உயிரூற்றாய் வந்தாய் – 2
அத்தியாயம் – 2 “விஷ்வா… தம்பி…” மகனை வாஞ்சையுடன் அழைத்தார் கவிதா. அன்னையின் அழைப்புச் செவியை நிறைக்க, மெல்ல இமைகளைப் பிரித்தான் விஷ்வமித்ரன். இரவே அவனுக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகளை எடுத்திருந்தனர். தலையில் சின்னக் காயம்தான் என்பதால் வேற எந்தப் பாதிப்பும் இல்லையென அவனை அறைக்கு மாற்றியிருந்தனர். மயக்கமும், உறக்கமுமாக இருந்தவன் இப்போதுதான் விழித்தான். கண் விழித்துப் பார்த்தவன் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை உள்வாங்கினான். மருத்துவமனை சூழ்நிலை உறைக்க, நெற்றியைச் சுருக்கி யோசித்தான். தொழிற்சாலையில் இருவர் தன் […]