குழலி- 06
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 06
கோயிலில் இருந்து வந்ததும் தந்தைக்கு அழைத்தான் பழனி. அப்போது அத்தை கோயிலுக்கு போக சொன்னதால் போய் வந்ததாக தந்தையிடம் சொன்னான்.
“பாரு நேத்து உங்க அம்மா அவ்வளவு சொல்லியும் இன்னைக்கு உன் கிட்ட அத பத்தி ஒரு வார்த்தை பேசல என் தங்கச்சி. முறைப்படி கல்யாணம் செய்த போல பொண்ணு மாப்பிள்ளையா உங்களை கோயிலுக்கு அனுப்பி வச்சிருக்கு . அவங்க கிட்ட போய் மல்லுக்கு நிக்கறா உங்கம்மா. என்னத்த சொல்ல…” என்று வருத்தத்தோடு சொன்னார் தந்தை காசிலிங்கம்.
“இப்ப பாருடா பழனி உங்க அம்மா வெளிய வர்றா என்ன பேசுறான்னு கேளு.நான் போனை பாக்கெட்டுல வச்சிட்டு பேசாம இருக்கேன். பாரு இங்க நடக்கற கூத்தை..” என்றபடி போனை பாக்கெட்டுக்குள் போட்டுவிட்டு கதிரையில் உட்கார்ந்து கொண்டார் .
“எங்க பழனிய காணோம்…” என்று அறையிலிருந்து நல்ல பிள்ளை போல வெளியே வந்து கேட்டார் செல்வராணி.
“ஆமா நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு அவன் உன் கூட தான் இருக்கப் போறான் பாரு. அவன் கிளம்பி ஊருக்கு போயிட்டான்…”
“எங்க துபாய்க்கா போயிட்டான்.என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல.அதுவும் நல்லதுக்கு தான். இங்க இருந்து இன்னும் அவன் கல்யாணத்த சாக்கா வச்சு பிரச்சனை ஆகாம அவன் கிளம்பிப் போனது நல்லதுக்கு தான்…”
“ஏன்டி நீ எல்லாம் என்ன பிறப்புடி.வீட்டுக்கு வாழ வந்த பொண்ண யாரோ ஒருத்தங்க பேச்ச கேட்டு திருப்பி அனுப்பி வச்சு உன் பையன் வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுக்கறியா?உனக்கெல்லாம் மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லையா..” என்று கோபத்தோடு கேட்டார் காசிலிங்கம்.
“ஆமா இதெல்லாம் உங்க பொண்ணு உங்க கிட்ட போட்டு கொடுத்துட்டாளா?என்று மகளை முறைத்தார் செல்வராணி.
“உன் பையன் துபாய்க்கு போகாமல் தன் பொண்டாட்டி வீட்ல போய் உக்காந்துட்டா என்ன பண்ணுவ…?
“ என்ன இப்படி சொல்லுறீங்க.நம்ம பையன் அப்படி பண்ணுவானா?
“பின்ன என்ன…. நீ பண்ணி வச்ச வேலைக்கு அவன் வாழ்ந்து கெட்ட கிழவி உன்னை பார்ப்பானா இல்ல நேற்று தாலி கட்டின தன் பொண்டாட்டிய பார்ப்பானா நீயே சொல்லு “
“ஏம்மா ஜோசியக்காரங்க என்ன டாக்டரா.கல்யாணம் முடிஞ்சு இவங்களுக்கு பிள்ளை பிறக்காதுன்னு சொல்ல.அவங்க வாழ்க்கையை அவங்க பாத்துப்பாங்க தானே. மண்டபத்துல மட்டும் யாரும் வேணாம் குழலி போதும் என்று ஒத்தக்கால்ல நின்ன தானே. வீட்டுக்கு வந்ததும் யாரோ ஒருத்தங்க பேச்சை நம்பி எதுக்கு அண்ணியை போக சொன்ன…” என்று கோகனாவும் தன் பங்குக்கு சத்தம் போட்டாள்.
“வாய மூடு…. நானே உங்க அண்ணன் அந்த வீட்டுல போய் உட்கார்ந்துட்டானோ என்று யோசிச்சிட்டிருக்கேன்…”எரிச்சலோடு சொன்னார் செல்வராணி.
“ஏம்மா போனா தான் என்ன. அண்ணா தன்னோட பொண்டாட்டி வீட்டுக்கு தானே போய் இருக்கு.”
