💗அத்தியாயம் 34💗
ஆர்.கே பவனம்… மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான் தங்கப்போவதாகச் சொல்லிவிட்டுக் குடும்பத்துடன் அங்கேயே சென்றுவிட்டவர், மனைவியுடன் திரும்பி வந்த பரபரப்பில் பணியாட்கள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். துளசியும் கிருஷ்ணாவும் மதியவுணவைக் கொறித்தபடி உணவுமேஜையில் எதிரெதிராக அமர்ந்திருக்க பணியாளர் ஒருவர் பவ்வியமாகப் பரிமாறினார். துளசி அவரைச் செல்லுமாறு பணித்தவள் தங்கள் இருவருக்காக ஏன் இத்தனை நபர்கள் பட்டினி கிடக்க […]