💘கண்மணி 20💘
மணமகளின் தந்தை சுதர்சன் சுவாமிநாதனுக்குத் தூரத்து உறவு. அந்த முறையில் ஜெகத்ரட்சகன் சுதர்சனுக்கு அண்ணன் முறை வேண்டும். அதனால் தான் ஜெகத்ரட்சகனே நேரில் வந்திருந்தார். இல்லையெனில் மனைவியையோ மகனையோ அனுப்பி வைத்திருப்பார். ஆனால் வந்த இடத்தில் மகளையும் மருமகனையும் கண்டவருக்கு மனம் அலைபாய்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மணமேடையில் கண் பதித்தார். ஆனால் உள்ளமெங்கும் மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலை தான். அவளது பார்வை தன் புறம் திரும்பும் போதெல்லாம் மருமகன் ஏதோ சொல்வது கண்ணில் படவும் […]