ANI 3

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் 3

பழைய எண்ணங்களில் சஞ்சரித்தவன், இருக்கும் இடம் உணர்ந்து தெளிந்தவன் அனுஷாவை பார்த்து, இவளெல்லாம் படிச்சு முடிச்சு கல்யாணம் கட்டுறது என்றால் நான் கிழவன் ஆகிடுவேன் என எக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

அனுஷாவின் வீட்டுக்கு வந்ததினால் அவள் கையில் ஒரு ஜூஸினை விட்டுக்கொடுத்த சீதா, அமுதனுக்கும் கொடுத்தார்.

வெளியில் இருந்தவர்களையும் கேட்க, அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட மீண்டும் வந்து சமைப்பதற்கு வெங்காயத்தை எடுத்து உரித்துக்கொண்டு இருந்தார் சீதா.

“ஏண்டி சீதா.. இதுங்க இரண்டும் சாடிக்கு ஏத்த முடி அதனால் இதுங்களுக்கு கல்யாணத்தை இப்பவே பண்ணிடுவோமா?” என்று திடிரென்று கேட்டார் உமா.

அமுதனுக்கு குடித்துக்கொண்டு இருந்த ஜூஸ் வெளியால் சிதற, அவன் சட்டையின் நெஞ்சு பகுதியும் நனைய சட்டையை கையால் உதறியபடியே “என்ன கல்யணமா..” என்று அதிர்ச்சியாகி விட்டான்.

அனுஷா தன் மனதில் பொக்கிஷமாக வைத்திருந்த காதலன் அமுதன் அதனால் அவள் மனதில் இலட்சம் பூக்கள் புத்த சந்தோசத்துடன் அவனை பார்க்க, அங்கே மூஞ்சி தொங்கிப்போய் விட்டது.

அவனின் தொங்கிய முகத்தை பார்த்து, “ஏன்டா என் பொண்ணை கல்யாணம் கட்ட மாட்டாயா?” என்று உமாவும் சண்டைக்கு வர,

அவனுக்கும் அனுஷா மீது ஒரு காதல் இருந்தாலும், அவள் படித்து முடிக்கட்டும் எனக் காத்திருந்தவனுக்கு உமா இப்பவே கல்யாணம் பேச ஜெர்க்காகி நின்றவன் “எனக்கு பக்கத்துவீட்டு பத்மா வாழ்க்கை குடுக்கிறதா சொல்லிடிச்சே, ஏண்டி அனு அப்ப நீயே எனக்கு வாழ்க்கை கொடுத்து கண்ணில் கண்ணீர் வராமல் பாரு” என்று சிம்பிளாக தன் சம்மதத்தை சொன்னான் அமுதன்.

அவளும் தன் காதல் கைகூடிய சந்தோஷத்தில் உடனே தலையை அசைத்துவிட்டாள்.

“ஐ நானும் மிங்கிள் ஆகிட்டேன்..” எனக் அமுதன் கத்தினான்.

அவனின் சத்தத்தில் ஹோலில் இருந்து கதைத்துக்கொண்டு இருந்த மூன்று பேரும் சமையலறையை எட்டிப்பார்க்க,

சீதா “எல்லோரும் எழும்பட்டும்டா.., இன்னுமொரு நல்ல விசயம் சொல்லணும் ” என்றார்.

இசையரசனுக்கு ஏதோ புரிவது போல இருக்க, அவன் எல்லோரும் வரட்டும் என்று கமுக்கமாகவே இருந்து கொண்டான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

சிறிது நேரத்தில் லிங்கம் எழும்பிவர, அவரை தொடர்ந்து மற்றவர்களும் எழும்பிவந்துவிட்டார்கள்.

கல்யாண ஜோடி மட்டும் வராமல் இருக்க, “அவன் நல்லா தூங்குறான் போல..” என இசையரசன் சொன்னான்.

அறையில் இருந்த வேந்தனோ தூக்கம் சிறிதும் இல்லாமல் தமிழினியை போட்டு படுத்தியபடி, ” இரவு நான் நிற்க மாட்டேன் அப்ப உனக்கு ரெஸ்ட் தான்” என்றவன் அவளை விலக்கும் எண்ணமே இல்லாமல் திரும்ப திரும்ப நாடிக்கொண்டு இருந்தான்.

தமிழினியும் பொறுத்து பொறுத்து பார்த்தவள் அவன் விடவே போவதில்லை என்று கண்டு, வெளியில் ஆட்கள் இருக்கிறாங்க நாம இப்படி கதவை பூட்டிட்டு உள்ளே இருந்தால் என்ன நினைப்பாங்க” என்று நிலைமையை சொன்ன பின்னே, போனால் போகட்டும் என்று விட்டான்.

தமிழினியும் தன் அலங்கோலமாக கசங்கி கிடந்த ஆடைகளுடன் வெளியே போனால், உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிக்கொடுத்தது போல இருக்கும் என எண்ணி, குளித்துவிட்டு வந்து, வேறு உடையை மாற்றினாள்.

வேந்தனும் கோவிலுக்கு போக வேண்டும் என்பதால் தன்னை முழுமையாக சுத்தப்படுத்திவிட்டே வந்தான்.

தமிழினி தலையை வாரிக்கொண்டு இருக்க, பின்னால் வந்து நின்றவனை கண்டு, தனிமையில் ஒரு பேச்சும் இல்லாமல் தன்னை முழுதாக ஆண்டுவிட்டவனை இப்பொழுது முறைத்தாள் தமிழினி.

“எப்படியும் எனக்குதானே எப்ப எடுத்தால் என்னடி” என்றான் வேந்தன்.

இவனுடன் இப்பொழுது பேச்சு வைத்துக்கொண்டால் இன்னுமே அறையில் நேரத்தை செலவழிக்க வேண்டிவந்துவிடும் என்று எண்ணமிட்ட தமிழ் “வாங்க இப்ப வெளியில் போகலாம்” என்று அறைக்கு வெளியே அவனை அழைத்து வந்த பின் ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டாள் தமிழினி.

அந்த திருடன் தான் நேரம் காலத்தை மறந்து விட்டான் என்றால் தானும் அவனுடன் சேர்ந்து மறந்து விட்டதை நினைத்து வெட்க்கி, தன் தலையிலே தானே குட்டிக்கொள்ள தோன்றியது தமிழினிக்கு.

எல்லோரும் சோபாவில் அமர்ந்து இருக்க, இவர்களும் அவர்களுடன் போய் வேந்தன் ஐக்கியமாக,

தனியே தன் தோழியுடனோ இல்லை பூர்ணிமாவிடமோ சிக்கினால் தன் உதட்டிலிருந்தும் , தன் முகசிவப்பிலிருந்துமே என்ன நடந்தது என்று தோண்டி துருவுவார்கள் என தமிழினியும் போய் அவனுடன் நல்ல பிள்ளையாக அமர்ந்து விட்டாள்.