குழலி- 05

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 05

“என்ன கேட்ட  எங்க தூங்க போறேன்னா . ஏன்  இவ்வளவு நேரமும்  என்னை  கட்டி புடிச்சிட்டு தூங்கினது  மறந்து போச்சா  உனக்கு…” என்றான் புன்னகையோடு.

அவன் சொன்னதைக் கேட்டதும் சட்டென்று முகம் செம்மையுற தலையை குனிந்து கொண்டான்.

“பரவாயில்லையே என் பொண்டாட்டிக்கு வெட்கம் எல்லாம் வருது…”என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் சட்டென்று  படுத்துக்கொண்டான்.

அவன் படுத்துக் கொண்டது தான் தாமதம் வேகமாக எழுந்து உட்கார்ந்தாள்  குழலி.

“எதுக்கு எழுந்துக்கிற….அது தான் மூணு பேர் படுத்து உருள கூடிய     பெரிய  கட்டில் தான் எங்க      மாமா வாங்கி போட்டிருக்கார் .அப்புறம் என்னடி? 

பதில் சொல்லாமல் அவனை முறைத்து வைத்தாள் மனைவி.

“ஓஹ்…. நமக்கு இன்னைக்கு  பஸ்ட் நைட் இல்ல…. அது தான் பயந்திட்டியா.ஆனா பாரு  அதெல்லாம் கொண்டாடுற மூடுல இன்னைக்கு   நான் இல்ல புரியுதா . உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் பயப்படாம படுடி.

“உனக்கு வேணா என்னை பார்த்ததும்  அந்த ஆசை சட்டென்று வந்திருக்கலாம்.வேணுமின்னா  சொல்லு அப்படின்னா நம்ம முதலிரவை கொண்டாடிடுவோம்.எதுக்கு என் பொண்டாட்டியை ஏமாத்தணும் நான்…? ” 

“ம்ப்ச்….” என்று சலித்தபடி தலையணை தூக்கி அவன் மேல்   எறிந்தாள் பத்திரகாளி போல அவனை முறைத்துக்கொண்டு. 

“இங்க பாரு பட்டு குழலி எதுக்கு இப்ப பத்திரகாளி  வேஷம் எடுக்கிற?  உன் அத்தான் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய் அலைஞ்சு வீடு வந்து சேர மிட்நைட் ஆயிடுச்சு.

“உன் கிட்ட சொல்றதுக்கு என்ன இன்னைக்கு ஸ்டேசனில     ரொம்ப அவமானப்பட்டு போனேன்டி.அதுக்கப்புறம் தான் இங்க கிளம்பி வந்தேன். செம்ம டயர்டா இருக்கு.கண்ண மூடி  தூங்கணும் போல  இருக்குடி .என்னை  கொஞ்சம் தூங்க விடுறியா ப்ளீஸ்..”  என்று  கொட்டாவி விட்ட படி கேட்டான். 

அவனைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது குழலிக்கு.கல்யாணம் என்று எத்தனை ஆசையோடு இருந்திருப்பான். எல்லாம் கலைந்து போய் தன் கழுத்தில் தாலி கட்ட வேண்டி வந்து விட்டதே என்று நினைத்தபடி கணவனை பார்த்தாள். அவன் தான் அவளுக்கு அருகே தலையணையை போட்டு படுத்திருக்கிறானே .

“சரி அப்போ தள்ளி படுங்க… என்கிட்ட வரக்கூடாது…”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஹேய்…. நான் உன்கிட்ட வராம யார் கிட்ட போக நீயே சொல்லு ?

“இந்த பேச்சுதான் வேணாங்கிறது…” என்றாள்  எரிச்சலாக.

“சரி பேச்சு வேணாம்  செயல்ல காட்டுங்கிறியா….”

