IMK 23
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 23
எல்லோரும் ரெடியாகி தமிழினியையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போக ஐயர் எல்லாவறையும் அவசரமாக தயார் படுத்தி வைத்து இருந்தார்.
ஹோமம் வளர்த்து, இன சனங்களை கூட்டி, விருந்து வைத்து என திருமணம் கோலாகலம் இல்லாவிட்டாலும், மனதுக்கு பிடித்த இரு உள்ளங்களை சேர்த்துவைக்கும் பொருட்டு நடத்தி வைக்கும் திருமணம் என்பதால் எல்லோர் மனதுக்கும் திருப்தியாகவே நடந்துகொண்டு இருந்தது.
பிரதான ஐயருக்கு துணைக்கு நின்ற ஐயரின் பார்வை தமிழினியின் மீதும், அருண்மொழியின் மீதும் அழுத்தமாக, குறு குறு எனப் படிவதை கண்ட அமுதனுக்கு, தமிழினியின் குடும்பமும் ஐயர் குடும்பம் என்பதால் அவர்கள் இருவரையும் இந்த ஐயருக்கு தெரிந்துவிட்டதோ எனப் பயமாகிவிட்டது.
தேவியும், சிவகாமியும் கோவிலுக்கு எல்லாம் வரக்கூடாது கோவில் ஆச்சாரம் போய்விடும் என ஒரேடியாக மறுத்து வீட்டிலே தங்கிவிட அருண்மொழிமட்டுமே தமிழினி கூட வந்தான்.
அதனால் அந்த ஐயரின் பார்வை அடிக்கடி இருவரின் மீதும் பட்டுக்கொண்டு இருக்க பயந்து, குடு குடுவென்று ஓடிப்போய் லிங்கத்திடம் சொன்னான் அமுதன்.
“எனக்கு வந்த உடனே தெரிந்துவிட்டது. நமக்கும் கோல்மூட்ட ஒருத்தன் தேவை தானே, சொல்லட்டும், இவங்களுக்கு தான் கோவிலுக்கு வர முதலே ரெஜிஸ்டரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, கல்யாணத்தை பதிந்து விட்டோமே, அதனால் அவங்களால் ஒன்றையும் புடுங்க முடியாது” எனத் ஊரின் வேட்க்கைக்கு துண்டை விசிக்கியபடியே உரைத்தார் லிங்கம்.
தன் அண்ணனின் கல்யாணத்தில் கலகம் நடப்பதை விரும்பாத அமுதன் “ஏதும் சண்டை வரும் பெரியப்பா” எனக் கலக்கத்துடன் சொல்ல,
“வரட்டுமே அப்பதான் சுவாரிசியமாக இருக்கும். இந்த சீதாவும் மூன்று கழுதைக்கும் சோத்தைப் போட்டு வளர்ந்ததற்கு பிரியோசனப்படட்டும். இன்னைக்காவது பயந்து நடுங்காமல் உங்கள் வீரத்தை கட்டுங்கடா” எனச் அசால்ட்டாக சொன்னார்.
லிங்கத்திடம் பேசிப் பிரயோசனம் இல்லை என்று எண்ணிய அமுதன் அடுத்ததாக தன் பெரிய அண்ணாவிடம் ஓடிப்போய் சொல்ல, இசையரசன் லிங்கத்தையும் விடக் கூலாக “நான் அவங்களுக்கு சொல்ல டெலிபோன் நம்பர் இருக்கோ தெரியலை என்று அருண்மொழியிடம் அவங்க அப்பா நம்பேரை வேண்டி, அந்த ஐயரின் காதில் விழும்படியாக சொன்னேன்.அவரும் போன் நம்பரை அழுத்தி அவங்க அப்பாக்கு தகவல் சொல்லிட்டுதான் இருக்கிறார்” என்றான்.
தன் தமையனின் பதிலில் திகைப்பாகிய அமுதன், இருவருமே சண்டைக்கு தயாராகி நிற்பதைக் கண்டவன், “டேய் வேந்தன் அண்ணா கல்யாணத்தில் ஏதும் பிரச்சனை வந்தால் பாவம்டா” எனப் பரிதாபப்பட்டான்.
