ANI 9
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் 9
அவன் சொல்லுவது போல அவனின் நிலையில்லை.
அவன் காசு முழுதும் தீர்ந்து போனால் அண்ணாக்களின் முன்னே நின்று பாவமாக கேட்டால் இரு அண்ணன்களுமே கேட்டதை விட கூட கொடுத்துத் தான் பழக்கம்.
அதுவும் தமிழினி வந்த பின் ஒரு தடவை இப்படி அமுதன் அண்ணனிடம் கேட்க, என் மச்சினனை காசுக்காக உங்களிடம் கெஞ்ச விடுவீங்களா என்று பொய் சண்டையிட்டு வேந்தனின் சம்பளத்திலேயே மாதம் மாதம் ஒரு தொகையை அமுதனின் பாங்கில் வைப்பு இடுவது போல செய்தாள்.
பூர்ணிமாவும் நானும் தமிழினிக்கு குறைந்தவள் இல்லை என்பது போல, திருமணம் ஆவதற்கு முன்னேயே, “என் மச்சினனுக்கு” என்று அவளும் ஒரு தொகையை அமுதனின் பாங்கில் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படியிருக்க அவன் இப்பொழுது யாரிடமும் வாயை திறந்து கேட்க்கும் அவசியம் கூட இல்லை. காசு நிறையவே இருக்கும். அவன் சும்மா சொல்கிறான். பரிசு வேண்ட மறந்து இருப்பான் அது தான் பயபுள்ளை சவடால் விடுது எனக் கண்டு கொண்ட சீதா மௌனமாக இருந்தார்.
“நீ இந்த லட்ச்சுல இருந்து கொண்டும் கல்யாணத்துக்கு கேட்டாய் பார் அங்கே நிற்கிறாய்டா நீ” என்று அமுதனின் தோளிலடித்து தினேஷ் அமுதனை பங்கம் பண்ண,
“நான் இங்கே வீட்டோட மாப்பிள்ளையாக வந்துடுவேன். நீங்கள் மூன்று வேளை சோறு போடமாட்டிங்களா” என்று அமுதன் கேட்டான்.
“உன்னையெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்குள்ளே சேர்கிற பிளான் எனக்கு இல்லை. என் தங்கச்சியை கட்டினியோ நீ தான் எல்லாம் பார்க்கணும்” என்று விளையாட்டு போல என்றாலும் அழுத்தமாக சொன்னான் தினேஷ்.
“நீங்கள் பார்க்கட்டி என்ன என் அண்ணனுங்க என்னை விட மாட்டாங்க” என்று இன்னமே விளையாட்டு தனத்துடன் இருந்தவனை கண்டு,
அமுதனின் வயதில் வேலை, கல்யாணம் என்று ஆண்பிள்ளைகள் பொறுப்பாக குடும்பத்தைப் பார்க்க, இவன் தொழில் தொடங்கும் ஐடியா இல்லாமல், நண்பர்களுடன் சுற்றி திரிவது, வேளா வேளைக்கு உண்டுகொண்டு பெண்களை போல் சீரியல் பார்த்துக்கொண்டு இருப்பது என்ற நடத்தைகள் உண்மையிலேயே அமுதனிடம் தினேஷ்க்கு பிடிப்பதில்லை.
தாய் வந்து அமுதனை அனுஷாவிற்கு கல்யாணம் பேசினோம் என்று சொன்னதும், முதலில் அவனை வெட்டியாக ஊரைச் சுற்றாமல் வேலைக்கு ஏதும் போக சொல்லுங்க அவன் வேலைக்கு போய் ஒழுங்காக இருந்தால் தான் கல்யாணத்திற்கு சம்மதிப்பேன் என்று திட்டவட்டமாக சொன்னான்.
அப்பொழுது உமாவும் தலையை ஆட்டியவாறு கேட்டவர், அதை பற்றி சீதாவிடமோ, அமுதனிடமோ பேசவில்லை.
இப்பொழுது இன்னும் சிறுபிள்ளைபோல் அண்ணாக்கள் விடமாட்டினம் என்று சொன்னவுடன் தினேஷ்க்கு கோபம் வந்துவிட்டது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“உனக்கு சொந்தமாக உழைச்சு சாப்பிடுறதுக்கே எண்ணம் இல்லையா.. நாளையிலிருந்து உங்களுக்கு பண்ணை வைக்க இடம் தேடுகிறாய் நீ… நீ மட்டும் சம்பாத்தியம் இல்லாமல் இருந்தியனால் உன் கல்யாணத்தை மறக்க வேண்டியது தான். நான் என் தங்கச்சிக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சிடுவேன்” என்று சீரியசாக சொல்ல,
அனுஷாவை இன்னுமொருத்தனுக்கு கட்டிவைப்பேன் என்றவுடன் கோபமாக தினேஷை முறைத்த அமுதன் “அம்மா..” என்று சீதாவை உதவிக்கு அழைக்க,
சீதாவிற்கு வேலை வெட்டியில்லாமல் இருந்தால் எந்த அண்ணா தன் தங்கையை இப்படி ஒரு ஆண்மகனிற்கு கட்டிவைப்பார். தினேஷ் அண்ணா என்ற இடத்திலிருந்து கேட்பது நூறுவீதம் சரிதானே என எண்ணியவர் மகனை கண்டிப்புடன் பார்த்து, “இவன் இப்படி விளையாட்டு புத்தியோட திரியிறான் என்று தான் கல்யாணத்தை பிறகு வைக்க சொன்னேன்” என்றார்.
