💘கண்மணி 30💘 (Final & Epilogue)
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்… ஆண்டுகள் கடந்தாலும் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்று ஆருத்ரா தரிசனம் காண பக்தகோடிகள் கோயிலில் குழுமியிருக்க அவர்களோடு சேர்ந்து நடராஜப்பெருமானை தரிசித்துக் கொண்டிருந்தனர் சுவாமிநாதனும் அன்னபூரணியும். அர்ச்சகர் கிடைத்த இடைவெளியில் சுவாமிநாதனை அணுகியவர் “என்ன சுவாமிநாதன் சார் இன்னைக்குப் பேத்திய அழைச்சிண்டு வரலயா? எப்போவும் உங்க ரெண்டு பேரோட ஒட்டிண்டு வருவாளே! குழந்தைக்கு எக்சாமா?” என்று விசாரிக்க அன்னபூரணி இல்லையென மறுத்துவிட்டு “அவளுக்கு கூட்டம் ஆகாது அர்ச்சகரே… […]