“அவன் உனக்கு அண்ணா என்றால் எனக்கு தம்பிடா, அவன் வாழ்க்கை சந்தோசமாக இருக்கனும் என்றுதான் நானும் விரும்புறேன். அவன் கல்யாண வாழ்க்கையில் தமிழினியின் அப்பாவுக்கோ, மாமாவுக்கோ பயந்து பயந்து என்ன செய்வாங்களோ என்று ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா? அது தான் இந்த பிரச்சனையை இன்றுடன் முடிக்க பார்க்கிறோம்” என்று சொல்ல,
அவன் சொல்வது சரியென்றாலும் தங்கள் குடும்பத்தினர் சொற்ப ஆட்களே இருக்க, அவர்கள் தங்கள் சொந்தங்களை கூட்டி வந்து பிரச்சனை செய்தால் எப்படி சமாளிக்க முடியும் என அமுதன் பெருத்த யோசனையில் இருந்தான்.
அமுதனின் தோளைத் தட்டிய லிங்கம் “பயப்படாதேடா.. நான் போலீசுக்கும் போன் பண்ணிட்டேன்” என்று சொன்னார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“படத்தில் வருவது போல் எல்லாம் முடிந்த பின் வராமல் முன்னுக்கு வந்தால் சந்தோசம்” என்று அமுதன் உள்ளே போன குரலில் சொல்ல,
“படத்தில் காட்டுறது மட்டும் அவங்க இல்லைடா, அதெல்லாம் கதையின் எண்ணப்போக்குக்கும், ஹீரோவை மாஸாக காட்டுறதுக்கும் செய்யிறது, உண்மையான போலீஸ் வேலையெல்லாம் உயிரை பணயம் வைக்கிற வேலைடா, அதெல்லாம் எல்லோராலும் முடியாது” என்று லிங்கம் அறிவுரை வழங்கினார்.
அமுதன் எல்லாப்பக்கமும் தலையை உருட்ட,
“டேய் அந்த எட்டப்பன் திரும்ப அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு எங்கேயோ போகிறான் வா அவனுக்கு ரெண்டு போட்டுட்டு வருவோம்” என்று இசையரசன் அமுதனை அழைத்தான்.
“டேய் இப்ப பிரச்சனை பண்ணாதீங்க.. வேந்தன் தாலியை கட்டி முடிக்கட்டும்” என்று தன் பெறா மக்களை லிங்கம் தடுத்தார்.
இசையரசனும், லிங்கமும் அந்த ஐயரின் மேல் கண்ணை வைத்தபடியே வேந்தனின் கல்யாணத்தை கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.
அமுதனுக்கு புதிதாக ஒரு எண்ணம் தோன்ற அதை செயல் படுத்திவிட்டு தன் அண்ணாவின் கல்யாணத்தை கண்ணார பார்த்து ரசித்தான்.
மூலஸ்தானத்தில் உள்ளே மஞ்சள் கயிரையும் மஞ்சளையும் வைத்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி ஐயர் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க, அதை வேண்டி தமிழினியின் கழுத்தில் மூன்று மூடிச்சு இட்டு கட்டினான் வேந்தன்.
பூர்ணிமாவும், அருண்மொழியும் மணமக்களுக்கு துணையாக அருகிலே நின்று இருக்க, பூர்ணிமா தமிழின் தலைமுடியை தூக்கி வேந்தனுக்கு தாலிகட்டுவதற்கு உதவிபுரிந்தாள்.
அருண்மொழி அக்காவின் திருமண வைபத்தை காணொளிமூலம் தாயிற்கு அனுப்பியபடி இருந்தான். அவனுக்கும் அக்காவின் கழுத்தில் மங்கள நானேறும் பொழுது அளவில்லாத மகிழ்ச்சி.
தாலி கட்டிமுடிய எல்லாருமே வேந்தன், தமிழினியை ஆசிர்வாதம் செய்யும் பொருட்டு ஐயர் தந்த பூவினையும், மஞ்சள் அரிசியையும் அவர்களுக்கு தூவினார்கள்.
வேந்தனுக்கும், தமிழிக்கும் நெஞ்சு முட்ட மகிழ்ச்சி, அந்த மகிழிச்சியின் உணர்ச்சிகள் உச்சத்துக்கு சென்றதால் கண்ணிலே கண்ணீரே வந்துவிட்டது.