“இதுக்குத்தான்…. இந்த வாய்க்கு தான் உங்க வீட்டுக்கு கிளம்பி போங்கன்னு சொன்னேன்…”

அது என்னவோ தெரியாது  சிறுவயதிலிருந்து இப்போது வரை குழலியோடு வம்பு வளர்ப்பதில்  அலாதி பிரியம் அவனுக்கு.

“சரி உனக்கும் வேணாம் எனக்கும்  வேணாம்…  நீ அப்படிக்கா  படுத்துக்கோ  நான் இப்படிக்கா படுத்துக்குறேன்….சரியா..” என்றபடி தள்ளி மறுகையில் அமைதியாக படுத்துக் கொண்டான்.

எதுவும் பேசாமல் அடுத்தப்பக்கம்   படுத்துக்கொண்டாள்  குழலி.

“ஒன்னும் பண்ண மாட்டேன்….பேசாம படுடி…”என்றபடி கண்ணை மூடிக் கொண்டான் பழனி.

‘உங்க அத்தான் சும்மா  வாயடிச்சதும்  ரொம்ப பயந்து போயிட்டியே  குழலி…’ என்று தனக்கு தானே  சொல்லியபடி கண்ணை மூடினாள் தூங்கினாள்.

இடைவெளி விட்டு பழனி படுத்திருந்தாலும் ஒரே கட்டிலில் கணவனுடன் படுத்திட்டிருப்பது எதுவோ போல இருந்தது அவளுக்கு.ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் இல்லை போல. படுத்தது தான் தாமதம் சட்டென்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை  பார்த்திருந்த  குழலி  எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே  தெரியாது. 

அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்து விட்டது அவளுக்கு.வேகமாக எழுந்து தேவையானவற்றை  எடுத்துக்கொண்டு குளித்துவிட்டு வந்தாள்.இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லை.ஐந்தரைக்கு தான் பால் வரும்.

வெறும் காபி போட்டு குடித்து விட்டு ஹாலில் உட்கார்ந்து  லேப்டாப்பை  உயிர்ப்பித்து ஸ்கூல்  வேலைகளை   பார்க்க தொடங்கிவிட்டாள். 

இன்றைக்கு எப்படியும் ஸ்கூலுக்கு போக  தன்னை விட மாட்டார் தாய் என்று தெரியும் அவளுக்கு.

ஐந்தரை போல எழுந்து வந்த சுந்தரவல்லி மகள் உட்கார்ந்திருப்பதை கண்டு திடுக்கிட்டு போனார்.

“என்ன குழலி சீக்கிரம் எழுந்திட்டியா?

“ஆமா….அது….…. ராத்திரி அத்தான் வந்தப்போ கோவர்த்தன் தான்  கேட் திறந்து விட்டான் போல. என் ரூமில் தான் தூங்குறாங்க..”  என்றாள்  தயங்கியபடி.

“என்னடி சொல்ற….மாப்பிள்ளை இங்க தான் வந்திருக்கிறாரா? அவங்கம்மா  எப்படி விட்டாங்க.அங்க ஏதும்   சண்டை போட்டிருப்பாரோ….. உன்கிட்ட என்ன சொன்னார்..”   

“என்கிட்ட எதுவும் சொல்லல.ஸ்டேஷன்ல  இருந்து வரவே மிட்நைட்  ஆயிடுச்சுன்னு தான் சொன்னாங்க. மாமா தான் இங்க நம்ம வீட்டுக்கு கிளப்பி விட்டிருக்கணும்…”

“எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம்.பால் வந்துருச்சா  பாரு.நான் சாப்பாட்டுக்கு என்னென்ன பார்க்கிறேன்.அப்புறம் ஸ்கூலுக்கு போன் பண்ணி நேற்று  திடீரென்று  உனக்கு கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லி  வரலன்னு  சொல்லு. அங்க கமலநாதன் எல்லாம் சரியாக பார்த்துப்பார்..” என்று வரிசையாக அடுக்கி கொண்டு போனார் அன்னை.

‘இதுதான் நடக்கும் என்று எனக்கு அப்பவே தெரியுமே… என்றபடி  தன் வேலையை பார்த்தாள்  குழலி.

