உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-9
ஒவ்வொரு பெண்களும் வித்யாசமானவங்க. என்னோட அதிக நேரம் தங்கைகளுடனும், ஆத்தா, அம்மா, பெரியம்மாவுடன் கழிந்ததால் என்னால் பெண்களின் உணர்வுகளை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எங்க அய்யன், அப்பா, பெரியப்பா எல்லாருமே பெண்களை ரொம்ப மதிக்கக் கூடிய ஆளுங்க. அதையேதான் நான் பார்த்து வளர்ந்தேன். அதனால் எனக்கு மேல் ஈகோ குறைவுதான். இல்லைனு சொல்ல மாட்டேன். அந்தப் பொண்ணு அடிச்சதை என்னால் இப்படி மட்டும் தான் ஜஸ்டிஃபை செய்ய முடிஞ்சுது. இதே இடத்தில் என்னோட தங்கச்சி யாரவது இருந்து இழுத்துட்டு போயிருந்தால் நான் அதைப் பார்த்தால் எப்படி இருந்திருக்கும்? அதே மாதிரி என்னோட தங்கச்சி எப்படி பீல் பன்னி இருப்பா? இப்படி யோசிச்சேன். அதனால் தான் என்னால் அந்த சம்பவத்தை அப்படியே விட முடிஞ்சது.
-எழில்.
கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருந்தது அந்த பிட்னஸ் சென்டர். கருப்பும், கிரேவும் கலந்த ஸ்வெட்ஸில், டேங்க் டாப்பிலும் ஆடிக் கொண்டிருந்தாள் மனோஷா. ஜூம்பா இசைக்கேற்ப அவளுடன் சில பெண்கள் ஆடிக் கொண்டிருந்தனர். உடலெல்லாம் வியர்த்து வழிந்தது அவளுக்கு. கோபமாக வீட்டுக்கு வந்தவள் உடை மாற்றி விட்டு பிட்னஸ் செண்டருக்கு வந்திருந்தாள்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்தவள் கல்லூரி காலத்தில் இருந்து ஜும்பா, ஏரோபிக் எக்சர்சைஸ் செய்து வருகிறாள். அவ்வப்போது தியானமும் உண்டு. குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் நலத்தையும் பார்த்துவிட்டு தனக்கு ஒரு பாராசிட்டமால் போட்டுக் கொண்டு இருக்கும் சராசரி அம்மா அவளுக்குக் கிடையாது.
உடல் நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள் அன்னை கூறியதின் பேரில் ஜும்பாவின் சேர்ந்தவள் அதை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
அரை மணி நேரம் தொடர்ந்து ஆடியவள் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் ஆடினாள். அங்கிருப்பவர்களால் அவளுக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அங்கிருந்த டிரைனரே அவளை நிறுத்தினார்.
“போதும்மா.. கிராம்ப்ஸ் வந்தறப் போகுது.”
“என்னால் ஒண்ட் அண்ட் ஹாஃப் ஹவர் வரைக்கும் ஆட முடியும்.”
“இதுக்கு முன்னாடி…”
“டென் இயர்ஸா.. ஜும்பா, ஏரோபிக்ஸ்..”
“வாவ்.. சூப்பர்..”
டிரைனருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாகக் கொடுத்தாள் மனோஷா.
“கிரேட்.. அப்ப நியூ ஜாயின் பன்னவங்களுக்கு எல்லாம் நீங்க ஒரு மோட்டிவேஷனா இருப்பீங்க?” பத்து வருடம் தொடர்ந்து பயிற்சி செய்வதால் டிரைனருக்கு மனோஷாவின் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. அது அவன் குரலில் இருந்தும் வெளிப்பட்டது.
“சிந்தியா மேடம் இல்லையா?” என அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“மேடம் இன்னிக்கு ஒரு அவசர வேலையாக போயிட்டாங்க. சோ நான் அவங்க செஷனையும் சேர்த்து எடுக்க வேண்டியதாடுச்சு.”
“ஓ..”
“எந்த ஸ்கூலில் படிக்கறமா?”
இந்தக் கேள்வியில் மனோஷாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஹலோ.. ஐம் வொர்க்கிங்க் ஆஸ் ஏ சைக்கலாஜிஸ்ட். கம்பிளிட்டு மை டாக்ட்ரேட் இன் சைக்காலஜி.”
எதிரில் இருந்தவன் முகத்தில் ஆச்சரியம்.
“என்னால் நம்ப முடியலை. என்ன ஏஜ் உங்களுக்கு?”