இவருக்கு இவர் என இறைவன் படைத்து விட்டால் மாற்றும் சக்தி யாருக்கு உண்டு. சூழ்நிலைகள் எப்படி எப்படியோ மாறியும் அவர்கள் திருமணம் நடைதெறிவிட்டது.
தமிழினி தான் தன்னை சமன் செய்ய தெரியாமல் கலங்கிய கண்களுடன் வேந்தனை நோக்கினாள்.
“சந்தோசமான நேரத்தில் எதுக்கு அழுகை” என அவளின் கண்களை வேந்தன் துடைத்துவிட , அவனின் அன்பில் அவனின் கைகளில் ஒன்றை எடுத்து இறுக்கி கட்டிக்கொண்டாள்.
சீதாவிற்கும் வீட்டின் முதல் திருமணம் என்பதால் கண்ணிலே நீர் சொறியவே பூக்களை அவர்கள் மீது தூவினார்.
எல்லோருக்குமே மகிழ்ச்சியின் ஊற்று முகத்தில் துலங்க, நல்லபடியாக திருமணம் நிறைவுற்றதை நினைத்து ஆசுவாசமானார்கள்.
தமிழினி பிடித்த கையை விடாமல் அப்படியே வேந்தனின் கைகளை கட்டியபடியே இருக்க, வேந்தனுக்கு அவள் தன் அருகாமையையும் ஆறுதலையும் தேடியிருக்கிறாள். உரிமை வந்தபின் விடாமல் பற்றிவிட்டாள் எனப் புரிந்தவன் தங்களின் தனிமையை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினான்.
அவனுக்கு அவளிடம் தன் காதலை மறுபடியும் சொல்லி அவளிடம் வாய்வார்த்தையாக பதில் வேண்ட வேண்டும் என்ற தீர ஆசை. அப்படி அவள் சொன்னால் ஒழிய அவள் தன்னிடம் வந்துவிட்டாள் என மனம் உணராமல் தடுமாறும் என்று நினைத்தான்.
தமிழினியும் இவ்வளவு நாளும் காதல் இருந்தும், வேந்தனிடம் பகிராமல் இருந்தவள் தன் காதலை சொல்லிவிடவே முனைந்தாள்.
அதனால் அவனிடம் பேசுவதற்கு தயாராகியவள் பிறகு எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் அவனின் முகத்தை பார்ப்பதுவும், குனிவதுமாக தடுமாற்றமுமாக இருந்தாள்.
வேந்தனுக்கு அப்படி ஏதும் தடுமாற்றம் இல்லாமல், தன்பக்கமிருந்தே ஆரம்பிப்போம் என “I Love you ராங்கி” என்று தன் மொத காதலையும் வார்த்தைகளில் தேக்கி அவளிடம் சொன்னான்.
அவளும் “மீ டு” என்று நணப் பூக்கள் முகத்தில் உதயமாக சொன்னவள், ஒரு ஆசுவாசத்துடன் வேந்தனின் தோளிலே சாய்ந்து கொண்டாள்.
காதலியாக அவளிடம் கேட்க ஆசைப்பட்டதை மனைவியாக வந்த பின் சொன்னவளை கண்டவன், “நீ விபரம் தான்டி, ஒரு பார்வைக்கே பஞ்சமாக்கி காதலியாக என்னை நாய் போல சுற்ற விட்டு இப்ப வந்து சொல்லு” என செல்லமாக கோவித்தவனை கண்டு,
“இனி நாம அடுத்து என்ன என்று பயப்பட தேவையில்லை தானே, நமக்கு தான் கல்யாணமே முடிச்சுதே, இனி நாம என்ன பண்ணினாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க” எனக் தங்கள் இருவரையும் கோவிலில் இருந்தும் தங்களுக்கு சிறிது தனிமை தந்துவிட்டு போன சொந்தங்களை கண்டு சிரித்தவள் அதற்கு காரணமாக தன் கழுத்தில் ஏறிய மஞ்சள்கயிறை கையில் பொத்தி வைத்துக்கொண்டு கண்ணை சிமிட்டினாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
மீண்டும் அவளின் குறும்புகள் மீண்டு வருவதை கண்டு சிரித்தவன்,”இனி பூட்போட்டில் நின்றால் நான் சொன்னால் கேட்ப்பாய் என்ன, உனக்கு கால் போனால் இனி எனக்கு தானே சேதம் என்று அவனும் குறும்புடன் சொன்னான்.
