IMK 17

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 17

தமிழினிக்கு அத்தை வீசிச்சென்றதாக தாய் சொன்ன விஷச் சொற்கள் எல்லாம் இன்னுமே செவிப்பறையில் மோதிச் செல்வதுபோல இருக்க, உள்ளம் ஆறாத ரணத்துடன் வலித்தது. அதனை கடந்து எல்லாம் வரமுடியாமல் கண்கள் கலங்கியபடியே இருந்தாள்.

தமிழினி அழுதழுது சோர்ந்து போய் காணப்பட, இன்னுமே அழுது கொண்டு இருந்தால் உடலுக்கு பின்னடைவு ஏதும் ஏற்பட்டுவிடுமோ என வேந்தன் பயம் கொண்டான்.

அதுவும் அவளுடன் தனியே நீண்ட நேரம் நின்றால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்கவேண்டிய சங்கடம் உண்டாகலாம்.

அதுவும் ஜெயக்குமார் இறந்து கொஞ்ச நேரம் எனும் பொழுது கதைகள் திரிபட்டு எப்படி எப்படியோ மாறக்கூடிய அபாயமும் இருந்ததினால் அவனுக்கு அழும் அவளை உடனே விட்டுச் செல்லவும் முடியாமல், அங்கே நிற்கவும் முடியாமல் தவிப்புடன், தமிழினியின் கண்களை துடைத்தவன், அவளின் தாடைகளை கைகளில் ஏந்தியபடி “ப்ளீஸ்டிஅழாதே… உன்னை இப்படியே அழவிட்டுட்டு என்னால் போகமுடியாது. வெளியே உன் குடும்பம், உன் நண்பி குடும்பம்,என் குடும்பம் என்று நிறைய பேர் இருக்கிறாங்க, நான் நிறைய நேரம் இங்கே நிற்க முடியாது. போகணும்” என்று தவிப்புடன் சொல்ல,

தமிழினி அவன் போகப்போகிறான் என்று அதற்கும் அழுதாள்.

வேந்தனுக்கு அவளிடம் இது காதல் தானா என உறுதிப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை. அதுவும் ஒரு உயிர் இந்த உலகத்தை விட்டு சென்று இருக்கும் பொழுது, ஒரு இறப்பில் இன்பம் காணுபவன் நல்ல மனிதன் இல்லையே, அதனால் அவளுக்கு ஆறுதல் அளிக்க மட்டுமே செய்தான்.

அவனின் எந்தவித சமாதான வார்த்தையிலும் சமாதானம் அடையாத தமிழினியை அவன் என்ன சொல்லி தேற்ற என்று கைகளை பிசைந்து கொண்டு நின்றான்.

நடந்ததை மாற்றும் வல்லமை இவ்வுலகில் யாருக்கும் இல்லையே அப்படியிருக்க தான் என்ன தான் செய்வது என்ற குழப்பத்துடனும், அவள் அழுகையை நிற்பாட்டமல் உடம்புக்கு பெரிதாக ஏதும் இழுத்துவிடுவாளோ என்ற எரிச்சலின் மிகுதியில்,கெஞ்சுதல் எல்லாம் வேலைக்காகாது என்று “என்னத்துக்கு உன் டாமை திறந்து விட்டு இருக்கிறாய், அதை மூடு முதல்” என்று மிரட்டினான்.

அவனின் மிரட்டலில் அவள் திகைப்புற்று அவனை பாவமாக பார்த்தாள்.

அவளின் பாவனையில் இளகியவன், “என்னை என்ன செய்ய சொல்லுறாய். நீ இப்படியே அருவியாய் கொட்டிட்டு இருந்தால் நீயும் மேலே போய் செய்ந்திடுவாய். போன பிற்பாடு உன் பக்கத்திலே எனக்கும் ஒரு சீட் ரிசேவ் பண்ணி வை. நான் அங்கே வந்து லவ் பண்ணுறேன். என்னோட விதி செத்த அப்புறம் ஆவியாக தான் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, பொண்டாட்டி கூட மாஜாவாக இருக்கனும் போல, அப்பக்கூட இப்படியே அழுதழுது முகத்தை ஊத்தப்பம் மாதிரிதான் வைச்சு இருப்பேன் என்றால் சொல்லு, நான் புதுசா இன்னுமொருத்தியை பிடிக்கிறேன்” என்றான் வேந்தன் ஆதங்கமாய்.

அவனின் பதிலில் தமிழினியின் அழுகை நின்றது.

