா, நீங்க எங்க கிளம்பறீங்க?”

“நாங்களும் உன்னோட ஹாஸ்பிடல் வந்து உன் நாத்தனார், குழந்தையை பார்த்துட்டு வந்துடறோம் ப்ரத்யா”

“ஏனம்மா வீட்டில் நம்ம சொந்தம் எல்லாம் இருக்காங்க அவங்கள பார்க்க வேண்டாமா ?”

அதற்குள் அவள் அத்தை, சித்தி எல்லாம் “அம்மா உன்னோடு வரட்டும் டா இனிமேல் என்ன நைட் சாப்பாடுதானே அதை கூட அப்பா கேட்டரிங் சொல்லிட்டாங்க வந்தா பரிமாற வேண்டியது தானே அத நாங்க பார்த்துக்கறோம்.”

“ஏனம்மா நாளைக்கு அவங்க மறுவீடு வருவாங்களே “

“நாளைக்கு தானே நீ நேற்று முழுசும் ஒருத்தியா சமாளிச்சிருக்க. இப்போ நாங்க உன்னை உங்க வீட்டில் இறக்கி விட்டு ஹாஸ்பிடல் போறோம். நீ அங்கே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா நீ வந்தவுடனே நாங்க கிளம்பறோம்” என்றார்.

அவளுக்கும் அது தேவையாக இருக்கவே, அவர்கள் சொன்ன மாதிரி செய்தாள்.

ஹாஸ்பிடல் சென்ற ப்ரயுவின் பெற்றோரிடம் அவள் மாமியார் கல்யாணம் விசாரிக்க, இவர்கள் இப்போ வெறும் கையாக போக வேண்டாம் என்ற எண்ணத்தில் வாங்கி சென்ற சின்ன டிரஸ், பழங்கள் இதேல்லாம் கொடுத்தார்கள்.

பின் “இந்த ஆதி பண்றத பாருங்க. மத்தியானம் உங்க பொண்ணு கிட்ட பேசியிருக்கான். குழந்தை பிறந்த தகவல் தெரிஞ்சு ஒரு வார்த்தை மாப்பிள்ளை கிட்ட பேசியிருக்க வேண்டாமா. ? மாப்பிள்ளை என்ன நினைச்சுக்குவார்.” என,

“நைட் பேசுவாறா இருக்கும் சம்பந்தியம்மா அங்கே அவர் நிலைமை என்னவோ?’

“என்ன நிலைமை பொண்டாட்டி கிட்ட பேச தெரியுது இங்கே பேச முடியாதா ?” என்று பொருமினார்.

இதை கேட்டுக் கொண்டே பிரத்யாவும் வந்து விட்டாள். அவர்களுக்கு புரிந்தது. மாப்பிள்ளை தன் பெண்ணிடம் பேசியதுதான் பிரச்சினை என்று இதில் அவர்கள் என்ன சொல்ல என்று புரியாமல் விழித்தனர்

ப்ரயு கண்ஜாடை செய்து கிளம்புங்கள் எனவும்

“சரி சம்பந்தியம்மா. நாங்க கிளம்பறோம் அங்கே அப்படியே போட்டது போட்டபடி வந்தோம். இந்த ரெண்டு நாள் கல்யாண வேலை முடிஞ்சவுடனே என்ன உதவி வேணுமோ வந்து செய்யறோம். மாப்பிள்ளை பேசும் போது விசாரிச்சோம்ன்னு சொல்லுங்க “ என்று கிளம்பினார்கள்.

ப்ரயு வரும்போதே வீட்டிலிருந்து டிபென் செய்து எடுத்து வந்ததினால் அதை சாப்பிட்டு வந்தார் அவள் அத்தை.

ப்ரயு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேச வில்லை.

வித்யாவும் ஒன்றும் பேச வில்லை.

அப்போது ஆதியின் போன் வரவும் முதலில் வித்யாவிடம் பேசுகிறேன் என்றான்

வித்யாவிடம் நலம் விசாரிக்கவும்,

“என்ன அண்ணா நீ ? ஒரு போன் பண்ண மாட்டியா ? எங்க மாமியார் என்ன குடையறாங்க. “

“ஏன்மா. .நான் இங்கே உள்ள நிலவரம் எல்லாம் அண்ணிகிட்ட சொன்னேனே அவள் சொல்லியிருப்பாளே”

“ஏன் அண்ணிகிட்ட சொன்னத அம்மா கிட்டயோ, இல்ல என் வீட்டுக்கரருக்கோ நேரா சொல்லியிருக்கலாம் லே “ என மேலும் ஏதோ சொல்ல வரவும்

எரிச்சலான ஆதி “இப்போ நீ ஸ்ட்ரெயின் பண்ணாத அம்மா கிட்ட கொடு” என அழுத்தி சொல்ல, அவள் தன் அன்னையிடம் கொடுத்தாள்.