ஆமா என்றாள் அவளும் புன்னகையுடன்,
அவனின் அக்கறையான பேச்சும் தான் வாயடல் பேச்சும் என்று தொடங்கியது இன்று திருமணத்தில் முடிந்துவிட்டதை எண்ணி, “நீங்கள் முகத்தை பாவமாக வைச்சு, கண்களால் பேசி பேசியே, ஒரு பச்ச புள்ளையை உங்கள் வழிக்கு கொண்டு வந்திட்டீங்க” என்று சொல்ல,
“அம்மையாருக்கு எப்ப ஐயா மேல் காதல் வந்தது என்று இன்னும் எனக்கு தெரியலை, நீ எப்பவும் என்னை விட்டு ஒழிந்து கொண்டுதானேடி திரிந்தாய். அப்புறம் எப்படி லவ் என்று அவனும் ஆச்சரியமாக கேட்க,
“என்னுடைய கிரஷ் நீங்கள் அப்படியிருக்கும் பொழுது,நீங்கள் காதல் சொல்லும் பொழுது எப்படியிருக்கும் சொல்லுங்க”
“அடியேய் ராங்கி இதென்னடி புதுக்கதை” என ஆச்சர்யம் மேலோங்க கேட்க,
“நீங்கள் பஸ்சில் யாரிடமும் சிடுசிடுக்க மாட்டிங்க, எங்கள் யூனிவர்சிட்டி பெடியளோட பிரண்ட் மாதிரி நின்று அவங்களோட கதைப்பீங்க, அவ்வளவு ஏன் அண்ணா எனக்கு இந்த பாடம் புரியலை சொல்லிக்கொடுங்க என்றால் பஸ்சில் பிரீயாக இருக்கும் பொழுது அவங்களை கூட்டிவைச்சு சொல்லிக்கொடுப்பிங்க, அதெல்லாம் உங்களை பார்க்க தோன்றிச்சு, பிறகு பார்க்க பார்க்க பிடிக்க ஆரம்பிச்சிட்டு, அதனால் தான் நீங்கள் லவ் பண்ணுகிறேன் என்று சொல்லவும் ஓடி ஒளிஞ்சிட்டு திரிஞ்சேன். எனக்கு அப்பாவை நினைச்சு பயம்” என்று தனக்கு எப்படி காதல் தோன்றியது என்று மிகவும் இலகுவாக சொன்னாள்.
அவள் அந்த காதலில் ஜெயகுமாரனின் அத்தியாயத்தை தொடவே விரும்பவில்லை. இது வேந்தனுக்கு அவனின் மீதான தன் காதலை மட்டுமே தெய்வ சன்னதியில் வைத்து உரைக்கவே விரும்பினாள். அதனை செய்தும் விட்டாள். தமிழினிக்கு அது போதும்.
வேந்தனும், தமிழும் தங்களுக்குள் பேசி தங்களின் காதலை மொழிவழியாக பரிமாறிக்கொண்டு இருக்க,
“மணமகனும், மணமகளும் சாமியை சுற்றிக் கொண்டு வாங்க கிளம்பலாம்” என சீதா உரைத்தார்.
அவர்களுக்கும் கழுத்தில் மாலை சரசரக்க இறைவனை சுற்றிவந்து வணங்கியபின் கிளம்பலாம் என சீதா சொல்ல,
“அம்மா பெரியப்பா எதிர்பார்க்கிற விருந்தாளிகள் இன்னும் வரலை, அவங்க வந்த பின் ஆறுதலாக வீட்டுக்கு போகலாம்” என இசையரசன் சொன்னான்.
இவ்வளவு நேரமும் மகனின் கல்யாணத்தில் மட்டுமே கவனத்தை வைத்திருந்த சந்துரு “யாருடா வருவா?” எனக் கேட்டார்.
