அத்தியாயம்-19
மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. கிருஷ் சொன்ன கிரவுண்டில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. காற்று சிலு சிலுவென வீசி இரவு நேரத்தினை இனிமையாக வரவேற்க ஆரம்பித்தது.
காற்றில் கூந்தல் பறக்க நின்று கொண்டிருந்தாள் பிருத்விகா. அவளுக்கு எதிரே சற்று இடைவெளிவிட்டு அஃகு புள்ளி போன்று வருணும், கிருஷ்ஷூம் கைகளைக் கட்டியவாறு நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் தலையைக் குனிந்தவாறு இருக்கும் பிருத்விகாவை கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த பிருத்விகா அவர்கள் இருவருக்கும் புதியவள். எதைச் சொல்வதற்கு இவ்வளவு தயங்குகிறாள் என்று தெரியவில்லை.
“இதெல்லாம் எப்படி ஆரம்பிச்சுதுனு தெரியலை. முதலில் நான் ஏதோ கோ இன்சிடெண்டலா நடந்த விஷயம்னு நினைச்சேன். ஆனால்.. என்னையும் மீறி.. என்னால் எதையும் கன்ட்ரோல் செய்ய முடியலை..”
“பிருத்விகா.. டேரக்டா.. விஷயத்துக்கு வா..” கிருஷ்ஷே பொறுமை இழந்து கூறிவிட்டான்.
“அது.. நான் ரெயின் ஸ்பாட்டில் தண்ணிகுள்ள விழுந்தது ஆக்சிடெண்டலா இருக்க சான்ஸஸ் ஜீரோ பர்சன்ட்.”
“வாட்ட்ட்…?” கிருஷ்ஷூம், வருணும் ஒரே நேரத்தில் கத்தி இருந்தனர். கத்திய இருவரையும் நிதானமாகப் பார்த்தாள்.
“நிச்சயம் அங்க நான் ஷூஸ் சவுண்ட் கேட்டேன். நீதான் வரேனு நினைச்சு திரும்பலை. நானும் வாட்டருக்கு கொஞ்சம் பக்கத்துல நின்னுட்டு இருந்தேன். தீடிர்னு ஏதோ தள்ளிவிட்ட மாதிரி இருந்துச்சு.. ஆனால் மனுசனோட ஹேண்ட் இல்லை. அதுக்குள்ள தண்ணீல விழுந்துட்ட.. முழுகறதுக்கு முன்னாடி.. ஏதோ கருப்பு உருவமாக தெரிஞ்சுச்சு.. அதுமட்டுமில்லாமல் அதுக்கப்பறம் ஹாஸ்பிட்டலில் எனக்கு ஒரு பொக்கே.. வந்துச்சு.. அதில்…” கூறிவிட்டு நிறுத்தினாள்.
“அது மேரி கோல்ட்.. பிளார்ஸ்..”
“மேரிகோல்ட்தானே.. அதுக்கென்ன?”
“மேரிகோல்ட் பிளாரோட இன்னொரு மீனிங்க் டெத். அதில் ஒரு கார்டும் இருந்துச்சு.. “ஓப்பன் யுவர் மவுத்.. யுவர் சேவியர் வில் விதர் பர்ஸ்ட்..” இதுதான் அந்த கார்டில் இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல் அதிலிருந்து என்னை யாரோ ஃபாலோ செய்யற மாதிரி பீலிங்க். இல்லை… நிச்சயமா செய்யறாங்க.”
கூறிவிட்டு அமைதியாக நின்றாள்.
“அதனால் நான் ஆக்ஸிடெண்ட்னு பொய் சொல்ல வேண்டியதாப் போயிருச்சு.”
“சேவியருக்காக.. நீ ஏன்?.. ஓ.. அது நான்..” வருண் அப்போதுதான் அவள் தனக்காக செய்திருக்கிறாள் எனப் புரிந்து கொண்டான்.
“ம்ம்ம்.. இட்ஸ் யூ..” பிருத்விகா முகத்தில் அதே அமைதி.
கிருஷ் வாயடைத்துப் போய் அமைதியாக நின்றான். அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
“உன்னை எதுக்கு டார்கெட் செய்யனும் அந்த கில்லர்?”
“தெரியலை.. ஆனால் ரீசண்டா நம்ம ஹாஸ்பிட்டலில் நடக்கற மர்டர்ஸ் பத்தி கேள்விப்பட்டியா?”
“எது.. பாரஸ்ட் ஏரியாவில் நடந்த அந்த நாலு மர்டர்ஸா?”
“ம்ம்ம்.. பிரஸ்கிட்ட இருந்து எவ்வளவு கன்ட்ரோல் செஞ்சாலும் எப்படியும் ரூமர்ஸ் பரவுது.. அந்த கில்லர் ஒரு சீரியல் கில்லர் டைப் மாதிரி தோணுது. என்னைக் கொல்ல டிரை பன்னறது ஏன் அவனா இருக்கக் கூடாதுனு என்னோட தியரி.” பிருத்விகா தன் யோசனையைக் கூறினாள்.
“வாட் எவர்? நீ இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி மறைக்கலாம் பிருத்விகா?”
“எப்படி மறைக்காமல் இருக்க முடியும்? அந்த கில்லர் நான் வாயைத் திறந்தால் என்னை மட்டும் இல்லாமல் என்னை சுத்தி இருக்கற எல்லாரையும் டார்கெட் பன்னுவேனு சொல்லி இருக்கான். அதனால் தான் அப்பாவை ஊருக்கு வரதைக் கூட நான் தடுத்து வச்சுருக்கேன். இந்த விஷயத்தை வெளிய சொன்னால் எல்லாருக்குமே டேஞ்சர். நீ என்னை பிளாக்மெயில் செய்யறதே அதை வச்சுதான்.”
“பிருத்வி.. கம் ஹியர் கேர்ள்..”
கிருஷ் அவளை பக்கவாட்டில் தோளைப் பிடித்து அணைத்துக் கொண்டான். வருண் இப்போது அவர்கள் இருவரையும் கூர்மையாகப் பார்த்தான். அவன் பார்வையைக் கவனித்த கிருஷ், “நீயும் கூட செய்யலாம். ஆனால் அதுக்கு பர்மிஷன் வேணும்.” என்றான்.
“எனக்கு அதுக்கு மேல் கன்செண்ட் இருக்கு கிருஷ். இப்ப அது முக்கியம் இல்லை. இதைப் பத்தி டாக்டர் மதுபாலன் மூலமாக கலக்டர் மதுராகினி மேடம்கிட்ட பேசலாம். அந்த அசிஸ்டெண்ட் கமிஷனர்கிட்ட கூட நேரடியாகப் பேசலாம்.” என்றான் வருண்.
“என்னடா.. இரண்டு பேரும் பேசிறீங்க? நோ போலீஸ்…” பிருத்விகா மறுத்தாள்.
“நோ நத்திங்க்..” என்று இரு ஆடவரும் ஒரே குரலில் பதில் அளித்தனர். பதில் அளித்து விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டனர்.
“டேய்.. என்னடா.. பாய்ஸ் டாக்கா?.. அதுக்கும் இதுக்கும் என்னடா இங்க சம்பந்தம்?”
