மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 11

மயங்கி இருந்த கரும்புலியை சுட்டிக்காட்டியவன்

ருத்ரன், “அது இன்னும் கொஞ்ச நேரத்தில எழுந்திரும் நாம உடனே இங்க இருந்து கிளம்பலாம் “

யுகி, “ம்… “

சின்னரசு, “ருத்ரா தம்பி இவங்க நா வேல பாக்குற இடத்தில சந்திச்சவங்க. காட்ட படம் புடிக்க வந்து இருக்காங்க :

ருத்ரன், “அப்பாகிட்ட பேசிட்டீங்களா ஐயா”

சின்னரசு, “பேசிட்டேன் தம்பி அவருதா இவங்கள கூட்டிட்டு வர சொன்னாரு”

“நதி பக்கத்துல இவங்க உடமைகள் எல்லாம் இருக்கு அங்க போயி எடுத்துட்டு போயிடலாம் “

நால்வரும் நதியை நோக்கி சென்றனர். யுகி நிலாவை தன் கைகளில் தூக்கி கொண்டு வந்தான்.

நதி அருகே வந்ததும் நதி நீரை நிலாவின் முகத்தில் அடித்தார் சின்னரசு ஆனால் அவள் கண் விழிக்கவில்லை.  அதில் பயம் கொண்ட யுகி

“என்னாச்சு பயத்துல வந்த மயக்கம்னு சொன்னீங்க ஆனா ஏ இன்னும் கண்ண திறக்கவே இல்ல”

அவளின் அருகில் வந்து பரிசோதித்து பார்த்தவர் இந்த பொண்ணு ரொம்ப பலவீனமா இருங்காங்கனு நினைக்குற நாம முடிஞ்ச அளவு சீக்கிரமா கிராமத்துக்கு கொண்டு போகலாம்.

யுகி, “அப்போ உடனே கிளம்பலாம் வாங்க …..  ஏ தயங்குறீங்க”

சின்னரசு, “தம்பி இங்க இருந்து குடிலுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும் “

யுகி, “ஐயோ…. இப்போ நா என்ன பண்ணுவே யாழு…  கண்ண துறந்து பாரு தப்பு பண்ணீட்டேன் உன்ன கூட்டிட்டு வந்து இருக்க கூடாது “

ருத்ரன், “பயம் வேண்டாம் எனக்கு ஒரு குறுக்கு வழி தெரியும். ஆனா பாதை கொஞ்சம் கடுமையா இருக்கும் “

யுகி, “எவ்வளவு கடுமையா இருந்தாலும் பரவா இல்ல உடனே கிளம்பலாம் பிளீஸ்..”

‘சரி வாங்க’ என்று யுகியின் உடமைகள் சிலவற்றை ருத்ரனும் சின்னரசும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

ருத்ரன் முன் செல்ல நிலாவை தூக்கிக்கொண்டு யுகி அவன் பின்பும் அவனுக்கு பின் சின்னரசும் என அந்த சவாலான பாதையில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

நடந்து செல்லும் போது அடிக்கொரு முறை அவளது முகத்தையே பார்த்துக் கொண்டுவந்தான் யுக்தயன்.

சிறிது தூரத்தில் தன் நடையை நிறுத்தினான் ருத்ரன் ஏன் என்று கேள்வியாய் பார்த்த இருவரிடமும் இந்த மேடுல ஏறி அந்த பக்கம் போகனும்

இருவரும் நிமிர்ந்து அம்மேட்டை பார்த்தனர்.  கல்லும் முள்ளும் அதிகம் இருக்கலாம் ஏறுவது சற்று கடினமே

ஆனால் யுக்தயனின் தற்போதைய மனநிலைக்கு தன் உயிரை கேட்டாலும் கொடுக்கும் நிலையில் தான் இருக்கின்றான்.

இருவரின் அருகில் நெருங்கிய ருத்ரன் நிலாவை யுக்தயனின் கைகளில் இருந்து சட்டென பறித்து புல்லுகட்டை போல் தன் தோளில் போட்டுக்கொண்டான்.