“அதெல்லாம் சஸ்பென்ஸ் சொல்ல மாட்டோமே” என்று அமுதன் சிரிப்புடன் சொல்ல,
“டேய் உன் சிரிப்பே சரியில்லை தயவு செய்து சொல்லித் தொலை” என சந்துரு தன் கடைசி மகனை அதட்டினார்.
“உங்கள் அண்ணாத்த கிட்ட கேளுங்க, நான் போய் வேந்தன் அண்ணா தலையில் இருக்கிற அரிசியை எடுக்கிறேன்” என்று சந்துருவை பொருட் படுத்தாமல் வேந்தனை குனிய சொல்லி அவனின் தலைமுடியை ஒதுக்கி அரிசி எங்கே எங்கே விழுந்து இருக்கிறது எனத் தேட தொடங்கினான்.
பூர்ணிமா தமிழினியின் தலையில் விழுந்த மஞ்சள் அரிசியை ஒதுக்க உதவ, வேந்தனின் தலையில் இருந்த மஞ்சள் அரிசிகளை அமுதன் ஒன்றொன்றாக எடுத்து வெளியில் போட்டு நேரத்தை கடத்திக்கொண்டு இருந்தான்.
இசையரசனும் வாசலையே பார்த்துக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக நடந்து கொண்டு இருக்க,
லிங்கம் அங்கே உடைத்த தேங்காய்களை எடுத்து, சில்லெடுத்து சாப்பிட்டுக்கொண்டு சாதாரணமாகவே இருந்தார்.
அவர்கள் எதிர்பார்த்த நபர்கள் கோவிலுக்கு வர முதலே போலீஸ் பாதுகாப்பு படையிலிருந்து நான்கு பேர் கோவிலுக்கு வந்து விட்டார்கள்.
“என்ன பெரியப்பா உங்கள் விருந்தினர்கள் இவ்வளவு சிலோவாக இருக்கிறார்கள்” என அமுதன் நக்கலாக அங்கலாய்க்க,
அவனிடம் முறைப்பையே பதிலாக கொடுத்தவருக்கும் நேரம் செல்ல செல்ல டென்ஷன் ஏறியது.
கோவிலின் முன்னே மோட்டார் வாகனங்களின் சத்தம் காதைப் பிளக்க “இது யாருடா” என்று துண்டை உதறி தோளில் போட்டபடி எழுந்தவர் யார் எனப் பார்க்க அமுதனின் கூட்டாளிகளின் கூட்டம் அது.
அந்த கூட்டத்தை பார்த்து நான்கு போலீசும் கண்ணை விரிக்க,
இன்னும் பிரச்சனையை கூட்டுகிறானே என,”ஏன்டா இவங்களை வரசொல்லி விட்டு இருக்கிறாய்” என லிங்கம் தன் பெறாமகனை கடிந்தார்.
“நீங்கள் ஒருத்தருக்கு ஹெல்ப்புக்காக கால் பண்ணீங்க, பெரிய அண்ணா ஒருத்தருக்கு கால் பண்ண ஹெல்ப் பண்ணினார். அப்படி நானும் என் நண்பர்கள் குழாமிடம் ஒரு செய்தியை தட்டி ஹெல்ப் கேட்டேன். ஒரு காதலுக்கு சப்போட் பண்ணுறதுக்கு இந்த கால இளைஞர்களை விட வேறு யார் போராட வருவார்கள். அது தான் என் தோஸ்துகள் எல்லாம் வந்திட்டு” என்று சொல்லி உற்சாகமாக தன் தோழர்களிடம் ஓடிவிட்டான்.
“டேய் என்னடா நடக்குது, கண்ணை கட்டுதுடா” என்று திருமணம் ஆன மகிழ்ச்சி தொலைந்து வேந்தன் புலம்ப,
“பெரியப்பாவின் விருந்தாளியின் வண்டி பஞ்சர் போல இருக்கு வெய்ட் பண்ணு” என அவர்களின் பொறுமையை சோதித்த பின்,
ஆள் சேர்ப்பிற்காக ஒரு மினி வேனில் ஒவ்வொருவராக ஏற்றிக்கொண்டு வந்ததால் நேரம் போய்விட்டு இருக்க, தங்களின் கூட்டத்தை பார்த்தே பயந்து போய் தமிழினியை விட்டு விடுவார்கள் என மனக்கோட்டை கட்டிக்கொண்டு வந்தவர்களுக்கு, கோவிலில் முன்னே இருந்த நாப்பது அம்பது இளவட்டங்களுடன், நான்கு போலீசும் இருக்க கூட்டிக்கொண்டு வந்த ஐயர் படை அரண்டு விட்டார்கள்.