“லீவ் தட்.இதுக்கு மேல் நீ சொல்றதைக் கேட்க முடியாது பிருத்விகா. அது மட்டுமில்லாமல் இனிமேல் நீ என்னோட வீட்டில் தான் இருக்கப் போற.. புரியுதா?”
“நோ.. வருண்.. அப்படி எல்லாம் நடந்தால் அவனுக்கு சந்தேகம் வரும். அதனால் நேட்சுரலா நடந்துக்கனும்.”
“அதுக்கு எங்கிட்ட ஒரு பிளான் இருக்கு.” வருண் தீவிரமான குரலில் கூறினான்.
“என்ன பிளான்?” கிருஷ் கேட்டான்.
“பிருத்விகா.. கையில் பிராக்சர்..”
“டேய்.. பிராக்சரா? ஏண்டா? அது எப்படி தானா வரும்?” பிருத்விகா அலறாத குறைதான்.
“பிருத்விகா.. நம்ம சூப்பர் ஸ்டார் படத்தில் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க கையை உடைக்கற மாதிரி அந்த கில்லர்கிட்ட இருந்து தப்பிக்க உன் கையை உடைக்கப் போறோம்.. அதுதான் உன்னோட பிளான் வருண்?” கிருஷ் வருணைப் பார்த்துக் கேட்டான்.
“கொஞ்சம் அப்படித்தான்..”
“ஐய்யோ அதுக்கு கில்லரே பரவால்ல.. இவனுக இரண்டு பேருமே போதும்.. போங்கடா..” என்று கூறி அவளுடையை புத்தகத்தைக் கொண்டு கிருஷ்ஷைச் சாத்தியவள் நகர ஆரம்பித்தாள்.
“கிருஷ்.. அவளை முழுசாக் கேட்க சொல்லு. இது மக்கள் செல்வன் படத்தில் வர மாதிரி அடிபட்ட மாதிரி நடிச்சாப் போதும். நீ வீட்டுக்குப் போன உடனே பாத்ரூமில் வழுக்கி விழுந்த மாதிரி ஆக்டிங்க் பன்னு. டாக்டர் மதுபாலன் ஹாஸ்பிட்டலுக்கு நான் கூட்டிட்டுப் போறேன். இன்னிக்கு டாக்டர் ஷரிணி இருப்பாங்க. சோ அவங்ககிட்ட பேசிக்கலாம். பேக்கா.. ஒரு ஸ்விங்க போட்டுக்கலாம். நீ நிஜமாவே விழுந்தால் இன்னும் வசதிதான். இதை சாக்கா வச்சு.. நான் உன்னை என்னோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்.”
“நாலு எட்டு வச்சா.. உன்னோட வீடு இதுக்கு நான் என்ன சாகசம் செய்ய வேண்டியது இருக்கு?.. பட் நோ..” பிருத்விகா மறுத்தாள்.
“அது என்ன நாலு எட்டு? எய்ட் ஃபோர்.. என்ன வீட்டு அடி கணக்கா? லைக் ஹன்ட்ரட் பீட் ரோடு..” கிருஷ் தன் சந்தேகத்தைக் கேட்டு வைத்தான்.
“ஹே பகவான்..” என்று தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டாள் பிருத்விகா.
“கிருஷ்.. அப்படினா.. எங்க இரண்டு பேர் வீடும் ரொம்ப பக்கம்னு அர்த்தம்.” என்று வருண் விளக்கம் கொடுத்தான்.
“ஓ.. அப்படியா.. பிருத்விகா.. எனக்கு வருண் சொல்றதுதான் கரக்ட்டுனு தோணுது. அதனால் அவன் சொல்றபடியே செய்யலாம்.”
கிருஷ் கூறியதைக் கேட்டு பிருத்விகா அவனை முறைத்தாள். ‘நீ அவனுக்குப் பிரண்டா? இல்லை எனக்கு பிரண்டா?’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது.
“கண்டிப்பா.. நான் உன்னோட பிரண்ட்தான் பிருத்விகா. அதனால் தான் சொல்றேன். நான் கூட வரேன். மித்ராவை கூட வர சொல்லிடலாம். ஷி வில் கம்.”
“ஓ.. டேய்.. இது எனக்கு போட்ட ஸ்கெட்ச் மாதிரி தெரியலையே..” பிருத்விகா கிருஷ்ஷைக் கேலியாக் கேட்டாள்.
சீரியசாக ஆரம்பித்த பேச்சு இப்போது காமெடி ஜெனரைத் தொட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்த பிருத்விகா எ அதன் போக்கை மாற்றவில்லை.
இறப்பது எப்படியும் நடக்கப் போகிறது. அதை நினைத்து நினைத்து ஏன் இந்த நிமிட வாழ்க்கையை இழக்க வேண்டும் என்ற எண்ணமும் அவள் மனதில் இருந்தது. அவள் தலைக்கு மேல் தொங்கும் கண்ணுக்குத் தெரியாதக் கத்தியை அவள் உணர்ந்திருந்தாள் என்பதுதான் உண்மை.
“நான் மித்ராகிட்ட சொல்லிறேன். மித்ரா.. உனக்கு பாதுகாப்பா இருப்பா.. நாளையில் இருந்து உனக்கு ஸ்விம்மிங்க் லெசன்ஸ். அவளும் உன்னோட இருப்பாள். நம்ம வீட்டு பூலில் நீ பிராக்டீஸ் செஞ்சுக்கலாம்.”
“பிராக்சராம்.. ஆனால் ஸ்ம்மிங்க் பிராக்டீசாம்.. ஏண்டா?”
“இண்டோர்.. பூல் இருக்கு. அதுல செஞ்சுக்கலாம்.” என வருண் பதில் அளித்தான்.
“சூப்பர். ஆனால் மித்ராகிட்ட இதை சொல்ல வேண்டாம். உங்க இரண்டு பேர்த்துகிட்ட சொல்றதுக்கே எனக்கு விருப்பம் இல்லை. இதில் மித்ராவையும் இழுக்க வேண்டாம்.”
“ஆனால் மித்ரா இருக்க வேண்டியது இம்பார்ட்ண்ட். அவதான் நமக்குள்ள பபர்.” என வருண் கூறியதைக் கேட்டதும் அவர்கள் இருவரையும் விநோதமாகப் பார்த்து வைத்தான் கிருஷ்.
“ஆஹான்.. டே உங்க இரண்டு பேர் சண்டைக்கு மித்ரா ஊறுகாயா?…” என்றான் கிருஷ்.
இதைக் கேட்டதும் வருணுக்கே லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“மித்ராகிட்ட உண்மையை சொல்ல வேண்டாம். ஜஸ்ட்.. பிருத்விகாவுக்கானு கேட்டு தங்க வைக்கலாம். அவளோட வீட்டில் நான் பேசறேன்.”
“எப்படி பார்த்தாலும் லாஜிக் செட் ஆகலை.” கிருஷ் கூறினான்.
