சிந்தையில் பதிந்த சித்திரமே – 18 Precap

“டேய், என்னடா ஓவரா பேசுற? அப்படி என்ன செய்ய முடியும் உன்னால்? ஏதோ என் பொண்ணு உடம்பு சரியில்லாமல் இருந்தாளேன்னு அமைதியா போனா ரொம்ப ஓவராத்தான் ஆடுற?” என்று ஞானசேகரன் சண்டைக்கு வர,

“அவர் அப்படித்தான் கத்துவார். நீ உள்ளே போ நயனிமா. நின்னுட்டே இருப்பது கால் வலிக்கும்…” என்று நயனிகாவை உள்ளே அனுப்பியவன், அவர் தன்னிடம் பேசவே இல்லை என்பது போல் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“ஸ்ஸ்…” என்று பெருமூச்சு விட்டு தன் கோபத்தை அடக்க முடியாமல் அவனின் வீட்டுக் கதவை முறைத்துக் கொண்டிருந்தார் ஞானசேகரன்.

“வா அரவிந்த்…” என்று ஒரு இளைஞனை உள்ளே அழைத்து வந்து கொண்டிருந்தார் ஞானசேகரன்.

….

“ஹாய் தயா…”

“அரவிந்த் அண்ணா. வாங்க வாங்க அண்ணா…” புன்னகை முகமாக வரவேற்றான் தயா.

“ஹாய் ஸ்வீட்டி, எப்படி இருக்க? என்னை எல்லாம் ஞாபகம் இருக்கா?” நயனிகாவை பார்த்து ஆர்ப்பாட்டமாகக் கேட்டான் அரவிந்த்.

“ஹாய் அரவிந்த், வாங்க. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” லேசாக இதழ்களைப் பிரித்துச் சிரித்து விசாரித்தாள் நயனிகா.

“எனக்கு என்ன சூப்பரா இருக்கேன். இதோ நீயே பார்…” இடுப்பில் கைவைத்து நிமிர்ந்து நின்று கேட்டான்.

லேசாகப் புன்னகைத்துவிட்டு அமைதியாக இருந்தாள்.