அவர்கள் பாவம் தயிரையும் மரக்கறியையும் உண்டு வளர்த்த உடல், இளவட்டத்துடன் சண்டை என்று போனால் சதை மிஞ்சதே என்று அரண்ட படி தேவியின் கணவருக்கு பின்னால் பதுங்க, தேவியின் கணவர் மட்டும் கண்கள் சிவக்க தமிழினியை பார்த்தபடி நின்று இருந்தார்.
அரண்டு போனதை மறைத்த படி சந்துருவின் குடும்பத்தின் முன் வந்து நின்ற தியாகராஜாவிற்கு தமிழினியின் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிரைக் கண்டு அப்படியே நின்றுவிட்டார்.
தந்தையை கண்டு தமிழினியும், அருண்மொழியும் சந்துரு குடும்பத்தின் பின்னால் அடைக்கலம் தேட, அவர்கள் இருவரையும் சந்துரு,சீதாவிடம் ஒப்படைத்த வேந்தன்,சேட்டின் கைகளை மடித்த படி நெஞ்சை நிமிர்த்தியபடியே முன்னே வந்து நின்றான்.
“வந்த வழியை பார்த்துக்கொண்டு போயிடுங்க. அவ இனி என் பொண்டாட்டி” என்று தன் எக்கு குரலில் உறும
தன் கூட்டம் இருக்கும் தைரியத்தில் “அண்ணா இவங்க தான் சொல்லுகேட்க்காத ஆட்களை தலைமுழுக்கிட்டு போயிடுவாங்க இல்லை அப்படி தலையை முழுக்கிட்டு போக சொல்லுங்க, இவங்க தலை முழுக்கிட்டு போனால் நம்ம அண்ணி நமக்கு மட்டும் தான்” என அமுதன் சொன்னான்.
தலை முழுகுவது என்றால் என்ன என்று தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கும் மகனை கண்டு “வாயை மூடு, அது செத்ததற்கு சமம் என்று அர்த்தம் ” என சீதா அதட்ட,
“இவங்க தலையை முழுகி செத்திட்டா என்று தண்ணியை ஊற்றினால் அண்ணி செத்து போயிடுவாங்களா, நல்ல ஜோக்” என்றவன் தன் நண்பனிடம் திரும்பி “மச்சி ஒரு இரண்டு குடம் தண்ணியை கொண்டு வா, அண்ணியை என்ன அவர்கள் தலைமுழுகிறது, அண்ணி இவங்களை தலைமுழுக்கட்டும், அப்ப விஷயம் முடிச்சிடும். நாமும் நம்ம வேலையை பார்க்க போகலாம். எனக்கு வேற இன்னைக்கு வெஜிடபிள் கொத்து சாப்பிடணும் போல இருக்கு, இந்த சீதா தன் பெரிய மகனுக்கு கல்யாணம் நடக்கபோகுது என்ற குஷியில் எனக்கு சாப்பாடு தருவதில்லை” என்றான் அமுதன்.
சின்ன வயது இளங்கன்று வேறு தன் பின் நண்பர்கள் கூட்டமும் இருக்க பயத்தையே துடைத்தெறிந்தவன் போல அவன் பேச வந்து இருந்த போலீசுக்கே சிரிப்பு எட்டிப்பார்த்தது.