“மித்ரா வீட்டில்.. இப்படி சொல்லலாம். இனி நமக்கு எப்படியும் பைனல் இயர் புராஜக்ட் வரும். அதில் பிருத்விகா, நீ, நான், மித்ரா எல்லாம் டீம். ரொம்ப வொர்க் இருக்கும். அதனால் பிருத்விகா வீடு பக்கத்தில் இருக்கறதுனால் அங்க தங்க போறோம்னு மித்ராவை சொல்ல சொல்லு. நானும் பிருத்விகா வீடு அல்லது உன்னோட வீட்டுக்கு மூவ் இன் செஞ்சுக்கிறேன். யாராவது நம்மளைப் பார்க்க வந்தாலும் சமாளிச்சக்கலாம். மித்ரா அப்பா ஸ்டிரிக்ட். இப்படி ஒரு காரணம் சொன்னால் நம்புவாரு. அதுக்கு முன்னாடி பிருத்விகா வீட்டை வந்து செக் செய்வாரு. எல்லாத்துக்கும் ரெடியா இரு.”
“உனக்கு எப்படி இவ்வளவு டீட்டெயில் தெரியுது கிருஷ்?”
வருண் கேள்வியில் கிருஷ்ஷின் முகம் சற்று மாறினாலும் பின்பு இயல்பான நிலைக்கு மாற்றிக் கொண்டான்.
“கேள்வி பட்டுருக்கேன். உன்னோட வீட்டுக்கு பிருத்விகாவை அனுப்புவாங்க. ஏனால் அது சின்ன வயசில் இருந்தே பழக்கம். தேவகி அம்மாளும் இருக்காங்க. சொல்லப் போனால் பிருத்விகா தனியா இருக்கறதை விட இரண்டு கார்ட் இருக்க உன்னோட வீடு சேஃப். ஆனால் எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க.”
“ம்ம்ம்ம்…” என வருண் அதை ஆமோதித்தவன்.
“பிருத்வி.. இன்னிக்கு உன்னோட முதல் வேளை பாத்ரூமில் வழுக்கி விழறதுதான். ஆக்டிங்க் நல்லா பன்னு. சொதப்பி வைக்காத..” கிருஷ் கிண்டலடித்தான்.
“அதெல்லாம் நல்லா செய்வேன் போடா..”
“எவ்வளவு பெரிய உண்மையை மறைச்சுருக்க. உனக்கு ரொம்ப தைரியம்..” வருண் அவளின் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.
‘பார்க்கறதைப் பாரு… அப்படியே வேட்டைக்காரன்.. அனிமல்ஸைப் பார்க்கற மாதிரி. பிளாக்மெயில் செஞ்சு உண்மையை வாங்கிட்டு இப்ப என்னமோ பேசறான்.’ என முனு முனுத்தாள்.
“என்ன முனு முனுப்பு?”
“ம்ம்… ஒன்னுமில்லை. வழுக்கி விழுவது எப்படினு மெண்டல் பிராக்டிஸ் கொடுத்துட்டு இருக்கேன். போதுமா?..” என்றவள் தன் காரினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அத்தியாயம்-20
மாலை மகிழ்வாய் இரவினை பிரசவித்துக் கொண்டிருந்தது. சிவப்பு நிற பாத்ரோபில் தரையில் காலைப் பிடித்துக் கொண்டு “ஆ..ஆ..” என்று கத்திக் கொண்டிருந்தாள் பிருத்விகா.
கூடவே இடுப்பையும் பிடித்துக் கொண்டிருந்தாள். பாத்டபிற்கு அருகில் இருக்கும் மேடையில் இருந்து கைப்பேசியை எம்பி எடுத்தாள். எடுத்தவள் வருணிற்கு அழைக்க அவனும் அழைப்பை எடுத்தான்.
“வருண்.. வீட்டுக்கு வா..டா.. அம்மா…”
அழைப்பைத் துண்டித்தவள் மெதுவாக எழ முயன்றாள். பிருத்விகா அழைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்த வருண் உடனே அவசரமாக கைகழுவி விட்டு கார் சாவியினை எடுத்துக் கொண்டு விரைந்தான். அவள் வீட்டு முன் நிறுத்தியவன் உடனே வீட்டுக்குள் ஓடினான்.
மெதுவாக முனகல் சத்தம் வீட்டில் கேட்டது.
“பிருத்விகா…” என அழைத்தப்படி மாடிக்கு விரைந்தான். திறந்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்தவன் நேராக பாத்ரூமுக்குள் சென்றாள். அதையும் திறந்துதான் வைத்திருந்தாள் பிருத்விகா.
‘பரவாயில்லை.. பேபி ரொம்ப சூப்பரா ஆக்ட் பன்னறா.. அப்படியே ஒரிஜினலா இருக்கு…’ என மனதுக்குள் மொச்சியப்படி உள்ளே நுழைந்தவன், “பேபி.. பிச்சு உதறுற..”
“என்னடா.. பிச்சு உதறாங்க.. ஆ.. நிஜமாவே விழுந்துட்டேன். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போடா.. அம்ம்மா..”
வலியில் துடித்துக் கொண்டிருந்தவளை உடனே தூக்கினான்.
“டேய்.. கையைப் பிடிச்சு தாங்கி கூட்டிட்டுப் போனா.. போதும்..”
வருணின் முகம் கடினமாக மாறி இருந்தது.
“பேபி.. ஷட் யுவர் மவுத்..”
அவளை ஏதோ தலையைணையைத் தூக்கிக் கொண்டு போவது போல் சுலபமாகத் தூக்கிக் கொண்டு படிகளில் இறங்கியவன் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள காரை நோக்கி விரைந்தான்.
முன் சீட்டில் காரில் அவளை அமர வைத்தவன் அவனும் டிரைவிங்க் சீட்டை அமர்ந்தவன் தன் ப்ளூ டூத் மூலம் செக்யூரிட்டியை அழைத்தவன் “அண்ணா.. பிருத்விகா வீட்டைப் பூட்டி சாவியை தேவகிம்மா கொடுத்துடுங்க..” என்று தகவல் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
“பேபி.. ரொம்ப வலிக்குதா?” என்ற அவன் குரலிலும் செய்கையிலும் இருந்த அக்கறையில் அவனை தன் வலியை மறந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முட்டி வரை இருக்கும் பாத்ரோப் லேசாக முட்டி தெரியும்படி விலகி இருந்தது. தன் ஹூடியை உடனே கழட்டியவன் அவள் மடி மேல் போட்டு மூடினான்.
காரை அதிவேகத்தில் எடுத்தவன் அடுத்த நொடியே பாலன் மருத்துவனையை நேவிகேசனில் போட்டு விட்டு காரை செலுத்த ஆரம்பித்தான். கார் எடுக்கும் போது உண்டான அசைவில் பிருத்விகா கால் வலி மீண்டும் நினைவுக்கு வந்தது. உதடுகளை இறுக்கி, கைகளை இறுக்கி வலியைப் பொறுத்துக் கொண்டாள். கண்களில் லேசாக கண்ணீர் படலம் இருந்தாலும் கண்ணீர் வெளியில் வரவில்லை.
வருண் பாதையில் கவனத்தை வைத்துக் கொண்டே பாலன் மருத்துவமனைக்கு அழைத்து ஷரணியிடம் கடைசி நிமிடத்தில் அப்பாயின்மெண்ட் வாங்கியும் விட்டாள்.
வீட்டுக்குள் கிளம்ப இருந்த ஷரணி வருண், பிருத்விகா என்ற பெயரைக் கேட்டதும் அவளும் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறிவிட்டாள். அவர்கள் இருவரையும் இதற்கு முன்பே பார்த்திருப்பதால் ஷரணியும் காத்திருந்தாள்.
