💗அத்தியாயம் 10💗
ஆதவன் நிலமகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் நேரம் வந்துவிட, வானம் செந்நிறம் பூசிக்கொண்டு அச்செய்தியை நிலமகளுக்கு அறிவித்த அப்பொன்மாலை நேரத்தில் ஸ்ரீவிவாஹா திருமண மண்டபத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிர சஹானா, ராகுல் தம்பதியினரின் வரவேற்பு இனிதே ஆரம்பித்துவிட்டது. மணமகன் ராகுல் வெள்ளைநிறச்சட்டையின் மீது சந்தனவண்ணக் கோட், அடர்பழுப்புநிற பேண்ட் சகிதம் ஜம்மென்று தயாராக, சஹானா இளஞ்சிவப்பு வண்ண லெஹங்காவில் ஒரு ராஜகுமாரி போலத் தயாராகி அழகுச்சிலையாக ஜொலித்தாள். இருவரும் மேடைக்கு வருகையில் பார்ப்பவரின் விழிகள் தெறித்தோடும் அளவுக்கு […]