IMK 4
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 4
வேறுயாருக்கும் உடம்பு சரியில்லை எனில் அவர்களுக்கு உதவுவதற்கு மாற்று ஆட்கள் போவது உண்டு என்பதால், “பெரியப்பாவிற்கு உடம்புக்கு என்ன?, காட்டினதா? “என வேந்தன் வினவ,
வைத்தியசாலைக்கு போகலாம் வாங்க என தொண்டை தண்ணி வற்ற கேட்டும், கெஞ்சியும் பிடிகொடுக்காமல் வரமாட்டேன் என்று அடம் பண்ணிய பெரியப்பாவை எண்ணி இயலாமையுடன்” நான் போய் கூப்பிட்டேன்டா வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிட்டார்” என்று இசையரசன் சொல்ல,
“தனியே இருந்து கொண்டு உடம்புக்கு ஏதும் இழுத்துவைக்க போறார்” என்று வேந்தனும் விசனப்பட,
“பார்க்கிறதுக்கு மனைவியும் இல்லாமல், ஒற்றை மகளை வெளிநாட்டில் கட்டிக்கொடுத்திட்டு, தனியே இருந்து அல்லாடனும் என்று அந்த மனுசனுக்கு வீதி போல” எனச் சொல்லி சீதாவும் வருத்தப்பட்டார்.
சீதாவின் மைத்துனர் தான் லிங்கம் எனினும் சீதாவிற்கும் அவருக்குமான சொந்தம் என்பது திருமணத்திற்கு பிறகு வந்தது அல்ல.
லிங்கத்தின் சொந்த அத்தை மகள் தான் சீதா, இந்த வீட்டில் மூன்று ஆண்களை போல லிங்கத்தின் வீட்டில் இரண்டுமே ஆண்பிள்ளைகளாக போய்விட, அத்தை வீட்டில் சீதாவும் ஒற்றைப் பிள்ளையாகிவிட, லிங்கத்திற்கு அத்தை பெண் மேல் காதல் கிளர்த்தெளாமல் சகோதரி என பாச உணர்வே மேலோங்கியது.
சீதா படிக்கும் காலங்களில் அவர் தான் சீதாவின் பாதுகாவலர், அவர் தான் சகோதரன் என்ற இடத்தை நிரப்பியவர், அவரை அண்ணா என்றே அழைப்பார். அப்படி பட்டவர் தனியாளாக இருக்கும் பொழுது பொழுது சீதாவின் மனம் கலங்கும்.
அவரும் எத்தனையோ தரம் வீட்டுக்கு வந்துடுங்க என கெஞ்சி பார்த்துவிட்டார். மனுசன் அசைந்தே கொடுக்கவில்லை.
“நான் போய் அந்த ஓல்ட் மேன்னை கையை காலை கட்டி தூக்கிட்டு வந்திடவா” என பகிடி போல அமுதன் கேட்டாலும் அவனின் குரலிலும் பெரியப்பா மேல் வைத்திருக்கும் பாசமே தெரிந்தது.
“அவருக்கு ஹோச்பிடல் போனாலே தான் செத்துப்போயிடுவேன் என்று பயம், அது தான் காட்டுறதுக்கு வரமாட்டார் என்று பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கார், நானும் கேட்டு பார்த்து அலுத்து, எங்க வீட்டில் ஆவது ஆட்களுடன் வந்து இருங்க என்று சொல்ல அதுக்கும் மாட்டாராம், நானாவது துணைக்கு இருக்கிறேன் என்று சொல்ல உன் வேலையை விட்டுட்டு என்னுடன்இருக்கப்போறியா என்று அதுக்கும் வேணாம் என்றுட்டார்,கடைசியில் அவரை பார்க்கிறதுக்கு என்று ஒரு பையனை பிடிச்சு விட்டுட்டு வந்து இருக்கேன்” என்று அவருடன் போராடிய அலுப்புடன் இசைவேந்தன் சொல்ல,
உறவுகள் அருகில் இருந்து, வேறு ஆட்களின் துணைக்கு வைத்தபடி தன் பெரியப்பா இருக்க, இதயம் பிசைந்தது.
“நாம போய் பார்த்திட்டு வருவோமா?” என சீதா கேட்க,
“இப்போதைக்கு ஓகே தான், எனக்கு தெரிஞ்சு அவருக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லை, தேவையில்லாமல் யோசித்து அவரையே குழப்பிக்கிறார்” என்று இசையரசன் சொல்ல,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“அண்ணா அவர் எங்கட பேச்சை கேட்க மாட்டார், நீங்கள் அக்கா கிட்ட சொல்லுங்க, அவ சொல்லுற விதத்தில் சொன்னால் தான் கேட்பார்” என்று வேந்தன் சொல்ல,
“நானும் அவளுக்கு சொல்லிட்டேன்டா.. பார்ப்போம்” என பெருமூச்சுடன் சொன்னான் இசையரசன்.
தாயின் முகம் அவரை நினைத்து வாடிப் போய்விட்டதை கண்ட வேந்தன்” அம்மா நீங்கள் கவலைபடாதீங்க அவருக்கு ரொம்ப உடம்பு முடியலை என்று தெரிஞ்சால் அவரை கூட்டிட்டு வந்திடலாம்” என தாயை அமைதிப்படுத்தியனுக்கும் மனம் பாரமேறிப்போன உணர்வு.
குடும்பமே அவரை நினைத்துக் கவலைப்படுவதைக் கண்ட அமுதன் அவரை எப்படி குண்டுக்கு காட்டாக தூக்கிக்கொண்டு வரலாம் என பெருத்த யோசனையில் இருந்தான்.