“என்னம்மா பேரன் என்ன சொல்றான்” என்று தன்மையாகவே ஆரம்பித்தான்

அவரும் வித்யா கேட்டதையே கேட்கவும்,

“அம்மா கொஞ்சம் நிறுத்தறீங்களா . நான் தான் சொல்றேன்லே இங்கே இப்போதான் நிலைமை கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு இருக்கு. ப்ரயுவிற்கு நான் பேசினது எதச்சையா நடந்ததுதான் இத போய் பெரிசு பண்ணிக்கிட்டு” என்றான்.

“சரி மாப்பிள்ளை கிட்ட பேசினியா? “

“இல்ல உங்ககிட்ட பேசிட்டுதான் பேசணும் “

“ஏன் இப்படி பண்ற ? அவர் கிட்ட பேசணும்னு தெரியாதா ?”

“முதல்லே நீங்க முக்கியம். அதான் உங்களுக்கு பண்ணேன் இப்போ அவருக்குதான் பண்ண போறேன். ஏன் அவ்ளோ பேசற நீங்க உங்க மாப்பிள்ளை கிட்ட சொல்ல வேண்டியது தானே. நான் எவ்ளோ பெரிய ப்ரோப்லேம்லே இருக்கேன். அவர் போன் பண்ணி என்கிட்டே விசாரிச்சு அப்படியே பையன் பொறந்ததும் சொல்ல வேண்டியதுதானே “

“போடா. அவர் மாப்பிள்ளை நாம்தான் விட்டு கொடுக்கணும் “

“என்னமோ சொல்லுங்க சரி நான் ப்ரயு கிட்ட பேசணும் கொடுங்க “

“இரு இரு இப்போ கான்செல் செய்த டிக்கெட்க்கு வேற தேதிலே புக் பண்ணிட்டியா ? “

“இல்லைமா இங்கே இன்னும் ஒன்னும் கிளியர் ஆகல ரெண்டு மூணு நாள் ஆகும்.”

“நல்ல வேளை நீ இப்போ வர வேண்டாம் நான் சொல்லும் போது வா போதும்”

“என்னமா சொல்றீங்க ? “

“ஆமாம்டா கல்யாணமும் முடிஞ்சுது வித்யா டெலிவரியும் முடிஞ்சுது நீ வந்து என்ன பண்ண போறே ? அதனாலே நாங்க சொல்லும்போது வா “ என்று உத்தரவு போட்டு விட்டு , ப்ரயு கையில் கொடுத்து விட்டு போய் விட்டார்,

“ஹலோ “ என,

“ப்ரயு. நான் இப்போ பேசற மூட்லே இல்ல ரெண்டு நாள் கழிச்சு பேசறேன்” என்று வைத்து விட்டான்.

மீண்டும் தன் அம்மாவிடம் பேச்சு வாங்க பிடிக்காமல், வித்யா கணவருக்கு அழைத்தான்.

அவரிடம் குழந்தை, வித்யா பற்றி விசாரித்து விட்டு,

“ஏன் மாப்பிள்ளை கடைசியில் யார் துணையும் இல்லாம, ப்ரயு, எங்க அம்மாவே சமாளிச்சுட்டாங்க போல “ என்று நக்கலடித்து விட்டு தான் வைத்தான் இதற்காக தன்னை என்ன பேச்சு பேசினார் என்று அந்த கோபம் கொஞ்சம் வடிந்தது.

இங்கே பிரயுவின் மாமியாரோ

“காலையில் போனவ, ராத்திரிதான் வர வயசான நான் எவ்ளோ நேரம் இப்படியே உக்காந்துக்க முடியும்”

“ஏன் வித்யா மாமியார் வரேன்னு சொல்லிருந்தாங்களே “

“அவங்களுக்கு என்ன தலை எழுத்து. நம்ம பொண்ணுக்குத் நாமதான் பார்க்கணும் சரி. சரி. பகல் பூரா நான் பார்த்துகிட்டேன். நைட் நீ முழிச்சு பார்த்துக்கோ “ என்று விட்டு படுத்து விட்டார்.

பிரயுவிற்கு அசதியாக இருந்தது ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தாள். இரவு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தை அழ, எடுத்து வித்யாவிடம் விட்டு வாங்கி தொட்டிலில் போடுவதே சரியாக இருந்தது

இதே நிலை ஹாஸ்பிடளில் இருந்த மீதி இரண்டு நாட்களும் தொடர்ந்தது. ப்ரத்யா போன வாரம் லீவ் எடுத்து இருந்ததால், வித்யா டிஸ்சார்ஜ் ஆகவும் அவளை வேலையில் சேர சொல்லி விட்டனர்.

ப்ரயு வீட்டில் வேலை, ஆபீஸ், வித்யாவை, பார்த்துக் கொள்வது என்று பறக்க ஆரம்பித்திருந்தாள்.

-தொடரும்-
 

Rajam

Well-known member
Member
பிரத்யு தன் உடலா ஆரோக்யத்த கவனிக்காமல் விட்டுட்டா.
மனதும நொந்து இருக்கா.
என்ன நடக்குமோ.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom