அத்தியாயம்-18
கதவைத் திறந்து கொண்டு பிருத்விகா வெளியே ஓட ஆரம்பித்தாள். வெளியே இருக்கும் கேட்டையும் திறந்து கொண்டு வருண் வீட்டு செக்யூரிட்டி நிற்கும் பகுதிக்கு ஓடினாள்.
அவளின் தட் தட் என்ற செருப்பின் சத்தத்தில் செக்யூரிட்டி என்னவென்று திரும்பிப் பார்த்தார்.
“என்ன பாப்பா? இப்படி ஓடி வரீங்க?”
“அண்ணா.. என்னோட வீட்டுக்குள்ள யாரோ இருக்காங்க..”
“என்ன பாப்பா சொல்றீங்க? வாங்க பார்க்கலாம்.”
தன்னுடையை தடியை எடுத்துக் கொண்டு கிளம்பினார் அந்த வாட்ச்மேன். வீட்டிற்குள் நுழைந்தவர் அனைத்துப் பக்கமும் தேடினார்.
“யாருமில்லை பாப்பா.. நீங்க எதோ நினைச்சு பயந்துடீங்க?”
ஆனால் பிருத்விகாவின் முகம் தெளியவில்லை. புத்தகத்தை மூடி வைத்தது அவளுக்கு நிச்சயம் நினைவு இருந்தது. தேவகி அம்மாள் தான் அவள் திறந்து வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்தார். நகர்த்தி இருந்த பூச்செடியையும் நகர்த்தி வைத்தார். அவள் வெளியேறும் போது அவை எல்லாம் அதே இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.
“அண்ணா.. நான் இன்னிக்கு உங்க கேபினில் படிக்கட்டா.. எனக்கு எதோ தப்பா இருக்கு.”
“அதுக்கென்ன பாப்பா.. வந்து படி. எனக்கும் பேச்சுத் துணையா இருக்கும்.”
ஒரு புத்தகம், சால்வை, தன் கைப்பேசியை எடுத்தவள் வீட்டை பூட்டி விட்டு வெளியேறினாள்.
“நீ படி பாப்பா.. நான் கேபினில் அப்படியே வீட்டை ஒரு ரவுண்ட் சுத்திட்டு வரேன்.” என்றவர் ஒரு டார்ச் லைட்டுடன் புறப்பட்டார்.
கேபினின் கதவை சாத்தியவள் ஒரு பெரு மூச்சுடன் தன் கைப்பேசியில் மணியைப் பார்த்தாள். கூடிய விரைவில் அந்த சிறிய முள் பன்னிரெண்டை பதம் பார்த்துவிடும். நேரத்தைப் பார்த்தவள் அங்குள்ள நாற்காலியில் சாய்ந்தாள்.
“இட்ஸ் ஒகே.. இட்ஸ் ஓகே..” என்று மனதைத் திடப்படுத்தியவள் புத்தகத்தைத் திறந்தாள். அது சைக்கோபாத்ஸ் பற்றிய பக்கம் இருந்தது. அதை ஒவ்வொரு வரியாகப் படிக்க ஆரம்பித்தாள்.
அவள் ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது கேபினின் கதவைத் தட்டினார் அந்த வாட்ச்மேன். சத்தத்தில் தீடிரென்று பயந்தாலும் கதவைத் திறந்து விட்டாள்.
“கொசு வந்துச்சா.. அதான் கதவை மூடிட்டேன்.”
“சேரிங்க பாப்பா.. படிங்க..”
சேரில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பிருத்விகா அப்படியே தூங்கிப் போய்விட்டாள்.
“SIGMUND FREUD. ONE OF THE PROMINENT PSYCHOANALIST. BUT THEORIES ARE.. CARL.. JUNG…”
“பிருத்விகா.. பிருத்விகா..” என்ற குரலில் கண்களைத் திறந்தாள். கண்களைத் திறந்தவுடன் தன் எதிரில் இருப்பவனைப் பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
“வருண்.. மறுபடியும் கனவில..”
ஆனால் இந்த முறை கனவென்று உறங்கச் சென்றவளை உலுக்கி எழுப்பினான் வருண்.
“எழுந்திரு பிருத்விகா.. காலேஜூக்கு டைம் ஆச்சு.”