எல்லோருமே இந்த யோசனையில் இருக்க, கேட் திறக்கும் சத்தம் பெரிதாக கேட்டது.
கேட்டுக்கு நேர் எதிரே இருந்த அமுதன் யார் என்பது போல தலையைத் தூக்கி எட்டிப் பார்க்க, அவர்கள் பெரியப்பா வேட்டியை மடித்துக்கட்டிய படி தோளில் துண்டையும் போட்டு வந்துகொண்டு இருக்க, பின்னால் ஒரு புதிய பையன் பாக்குடன் வந்து கொண்டு இருந்தான்.
அவர்களைக் கண்டு எழும்பி ஓடிப்போய் தன் பெரியப்பாவின் கைகளை ஆதரவாக பிடித்துக்கொண்டு “பார்த்துவாங்க பெரியப்பா” என அழைத்தான் அமுதன்.
மற்றவர்களும் வாசலுக்கு வந்து காத்திருக்க,எல்லோர் முகமும் அவரைக் கண்டு கவலை அப்பி காணப்பட எல்லோரையும் பார்த்தபடி, “எனக்கு ஒன்னும் இல்லைடா”
எனச் சொல்ல,
“அப்ப எதுக்கு கோயிலுக்கு போகாமல் என் நைனாவை அனுப்பி விட்டிங்க ஓல்ட்மேன், அவர் வீட்டில் இருந்தால் நானும் அவரும் ஒழிச்சு பிடிச்சு விளையாடி இருப்போம் இல்லை” என்று நக்கலாக சொல்ல,
” தலை சும்மா கிர் என்ற மாதிரி இருக்கு என்று தான் உன் அப்பனிடம் சொன்னேன். அவன் என்னை நோயாளியாகவே சித்தரித்து முத்திரை குத்திட்டண்டா” என அவரும் பாவமாகச் சொல்ல,
“ஒரு வேளை ஏதாவது செம பிகரை பார்த்திங்களா? அது தான் தலை கிர் என்றதா?” என மீண்டும் அவரை சீண்டினான் அமுதன்.
அவனின் தோளில் செல்ல அடிபோட்ட பெரியவர்,”போடா வடுவா..” என்று சிரித்தபடி சொல்ல,
அவரை சந்தோசமாக பார்த்தபின் தான் சீதாவின் மனம் முழுமையாக அமைதியாகியது.
லிங்கம் வந்து சோபாவில் அமர, அவரை சுற்றியே எல்லோரும் அமர்ந்து கொள்ள,அங்கே நின்று கொண்டு இருந்த பையனைக் கண்ட சீதா “நீயும் வந்து இருப்பா, எல்லோருக்கும் டீ போடுறேன்” என்று கிச்சனை நோக்கி செல்ல,
தான் அவ்வளவு கூப்பிட்டும் வராத மனிதர் தீடிரென்று வீட்டுக்கு வந்து நிற்க”என்ன எங்கள் வீட்டிற்கு திடீர் விசிட்” என இசையரசன் கேட்க,
அவனைக் கண்டு முகத்தை திருப்பியபடி, “நீ தானே உன் அக்காகாரியிடம் கோள்மூட்டி விட்டாய், பிறகு தெரியாதது போலக் கேட்கிறாய்” என்று நொடிக்க,
“ஓ..ஓ” என ராகம் இழுத்துச் சிரித்தவனுக்கு, அக்காவிடம் நல்லாக வேண்டிக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறார் என்று புரிந்தது.
மற்ற இருவருக்குமே புரிய வேந்தன் தம்பிக்காரனிடம் பார்த்தியா என்பது போல கண்ணை காட்டி சிரிக்க,
எல்லோருமே தன்னை பார்த்து சிரிப்பதை கண்ட லிங்கம் “போங்கடா.. அவள் என்னை அப்பா என்று பாரபட்சம் பார்க்காமல், இந்த வீட்டை கட்டிட்டு என்னத்தை புடுங்க போறிங்க, சாகும் பொழுது இந்த வீட்டையும் சேர்த்து எரிக்க சொல்லுறேன், இப்ப நீங்கள் கிளம்பி சித்தப்பா வீட்டுக்கு போகணும், இல்லை இந்த ஜென்மத்தில் என்னுடன் கதைக்காதீங்க, என்று சொல்லிட்டா” என மகளிடம் பேச்சு வேண்டிய கவலையுடன் குரலை தாழ்த்தி சொல்ல,
“இவருக்கு அக்கா தாண்டா சரி” என வேந்தனும் சொல்லிச் சிரிக்க,
அப்பொழுது டீயுடன் வந்த சீதா “அண்ணாவையும் கூட்டிட்டு சினிமாவுக்கே போவோமடா..” என பெரிய மகனிடம் கேட்க,
அவருக்கு உடம்பு சரியாகிவிட்டதா என்பது தெரியாமல் இசையரசன் பெரியப்பாவை பார்க்க
மகள் திருமணம் ஆகி சென்ற பின் படம் பார்க்க செல்லாத லிங்கம் “என்ன படம்” என்று ஆர்வமாக கேட்டார்.
அவருக்கு படம் பார்க்க செல்ல விருப்பம் இருப்பதை கண்ட வேந்தன் ” நல்ல புதுப்படம், பாமிலி மூவி தான் போவோமா” என கேள்வியாக நிறுத்த,
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
பெரியப்பாக்கு உடம்பு சரியில்லை என்று தந்தை கோவிலுக்கு மேளம் அடிக்க சென்று இருக்க, லிங்கத்தை கூட்டிட்டு சினிமா போனால் அப்பா என்ன சொல்வாரோ என நினைத்து,”டேய் அப்பா வந்து எல்லோருக்கும் டின் கட்டப் போறார்” என்றான் அமுதன்.