காலையில் மகளையும் மருமகனையும் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு  போய்வர சொன்னார் சுந்தரவல்லி.சும்மா ஒரு புடவையை சுற்றி கொண்டு வந்தவளை திருப்ப பட்டுப் புடவையை மாற்றி வர சொன்னதுடன்   மருமகனையும் பட்டு வேட்டி சட்டையில் கிளப்பி விட்டிருந்தார். கோயிலுக்கு  வரும் போது சின்னதாக  ஒரு பொட்டை ஒட்டிக் கொண்டு வந்திருந்தாள் குழலி.

“பட்டு குழலி குங்குமம் வச்சுக்கோ…” என்று தன்  உள்ளங்கையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் உச்சி  வகிட்டில் உச்சியில்  வைத்துவிட்டான்.

“இப்ப சொல்றது தான் உனக்கு நெத்தியில சின்ன பொட்டு  பெரிய பொட்டு வைக்கிறது  முக்கியமில்லை.ஆனா  உச்சியில்  எப்பவும் குங்குமம் இல்லாம உன்னை நான் பாக்க கூடாது.உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு  பார்த்தவுடன்  எல்லோருக்கும் தெரியணும். அவ்வளவு தான் சொல்லுவேன்…” என்றான்  அவள் கண்களைப் பார்த்தபடி.

பல  நாட்களாக ராகவன் குழலியின்  பின்னால் சுற்றுவது தெரியவந்தது  பழனிக்கு.என்னதான் அவன் துபாயில் இருந்தபோதும்  குழலியின் பள்ளியில் இருக்கும் கமலநாதன் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வான். மாமா குலசேகரன் இறந்த பின் அந்த பெரிய பள்ளியை குழலி எப்படி தனியாக சமாளிக்கிறாள் என்று  பொறுப்போடு போன் போட்டு கேட்டு கொள்வான்.குலசேகரன் உயிருடன் இருக்கும் போது அடிக்கடி அவருடன் போனில் பேசிக்கொள்வான்.அவனுக்கும் மாமனுக்கு  இருக்கும் நெருக்கத்தை குழலி அறியமாட்டாள். 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இன்ஸ்டாகிராமில் ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுடன் காதல் என்று கதை விடும்  காலிப்பயல் ராகவன்.அவனை பற்றி   குழலிக்கு எதுவும் தெரியாது.குழலியின் ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும்  வங்கியில் வேலை பார்க்கிறான் ராகவன்.

ஒரு நாள் பள்ளிக்கு வந்து குழலியை பிடித்திருக்கிறது திருமணம் செய்ய ஆசை படுவதாக சொல்லியிருந்தான்.யோசித்து பதில் சொல்லும்படி   அவளிடம் கேட்டிருந்தான் ராகவன். பழனியின் உத்தரவில் எப்போதும் குழலியிடம் கவனமாக இருக்கும் கமலநாதன்  இதையும் அவனிடம் சொல்லிவிட்டார்.  

கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு போகலாம் என்றான் பழனி.

குழலி அமர்ந்திருக்க தள்ளி போய் நின்று யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்தான் கணவன் . அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் குழலி.  தன்னை தேடி நடு இரவில் வந்து நின்ற கணவனை நினைத்த போது  ஒருவித நிம்மதி வந்தது மனதில்.அதனால் மாமியாரின் பேச்சுக்கூட இப்போது பின்னுக்கு  போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  

எது வந்தாலும்  பரவாயில்லை.தன் மனைவி தான் முக்கியம் என்று  அத்தனை களைப்போடும் வந்து நின்ற கணவனை எப்படி வெறுக்க முடியும் அவளால்.

என்னதான் அவசர கல்யாணம் என்றாலும் தன் கணவன் பழனியப்பன்  மட்டும் தான் என்று தெளிந்து விட்டாள்.  

 

வருவாள்……….