🖊️துளி 11👑
“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயதார்த்தத்தை ஆரம்பிச்சது?” என்றபடி உள்ளே வந்த அபிமன்யூவை ஸ்ராவணியின் விழிகள் கூறு போட அவன் அதைக் கண்டுகொள்ளாதவனாய் முன் வரிசையில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துவிட்டு அஸ்வினையும் உட்காருமாறு கண்காட்ட அவன் சங்கடத்துடன் அமர்ந்தான். “என்ன பாத்துட்டே இருக்கிங்க ஐயரே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி லக்னபத்திரிக்கையை வாசிங்க” என்று கட்டளையிட விக்ரமின் குடும்பத்தார் ஸ்ராவணியைக் கேள்வியாய் நோக்கும்போதே லக்னப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதற்கு பின் ஸ்ராவணியிடம் பட்டுச்சேலையை கொடுத்து மாற்றி வருமாறு சொல்ல மேனகா […]