அவன் அவர்களை கண்டு “நீங்க சிரிப்பு போலீசா? வந்தமா குற்றவாளியை பிடிச்சு ஜெயிலில் போட்டோமா என்று கெத்தா இருக்கனும் சாரே, இப்படி முப்பத்திரண்டு பல்லும் தெரிய சிரிச்சால் குற்றவாளி தப்பிச்சிடுவான்” என்று அவர்களுக்கும் அட்வைஸ் பண்ண,
லிங்கத்தை பார்த்த அவர்கள், “நீங்க உங்கள் சின்ன மகனை கொண்டே சமாளிச்சு இருக்கலாம், செமையாக பேசுறார்” என்று சொல்ல,
அதிகப்பிரசங்கிதனமாக கதைத்துக்கொண்டு இருக்கும் பெறாமகனை எப்படி அடக்குவது எனத் தெரியாமல்,” பண்ணி கூட்டமாக இருக்கு இல்லை. அது தான் சத்தமாக கதைக்குது. நீங்கள் அவன் கதைக்கிறதை பெரிசா எடுக்காதிங்க” என்று சொன்னவர்,
டேய் உன்னால் பிரச்சனையே திசை திரும்புது. வாயை பொத்திட்டு நில்லு என கண்டித்தவர்
“சேர் இவங்களால் என் பெறமகனுக்கோ, மருமகளுக்கோ எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று எழுதி வேண்டுங்க, அப்பதான் அடங்கியிருப்பாங்க ” என்று லிங்கம் சொல்ல,
தேவியின் கணவர் தங்கள் அப்படியெல்லாம் எழுதித்தரமாட்டோம் என எகிறிக்கொண்டு வர,
“அண்ணா நீங்கள் அத்தைக்கு கோல் பண்ணுங்க” என்று அமுதனை நோக்கி கத்தினான் அருண்மொழி.
“இதெல்லாம் சில்லறை விஷயம் நாமே பேசி முடிச்சிடுவோம்” என்றவன் “சேர் இவர் மட்டும் கையெழுத்து போடாவிட்டால் சொல்லுங்க, வெளியில் காயம் தெரியாமல் எங்கே மிதிக்க வேண்டும் என்று என் காங்குக்கு சொன்னால் பக்காவாக முடிச்சிடுவாங்க” என்றான்.
தேவியின் கணவர் மரண பீதியுடன் அவனை நோக்க,” நானெல்லாம் என் அண்ணாவிற்காக உயிரையே கொடுக்கிற ஆள், இவங்க எலும்புகளை எண்ணிட்டு கொஞ்ச மாசம் களி சாப்பிடமாட்டேன்னா” என நக்கலாக கேட்க,
அமுதன் யாரையும் கதைக்க விடாமல் அவனே கதைப்பதை கண்டு, அவன் நண்பர்களை பார்த்து இனி நாங்கள் பார்த்துக்கொள்வோம், நீங்கள் கிளம்புங்க” என்றவர் அமுதன் தன் கூட்டம் செல்வதை கண்டு சோகமாகி நிற்க, “ஏன்டா நீ இப்படி திறந்த வாயை மூடாமல் இருக்கிறாய்” என்றார் லிங்கம்.
“பெரிய அண்ணாவும், வேந்தன் அண்ணாவும் குடும்பம் ஆகிட்டினம் அவங்களுக்கு பிரச்சனை வந்து ஜெயிலுக்கு போனால் பாவம் எல்லா, நான் என்றால் தனிக்கட்டை” என்று தன் சகோதர பாசத்தை சின்னக்குரலில் சொல்ல,
அவன் எந்த கோணத்தில் சிந்தித்து இருக்கிறான் என்று வியந்த லிங்கம், “என் நெஞ்சை நக்கிட்டாய் போ” என தன் நெஞ்சை தடவியபடி சொன்னவர், அவனின் தோளைத் தட்டி, தன் அண்ணாக்களுக்கு ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என வன் ஆர்மியாக தனித்து நின்று கதைத்தவனை கண்டு தோளை அணைத்துபெருமைப்பட்டவர்,
“வாடா நாம வீட்டுக்கு போகலாம்” என்று அமுதனிடம் சொன்னவர், போலீஸ் உத்தியோகத்தர்களை பார்த்து “சார் எங்களுக்கு நல்ல நேரம் முடியப்போகுது, நீங்களே உங்கள் பாணியில் இந்த பெரிய மனுஷர்களிடம் எழுதி வேண்டுங்க” என்று சொல்லிவிட்டு,
தேவியின் கணவரையும், தியாகராஜாவையும் கண்டு கொள்ளாமல் அமுதனின் கையை பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க தொடங்கினார்.