யுகி, “எதுக்காக ஏ யாழு வா எங்கிட்ட இருந்து பிரிக்குற குடு அவள ..”

ருத்ரன், “இதோ பாருங்க இது மேல தனி ஆளா ஏறுவதே கஷ்டம் இந்த பொண்ணையும் தூக்கிட்டு உங்களால மேல ஏற முடியாது தாமதிக்குற ஒவ்வொரு நிமிசமும் இந்த பொண்ணுக்குதா பிரச்சனை.”

சின்னரசு, “தம்பி ருத்ரா தம்பி சொன்ன சரியாத இருக்கும் நீங்க லக்கேஜ எடுத்துக்கோங்க “

யுக்தயன் ருத்ரனை முறைத்துக் கொண்டே மேலே ஏறினான்.  சற்று கடினமாக தான் இருந்தது ருத்ரன் கூறியது உண்மை என்று புரிந்தது ஆனால் ஏற்றுக்கொள்ள மனமில்லை

ஏனோ மனம் நிலை இல்லாமல் தவித்தது யுக்தயனுக்கு. தனக்கு சொந்தமான பொருளை பிறர் பார்த்துவிட்டு தருகிறேன் என்று வாங்கி கொள்ளும் போது மனது துடிக்குமே அந்த துடிப்பு மீண்டும் அப்பொருள் நம் கைவந்த பிறகே அடங்கும். அதுபோன்ற மனநிலையில் தான் அவனும் இருந்தான்.

தன்னவள் தன்னை விட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டது போல் ஒரு பிரமை ஆனால் இரண்டடி தூரத்தில் ருத்ராவின் கைவளைவில் தான் இருந்தாள்.

மறுபக்கம் வந்து இறங்கியதும் வேகமாக சென்று அவளை தன் கைகளில் வாங்கி கொண்டான்.  வாங்கியவன் சும்மா இல்லாமல் ருத்ரனை முறைத்துவிட்டு ஒரு பாறையில் அமர்ந்து அவளையும் தன் மீது அமர்த்தி அவளது கன்னங்களை தட்டினான்.

அப்பொழுது தான் சின்னரசு அவளது காலில் இருந்த சிறிது கசிந்த இரத்தத்தை பார்த்தார்.

சின்னரசு, “தம்பி பாப்பா காலுல அது என்னதுனு பாருங்க “

அவளது பேண்ட்டை சற்று மேலே ஏற்றி பார்த்தான் ஏதோ பல் தடம் போல் தெரிந்தது.

‘பல் தடம் பாம்பா இருக்குமோ’

யுக்தயனின் இதயம் எகிறிகுதித்தது. வேகமாக சின்னரசை நோக்கி திரும்பினான்.

சின்னரசு, “இல்ல பாம்பு இல்ல வேற ஏதோ  கிராமம் இங்க இருந்து பக்கம் தா சீக்கிரம் தூக்குபா போகலாம் “

யுக்தயனும் துடிதுடிக்கும் மனதுடன்   அவளை தூக்கி கொண்டு அவர்கள் பின்னே ஓடினான்.

அடுத்த ஐந்து நிமிட பயணத்தில் கிராமத்தை அடைந்தனர்.

ருத்ரன் கிராமத்தின் உள் நுழையும் போதே மருத்துவரை அழைக்குமாறு கத்திக்கொண்டேஓடினான்.

வெகு நாட்கள் கழித்து வந்த ருத்ரனை வரவேற்க அனைவரும் மகிழ்ச்சியுடன் அவன் அருகில் வந்தனர்.  அவன் முகத்தில் தெரிந்த பதட்டம் கண்டு நிலைமையின் தீவிரம் உணர்ந்து விரைந்து செயல்பட்டனர்.

அக்கிராமத்தின் ஒரு வயதான மருத்துவர் அவளை பரிசோதித்தார்.