இடையில் கார் ஓட்டும் போது பிருத்விகாவின் கையைப் பற்றினான் வருண்.
“சீக்கிரம் போயிடலாம்.” கைகளை அழுத்திவிட்டு மீண்டும் வாகனம் ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தினான்.
வருணை வித்யாசமாகப் பார்த்தவள் அமைதியாக மீண்டும் வலியைப் பொறுக்கக் கண்களை மூடினாள்.
மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டின் முன் காரை நிறுத்தினான் வருண். நிறுத்தியவுடன் மறு பக்கம் கதவைத் திறந்து பிருத்விகாவைத் தூக்க முயன்றான்.
“வருண்.. நான் நடக்கறேன். நீ என்னை தாங்கி மட்டும் பிடி.. இல்லை வீல் சேர் எடுத்துட்டு வா.” அவள் கூறுவது அவன் செவிகளைத் தீண்டினாலும் அவன் உடலில் அதற்கு எந்த எதிர் வினையும் இல்லை. வேறு வழியின்றி அவன் கழுத்தில் மாலையாகக் கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டாள். அவள் கால்களை அவனுடைய ஹீடி இன்னும் தழுவியிருந்தது. அவன் மருத்துவமனை படிகளுக்குச் செல்லும் முன் மருத்துவமனை பணியாளர்கள் வீல் சேருடன் வந்து விட்டனர். வீல் சேரில் வருண் அவளை அமர வைக்க அவர்களே தள்ளிச் சென்றனர்.
அவர்கள் பின்னாலேயே வருணும் நடந்தான். வருண் வார்டில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனைப் பின்னால் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா. தீடிரென்று வருணின் முகம் மலர்ந்தது.
“ஹாய் அக்கா..”
“ஹலோ.. டாக்டர் வருண்..”
“இது பிருத்விகா. பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டா.. எனக்கு ஸ்ட்ரைனா இருக்குமோ டவுட்டா இருக்கு..”
“ம்ம்… ஐ வில் சி.. பர்ஸ்ட் யூ சிட்..”
ஷரணி பிருத்விகாவிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தன் பணியைச் செய்தாள். ஷரணியையும் பிருத்விகாவின் கால்களையும் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் வருண். ஷரணியிடம் பதில்களைக் கூறிக் கொண்டே இடை இடையே வருணைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருத்விகா.
“கரக்ட்தான்.. புட் ஸ்ட்ரெயின். பர்தர் இஞ்சுரி இருக்கானு ஒரு சிடி பாத்திரலாம்.” என்று வருணைப் பார்த்துக் கூறினாள் ஷரணி.
“யெஸ்..”
அவள் சிடி ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட அவளுடன் செல்லப்பட்ட வருணைத் தடுத்தாள் ஷரணி.
“வருண்.. நீ என்னோட கேபினுக்கு வா..”
“இல்லை பிருத்விகா..”
“பிருத்விகாவை நர்ஸ் பார்த்துக்குவாங்க.. நீ வா..”
பிருத்விகாவைப் பார்த்து தலை அசைத்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து பிருத்விகாவுக்கு குளுக்கோஸ் பாட்டில் முடிந்து விட்டிருந்தது. அதிலேயே வலி நிவாரணியும் கொடுக்கப்பட்டிருக்க அவளுக்கு வலி பெரும்பாலும் நீங்கி இருந்தது.
ஆனால் பிருத்விகாவுக்குத் தூக்கம் வரவில்லை. வார்டில் ஒரு பெட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். இடையில் ஷரணி மட்டும் வந்து அவளைப் பார்த்துச் சென்றாள். ஆனால் வருண் வரவே இல்லை.
இரண்டு மணி நேரமும் அவன் எங்கு சென்றிருப்பான்? அப்படி என்ன ஷரணியிடம் பேசிக் கொண்டிருப்பான்? என்ற எண்ணம் எழுந்தாலும், அவளுடைய கைப்பேசி அருகில் இருந்தாலும் அவனுக்கு அழைக்க மனமில்லை. அமைதியாகப் படுத்திருந்தாள்.
இரண்டு மணி நேரம் கழித்து அவளுக்குத் தேவையான மருந்துகளுடனும், காலில் போடக் கூடிய இம்மொபிலைசருடனும் வந்தான்.
அவனைப் பார்த்ததும் பிருத்விகாவின் முகம் மலர்ந்தது. ஆனால் அடுத்த நொடியே இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
“பேபி… ஆர் யூ மிஸ்ஸிங்க் மி?”
படுத்துக் கொண்டே புருவத்தை உயர்த்தியவள், “அந்த நினைப்பு வேற உனக்கு இருக்கா?.. சீக்கிரம் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ.. ஐ மிஸ் மை ஹோம்..” என்றாள்.
“அதுக்கு இனி வாய்ப்பில்லை. என்னோட வீடுதான் இப்போதைக்கு உன்னோட வீடு. டூ வீக்ஸ்.. நீ காலை ரொம்ப அசைக்கக் கூடாது. எய்ட் வீக்ஸ் வெயிட் போடக் கூடக் கூடாது. அதனால் இரண்டு மாசம் என்னோட வீட்டில் தான். உன்னோட அப்பாகிட்டேயும் பேசிட்டேன். என்னோட டாடும் அப்ப அப்ப வருவார்.”
ஷரணியும் அவள் அருகில் வந்தாள்.
“பிருத்விகா இரண்டு நாள் நல்லா பெட் ரெஸ்ட் எடுக்கனும். அப்புறம் மூவ் பன்னும் போது ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும். எந்த வெயிட்டும் தூக்க வேண்டாம். பெயின் ரீலிவர் கொடுத்துருக்கேன்…” வருண் கூறியதைப் போல் வார்த்தைகளை மாற்றி ஷரணி கூறினாள்.
“வருணும் இதேதான் சொன்னான்.”
“டாக்டர் வருண் தான் சொல்லி இருப்பார். ஆர்த்தோ மேல் ரொம்ப இண்டர்ஸ்ட். டெல்லில சீட் கிடைச்சது. ஆனால் லாஸ்ட் மினிட்டில் அதை கேன்சல் செஞ்சுட்டு சைக்கியாட்ரி படிக்கனும்னு முடிவெடுத்துட்டான்.”
வருணைப் பற்றி தனக்கே தெரியாத விஷயத்தைக் கூறியதும் பிருத்விகா அவளை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.
“ஓ.. ஒகே..” என்பது மட்டும் பதிலாக இருந்தது.
அப்போது வருணை அருகில் வரச் சொன்ன ஷரணி அவன் காதருகே பிருத்விகாவுக்குக் கேட்காதபடி முனு முனுத்தாள்.
“நல்ல அழுத்தம்தான். ஒரு சொட்டு கண்ணீர் வரலை. பயம் எனக்கு தெரிஞ்சு கமிதான். அதனால் தான் மருதி அக்காவுக்கு இவளைப் பிடிச்சுருச்சு போல. உனக்கும்தான்..”
ஷரணி பேசிய விஷயம் வருணின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவிக்க பிருத்விகா முகத்தில் யோசனை ரேகைகள் ஓடியது.