காலேஜ் என்றவுடன் கண்களைத் திறந்தாள் பிருத்விகா. இப்போது எழுந்து அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். தான் வருணின் அறையில் இருப்பது புரிந்தது.
“நான் எப்படி இங்க?…” என்று கேட்டுக் கொண்டே விழிகளைச் சுழற்றியவளின் பார்வை எதிரில் இருந்த பெரிய கடிகாரத்தின் மீது பதிந்தது.
“ஓ காட்.. டைம் ஆச்சு..” படுக்கையை விட்டு துள்ளி எழுந்தவளைத் தடுத்தான் வருண்.
“நீ நைட்…”
அவன் ரோஸ் கார்டனில் நடந்ததைப் பற்றிக் கேட்கப் போகிறான் என பிருத்விகா நினைத்தாள்.
“அதெல்லாம் அப்புறம் பேசலாம்..” எதிரில் நிற்பவனை ஒரு பொருட்டாக நினைக்காமல் வேகமாக ஓட ஆரம்பித்தாள் பிருத்விகா. அவள் மனம் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் யோசிக்க ஆரம்பித்தது. வருணின் வீட்டிலிருந்து அவள் வீட்டிற்கு மினி ஓட்டம் செய்பவளைப் பார்த்தபடியே நின்றான் வருண்.
“இந்தப் பொண்ணை வச்சுகிட்டு…” என்று அவனால் பெருமூச்சுதான் விடத்தான் முடிந்தது.
ஆனால் பிருத்விகா பஞ்சாய் பறந்து கொண்டிருந்தாள். இன்று ஹீட்டர் போட நேரமில்லை. அதானல் ஐஸ் பக்கெட் சேலேஞ்ச் போல் குளிர் நீரை எடுத்து குளித்தவள் நடுங்கிக் கொண்டே சிவப்பும், கோதுமை நிறமும் கலந்த குர்தி, கேசுவல் பேண்டிற்கு மாறியவள் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டாள். வருணின் வீட்டை விட்டு வெளியேறிய இருபத்தி ஐந்தாவது நிமிடம் கழித்து தன் வீட்டிலிருந்து கிளம்பி விட்டிருந்தாள். அவளுடைய ஸ்கூட்டி அறுபதில் பறந்து கொண்டிருந்தது.
அவள் முன்னால் வருண் சென்று கொண்டிருந்தான். இருவரும் கிட்டதட்ட ஒரே நேரத்தில் கல்லூரியை அடைந்தனர். அன்று முழுக்க வருணிடம் பிருத்விகா பேசவில்லை. லேப், வார்ட் டூட்டி என பல வேளைகளில் அவள் மணி நேரங்களைக் களவாடிச் செல்ல வருணால் அவளுடன் நேரத்தைக் களவாட முடியவில்லை. வருணும் அவளைப் போல் வேலைகளில் மூழ்கி இருந்தாலும் அவனுக்கு பிருத்விகாவை விட வேலை இல்லை.
மாலை ஐந்து மணி. அனைத்தையும் முடித்து விட்டு மருத்துவமனையில் உள்ள ஒரு பெஞ்சில் காபி ஒன்றைக் குடித்தபடி அமர்ந்திருந்தாள். அப்படியே கையில் கைப்பேசியையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் கிருஷ் வரவில்லை. ஆள் வரும் சத்தம் கேட்டதும், “வாடா.. கிருஷ்..” என்றபடி நிமிர அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி நின்று கொண்டிருந்தது வருண்.
“வருண்..”
“கிருஷ் வர இன்னும் டிவெண்டி மினிட்ஸ் ஆகும்.” என்றான்.
“ஓகே..” என்றவள் அமைதியாகிவிட்டாள்.
“பேபி..” என்று குறுஞ்சிரிப்புடன் அவளை அழைத்தான்.
“டேய்.. பேபினு சொல்லாதனு எத்தனை தடவை சொல்றது..” பேபி என்ற அழைப்பு அவள் கவனத்தை முழுக்க அவன் மேல் பதிய வைத்தது.
“நைட் எதுக்கு பயந்துட்டு செக்யூரிட்டி கேபினில் ஒளிஞ்சுருந்த?”