அவனுடன் ஆன ஒரு வாழ்க்கையை இன்னுமே நினைத்து பார்த்திராதவளுக்கு, கண்கள் லேசர் போல விரிந்து, இப்பொழுது ஜெயகுமாரனும் இல்லாத பொழுது தந்தையிடம் பேசும் வாய்ப்பே சாத்தியமே இல்லை என நினைக்கும் பொழுது விரிந்த கண்கள் சுருங்கி விட்டது.

வேந்தனுக்குமே ஜெயகுமாரன் இருக்கும் பொழுது ஒரு வீதமாவது சாத்தியமாக இருந்து இருக்கும். இப்பொழுது அவன் இறந்த பின், அவன் சாகுறதுக்கு காத்துகொண்டு இருந்திர்களா? என்ற கேள்வியுடன் வேந்தனுடனான காதலால் தமிழினி தான் ஏதோ செய்துவிட்டாள் என்ற கோணத்திலும் பேசுவார்கள் என்று தோன்றியது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவனுக்கும் அடுத்து என்ன என்று தெரியாத நிலையில் “நீ அவன் இருக்கும் பொழுதே என்னை பிடிச்சு தொலைக்குது என்று சொல்லியிருக்கலாம் இப்ப என்ன செய்யிறது” என்று அவளிடமே கேட்டான்.

“நான் அத்தான் கூட இதை பேசிட்டு வரும் பொழுது தான் அவர் இதை பற்றி யோசித்து றோட்டை கவனிக்காமல் விட்டதால் தான் விபத்து நடந்தது” என்று குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள் தமிழினி.

வேந்தன் தங்களினாளா? என்ற நம்ப முடியாத அதிர்வுடன் தமிழினியை நோக்கினான். அவனின் பார்வையை எதிர்கொண்ட தமிழினி அதற்க்கு விடை கூறும் விதமாக,

“நான் அவருக்கு சொல்லியிருக்க கூடாது போல, நான் உங்களை லவ் பண்ணுறேன் என்று எல்லாம் சொல்லலை, எனக்கு உங்கள் மீது அபிப்பிராயமா? என்று கேட்டார் நான் ஒழுங்கா பதில் சொல்லலை அது அவருக்கு சந்தேகம் வந்து இருக்கும்.அப்பா ஒத்துக்க மாட்டார் என்று எல்லாம் சொன்னார்” என்று தமிழினி அழுகையுடன் சொல்ல,

இதெல்லாம் நடந்து இருக்கிறதா இது மட்டும் இவள் அப்பாவுக்கோ அத்தைகோ தெரிந்தால் என்ன நடக்குமோ என்று கலவரமான வேந்தன், “நீ இதை என்னிடம் சொன்னதோடு மறந்திடு, வாயை திறந்திடாதே” என்று அவளிடம் சத்தியம் வேண்டாத குறையாக சொன்னான்.

அவளும் பிடித்தமின்மையுடன் தலையை உருட்ட,

அவனுக்கு இந்த உண்மை வெளியே வந்தால் என்ன ஆகுமோ என்று கதிகலங்கியது.அதனால் “புரிஞ்சுக்கோ தமிழ் இதெல்லாம் வெளியில் தெரிந்தால் உன்னை தான் எல்லோரும் கட்டம் கட்டி பேசுவாங்க” என்று அவளுக்கு புரியவைக்க முயற்சித்தான்.

அவளுக்கு அவன் சொன்னது புரிய, அவனை கோபமாக பார்த்து, ” நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருந்தேன், நீங்க தான் கண்ணாலே காதல் சொல்லுறேன் என்று என்னை உத்து உத்து பார்த்தே மயக்கிட்டிங்க, இப்ப அத்தான் செத்த பின் இப்ப ஊர் பேசும் உலகம் பேசும் என்றால் என்ன செய்ய” என்று மனத்தங்கலோடு குமுற,

வேந்தனுக்கு அவளின் பதிலில் ஒரு இயல்பான சிரிப்பு ஒன்று எட்டிப்பார்த்தது.

அவனின் சிரிப்பில் கடுப்பாகிய தமிழினி, “நீங்க இடத்தை காலி பண்ணுங்க, என்ன செய்யிறது என்று நான் பார்க்கிறேன்” என்று சொல்ல,

“கொஞ்ச நாள் சமாளிச்சிடு தமிழ், அதுக்கு பிறகு.. ” என்று வேந்தன் இழுக்க,

“அதுவே பழகிடும் அது தானே எனக்கே தெரியும்.” என்று சொல்லி எரிந்து விழுந்தவளை கண்டு,

“மாதக்கணக்கில் ஆனாலும் வருஷக்கணக்கில் ஆனாலும் நீ தான்டி என் பொண்டாட்டி,இப்ப சூழ்நிலை சரியில்லை நாம இரண்டு பேரும் காத்திருக்கனும்” என்று சீரியசாக சொல்ல,