“டிவெண்டி சிக்ஸ்.”
“ஓ கிரேட்.”
“நான் டிவெண்டி எய்ட். ரொம்ப வித்யாசம் இல்லை. நான் முதலில் ஏதோ ஒரு ஸ்கூல் பொண்ணுனு நினைச்சேன்.”
“நோ… என்ன இந்த ஊரில் மட்டும் என்னை சின்னப் பொண்ணுனு நிறைய பேரு நினைச்சுக்குறாங்க.” இப்போது அவனுடன் இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தாள் மனோஷா. அவன் இலகுவாக மனோஷாவிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆளை அசரடிக்கும் தோற்றம். அவன் வந்ததில் இருந்து பல பெண்களின் கண்கள் அவன் மீதுதான். ஆனால் அவன் யாரையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் வேலையை மட்டும் செய்தான். அனாவசிய வழிசல் இல்லை. அவனைப் பார்த்தவுடன் மனோஷாவுக்கு ஒரு நம்பிக்கை உருவானது.
“ஐம் மனோஷா.”
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நான் அருண்..”
“அருணாச்சலம்… அது ஒரு தமிழ் பிலிம் நேம் கரக்டா?”
இப்போது அருணுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“அப்படினா.. சூரியன். நீங்க இந்த ஊரு இல்லையா?”
“இல்லை.. பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர். தாத்தா காலத்திலேயே அங்க செட்டில் ஆகிட்டோம். ஆனால் தமிழை விடல. கோவை நேட்டிவ். அண்ணா ஊட்டிலதான் படிச்சார். நானும் அப்பப்ப தமிழ்நாடு அடிக்கடி வருவேன். அதனால் தமிழும் பரிச்சயம்.”
அவள் கூறிய விளக்கத்தைக் கேட்டதும் ஆதவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“அப்ப இப்ப இங்க எதுக்காக வந்திருக்கீங்க?”
“இங்க செண்டர் ஆரம்பிச்சுருக்கேன். சைக்காலஜிஸ்ட். இனி இங்கதான்.”
“தனியாவா?”
“இல்லை அண்ணா இங்க இருக்காங்க.”
“பரவால்லை.. நான் இங்கதான் ஃபோர் இயர்ஸா டிரைனரா இருக்கேன்.” அப்போது வாட்சைப் பார்த்தவன், “ஓகே.. டைம் ஆகிடுச்சு.. எப்படி வீட்டுக்குப் போவீங்க?” என்றான்.
“கார் இருக்கு..”
“ஓகே டேக் கேர். பாய்.” என விடை பெற்றுச் சென்றான் அருண்.
அருணிடம் மனோஷாவில் இயல்பாகப் பேச முடிந்தது. அவனிடம் ஒரு கம்பர்ட் ஏற்பட்டிருந்தது. ஏ.ஐ பள்ளியில் இருந்து வந்ததிற்குப் பிறகு பேசிய முதல் மனிதன் இவனே. பேசிவிட்டு இலகுவான மன நிலையுடன் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.
இரவு உணவுக்கு எதாவது செய்ய வேண்டும். பிரிட்ஜில் காய்கறிகளை ஆராய்ந்தாள். என்ன செய்வது? பேசாமல் வெளியில் ஆர்டர் செய்து கொள்ளலாமா? என யோசித்தாள். அண்ணனிடம் வேறு கேட்க வேண்டும். பாதியில் வந்ததிற்கு அவனிடம் வேறு பதில் கூறியாக வேண்டும். அவனை எப்படி சமாளிப்பது என்று கூட யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் அண்ணனிடம் எதாவது கூறி இருந்தால்? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.
சிலர் நடந்தவற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறுவர். ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
பிரிட்ஜில் இருக்கும் காய்கறிகளை எடுத்தவள் தன் அண்ணனுக்குப் பிடித்த பிசிபேளாபாத் என்ற சாம்பார் சாதத்தை வைத்து விட முடிவு செய்தாள். அது சுலபமானதும் கூட. அதைப் பார்த்தால் அமைதியாகி விடுவான் என்று தோன்றியது. அனைத்தையும் தயார் செய்து குக்கரில் போட்டு விட்டாள். விசில் வந்ததும் இறக்கி தாளிக்க வேண்டும்.
அப்போது காலிங்க் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. திறந்தவளின் எதிரே கன்னச் சிவப்புடன் நின்றவன் வேறு யாருமில்லை. ஆதித் பொன்னெழிலன்.
. -ஊஞ்சலாடும்..