அமுதன் தந்தையை பார்க்க, ” உன் பெரிய அண்ணனுக்கு இன்னும் ஒரு கிழமையில் கல்யாணம், உன் சின்ன அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சுது. அவங்கள் அவர்கள் குடும்பத்தை பார்ப்பங்களா.. உன்னை பார்ப்பங்களா என்று யோசி. இல்லை எனக்கு இப்பவே கல்யாணம் வேண்டும் என்றால் உங்கள் சாப்பாட்டு செலவை பெத்த கடமைக்கு நாங்கள் பார்ப்போம். உங்கள் இரண்டு பேரின் தேவைகள் என்று ஒன்று இருக்குமே அதுக்கும் எங்களிடமே வந்து நிற்பாயா.. அது அனுவிற்கு சங்கடத்தை தராதா, அவள் எப்படி எங்களிடமோ அண்ணாக்களிடமோ காசு என்று வந்து நிற்பாள்” என்றார் அவரும் கடுமையுடன்,
“இவனை சொகுசாக வாழ விட்டுடிங்க, இவனை முதலிலேயே வேலைக்கு துரத்தியிருக்கனும்” என்று தினேஷ் சொல்ல,
“நானும் சொந்தமாக விபசாயம் பார்த்து உருப்பிட்டுடுவான் என்று நினைச்சேன். இவன் ஊரையில்லே சுத்துறான்” என்று சீதா சொல்ல,
உமாவிற்கு தான் ஆளுக்கு ஆள் அவனை பேச, எந்த நேரமும் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் பையன் முகம் இரத்த பசையற்று போயிருக்க பார்க்கவே பாவமாக இருந்தது.
“அவன் நாளையிலிருந்து இடம் பார்க்க ஆரம்பிப்பான்.. இப்ப அனுவை கூட்டிட்டு கிளம்பட்டும்” என மற்றவர்களின் பேச்சிலிருந்து அவனை காப்பாற்ற முயற்சித்தார்.
அனுகூட தனக்கு உதவவில்லை என்ற கோபத்துடன் “எனக்கு இப்போதைக்கு கல்யாணமும் வேண்டாம்… கருமாதியும் வேண்டாம்” என்றவன் அனுவையும் கூட்டிச்செல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
அனுவிற்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அமுதனை இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்டது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அவள் அழுவதை பார்த்த சீதா “நீயென் அழுகிறாய்.. பரீட்சைக்கு வெளிக்கிடும் வழியை பார்” என்றவர், தினேஷை பார்த்து “கூட்டிக்கொண்டு போய் விட்டுட்டு வா, அவனுக்கு இன்னும் மந்திரிக்க வேண்டியது இருக்கு. நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்” என்ற சீதாவிற்கும் மகன் கோபத்துடன் சென்றது கலக்கத்தையே தந்தது.
உண்மையை சொன்னால் அதற்கு தகுந்தது போல் நடந்துகொள்வான் என்று எண்ணிச் சொன்னதை புரிந்துகொள்ளாமல் வெட்டிக்கோபத்துடன் போனவனை சீதாவிற்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னமே அவனை நெறிப்படுத்த வேண்டியிருந்ததால் “இரு நானும் வாரேன்” என்று சந்துருவும் கிளம்பினார்.
இருவருமே கிளம்ப,
அவர்கள் இருவரும் வாசலை தாண்டிச் சென்றவுடன், உமா மகனிடம் “அவன் இன்னும் உனக்கு பக்கத்துவீட்டு பையன் இல்லை. உனக்கு தங்கச்சி புருஷனாக போகிறவன் அவனிடம் இப்படித்தான்… மரியாதை இல்லாமல் கதைப்பியா” என்று கடினத்துடன் கேட்டார்.
அமுதன் பிறந்ததிலிருந்து அவனுடன் பழகுபவன் தினேஷ் அந்த உரிமையிலே தான் கேட்டான். அவனுமே புரிந்து கொள்வான் என்று எண்ணியே கேட்டான். ஆனால் புரிந்து கொள்ளாமல் கோபமாக செல்வான் என்றும் அவனும் நினைத்து பார்த்ததில்லை.
“அவனுக்கு இப்படி கோபம் வரும் என்று எதிர்பார்க்கலை அம்மா” என்று அவனும் மனவருத்தத்துடன் சொல்ல,
“இதை சீதாவும், சந்துரு அண்ணாவும் பேசியிருந்தால் வேறடா, நீ பேசினத்தில் அவன் காயப்பட்டு இருப்பான். இனி எப்படி உன்னோட பழகுவான் என்றும் தெரியலை.மலையேறுவதற்கு மச்சான் தயவு வேண்டும் என்று சொல்லுவாங்கள். அப்படி பட்ட உறவை பேசி சிக்கலாக்கிட்டியோ என்று பயமாக இருக்கு” என்றார் உமா.