கலைந்த ஓவியமே- 7
“உங்களுக்கு தெரியலைன்னா எனக்கு போன் பண்ணி கேளுங்கத்தை, கால் பண்ணி கேட்டா நான் என்ன சொல்லிட போறேன். இப்ப பாருங்க ரெண்டு வேலை,… அவங்களுக்கும் அலைச்சல், நமக்கும் இப்ப நேரம் இல்லை, பாதி காட்டுல விதை கிழங்கை ஊனிட்டாங்க, இன்னும் மீதி காடு கொஞ்சம் தான் இருக்கு, அதுகுள்ள இந்த வேலை வந்துட்டா இவங்க எதை பாப்பாங்க.,எதை விடுவாங்க.. மாமா எங்க?? மருந்து போட்ட விதை கிழங்கு எங்க இருக்குன்னு அவருக்கு தெரியுமே, அவருகிட்ட கேட்டு இருந்தா சொல்லி இருப்பாரே…” என கண்களால் மூர்த்தியை தேடினான்.
“அவரு நம்ம மகியை ஈரோடு வரைக்கும் கொண்டு போயி விட்டுட்டு வரேன்னு போயிருக்காரு சரவணா, நீயும் வண்டியில போயிட்டு இருப்பன்னு தான் நான் உங்களுக்கு கால் பண்ணி கேட்கல, இப்ப மட்டும் என்னக் கெட்டுப் போச்சு, மூட்டை எல்லாத்தையும் மாடியில கொண்டு போயி வைக்க சொல்லு, நான் போயி காய போடறேன்… அப்பறம் இவங்களை இங்க இருக்கற விதை கிழங்கை எடுத்துட்டு போக சொல்லு…” என வேணி கூறியதும் வேலையாட்களை பார்த்தான் சரவணன்.
“அப்ப லாரியில இருக்கற எல்லா கிழங்கையும் கொண்டு வந்து இறக்கிடவா தம்பி…” என துரை கேட்க
அந்த ஏ. சி அறையிலும் நவினுக்கு வியர்த்துக் கொட்டியது… முகத்தில் மெல்லிய அரும்புகளாய் வியர்வை பூக்க, அதை தன் தோள்பட்டை
அவள் நெருங்கி வர வர இதயம் இன்னுமின்னும் மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது…
‘இப்படி இதயம் துடிக்கிற அந்தளவிற்கா அவள், உன்னை பாதித்து விட்டாள்..” என மதி கேள்வி எழுப்ப, சட்டென ‘ இல்லை…” என முனகல் போல் சொன்னான்.
போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் அழகாய் தெரிந்தாள் மகி, படர்ந்த நெற்றியில் சிறு கீற்றாய் குங்குமம், கண்ணுக்கே தெரியாத அளவிற்கு கண்மையால் தீட்டிய பொட்டு, அதற்கு கீழ் ஆளைக் கொள்ளையிடும் கண்கள், ரோஜா நிற இதழ்கள், சின்ன மூக்கு, கொழு கொழு கன்னங்கள், அவளின் பின்னலுக்கு அடங்காத கேசம், என ஒவ்வொன்றாய் பார்த்தவனின் கண்கள் அவளின் செவியோரம் நார்த்தனமாடிய கார்கூந்தலின் மீது நிலைத்தது… நொடிக்கு ஒருமுறை அவளின் செவியோரத்தை முத்தமிட்டு செல்லும் கூந்தலாக பிறந்திருக்க கூடாதா என்று தோன்றியது அவனுக்கு…
அவள் தன்னை கண்டதும் நிச்சியம் ஷாக் அடித்தது போல் நிற்பாள். கண்டிப்பா வேலைக்கு வரமாட்டேன் எனக் கூறிவிட்டு சென்றுவிடுவாள் என நினைத்தவனுக்கு அவள் மின்சார விளக்கை (பல்பை)பரிசாக அளித்தாள்…
தன்னை உள்ளே அழைத்ததும் கணிணியில் வேலை பார்ப்பது போல் பாவ்லா காட்டியவனின் செய்கை சற்றே கடுப்பைக் கிளப்பியது மகிக்கு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
அவன் செய்கை அவளை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல அமர்ந்து கொண்டாள். (வெளி பார்வைக்கு)
அவனின் எதிரில் அமர்ந்திருந்தவளுக்கு
அன்று அந்த பெண்கள் பேசியது தான் நினைவிற்கு வந்தது.
அவர்கள் கூறியது போல் அவனின் கண்கள் மாறு கண்ணாக இருக்கிறாதா என பார்க்க ஓர் ஆர்வம் அவளை அறியாமலேயே தோன்ற அவனையே பார்த்தாள்.
அவனின் செய்கை அனைத்தும் மகிக்கு அவன் (attitude) அக்டிடுயுட் காட்டுவதாக தோன்ற, அதை பெரியதாக அலட்டிக்
அவள் என்னவோ வேலையில் மூழ்கி விட்டாள் ஆனால் இவனுக்கு தான் அத்தனை குழப்பமாக இருந்தது. ‘நிஜமாவே அவளுக்கு நம்மளை தெரியலயா, இல்லை மறந்து விட்டாளா., அவள் என்னை பாதித்தளவிற்கு நான் அவளை பாதிக்கவில்லயா..