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
இவர்கள் சொல்வது போல் மகன் அப்படி குழலி வீட்டில் தான் போய் உட்கார்ந்திருக்கிறானோ என்று கலக்கத்துடன் நினைத்துக் கொண்டார் செல்வராணி.இருந்தாலும் இத்தனை பிரச்சினைகள் இருக்கும்போது ஒரு நாள் தங்கிவிட்டு திரும்ப துபாய்க்கு கிளம்பிவிடுவான்.இங்கே இருந்து குழலியுடன் என்ன குடும்பம் நடத்தவா போகிறான் என்ற எண்ணம் தான் அவருக்கு.தன் மகன் அவளுடன் வாழ மாட்டான் என்று திடமாக நம்பினார் அன்னை.
மனைவி வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு தன் வீட்டில் நடப்பதை தெரிந்து கொண்டான் பழனி. தாயை இனிமேல் மாற்ற முடியாது.தன் வாழ்வை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான் இப்போது. மனைவியை வெளியே போக சொன்ன அந்த வீட்டுக்கு இனி அவளை அழைத்து போக கூடாது என்று தீர்மானித்து விட்டான் பழனி .
நேற்று தங்கள் வீட்டில் அத்தனை பிரச்சனை. ஆனால் அதைப்பற்றி அத்தை வீட்டில் யாரும் எதுவும் தன்னிடம் கேட்கவில்லை என்பதை தந்தை சொன்ன போது தான் புரிந்து கொண்டான் பழனி.இப்படி பெருந்தன்மையோடு நடந்து கொள்பவர்களுக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தரக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
“அத்தை இன்னைக்கு கோயிலுக்கு போய் வந்தது நான்வெஜ் வேணாம்.நாளைக்கு நான் வெஜ் சாப்பிட்டுக்கலாம்…”என்றபடி மனைவி மைத்துனன் மாமியாரோடு உட்கார்ந்து காலை உணவை முடித்துக் கொண்டான் .
“மதிய சமையலை நான் பாத்துக்குறேன்.இந்தா இந்த பாலை கொண்டு போய் மாப்பிள்ளைக்கு குடு…” என்று மகளை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார் சுந்தரவல்லி.கோவர்த்தனன் ஸ்கூலை பார்ப்பதற்கு கிளம்பி போய்விட்டான் .தமக்கை வீட்டிலிருப்பதால் மகனை அங்கே போய் பார்த்து வா என்று சொல்லி இருந்தார் அன்னை.
“ஹேய் பட்டு குழலி….பட்டு புடவை கட்டிக்கிட்டு கையில பாலை எடுத்துக்கொண்டு பட்டு வேட்டி சட்டையோடு நிக்கிற புருஷன் கிட்ட வர்றது எப்பிடி இருக்கு தெரியுமா…?
“எப்படி இருக்கு? எரிச்சலுடன் கேட்டாள் குழலி.
“ஹேய் நீ இந்த சினிமா எல்லாம் பாப்பியா மாட்டியா என்ன?
மனைவியிடம் உரிமை உணர்வு தலைதூக்க வைத்த கண் வாங்காமல் அவளை ரசித்தபடி இருந்தான் பழனி.
கோயிலுக்கு போய் வந்ததில் இருந்து அந்த புடையிலேயே வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தாள் குழலி.அவளிடம் வம்பிழுத்து கொண்டிருந்தான் கணவன்.ஏனோ அவளிடம் தோன்றும் இந்த உரிமை உணர்வு அவனுக்கு உவப்பாகத் தான் இருந்தது.அதிலும் அவன் உச்சியில் வைத்த குங்குமம் மனைவியை நோக்கி அவனை சுண்டி இழுத்தது.
“ சினிமாவா அதுல என்ன காட்டுறாங்க..”
“ஏன்டி நமக்கு நேத்துதான் கல்யாணமாச்சு.அந்த மாதிரி ஆசை எல்லாம் உனக்கு இல்லையா என்ன?
நேற்று முதல் இரவு பற்றி ஒன்றும் இல்லை என்று விட்டு இப்போது கணவன் பார்வையின் வேறுபாட்டை கண்டு திக்கென்று இருந்தது அவளுக்கு.
“உங்களால எப்படி எதுவுமே நடக்காத போல இப்படி பேச முடியுது? உங்க கல்யாணத்தை வேடிக்கை பார்க்க வந்தவளை புடிச்சு தாலி கட்டினீங்க. அப்படியே மண்டபத்தில் விட்டுட்டு போயிட்டீங்க. உங்கம்மா வீட்டுக்கு கூட்டி போய் துரத்தி விட்டாங்க. இப்ப என்ன பேச்செல்லாம் பேசுறீங்க நீங்க” என்று அவனை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டு கத்தினாள்.
“கத்தாதடி….எல்லாத்துக்கும் சாரி. எங்கம்மா பேசினதுக்கு எல்லாம் நான் மன்னிப்பு கேட்கிறேன் சாரிடி..” என்றபடி அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
அவன் சட்டென்று அணைக்கவும் என்னவோ போல் இருந்தது அவளுக்கு.அசௌகர்யமாக நெளிந்து கொண்டு நின்றாள் குழலி.
