IMK 2

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 2

அடுத்த நாள் காலை வேளையில் இசைவேந்தன் நடத்துனராக இருக்கும் பஸ்சில் 90’S பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்க, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, பனிப்படைந்த புல் வெளிகளை கண்களால் நோட்டம் விட்டபடி,அந்த பாடல்களில் இலயித்து கேட்டுக் கொண்டு இருந்தாள் தமிழினி.

அவளிற்கு எப்பொழுதுமே அந்த பஸ்சில் ஒலிக்கும் பாடல்களை கேட்டு கொண்டு பயணிக்கும் அந்த பதினைந்து நிமிடம் அவளிற்கு பிடிக்கும்.

இன்றும் அதே போல பேருந்தில் பாடும் பாட்டுடன் தானும் சத்தம் வராமல் மெதுவாக வாயை அசைத்தபடி கால்களால் பேருந்தின் கீழ் தளத்தில் தாளம் தட்டியபடி இரசித்துக்கொண்டு இருக்க, அவளைக் கண்ட இசைவேந்தன் அவளின் மீது ஒரு பார்வையை செலுத்திவிட்டு, அவளிருந்த சீட்டின் கம்பியில் விழாதவாறு சாய்த்து கொண்டு மறுபக்கம் இருப்பவர்களுக்கு, அவர்கள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எனக் கேட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தான்.

தமிழினியின் மோன நிலையை கலைக்க அவளின் செல்பேசி ஒலிக்க, தன் பாக்கில் இருந்த செல்பேசியை எடுத்தவள் அழைத்தது அவளின் நண்பி மேகா எனக் கண்டு, அந்த போனை எடுத்து காதில் வைத்தவள் துள்ளலுடன் “குட் மோர்னிங், என்ன என் தோஸ்த்துக்கு விடியவே என் ஞாபகம்” எனக் கேட்க,

அந்த பக்கமிருந்து மேகா “குட் மோர்னிங்டி,பஸ்சை பிடிச்சிட்டாய் தானே” எனக் கேட்க,

“ஆமா இன்னைக்கு விடிய அந்த விருமாண்டியோட கிளாஸ் ஆச்சே, கிளாஸ் தொடங்கின பின் வந்தால் துரத்திவிடும், அது தான் சீக்கிரமாக வெளிக்கிட்டு பஸ்சை பிடிச்சிட்டேன், நீ நேரத்துக்கே வந்தால் எனக்கும் சேர்த்து இடத்தை பிடி, நான் இன்னும் பத்து நிமிடத்தில் வந்துடுவேன், அதுக்கு பிறகு அந்த கீரைவாளியோட “கிளாஸ் நேற்று உண்ட மயக்கத்தில் கோடிங்கை தப்பாக போட்டுட்டேன் என்று பேசிட்டு, அதை இன்னைக்கு ஒரு கை பார்க்கணும், இன்னைக்கு கிளாஸ் எடுக்கட்டும் டவுட்டாக கேட்டு அதன் மண்டையை சூடு ஏத்தி விடுறேன், யாருகிட்ட ” என்று தனக்கு படிப்பிக்கும் லெக்சர்களுக்கு பட்டப்பெயர் வைத்தது மில்லாமல் மரியாதை என்பது துளிகூட இல்லாமல் வேறு கதைக்க,

பஸ்சின் இரைச்சலில் அவள் சத்தமாக கதைக்க, அவள் சீட்டில் இருந்து டிக்கெட் கொடுத்துக்கொண்டே, அவளின் பேச்சிற்கு காதை கொடுத்துருந்த வேந்தன் அவளின் வாயைக்கண்டு அசந்து விட்டான்.

வழமையாக அவளை கண்டுகொள்ளாமல் செல்பவன் இன்று அவளை வேற்றுகிரக வாசி போல பார்த்து செல்ல, தமிழினிக்கு அவன் பார்வையெல்லாம் தெரியவில்லை.

தமிழினிக்கு தன் நண்பியுடன் சேர்ந்து இன்னும் வேறு சில லெக்சர்களை கழுவி ஊற்ற வேண்டி இருந்ததால் அவள் பிசி.