“நானா?.. இல்லை ரொம்ப போர் அடிச்சுது. அதான் அண்ணா கூட பேசிட்டு படிச்சுட்டு இருந்தேன். அவ்வளவுதான்.”
ஒற்றைப் புருவத்தைத் தூக்கியவன், “ஓ அப்படியா.. நம்பிட்டேன். இப்ப எல்லாம் பிருத்விகாவுக்கு என்ன வருதோ இல்லையோ பொய் ரொம்ப சரமாரியா வருது.” என்றான்.
அவனை முறைத்தவள், “நம்புனா.. நம்பு.. எனக்கு பிரச்சினை இல்லை.” என்றாள்.
“பிருத்விகா.. நீ யாரை வேணாலும் ஏமாத்தலாம்.. ஆனால் என்னை ஏமாத்த முடியாது. ரெயின் ஸ்பாட் இன்சிடெண்ட்க்கு அப்புறமா நீ அடிக்கடி பொய் சொல்ற. எனக்கு நல்லாத் தெரியும்.”
காபி கப்பைக் கீழே வைத்தவள், “ம்ம்ம்.. இருக்கட்டும். ஆனால் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னோட விஷயத்தில் நீ தலை இடாதே.. டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?” இலகுவாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவள் கூறியதைக் கேட்டதும் வருணின் முகம் மாறியது. பின்பு நொடியில் தன்னை சரிப்படுத்திக் கொண்டவன் அவளைப் புன்னகையுடன் நோக்கினான்.
“பிருத்விகா.. நான் யாருனு நீயே உன்னைக் கேட்டுக்கோ.. பேக் டூ அவர் கொஸ்டீன். எதைப் பார்த்து பயந்தனு சொல்லு? யூ ஹேவ் டூ சாய்ஸ். உங்கப்பாவுக்கு கால் பன்னி… யூ நோ… அதர் சாய்ஸ்.. எங்கிட்ட என்ன நடந்துனு சொல்லிட்டுப் போயிடலாம். வெரி சிம்பில்.”
“ஷ்ஷ்ஷ்.. ஹா.. எனக்கு பொய் சொல்ல வருதோ இல்லையோ.. உனக்கு பிளாக்மெயில் நல்லா வருது. என்னோட டாட் இங்க வந்ததுக்கு அப்புறம் எதை வச்சு என்னை பிளாக்மெயில் செய்வ?”
“யா.. உண்மைதான். பட்.. உனக்கு பிடிச்ச பழமொழி மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஐ ஹேவ் மை வேஸ். அப்புறம் என்னோட லைபில் இருக்கற ஒரு சிலருக்காக நான் எந்த எக்ஸ்டீரீமுக்கும் போவேன். அது உனக்கே தெரியும். இப்ப சொல்லு.”
இரண்டு கைகளையும் விரித்து முகத்தைச் சுருக்கி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவள் அவனிடம் உண்மையைக் கூற ஆரம்பித்தாள்.
“நான் அந்த ரெயின் ஸ்பாட்டில் தவறி விழுந்ததுக்கு அப்புறம் எனக்கு யாரோ என்னைப் பாலோ செய்யற மாதிரி இருந்துச்சு. நேத்து வீட்டில் டீபாயில் நான் வச்சுருந்த புக்கை தேவகி அம்மாள் மூடி வச்சுட்டு போனாங்க. அந்த புக் ஒப்பனில் இருந்துச்சு. பிளவர் வாஸ் மூவ் ஆகி இருந்துச்சு. அதான் அவரு செக்யூரிட்டி அண்ணா கேபினுக்கு போயிட்டேன்.”
இமைகளை மூடி தன் கேசத்தை ஒரு கையால் கோதினான் வருண்.
“பிருத்விகா.. அதை எங்கிட்ட சொல்லனும் உனக்குத் தோணவே இல்லையா?.. உடனே வீட்டுக்கு வர வேண்டியதுதான..”
இதுவரை அவனைப் பார்க்காமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த பிருத்விகா அவனை சட்டென திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றது. அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தது.
“யெஸ்.. சிக்ஸ் இயர்ஸா நீ வரலை. நீ எங்கம்மாவை பார்க்க என்னோட வீட்டுக்கு வரேனு தஸ்விகிட்ட சொன்னேன். சோ வாட்? நீ என்னோட அம்மாவுக்காகதான் வந்த. இல்லையா?”