நவின் வெளியே சென்றதும் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள் மகி… அனைத்திற்கும் காரணம் அண்ணன் பார்த்த மாப்பிள்ளை தான், அவனின் குரல் இவளை இந்தளவிற்கு பாதிக்கும் என துளியும் நினைக்கவில்லை,
ஆம் புராஜக்ட் மேனேஜரின் குரலைக் கேட்டதும் இவளின் இதயம் துடியாய் துடித்து தன்னாலயே அவனை (வீட்டில் பார்த்த மாப்பிள்ளை) நினைவு கூர்ந்தது. இனி அவன் உனக்கு இல்லை என்றாகிவிட்ட பிறகு என்ன நினைப்பு என மனம் அதட்ட,சட்டென தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் மேனேஜர் கூறியதை கவனிக்கவும் அவள் கவனத்தை திசை திருப்பவும் முயற்சித்தாள்.
புராஜக்ட் மேனேஜரின் குரலும், அவனின் குரலும் ஒருபோல இருக்கிறது என நினைத்தாளே தவிர (மாப்பிள்ளை) அவன், இவனாக் இருக்க கூடும் என நினைக்கவில்லை… இங்கு அறையை விட்டு வெளியில் வந்த நவினின் மனமோ நிலைக் கொள்ளாமல் தவித்தது.. ஒரு மனம் அவளைக் கண்டுகொள்ளாமல் இரு என உரக்க கத்த, மற்றொரு மனமோ அவள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என ஏங்கிக் கத்தியது
‘இவ தான் உனக்கு பாத்த பொண்ணு தம்பி, அவங்க வீட்டில இருக்கறவங்களுக்கு உன்னை பிடிச்சு போச்சு,பொண்ணொட போட்டைவை அனுப்பி இருக்கேன் பாரு, பொண்ணைப் புடிச்சு இருக்கா…’ என புலனத்தில் குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தார் சிவகாமி. மகியின் புகைப்படத்தை பார்த்ததுமே நவினுக்குப் பிடித்து விட்டது.
என்னதான் பெண் வீட்டில் சரியென கூறிவிட்டார்கள் என்றாலும் பெண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட எண்ணியே சிவகாமியிடம் மகியின் வீட்டில் பேசி, அவளின் அலைபேசி எண்ணை வாங்கி தரக் கூறினான். அலைபேசி எண்ணை சிவகாமி கொடுத்ததுமே உடனே அவளுக்கு அழைத்தான். அவள் அதிகம் பேசவில்லை என்றாலும் அவளின் சரியென்ற பதிலே மனதை இறக்கை இல்லாமல் பறக்க வைத்தது…
அவள் சரியென கூறியதுமே மகியின் அலைபேசி எண்ணை தன் தொலைபேசியில் பதிவு செய்து விட்டான். அவளிடம் பேச புலனத்திற்கு செல்பவன் அவளின் புலனத்தின் டி. பியிலும், அபௌட்டிலும்”ஹேட் மீ ஆர் லவ் மீ டோண்ட் பிளே வித் மீ…” என்ற வாக்கியத்தை படித்துவிட்டு வெளியில் வந்துவிடுவான்.
ஏனோ மனம் எதற்கும் அவளை நேரில் பார்த்து பேசிவிட்டு அவளிடம் உரிமையாக பேசு எனக் கட்டளையிட்டது. அதனாலயே அந்த ஒரு வாரமும் அவளிடம் பேசவில்லை, ஆனால் அடுத்து வந்த வாரத்தின் முதல் நாளே பெண் வீட்டில் வேண்டாமென கூறிவிட்டார்கள் என்ற செய்தியே வந்தது. மனம் கேளாமல் தான் அவளுக்கு அழைத்தான்.
ஆனால் அவளின் உதாசீன பேச்சு இவனுக்கு கோபத்தைக் கொடுத்தது… அப்போதைய கோபத்தில் மகி என்பவளை பாஸிங் கிளவுட்டாக நினைத்து கடந்து செல்ல தான் நினைத்தான். ஆனால் அது அவளைப் பார்க்கும் வரையில் தான் நிலைத்திருக்கும் என நவின் நினைக்கவே இல்லை.
தலையை அழுத்தி கோதிக் கொண்டவன் ‘இங்க பாரு பிரசாத், அவ உனக்கு ஜஸ்ட் பாசிங் கிளவுட் தான். வீட்டுல பார்த்த பொண்ணுன்னு அவ மேல உனக்கு ஒரு ஈர்ப்பு தான் வந்து இருக்கு, அவ உன்னைப் பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தானே பயந்த, நீ நினைச்சது போல ஒன்னும் நடக்கல, பொண்ணு அவளே சாதரணமா இருக்கா, உனக்கு என்னடா??? எத்தனையோ பார்த்துட்ட இதெல்லாம் ஒரு கணக்கா டேக் இட் ஈஸி டா ..” என தனக்கு தானே பலமுறைக் கூறிகொண்டவன் கேபினிற்குள் நுழையவும் அவளுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது…