முள்ளில்லா முல்லைப்பூ – 1
அத்தியாயம் – 1 விளக்கின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்தத் திருமண மண்டபம். மண்டபத்திற்குள் விருந்தினர்கள் மேடையை பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க, உறவினர்கள் பரபரப்பாக இன்னும் சற்று நேரத்தில் நடக்க போகும் நிச்சயதார்த்தத்திற்கான வேலையில் முனைப்பாக இருந்தனர். “பொண்ணு சேலையை மாத்திட்டு வந்ததும் மாப்பிள்ளையும் மேடைக்கு வரணும். மாப்பிள்ளையை வரச் சொல்லுங்க…” என்று ஒரு பெரியவர் குரல் கொடுத்தார். “இதோ அழைச்சுட்டு வரச் சொல்றேன் பெரியப்பா…” என்ற மணமகனின் தந்தை கைலாசம், சற்று தள்ளி நின்று ஒரு உறவினரை […]