“சும்மா இருக்கா..”
என்று இயல்பாக வருண் பதில் கூறினான்.
“அங்க இருக்கற எக்ஸ்பிரசன் பார்த்தால் ஒன் சைட் மாதிரி தெரியலை.”
“டபுள் சைட்தான். ஆனால் அது இன்னும் அவங்களே ரியலைஸ் செய்யலை. பார்க்கலாம். பியூட்சரில் என்ன நடக்கும்னு?”
ஷரணி. முப்பது வயதைத் தாண்டி விட்டாலும் இன்னும் இருபதுகளில் இருப்பது போன்று தோற்றத்தைக் கொண்டிருந்தாள். வருண் இவ்வளவு இயல்பாக ஒருவருடன் சிரித்துப் பேசி பிருத்விகா பார்த்தது இல்லை என்றே தோன்றியது.
அவர்கள் இருவர் இறுதியாகப் பேசுவதைக் கவனித்தாலும் கைப்பேசியில் தன் கவனத்தை வைத்திருப்பது போல் காட்டிக் கொண்டாள்.
“சரிக்கா.. தேங்க்ஸ். கால் பன்றேன்.”
“ம்ம்.. ஒகே டேக் கேர் ஆஃப் ஹெர்.” என்று அவனை ஒரு பக்க தோளாடு கை போட்டு அணைத்து விடுவித்தாள் ஷரணி.
வருணும் அவளை கூர்மையுடன் உற்று நோக்கினாலும் அவனும் அணைத்து ஷரணியை விடுவித்தான்.
பிருத்விகாவை மருத்துமனை பணியாளர்கள் வீல் சேரில் ஏற்றி பார்க்கிங்க் வரை வர உதவினர். அவர்கள் நடந்து வரும் போது தன் கைப்பேசியை எடுத்த வருண், ‘வாட் வாஸ் ஃபார் தட்?’ என்ற குறுஞ்செய்தியை ஷரணிக்கு அனுப்பினாள்.
ஷரணியின் கைப்பேசியில் பிங்க் என்ற ஒலி பிருத்விகாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது. திரும்பிப் பார்க்க வருணைப் பார்த்தப்படி குறுஞ் செய்தியை டைப் செய்து கொண்டிருந்தாள் ஷரணி.
‘ஜஸ்ட் அ டெஸ்ட். ரிசல்ட்ஸ் வில் பி ரிவியல்ட் லேட்டர்.’ என்பதைப் படித்த வருணின் முகத்திலும் புன்னகை.
பதிலாக ஒரு எமோஜியை அனுப்பி விட்டு பிருத்விகாவின் பக்கம் திரும்பினான்.
அவளைப் பார்த்து இரண்டு புருவங்களையும் தூக்கியவன், “என்ன பிருத்விகா எங்கிட்ட கேட்கனும்?” என்றான்.
“ஹான் ஒன்னும் இல்லை..”
“கமான் ஸ்பிட் இட் அவுட்..”
“ஒன்னுமில்லை.. பசிக்குது..”
“கண்டிப்பா இருக்கு. ஆனால் நீ பசிக்குதுனு சொல்றதால் விடறேன்.”
காரில் அவளை ஏற்றியவன், “வெயிட் பன்னு வந்திடறேன்.” என நகர்ந்தான்.
“எங்க போற வருண்?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவன் அந்த இடத்தில் இல்லை.
ஐந்து நிமிடம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பேப்பர் டம்ளர் இருந்தது.
“இந்தா.. மாதுளம் பழம் ஜூஸ்..”
மாதுளம் பழம் என்றதும் அவள் முகம் சுருங்கியது.
“ஜில்.. மஸ்க்மெலன் ஜூஸ்.. குடி. அப்புறம் வீட்டில் போய் சாப்பிட்டுக்கலாம்.”
இரவு குளிருவது போல் தோன்றியதால் வருணின் ஹூடியை மருத்துவமனையில் இருக்கும் போதே அணிந்தவள் ஹூடியின் சைட் பாக்கெட்டில் போனை திணித்தவள் அவன் கொடுத்த பழ ரசத்தைப் பருக ஆரம்பித்தாள்.
அவள் பருகி முடித்ததும் அந்த பேப்பர் டம்பளரை வாங்கி அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டவன் காரை எடுத்தான். காரில் மெலடி இசை மட்டும் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் வரிகள் அற்ற அக்வஸ்டிக் கிடாரும், பியானோவும் கலந்து ஒலித்தது. கண்களை மூடிக் கொண்டாள் பிருத்விகா.
அத்தியாயம்-21
அமைதியாக கண்களை மூடிப் படுத்துக் கொண்டிருப்பவளைப் பார்த்தப்படியே வாகனத்தைச் செலுத்தினான். அவன் மனதில் பிருத்விகாவைப் பற்றிய கவலை ரேகை கார் கண்ணாடியில் ஒழுகும் பனியைப் போல் படர்ந்து மனதைக் குழப்பிக் கொண்டிருந்தது.
அவளைச் சுற்றி சில நாட்களாக ஒரு விபத்து, மருத்துவமனை செல்லக் கூடிய நிகழ்வுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. எவ்வளவு பெரிய விஷயத்தை அவள் மறைக்க முயன்றிருக்கிறாள் என்பதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவள் கூறுவது போல் கார் ஒன்று பின் தொடர்ந்தது உண்மை. தேவகி அம்மாளும் புத்தகத்தை மூடி வைத்ததை உறுதி படுத்தியிருந்தார்.
அப்படி என்றால் நிச்சயம் அவள் வீட்டிற்குள் யாரோ சென்றிருப்பது உறுதி. ஆனால் இவ்வளவு நடந்தும் அவள் யாருக்கும் தெரிவிக்க முனையவில்லை. தெரிந்தால் அவளைக் காப்பாற்றிய தனக்கோ அல்லது அவளைச் சார்ந்தவர்களுக்கோ எதாவது நடந்து விடும் என்ற காரணத்தால் மறைத்திருக்கிறாள்.
பிருத்விகா தைரியமான பெண்தான். சில சமயம் அவள் தைரியம் வருணுக்கு கோபத்தை வர வழைக்கும். இன்சேன், ரூத்லெஸ் என்று அவளிடமே கூறி இருக்கிறான். ஆனால் அது அவள் மேல் உள்ள பாதுகாப்பு உணர்ச்சியினால் தவிர, அவளைக் கட்டுப்படுத்தும் எண்ணம் கிடையாது. அவள் செய்கைகள், எண்ணம் இவை அனைத்துமே அவனுக்குப் பிடிக்கும்.
சிறு வயதில் அவளிடம் வம்பிழுத்திருக்கிறான். பணம் இருக்கும் திமிரில் கொஞ்சம் ஆடி இருக்கிறான். ஆனால் பிருத்விகா தன் அன்னையிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்கிறாளோ அதே போல் தான் தேவகி அம்மாளிடமும் நடந்து கொள்வாள். ஏழையோ, பணக்காரனோ அனைத்தையும் சமமாக நடத்துவாள்.