“சரி கொஞ்சம் என்னை விட்டு தள்ளி நில்லுங்க ப்ளீஸ்”
“எதுக்கு….” என்றபடி அவளின் பட படத்த இமைகளின் மேல் தன் சூடான இதழ்களை பதித்துக் கொண்டான்.
இன்னும் என்ன வரப்போகிறதோ என்று படபடப்பாக இருந்தது அவளுக்கு.தான் அணைத்தும் அவளின் தடுமாற்றத்தையும் கூடவே முகத்தில் வந்து போகும் பாவங்களையும் கண்டு ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் கணவன்.
அந்த நொடி தன் கட்டுப்பாடுகள் எல்லாம் உடைந்து அவளுடன் வாழ்ந்த்து விடும் வேகம் அவனுக்குள் கொழுந்து விட்டிருந்தது.தன் அணைப்பில் நின்றவளிடம் உரிமையுடன் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள துடித்தான் அந்த பகல் பொழுதில்.என் அத்தை மகள் அதுவும் என் மனைவி மேல் எனக்கு இல்லாத உரிமையா என்ற கேள்வி தான் இப்போது.
மனைவியை கட்டிக்கொண்டதும் வந்த நெருக்கம் இது தான் நீ ஆசைப்பட்ட வாழ்க்கை என்றது அவனிடம். மணப்பெண் மாறியதால் சட்டென்று நடந்த திருமணம் இது என்று தோன்றவில்லை அவனுக்கு.மனைவியின் கண்களில் இருந்த சூடான உதடுகளை இப்போது அவள் உதடுகளோடு இறுக பூட்டிக் கொண்டன.
சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு முறைத்து பார்த்தாள்
“யார கேட்டு உங்க ஊத்தை வாயை கொண்டு வந்து என் வாயில வைப்பீங்க…” என்று அவனுடன் மல்லுக்கு நின்றாள் மனைவி.
“ஊத்தவாய்ன்னா சொல்ற…. இருடி இந்தா வர்றேன்…” என்று சொல்லிக்கொண்டே அவள் உதடுகளை திரும்பவும் கவ்விகொண்டான்.அவனிடமிருந்து விடுபட முடியாமல் அங்கும் இங்கும் தலையை ஆட்டி போராடினாள் குழலி.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
கணவன் தன் உதடுகளை விடுவித்ததும் அப்பாடா என்றிருந்தது அவளுக்கு.
தன்னை அள்ளிக்கொள்ள துடிக்கும் கணவனின் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டாள் குழலி.தன் உதடுகள் வழியே கணவன் அவளிடம் உரிமை காட்டியதும் அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்து விட்டது.தன் திருமணம் எப்படி நடந்தது என்ற எண்ணம் அடியோடு மறந்து விட்டது அவளுக்கு .
“விடுங்க….. தள்ளி போங்க…. நான் போகணும்….” இப்போது கெஞ்சலாக வந்தன அவள் வார்த்தைகள்.
“இப்ப உன்னை விடுற போல எனக்கு எந்த ஐடியாவும் இல்ல பட்டு குழலி..
என்றபடி மனைவியை கைகளில் ஏந்திக்கொண்டு அருகே இருந்த கட்டிலில் சரிந்து விழுந்தான் அவளோடு.
அடுத்து என்ன நடக்கிறது என்று அவள் சுதாகரிக்க முன்னர் சூறாவளி போல் சுழன்றடித்து அப்போதே எல்லாவற்றையும் நடத்திக் கொண்டான் அவளிடம்.
மாமியார் வீட்டிலிருந்து கிளம்பும் போது ஆயுசுக்கும் கணவன் கட்டிய தாலியுடன் வாழ்ந்து விடுவோம் என்று தான் நினைத்திருந்தாள் குழலி. இந்த வாழ்க்கை எத்தனை நாட்களோ தெரியாது.கணவன் தன் அருகில் இருக்கும் போது திருமண வாழ்வை வாழ்ந்து பார்த்து விடுவோம் என்று துணிந்து முடிவெடுத்து மறுப்பேதும் இன்றி அவனோடு இசைந்து நடந்தாள் குழலி.
முரண்டு பிடித்துக் கொண்டு சண்டை போட்ட மனைவி சட்டென்று இசைத்து நடக்கவும் தன்னை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்ற மகிழ்ச்சி தான் பழனிக்கு.ஆனால் அவள் திட்டம் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை.
எவர் கண்ணுக்கும் தெரியாமல் மொட்டொன்று மலர்வது போல கணவன் மனைவி இருவருக்குள்ளும் எல்லாம் அப்போதே நடந்து முடிந்தது.
வருவாள்………..