TTA 11
தேன் 11 ரிதுபர்ணாவும் அந்த பெண்மணியும் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் யாஷ் கவனிக்கவில்லை, அவன் அங்கே வரும்போது ரித்துவிடம் அந்த பெண்மணி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, ‘யார் அவர்?’ என்பது போல் அவன் யோசித்தப்படி வரும்போது தான், அவர் “பை சோட்டீ,” என்று அவளைப் பார்த்து கூறியப்படியே நடந்தார். அதைக்கேட்டு யாஷ் அதிர்ச்சியெல்லாம் ஆகவில்லை, ஏற்கனவே அவன் யூகித்தது தானே, அதனால் அவளைப் பார்த்தப்படி அவன் நிற்க, அவள் தான் அவன் கண்டுக் கொண்டானோ என்று பதட்டத்தோடு திரும்பினாள். அந்த பதட்டமே […]