யுகியின் மனது ஒரு நிலையில் இல்லை துடிதுடிக்கும் இதயத்தோடும் நடுநடுங்கும் கைகளோடும் அவளது கைகளை இறுக பற்றி கொண்டு அவள் அருகில் அமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது மனது பல்லாயிரம் முறை அவள் பெயரை ஜபித்துவிட்டது.  யாழு….  யாழு…  என்று

விஷப்பூச்சி கடித்திருப்பதாகவும் மருந்து கட்டியுள்ளேன் விரைவில் சரியாகிவிடும் என்று கூறி சென்றுவிட்டார் அம்முதிய மருத்துவர்.

அதன்பிறகு தான் யுகிக்கு மூச்சே வந்தது.  இருந்தும் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டானே தவிர அவளை விட்டு இம்மியும் விலகவில்லை.

……….

மறுநாள் காலை

இதுவரை நிலா கண் திறக்கவில்லை. யுகியும் மருத்துவரிடம் பலமுறை கேட்டுவிட்டான்.  அம்முதியவர் கூறிய பதிலோ ‘அந்த பொண்ணு இப்போ மயக்கத்துல இருக்குறதுதா நல்லது தம்பி இல்லனா அந்த பொண்ணால இந்த பூச்சி கடுச்ச இடத்துல இருக்குற கடுகடுப்ப தாங்க முடியாது.’

அனைவரும் காலை வேளையில் அவளை பார்க்க வந்தனர்.  அப்பொழுது தான் அவள் கண்கள் மெதுவாக அசைந்தது. அவளை பார்த்து கொண்டிருந்த யுகி அவள் அருகில் நெருங்கி வந்து அமர்ந்தான்.

‘யாழு…  யாழு…  ‘

கண்களை திறந்தவளோ தனது கணவனை பார்த்து புண் முறுவல் செய்தாள். பின் அவளது கண்கள் அந்த குடிலின் நாலாபுறமும் சுற்றி அழைந்தது.

அவளின் தேடலின் முடிவாக ருத்ரன் குடிலுக்குள் நுழைந்தான்.

அவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவளை பார்த்து முறுவலித்தான் ருத்ரன்  அதனை கவனித்த யுக்தயனுக்கு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

மயங்கும் நிலையிலும் அவள்  தன்னை காக்க வந்தவருக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று வேண்டுதல் வைத்தாள்.

“உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என்று ருத்ரனை பார்த்து கேட்டாள்

“இல்லை” என்று புன்முறுவல் பூத்து அவளிடம் நெருங்கும் வேளையில் இருவருக்கும் இடையே வந்து நின்று கொண்டான் யுக்தயன்.

அந்த பலம் பொருந்திய காட்டின் செல்ல புள்ளையோ யுக்தயனை தூசு போல் பக்கவாட்டில் நகர்த்திவிட்டு அவள் அருகில் நெருங்கி அவளது கேசம் கலைத்து “இப்போ உடம்புக்கு ஒன்னும் இல்லையே ” என்றான்.

இடம்வலமாக தலையசைத்தாள்.

மேலும் ஏதோ பேச வந்தவனை வெளியில் இருந்த சிறுவன் தலைவர் அழைப்பதாக கூற  அவளிடம் தலை அசைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் சென்றுவிட்டனர்.

அனைவரும் வெளியேறிய உடன் கணவனின் முகம் பார்த்தாள். அவன் கண்கள் இரண்டும் சிவந்து இருப்பது அவன் நேற்று இரவு தூங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

கன்னங்களின் கண்ணீர் கோடுகளும் கலை இழந்த அவனது முகமும் அவன் தனக்காக எவ்வளவு துடித்துள்ளான் என்பதை அவளுக்கு எடுத்து கூறியது.

கைகளை நீட்டி அவள் அவனை அழைக்கவும் அவளிடம் நெருங்கியவன் அவளை இறுக அணைத்து நீண்ட நெடிய முத்தத்தை பதிக்க ஆரம்பித்தான் அவளது இதழ்களில் இடையிடையே அவனது கைகள் அவளை தன்னை நோக்கி அழுத்தி பிடிப்பதும் கண்களில் வழிந்த கண்ணீரும் நின்றபாடில்லை.

தொடரும்…