அவளிடம் முதல் இம்ப்ரஷன் எதிர்மறையாக அமைந்ததற்கு அவனுடைய சிறு வயது ஆட்டியூட் காரணம். ஆனால் அவன் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது எல்லாம் அவளைப் பார்த்துதான். வருணுடைய அன்னையும் அவளைப் போன்றுதான். அதனால் தான் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு பிணைப்பு இருந்தது. ஏன் முதலில் தன் அன்னைக்கு அவளைப் பிடிக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தவள் அவளைப் பார்த்து தன்னுடைய குணத்தையும் மாற்றிக் கொண்டான்.
ஆனால் அவளை வம்பிழுப்பதை மட்டும் குறைக்கவில்லை. அவன் அருகே பயணம் செய்து கொண்டிருப்பவளுக்கே அவனை எந்த அளவு மாற்றி இருக்கிறாள் என்பது தெரியாது. இப்பொழுது ஒரு பக்கம் அவளை வீட்டில் பேசி நிரந்தரமாக வைத்துக் கொள்ள நினைத்தாலும் அவள் சம்மதம் நிச்சயம் கிடைக்காது என்று தெரியும். வருணின் தந்தை கூறியது மிகவும் சரி என்று அவனுக்குத் தோன்றியது.
பல நினைவுகளில் மூழ்கியபடி வீட்டின் முன் காரை நிறுத்தி இருந்தான். கார் நிறுத்தியதும் கண் விழித்தாள் பிருத்விகா.
“என்னோட வீட்டில் விடு வருண். திங்க்ஸ் அங்க இருக்கு.”
“அதெல்லாம் நாளைக்கு மார்னிங்க் எடுத்துக்கலாம்.”
“வருண்.. நான் சொல்றதைக் கேளு.”
“இது வரைக்கும் நீ சொன்னதைக் கேட்டது போதும்..” அவனை அறியாமல் குரல் கோபத்துடன் வெளிப்பட்டு விட்டது. இருக்கும் ஆபத்து அறியாமல் இப்படி நடந்து கொள்ளும் அவள் மேல் கோபம் எழுந்தது.
சலிப்புடன், “ப்ச்ச்.. பள்ளி கத்துனா கூட பஞ்சாங்கம் பார்ப்பாங்க.. தவளை கத்துனா.. அந்த மாதிரி ஆகிருச்சு என்னோட நிலைமை… சரி.” என்றாள்.
அவளின் பழமொழியை ஊரில் ஒரு பாட்டி கூறி இருந்தார். இவள் கூறியதைக் கேட்டதும் அவர் நினைவுக்கு வந்தார். அதனால் முகத்தில் இளநகை ஒன்று உதித்தது.
தலையை இட வலமாக ஆட்டியபடி காரை தன் வீட்டுப் பாதையில் செலுத்தினான். அவர்கள் இருவருக்காக தேவகி அம்மாள் வாசலில் காத்திருந்தார்.
மருத்துவமனையில் இருந்து கொடுத்த வீல் சேரை எடுத்தவன் அதில் அவளை அமர வைத்தான். எப்படியும் இனிமேல் அவளைத் தூக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டாள். ஒரு பக்கம் ஊன்றி நடக்க கிரட்ச்ஸ் கொடுத்திருந்தார்கள்.
“தேவகிம்மா.. கீழ ரூம் ரெடியா?..”
“ரெடி தம்பி.. நீங்க போன் பன்னி சொன்னதும் ரெடி பன்னிட்டேன்.”
“தேங்க்ஸ்..” பிருத்விகா அவருக்கு நன்றி கூறினாள்.
“என்ன பாப்பா?.. உனக்கு பன்னாம யாருக்குப் பன்னப் போறேன்.. ரூமில் ரெஸ்ட் எடு. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்.” என்று கிட்சன் இருக்கும் பகுதிக்குச் சென்றாள்.
மெத்தையில் பிருத்விகாவின் குதிகாலை வருடியபடி தலையணை ஒன்றை அடியில் வைத்தான் வருண். அவன் தொடுதலில் விதிர்விதிர்த்துப் போனாள் பிருத்விகா.
“எலிவேசனில் இருக்கட்டும். அதான் நல்லது.” என்று இயல்பாகக் கூறினான் வருண். ஏதோ இதெல்லாம் பழகிப் போனது போன்று.
அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த வருண், “பேபி..” என்றான். பேபி என்றதைக் கேட்டதும் சட்டென்று முறைப்பான பாவனைக்கு பிருத்விகாவின் முகம் மாறியது.
“ஹான்… இதுதான் நார்மல் பேஸ்.. அந்த எக்ஸ்பிரசன் உனக்கு சூட் ஆகலை..” என்றான்.
“வாட்?.. நான் கோபமா ஊர்னு இருக்கறதுதான் உனக்கு நல்லாருக்கா? அதான் நார்மல் பேஸா?”
“ஆமா.. கண்டிப்பா..”
“நம்மளோட கோபமான முகத்தை எல்லார்கிட்டேயும் காட்டிட மாட்டோம்.. நீ அடிக்கடி எங்கிட்ட காட்டறது எந்த முகம்னு நினைச்சுப் பாரு.. அப்ப புரியும்..”
“நான்.. ஒன்னும் சிடுமூஞ்சி..இ..” என்று கூற வந்தவள் அப்படியே நிறுத்தினாள்.
அவன் எப்போதும் தன்னைப் பார்த்து சிரித்துதான் கொண்டிருக்கிறான். சில சமயங்கள் கோபப்பட்டிருக்கிறான். ஆனால் தான் எப்போதும் அவனிடம் கோபப்படுகிறோம் என்ற உண்மையை உணர்ந்தாள். சில சமயங்களில் கட்டுப்பாடிழந்து வார்த்தையைக் கொட்டி இருக்கிறாள். ஆனால் தன் எதிரில் இருப்பவன் அதை எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. சின்ன சின்ன விஷயத்தைக் கூட கவனித்துச் செய்கிறான்.
அவள் உடலைத் தழுவி இருக்கும் ஹூடி ஒன்றே அதற்கு சாட்சி. இந்த மாற்று சிந்தனை அவளைத் தடுமாற வைத்துக் கொண்டிருந்தது. எப்போதும் இப்படி தடுமாறியதில்லை. இன்று ஏன் இப்படி என்று தோன்றியது. நெஞ்சத்தின் நடுவில் ஏதோ ஒரு அழுத்தம் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று உள்ளே நுழைந்தார் தேவகி அம்மாள்.
“பாப்பா.. சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு படுத்து தூங்குங்க. தம்பி நீங்களும் வந்து சாப்பிடுங்க. நேரமாகுது. மணி பதினொன்னு.”
தலையை அசைத்த வருண், “நீ அப்படியே சாப்பிடு. நான் சாப்பிட்டு வரேன். அப்புறம் மாத்திரை போடலாம்.” என்றான்.
தலையை மட்டும் அசைத்த பிருத்விகா உணவுத் தட்டை நோக்கிக் குனிந்தாள்.
“பிருத்விகா.. ஆர் யூ ஆல்ரைட்?”
தலையை நிமிர்த்தி கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.
“என்ன பிருத்விகா? புரியுது.. ஆனால் அடிப்பட்ட போது கூட உன் முகம் கிளியரா இருந்துச்சு. இப்ப என்ன குழப்பம் உனக்கு? யூ ஆர் நாட் நார்மல்.”