“ம்ம்ம்.. உண்மைதான். ஆனால் அதுக்கப்பறம் தஸ்வி சொன்ன எதுக்கும் நீ எனக்கு சப்போர்ட் செய்யலை. அவ ஏதோ உன்னைப் பார்க்க உங்க அம்மா சாக்குனு சொன்னாள். நீ அதைக் கேட்டு எந்த பதிலும் சொல்லவே இல்லை. ஆண்ட்டி இல்லாதப்ப எதுக்குனு நானும் வரது இல்லை.”
சில நொடிகள் சிந்தித்தான் வருண்.
“ஓ காட்.. பிருத்விகா.. நான் தஸ்வி சொன்னதை கேட்கவே இல்லை.. நீ அந்த மரத்துக்கு பின்னாடி இருக்கறதைப் பார்த்துட்டு இருந்தேன். தட்ஸ் இட்.”
“ஓ காட்.. அந்த சில்லி ரீசனுக்காக நீ சிக்ஸ் இயர்ஸ் வீட்டுக்கு வராம இருப்பியா?”
“நான் எதுக்கு வரனும்? அப்புறம் தஸ்வி சொன்னது உண்மையாகிடும். ஆனால் இந்த வருஷம் ஆக்ஸிடெண்டலா வர வேண்டியதாகிடுச்சு. அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உனக்கே தெரியும்.”
“பிருத்விகா.. உனக்கு பிடிவாதம், ஈகோ இரண்டும் அதிகம்னு ஆண்ட்டி சொல்லி இருக்காங்க. ஆனால்.. இவ்வளவு அதிகம்னு எனக்கு இப்பதான் புரியுது. ஐம் காலிங்க் யுவர் பாதர். நீ அவர்கிட்டேயே ரீசன் சொல்லிக்கோ. அப்புறம் அவர் மூலமா நானும் தெரிஞ்சுக்கிறேன்.”
கூறிவிட்டு கைப்பேசியில் அங்கிள் என்று இருந்த எண்ணை வலதுபக்கம் ஸ்வைப் செய்ய அழைப்பு செல்ல ஆரம்பித்தது. அவன் செய்கையை உணர்ந்த பிருத்விகா அவனைத் தடுப்பது போல் கைகளைப் பிடித்திருந்தாள்.
“வருண்… ஸ்டாப் இட்..”
அலைபேசியில் ரிங்க் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் அவன் உயரத்திற்கு அலைபேசியை அவளால் எட்டிப் பிடிக்க முடியவில்லை.
“ஓகே… நான் எல்லாத்தையும் சொல்றேன்.” அவள் குரலில் தோல்வியை ஒப்புக் கொண்ட சாயல் வந்திருந்தது.
“பிருத்வி.. வருண்.. என்ன நடக்குது? இங்க?”
“கம் கிருஷ் கரக்ட் டைமிங்க் தான். பிருத்விகாவுக்கு நம்ம இரண்டு பேர்கிட்டேயும் ஒரு உண்மை சொல்லப் போறாங்க..”
“ஒகே… இங்க வேணாம்.. ஒரு ஸ்பாட் எனக்கு வேணும். அதுவும் ஒப்பன் ஸ்பேஸா இருக்கனும். சுத்தி யாரும் இருக்கக் கூடாது.”
“பிருத்விகா.. என்ன சொல்ற நீ? இங்க சொல்றக்கு என்ன?”
“கிருஷ் சொன்னாப் புரிஞ்சுக்கோ..”
“ஓகே.. நான் கிரிக்கெட் விளையாடற கிரவுண்ட் இப்ப எம்டியா இருக்கும். அங்க போலாம்.”
“நீ கிருஷ் கூட காரில் வா.. நான் பாலோ பன்றேன். நாளைக்கும் நானே டிராப் பன்னிடறேன்.” வருண் கூறவும் தலையசைத்து நடக்க ஆரம்பித்தாள் பிருத்விகா.
கிருஷ்ஷூக்கு நடப்பது புரியவில்லை என்றாலும் ஏதோ ஒரு பெரிய விஷயம் என்று புரிந்து விட்டது. அதனால் அமைதியாக அவனும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தான்.
மழை கொட்டும்…