கலைந்த ஓவியமே – 5
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
சிலர் பாராட்டுகிறோம் என்று நினைத்து உருவக்கேலி செய்வார்கள். சொல்லி முடிக்கும் வரை பலருக்கும் அது தவறு என்று கூட தெரியாது. இது போன்றவர்களுக்கு நவினின் பதில் மறைமுகமானதாக தான் அதிகம் இருக்கும்.
தன்னை நெருங்கி வருபவளின் முக பாவனைகள் இவனுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்க நமட்டு சிரிப்புடன் “என்ன டி பொண்டாட்டி, ச்சீ சாரி…” என பின்னந்தலையில் அடித்துக் கொண்டப்படி
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல பேசாது முறைத்து நின்றவளை மீண்டும் பொண்டாட்டி என அழைத்து சீண்டி விட்டு நல்ல பிள்ளை போல் நின்று விட்டான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவன் தன்னை கண் சிமிட்டி பொண்டாட்டி என அழைத்தது மட்டுமல்லாமல் சிவகாமி பார்ப்பதற்குள் அவன் முகத்தை மாற்றி கொண்டது இப்போது எதுவும் அறியாத பிள்ளை போல் விசாரிப்பது என அனைத்தும் நிவேதாவிற்கு மேலும் கோபத்தைக் கொடுக்க
அவன் முன்னே தன்னை அடங்கா பிடாரி, etc… என திட்டியது மேலும் கோபத்தை கொடுக்க
மனதின் அதிர்ச்சி விழி வழியே பிரதிபலிக்க நிவேதாவை ஒரு பார்வைப் பார்த்தான்.. அவனின் பார்வை தன் மேல் படுவதை உணர்ந்தவள் அவனை முறைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்துக் கொண்டாள். அவளின் செய்கையில் மனமும், முகமும் இறுகி நின்றவன்”சரிங்க ம்மா, நான் கிளம்பறேன்…” என்றபடி அவரின் பதிலைக் கூட எதிர்பார்க்காது கேட்டை நோக்கி நடந்தான்.
அவனின் அருகில் சென்ற சிவகாமியோ “நீங்க நினைக்கற போல நாங்க நகைநட்பை எதிர்பாக்கல தம்பி,..” என ஆரம்பிக்கவும் தான், தான் எதற்காக இங்கு வந்தோமென அவனுக்கு உரைத்தது…
காலையில் பார்த்த பெண்ணிற்காக வந்த விசயத்தை பாதிலயே விட்டுவிட்டு செல்கிறோமே என்ற ஆதங்கம் தன்னாலேயே எழ, அதற்கு காரணமனவளின் மேல் கோபம் வந்தது அவனுக்கு, இருந்தும் தன் கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் சிவகாமி கூறியதை உள் வாங்க ஆரம்பித்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
மனதில்ஆயிரமாயிரம் குழப்பங்கள் இருந்தாலும் மெல்லிய சாரல் போல் ஓர் உணர்வு அவனின் கோபத்தை கண்ணாடி போல் தகர்தெறிவது போல் தோன்ற சட்டென திரும்பி வீட்டின் வாசற்கதவை பார்த்தான்… அவள் இல்லை, ஏனோ அவளின் மேல் கோபம் ஏற்கனவே இறுகியிருந்த முகம் இப்போது பறையை போல் இறுகியது… *********
அலுவகத்தில் அமர்ந்திருந்தவனின் கண்கள் நொடிக்கு ஒரு முறை தனக்கு எதிரில் இருந்த டேபிளை ஆசையாக வருடியது… எப்போது வருவாள்???எப்போது அவளை பார்ப்பது என இருப்பவனுக்கு இப்போதைக்கு ஒரே ஆறுதல் அவள் அமரும் அந்த டேபிள் தான்…
அவளை நினைத்தாலே நிமிடங்கள் அனைத்தும் உருகுவது போல் தோன்றியது நவினுக்கு.
குறையை முன் வைத்து தான் அவள் தன்னை வேண்டாமென கூறிவிட்டாள் என மனம் எத்தனை முறை கூவினாலும் அதனை அவன் காதில் கூட வாங்கவில்லை அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது… அன்று அலுவலகத்தில் அவள் பேசியது அவனின் கண்முன்னே வந்து சென்றது… “புராஜக்ட் மேனேஜர் ஒருத்தர் இருக்காரு பாத்தியா…” என ஒருவள் கேட்க,”கண்ணு கூட ஒரு மாதிரி இருந்துச்சே, மனுசன் யாரை பார்க்கறான்னு தெரியல டி, நானும் என்னை தான் பாத்துட்டு இருக்காருன்னு நினைச்சேன்… வலது கண்ணு என்னை பாத்தா இடது கண்ணு உன்னை தானே பாக்குது…” என கிண்டலாக சிரித்தபடியே கூறினாள் மற்றொருவள்.
இது அருகில் அமர்ந்திருந்த மகியின் காதிலும் அந்த வழியாக சென்ற நவினின் காதிலும் சரியாக விழுந்தது… நவினுக்கு இது போன்ற கேலிகள் பழக்கம் தான் என்பதை போல கடந்து செல்ல, அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த மகியோ சட்டென இருவரையும் திரும்பி முறைக்க அவளின் பார்வையில் இருவரும் அமைதியாகி விட்டனர்.
அப்போது அவளின் செய்கையில் விழுந்தவன் தான் அதற்கு மேல் அவளின் மீதிருந்த கோபம் எல்லாம் காற்றோடு காற்றாய் பறந்தன என்பது தான் உண்மை… இருவரையும் அவள் பார்த்த பார்வை இப்போதும் கண்முன்னே வர தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அவளின் நினைவில் மிதந்து கொண்டிருந்தவனின் காதில் தெரு நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு பின் ஓர் பெண்ணின் அண்ணா என்ற குரலும் கேட்க, அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளியில் ஓடினான். கைகளால் இரண்டு காதுகளை அடைத்து கொண்டு கண்கள் இரண்டையும் இறுக மூடி “அண்ணா..” என சத்தமாக கத்தியது வேறு எவருமில்லை நம் மகியே தான்.
அவள் கத்திய கத்தலில் தெருநாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் திரும்பி ஓடியது… நாய்களின் குறைக்கும் சத்தம் கேட்காது போக ஒற்றை கண் திருந்து சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். அதில் ஒரு நாய் இவளை திரும்பி பார்த்துக் கொண்டே ஓடியது. அந்த நாயையும்,இவளையும் மாறி மாறி பார்த்தவனுக்கு குபீரென சிரிப்பு வர சத்தமாக சிரித்து விட்டான். ஒரு ஆணின் சிரிப்பு சத்தத்தில் கண்கள் இரண்டும் விரிய சத்தம் வந்த திசையை பார்த்தாள். அதற்குள் அவன் அங்கிருந்து சென்றிருக்க சிறு தோள் குலுக்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததும் அன்று இன்டர்வயூவில் பேசிய அட்டண்டரிடம் நேராக சென்றவள்