தன்னுடையை சிறிய மாற்றத்தைக் கூட அவன் இவ்வளவு கவனிப்பதை அவள் இன்றுதான் முழுக்க முழுக்க உணர்ந்திருந்தாள்.
“நத்திங்க்.. நீ சடனா என் மேல கேரிங்கா இருக்க. அதான்.”
“வாட்?” என்று அவள் கேள்வி புரியாமல் பார்த்தான். பிறகு புரிந்தது.
“ஹான்… யூ ஆர் பேசண்ட் நவ். நீதான் இப்ப கன்பியூசன்ல இருக்க. முதலில் இருந்து எல்லாத்தையும் அனாலாசிஸ் பன்னு. உனக்கே புரியும். யூ ஆர் ஸ்மார்ட்? ஆர்ண்ட் யூ? அதான் நீ எதை மறைச்சாலும் கண்டுபிடிக்கறது கஷ்டம். பிளாக் மெயில் பன்ன வேண்டி இருக்கு.” என்றபடி வெளியேறினான்.
தான் கேட்டது என்ன? இவன் சொன்ன பதில் என்ன? என்று நினைத்துக் கொண்டே ஒரு ஸ்பூனில் உணவை அள்ளி விழுங்கினான்.
அவள் அறையை விட்டு வெளியேறிய வருண் நெஞ்சில் கை வைத்தபடி, “உஃப்..” என்று மூச்சை இழுத்து விட்டான்.
‘பேபிக்கு சந்தேகம் வந்துருச்சு.. சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவா.. அப்ப என்ன என்ன செய்யப் போறாளோ?’ என்று நினைத்தப்படி உணவு மேசையை நோக்கிச் சென்றான்.
உணவு இரண்டு விழுங்கு விழுங்கி இருக்க கிருஷ் அழைத்தான்.
“கிருஷ்..” பிருத்விகாவின் குரல் சோர்வாக ஒலித்தது.
“பிருத்வி.. இப்பதான் வருண் மெசேஜ் பார்த்தேன். ஆர் யூ ஒகே?” அவளைப் பேச விடாமல் கிருஷ் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தான்.
“இப்ப பரவால்லைடா..”
“கேட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. நாம ஒரு பிளான் போட்டா அது நிஜமாவே நடந்துருச்சு. நாளைக்கு மார்னிங்க் அங்க வந்துறேன். இப்பவே வரேன்னு சொன்னதுக்கு வருண் நோ சொல்லிட்டான். எல்லாத்தையும் பேக் பன்னிட்டு பொறுமையா வர சொல்லிட்டான்.”
“இட்ஸ் ஓகே.. வருணும், தேவகி அம்மாவும் பார்த்துக்குவாங்க.”
“இல்லை பிருத்வி..”
“டேய்.. டேய் போதும்டா.. ரொம்ப செண்டியா போயிட்டு இருக்கு. நீ எப்போதும் போல பேசு.”
“எப்படி பேசாம இருக்க முடியும் சொல்லு? இப்ப உன்னோட லைஃபில் எதுவும் சரியாகப் போகலை. அதுல இது வேற..”
“டேய்.. பேட் திங்க்ஸ் நடக்கும். அதுதான் லைஃபோட நேட்சர்.”
“என்ன தத்துவமா? எவனோ உன்னை கொல்ல சுத்திட்டு இருக்கான். நீ என்னடான்னா?..”
“டேய்.. லைஃப் டெத்துக்கு குளோஸா டீல் செய்யற புரபசனில் நாம இருக்கோம். யாருக்கு எப்ப வேணாலும் இறப்பு வரலாம். எனக்கும் ஒரு சீரியல் கில்லர் கையால் சாக ஆசை இல்லை. பயமும் இருக்கு. ஆனால் நிச்சயம் அவனோ இல்லை அவளோ கையால் எனக்கு டெத் கிடையாது. அப்படித்தான் நான் நம்புறேன். அப்படியே இருந்தாலும் அதை என்னால் கன்ட்ரோல் செய்ய முடியாது. ஆனால் பாசிட்டிவா திங்க் பன்னனும். நம்ம ஆக்சன்ஸ் அப்படித்தான் இருக்கனும்.”
“பிருத்வி…”
“ஓ.. காட்ட்.. கிருஷ். நீ எப்போதும் போல இரு. எனக்கு அப்படி ஒரு டெத்துனா.. எனக்கு கடைசி வரைக்கும் ஹேப்பியா இருக்கனும். ஆனால் ஒன்னு ரீசனே இல்லாமல் கொல்ற அந்த கில்லரை எப்படியாவது நாம கண்டுபிடிக்கனும்.”
“பிருத்விகா.. நீயா பேசியது? .. நீயா பேசியது?” என்று ராகமிழுத்தான் கிருஷ்.
“ஆரம்பிச்சுட்டியா.. உன்னோட ஃபார்மிலே இரு. அதுதான் எனக்கு பூஸ்ட் அப். இதனால்தான் உங்ககிட்ட சொல்லவே இல்லை. நாம எல்லாரும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் தடுமாறுனா அவனோட டிராப்பில் சிக்கிக்குவோம்.”
“பிருத்விகா… யாராவது உங்கிட்ட இதை சொல்லி இருக்காங்களானு தெரியலை?”
“என்னடா?”
“நீ ரொம்ப ஸ்டாராங்க்னு..”
“நோ.. நான் ஸ்டாராங்க் எல்லாம் கிடையாது. எனக்கு இந்த ரொம்ப பியர் இருக்கு. கில்லர் என்னை விட ஸ்மார்ட். ஸ்டாராங்க். ஆனால் அவனோட ஸ்டுபிட் கில்லிங்க் இன்ஸ்டிங்க்கு எல்லாம் நான் எனக்கு பிடிச்சதை விட்டுட்டு சாக முடியாது.”
“அதான.. அவங்கிட்ட மாட்டிட்டு இப்படியே பேசு. நிச்சயம் அவன் உன் பேச்சைக் கேட்டே காலி ஆகிடுவான்.” என்றான் கிருஷ்.
“ஹா..ஹா..” என வாய்விட்டு சிரித்தாள் பிருத்விகா.
ஆனால் மறுமுனையில் இருந்தவனின் முகத்தில் சிரிப்பில்லை. இவள் அறைக்கு வெளியில் நின்று அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பவன் முகத்திலும் சிரிப்பில்லை.
அத்தியாயம்-22
“வருண்.. லீவ் மீ..”
“வருண்ண்.. எனஃப்.. எனக்கு எந்த பிட்டியும் வேண்டாம்.” பிருத்விகா அவனை விலக்கினாள்.
அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இறுதியாக உள்ளே நுழைந்தவன் மெத்தையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தவளை அணைத்திருந்தான்.
“நத்திங்க் வில் ஹேப்பன் டூ யூ பேபி. அதுக்கு நாங்க விட மாட்டோம். போனை வச்சுட்டு தூங்கு..”
எதிர்பாராமல் அவன் இப்படி அணைப்பான் என்று நினைக்காத பிருத்விகா கைப்பேசியை மெத்தையில் தவற விட்டிருந்தாள்.