“எனக்கு தெரிஞ்சு நமக்கு அறுபதாம் கல்யாணம் தான் சாத்தியம் போல இருக்கு” என்று நக்கல் பண்ணியவளை கண்டு,

“அப்பவும் உன் கூட தான் வாழுவேன், நீ டென்ஷன் இல்லாமல் யார் என்ன பேசினாலும் இந்த காதால் வேண்டி அந்த காதால் விட்டுட்டு இரு, எந்த ஒரு தப்பான முடிவுக்கும் போயிடாதே, உனக்காக தான் என் உயிர் துடிச்சிட்டு இருக்கு என்றதை மறந்திடாதே ” என்று அவள் இனி சந்திக்க போகும் வாய் வசவுகளில் இருந்து அவளை காத்துக்கொள்ள சொன்னவன், அவளை இனி எப்பொழுது கணக்கிடைக்குதோ என்ற எண்ணத்தில் அவளை நன்றாக பார்த்துக்கொண்டு, தன்னவளுடன் கதைத்ததில் மனது இலேசாக மாற அந்த மகிழ்ச்சியில் கதவை ஸ்டைலாக திறந்து கொண்டு, தலைமுடியையும் வருடிக்கொண்டு வந்தான்.

இவ்வளவு நேரமும் உள்ளே தங்கிவிட்ட மகனை நினைத்து மனதுக்குள் வசைபாடிக்கொண்டு இருந்த சீதா வேந்தன் வெளியே வர அவனைக் கண்டு சீதா முறைத்தார்.

வெளியே வந்தவனுக்கு தாய் தன்னை கண்டு முறைப்பதை கண்டு அசட்டு சிரிப்பு ஒன்று தோன்ற, அவரை நெருங்கினால் காலையில் விட்டதை திரும்ப தொடங்கிவிடுவார் என்று எண்ணினான்.

அங்கே சீதாவும், அமுதனும் மட்டுமே இருக்க, வேறு யாரையும் காணாமல் தாயிடம் கேட்க்காமல், பக்கவாட்டில் நின்ற அமுதனிடம் எல்லோரும் எங்கே எனக் கேட்க, இறப்பு வீட்டுக்கு என்று சொன்னான்.

அவனும் இவ்வளவு நேரமும் வேந்தன் உள்ளே இருந்தது அறிந்தே இருந்தான். அவனின் பார்வையும் அக்காவிற்கும், இவருக்கும் இடையில் என்ன என்பதாகவே யோசனை அதனால் வேந்தனை உன்னிப்பாக பார்த்தான்.

வேந்தனும் “தமிழ் ரொம்ப பயந்துட்டா அது தான் ஆறுதல் சொன்னேன் நேரம் போச்சு” என்று அவன் கேட்க்காத கேள்விக்கு இவனே முந்திரிகொட்டையாக பதிலளிக்க அருண்மொழிக்கு உறுதியாகிவிட்டது.

சீதா தானே வலியச் சென்று குதிருக்குள் நான் இல்லை என்று உளறிக்கொண்டு நின்ற மகனை கண்டு கண்களால் பொசுக்கினார்.

“தம்பி என் பையனுக்கு கொஞ்சம் மண்டை பிழை நீங்க ஒன்றும் நினைக்காதீங்க” என்று சீதா மகனை காப்பாற்றாமல் டேமேஜ் பண்ணினார்.

“அம்மா..” என்று வேந்தன் சிணுங்க,

சீதா மகனை பார்த்துவிட்டு, அருண்மொழியை பார்த்தவர், “அந்த பையன் உனக்கும் தமிழுக்கும் இடையில் என்ன என்று குழம்பிட்டு நிற்கிறார். தம்பி நீங்க நிறைய யோசிக்காதிங்க, என் பையன் சும்மா ஒரு தலை ராகம் பாடிக் கொண்டு இருக்கிறான். தமிழினி திரும்பிக்கூட பார்க்கலை” என்று இன்னுமே டேமேஜ் பண்ண,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அருண்மொழிக்கே அவர் சொன்ன விதத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

அம்மா என்று பல்லைக் கடித்தான்.

“விடுடா விடுடா.. நம்ம குடும்பத்தில் இணைய போகிறவன் தானே” என்று சொன்ன சீதா,”தம்பி நீங்களும் உங்க அத்தை வீட்டுக்கு போறேண்டா போங்க, நானும் இவனும் தமிழினியை பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல ,

“எல்லோரும் அங்கேயா போய்விட்டார்கள்” என்று வேந்தன் கேட்க, சீதாவும் ஆமோதிப்பாக தலையை ஆட்டினார்.