கலைந்த ஓவியம் பார்ட் 2 … டீஸர்
சில இடங்களை பொறுத்தவரைக்கும் விதவை பெண்கள் பல சம்பிரதாயங்கள் செய்யவே மாட்டேன் என கூறிவிடுவார்கள்… அது எவர் கூறினாலும் பிடித்த பிடியிலயே இருப்பார்கள்… அதை தான் இப்போது சிவகாமியும் செய்து கொண்டிருந்தார் அவரின் மூத்த மகனின் நிச்சியம் இன்று, அவர் அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி அமர்ந்து கொண்டார், அவரின் மகன் நவினும், மருமகள் மகியும் பல முறை அழைத்தும் அவர் வரவில்லை.. அவர் தனியாக இருக்கிறார் என்று அவரின் மகள் நிவேதா அவருடன் அமர்ந்து கொண்டாள். இவர் இடத்தில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை மகியின் அத்தை வேணியும், தாய் மாமன் மூர்த்தியும் தான் செய்து கொண்டிருந்தனர்…
நிச்சயத்திற்கு முன் நடக்கும் சடங்கான பூ வைக்கும் படலம் நடந்து முடிந்தது.. இதோ இப்போது நிச்சியம் நடக்கும் நேரம் பார்த்து அவரின் உடல் முழுவதும் வியர்வையால் நனைய தொடங்கியது.அவரின் சுவாசக் காற்று சற்றே பின் வாங்க ஆரம்பித்தது, காற்றை சுவாசிக்க முடியாமல் வாய் வழியாக மூச்சை வாங்க நினைத்தவர் வாயை திறந்து அதன் வழியே காற்றை சுவாசிக்க முயல, அது முடியாது போகாவும், அருகில் அமர்ந்திருந்த தன் மகளின் தோளை பிடித்து இழுத்தார் சிவகாமி…
“என்னமா…” என்றப்படி திரும்பியவளின் கண்கள் இரண்டும் தன் தாய் இருந்த நிலையை கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் விரிந்தது… அவரின் கண்கள் உள்ளுக்குள் சொருகி வெள்ளை முழி வெளியில் தெரிய மூச்சிற்கு ஏங்கியப்படி அமர்ந்து இருந்தார்… நிச்சியம் நடக்கும் நேரம் என்பதாலும் இவர்கள் ஒதுங்கி அமர்ந்து இருந்திருந்தாலும் அனைவரின் பார்வையும் மணமக்களிடம் மட்டுமே இருந்தது இவர்களை எவரும் கண்டுகொள்ளவில்லை…”ஐயோ அம்மா என்னாச்சு…” என கத்த ,
அவளின் கத்தலில் தான் அனைவரின் பார்வையும் இவர்களின் புறம் திரும்பியது. சில நிமிடங்களில் சிவகாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்…
நான்கு மணி நேரத்திற்கு பிறகு… (80கிட்ஸ் movie ஞாபகம் வரும்)
அந்த ஐ.சி. யூ க்குள் சிவகாமி, நவின்,மகி என இவர்கள் மூவரும் மட்டுமே நின்று இருந்தனர்., அமைதியாக இருந்த அந்த அறையை சிவகாமியின் மெல்லிய குரல் கேட்டது.
“பாப்பாக், கல், யான, பண்ணி, வை, பா… நா, இல்ல னா அவ துடிசு போ..யிடுவா..” என்றார் அவர் கூறுவது முதலில் புரியவில்லை என்றாலும் அதை இரு முறைக்கு பல முறை கேட்ட பின்னே அது புரிந்தது…
அவர் கூறியதில் அத்தனை கோபம் வந்தது அவளுக்கு ஐ. சி. யூ என்றும் நினைக்கவில்லை அவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார் என்றும் நினைக்கவே இல்லை