“பிருத்வி..” என்று அவள் பெயரை கிருஷ் கூறிக் கொண்டிருப்பது வருணுக்கு கேட்கவும் கைப்பேசியை எடுத்து, “கிருஷ் இட்ஸ் மி. மார்னிங்க் பேசலாம்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவனாக விலகியதும், “இப்ப எதுக்குடா.. ஹக் பன்ன?” கோபத்துடன் கேட்டாள்.
“ஜஸ்ட் கொடுக்கனும் தோணுச்சு. அவ்வளவுதான். ஜஸ்ட் சப்போர்டிவ். வேற எந்த மீனிங்கும் இல்லை.”
“வாட்?.. ஒ.. மை காஷ்.. அவுட் நவ்.” என்று அறை வாயிலை ஆள்காட்டி விரலால் காட்டினாள்.
அவன் அந்த அறையை விட்டு நகரவில்லை.
“இப்ப எதுக்கு ஓவர் ரியாக்ட் செய்யற?” அவளைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.
“வாட்?”
“நான் ஓவர் ரியாக்ட் செய்யறனா? பொள்ளாச்சியில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் மார்னிங்க் நீ என்ன செஞ்ச?”
“வாட்?” சட்டென்று வருணுக்குப் புரியவில்லை. சில நொடிகளுக்குப் பின் புரிய அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது.
தான் கேட்பதற்கு புன்னகைப்பவனை அமைதியாகவும், ஆழ்ந்தும் பார்த்தாள் பிருத்விகா. ஏனோ அவன் புன்னகை கோடை காலத் தென்றல் போல் மனம் வருடிச் சென்றது. ஆனால் மறு நொடியே சட்டென்று கோபம் வந்தது.
“எதுக்கு வருண் சிரிக்கற?”
“இல்லை.. நான் எதுவும் செய்யலை. நீ என்ன இமேஜின் செஞ்ச?”
அவன் அவ்வாறு கூறவும் ஒரு நொடி தன்னையே சந்தேகித்தாள் பிருத்விகா. ஒரு வேளை அவன் தன் முகத்தை வருடியதைப் போன்று கற்பனை செய்து விட்டோமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“சரி.. விடு. பார்ட்டி அன்னிக்கு நடந்தது நியாபகம் இருக்கா?” என இவன் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.
“பார்ட்டி அன்னிக்கு என்ன நடந்துச்சு?”
“மேடம் டூ டேஸ் பெட் ரெஸ்ட் தான?.. யோசிச்சு பாரு..”
“வருண்… வருண்..” அவள் கூப்பிடுவதைக் காதில் கேட்காமல் தன்னுடைய அறைக்குச் சென்றான் அவன். வெள்ளி நிறத்தில் அந்த ஆதாம் கடித்த பொருள் அவன் அறையில் கம்பீரமாய் வீற்றிருந்தது. அதற்கு உயிர் கொடுத்தவன் அதன் தொடு திரையை நோக்கினான்.
“எர்த்” என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டு ஒரு கோப்பு இருந்தது. அதைத் திறந்தவன் அடிக்க ஆரம்பித்தான்.
‘Oh my GOSH! Can you believe it! She is going to stay with me for atleast one month. Eventhough I feel very sorry for her. But I am selfish that I would be able to stay with her. I am a doctor, but I want to kill those who will lay a finger on her. She is before everything. She is my earth. I don’t have any other choice but to fall into her.
அன்றைய தேதியிட்டு அனைத்தும் பதிவாகி இருந்தது.
அந்த மாத இறுதியில் நடக்கப் போவதை அறியாமல் வருண் பிருத்விகாவின் மேலுள்ள அழுத்தமான அன்பை ஆப்பிளின் கீ போர்டை அழுத்திப் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.
இங்கு அவன் இப்படி இருக்க இரவு முழுவதும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் பிருத்விகா. அவள் உள்ளத்தில் ஒய்வு இல்லை. அவளுடைய பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் கண் முன் வந்து நின்றது. அது அனைத்தையும் விட அவளுக்கு பிரச்சினையாய் தெரிபவன் வருண். வருண் தான் அந்த இரவை உறங்கா இரவாய் மாற்றிய காரணி.
முதல் முறை வருணை ஒரு புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தாள். பிருத்விகா. அது அவளை மருட்டியது. அந்த மருட்டல் மனதில் உருட்டி உருட்டி உறக்கம் தொலைத்தாள் அந்தப் பாவை.
அதிகாலையில் நித்ரா தேவி அவளை இதற்கும் மேல் விட்டால் ஆபத்து என்று அரவணைத்துக் கொள்ள தூங்க ஆரம்பித்தாள் பிருத்விகா.
அதிகாலை ஐந்தரை. இரவு தாமதமாக உறங்கினாலும் வருண் விழித்து விட்டிருந்தான். எழுந்தவன் முகத்தைக் கழுவிட்டு முதன் முதலில் வந்து பிருத்விகாவின் அறைக்கு வந்து அதைத் திறந்தான்.
தேவகி அம்மாள் இடை இடையே வந்து போக வசதியாக பிருத்விகாவின் அறை பூட்டப்படவில்லை. அதனால் வருணால் உள்ளே நுழைய முடிந்தது. அது மட்டுமின்றி எழுந்து வரும் நிலையிலும் பிருத்விகா இல்லை.
இரவு விளக்கொளியில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். போர்வையை அங்கு இங்கு உதைத்து விட்டிருந்தாள் பிருத்விகா.
“இன்னுமே இந்தப் பழக்கம் போகலை..” என முனு முனுத்தவன் போர்வையை நன்றாகப் போர்த்திவிட்டு விலகும் போது அவன் கையைப் பிடித்தாள் பிருத்விகா.
ஆனால் இன்னும் அவள் கண்களைத் திறக்கவில்லை. இப்போது வருணுக்கு அவள் விழித்திருக்கிறாளா இல்லை விழிக்கவில்லையா என்ற சந்தேகம் வந்து விட்டது.
“டேய்.. வருண்.. வர வர உன்னோட தொல்லை ரொம்ப தாங்க முடியலை..” என்றவள் அவன் கையை விட்டு விட்டு மீண்டும் போர்வைக்குள் புதைந்து கொண்டாள்.
இப்போது நிஜத்தில் பேசினாளா இல்லை கனவில் பேசினாளா என்று தெரியாத வருண் அவள் அறையை விட்டு குழப்பத்துடன் வெளியே வந்தாள்.
அப்போதுதான் ஹாலில் கொண்டையை முடிந்தப்படி தேவகி அம்மாளும் வந்தார்.
“தம்பி…” அவள் குரல் கண்டனத்துடன் ஒலித்தது.
“தேவகிம்மா… ஐ ஸ்வேர்.. அவ எப்படி இருக்கானு பார்க்க மட்டும் தான் போனேன். மத்தபடி எதுவும் இல்லை.”
“ம்ம்ம்..”
“தம்பி.. திரும்பவும் சொல்றேன். நீங்க எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி பிருத்வி பாப்பாவும் ரொம்ப எனக்கு முக்கியம். அவங்க சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது..”
“ஓகே..” என்று பதில் அளித்தவன், “அதை உங்க பாப்பாகிட்ட சொல்லனும்.. கன்செண்ட்னா.. என்னனு?” என்று முனு முனுத்தப்படியே அங்கிருந்து நகர்ந்தான்.
-மழை கொட்டும்…