பல்கலைக் கழகத்திற்காக அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டி தான் இருந்த இருக்கையில் இருந்து, தமிழினி எழுந்து வர, சாரதி போட்ட திடீர் பிரேக்கினால் எதிர்பாராத விதமாக இசைவேந்தனுடன் மோத வேண்டிய நிலை.

அவனை மோதப்போகிறோம் என்று உணர்ந்தவுடன் சட்டென்று பக்கத்தில் இருந்த கம்பியை இறுக்கி பிடித்து அரும்பாடுபட்டு சமாளித்து நின்று கொண்டாள்.

தமிழினி கம்பியொன்றையும் பிடிக்காமல் அசால்ட்டாக நடந்து வந்ததை கண்டுருந்த வேந்தன். அவளை நேருக்கு நேராக பார்த்து, பல்லைக் கடிக்க,

“அது தான் மோதலை இல்லை.. ” என தமிழினி கூலாக சொல்லி நின்றாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இசைவேந்தன் அவளை கண்களால் எரிக்க, மேலிருந்து கீழ் பார்த்தபடி, “அவளா நீங்கள்” என இசைவேந்தனுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் இயம்ப,

அவன் முதலில் திகைத்து யாரும் கேட்டு விட்டார்களா என சுற்றும் முற்றும் பார்த்தான்.

அவனின் கலைக்காக என்று தலையை கொஞ்சம் நீளமாக வளர்த்து இருக்க, காலை வேளை என்பதால் நெற்றியில் பூசிய சந்தனமும், குங்குமமும் அழியாமல் இருக்க, கையிலே எக்கச்சக்கமான கோவில் நூல்கள் அதை பார்த்து தான் அவளின் கேள்வி.

வேந்தனுக்கு பொறுமை பறக்க “போடி..” என அவன் முடித்துக்கொள்ள,

தமிழினிக்கு கோபம் எல்லாம் வரவில்லை. அவள் அவனை புன்சிரிப்புடன் நோக்கி தன் நிறுத்தத்தில் இறங்கி கொண்டாள்.

இசைவேந்தனுக்கு அவளின் தோற்றம் ஐயர் குடும்பத்து பெண் போல இருக்க, அவளிடம் அமைதியையே எதிர்பார்த்தான். ஆனால் தமிழினி திறந்த வாயை மூடாமல் எப்பொழுதுமே அதிரடியாக பேச, அவனிற்கு தான் மறுமொழி பேச தெரியவில்லை.

அவனும் அவள் பேசும் பொழுது தக்க பதிலை கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவனுக்கு அவளின் கவுண்டருக்கு ஏற்ற மாதிரி பேச வராமல் வார்தைகள் தொண்டைக் குழியில் ஜாம் ஆகிய நிலை.

அவள் அவன் பேசியதை தூசு தட்டிவிட்டு புன்சிரிப்புடன் செல்ல, வேந்தனுக்கு பத்திக்கொண்டு வந்தது. அந்த எரிச்சலில் இருந்தவனை பஸ்சில் ஏறிய முதியவர் ஒருவர் அவனிடம் வந்து “தம்பி நான் *** இந்த நிறுத்தத்தில் இறங்கணும். இன்னைக்கு தான் இந்த பஸ்சில் வாரேன். என்னை ஒருக்கா மறக்காமல் இறக்கி விடுப்பா என கேட்க,

ஒரு முறையாவது இந்த ராங்கியின் வாயிற்கு தக்க பதிலடி கொடுத்திடனும் என மனதை ஆறுதல் படுத்தி தன் வேலையில் கவனத்தை திருப்பி அந்த பெரியவரிடம் “சரி ஐயா நீங்கள் பத்திரமாக போய் சீட்டில் இருங்க, நான் பார்த்து இறக்கி விடுகிறேன் ” என சொன்னான்.

அந்த முதியவர் சொன்ன இடத்தில் சரியாக இறக்கி விட “நன்றி தம்பி” என அந்த முதியவர் தலையாட்டலுடன் சொல்லிச் செல்ல, அவனும் தமிழினி கதைத்ததை மறந்து வேலையில் கவனத்தை செலுத்தினான்.