• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

15. விலோசன விந்தைகள்

ஷாலினி

New member
Member
தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய யோசனை எல்லாம் எப்படி வந்தது? என்று நினைத்தவள்,

'இது என்ன இப்படியானதொரு எண்ணம்?' என்று யக்ஷித்ராவின் முகமோ சிவந்து விட்டது.

அதை நேஹா பார்ப்பதற்குள், தன்னைச் சமன் செய்து கொண்டவளுக்குக், காலையில் வீட்டில் தன் கணவன் ஏன் அவ்வாறானதொரு பார்வையைத் தன்னிடம் பதித்தான் என்பது அப்போது தான் புரிந்தது.

அவளுக்கு முன்பாகவே, அற்புதனுக்குப் பிடித்தம் ஆரம்பித்து விட்டது. அதுவும், தன்னை விட்டு நீங்க இயலாத நிலை வரைப் போய் விட்டது என்பதை யக்ஷித்ராவால் நம்ப இயலவில்லை.

இனி கணவனின் விழி வீச்சுத் தன்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் உணர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

தன்னுடைய கணவனுக்கு மாலை நேரம் அலுவலகம் தொடங்கியதால், அந்த வருத்தத்தில் இருந்த நேஹாவிற்கு, அருகிலிருந்த தோழியின் எண்ண ஓட்டமும், முக மாறுதலும் கருத்தில் பதியவில்லை.

அவளாகவே புலம்பிக் கொண்டும், குழந்தையை நினைத்து தவித்துக் கொண்டும் இருந்தாள்.

'அதற்கான வழியைக் கண்டுபிடி' என்று கூறி, அவளைத் தேற்றி விட்டு, இருவரும் வேலையைப் பார்த்தனர்.

இங்கோ, அற்புதனுடன் சேர்த்து, மாலை நேரத்திற்கு வேலை மாற்றம் பெற்ற சிலரோ,"குழந்தைகளை எப்படி பாக்குறதுன்றது தான் பெரிய பிரச்சனையாக இருக்கு!" என்று அவனிடம் புலம்பினர்.

அதை ஆமோதித்த இன்னொருவர்,"ஆமாம் சார். காலையிலிருந்து அவங்கப் பாத்துக்க, ஈவ்னிங் நான் டேக் கேர் செய்துக்கனும்னு, நானும், வொய்ஃப்பும் ஈக்வலாக மகளைப் பாத்துக்குவோம். இப்போ அதையெல்லாம் மாத்தனுமே?" என்று வருந்தினார்.

"நம்ம ஆஃபீஸில், ஒவ்வொரு நாளும், எல்லா போஸ்ட்ஸ்க்கும், அவ்ளோ அப்ளிக்கேஷன்ஸ் வருது! அப்படியே வேலையை விட்டுப் போனாலும், கண்டுக்க மாட்டாங்க சார்! அடுத்த ஆள் பிடிச்சிருவாங்க! நாம தான் வேலை இல்லாமல் சுத்தனும்" என்றார் மற்றொருவர்.

இதற்கிடையில், அற்புதனையும் பேச்சில் இழுத்து விட்டனர்.

"அற்புதன் சாருக்கு எல்லாம் இதைப் பத்திக் கவலையே இல்லை! எப்படி ஸ்மைல் பண்ணிட்டு, உட்கார்ந்து இருக்கார் பாருங்க?" என்று நடுத்தர வயதுள்ள ஒருவர் கூறினார்.

"அதானே! அவருக்கு என்னக் குழந்தையா இருக்கு? இப்போ தான் கல்யாணம் முடிஞ்சுருக்கு. குழந்தையைப் பத்தி இன்னும் யோசிக்க வேண்டாம்னு முடிவு செய்திருப்பாங்க! நீங்க தான் சார் லக்கி ஃபெல்லோவ்!" என்று அவனைப் பாராட்டிப் பேசினார்கள்.

அதற்கு அவனோ,"சார்! நம்ம குடும்பமும், நாமளும் சரியாக இருந்தாலே போதும்! இந்த லக் எல்லாம் ஒன்னுமே இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கடமையும், சூழ்நிலையும் இருக்கும். அதை வெளியே இருந்து மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. எனக்கும் அப்படி இருக்கு. ஆனால், அதைச் சொல்ல விருப்பமில்லை. நாம எப்படி இந்த ஷிஃப்ட்டுக்கு டைமிங் ஃபிக்ஸ் பண்றதுன்னுப் பேசலாம். வாங்க!" என்று கூறி பேச்சை மாற்றினான்.

அவர்கள் சொன்னதில், குழந்தை விஷயத்தை எண்ணிப் பார்த்தான் அற்புதன். அதை தள்ளிப் போட்டிருப்பார்கள் என்ற கருத்தை எண்ணுகையில், இவனுக்கு 'ஐயோடா!' என்றிருந்தது.

தன்னைப் போலவும், யக்ஷித்ராவைப் போலவும், சாயலில் இரு குழந்தைச் செல்வங்கள் கிடைத்தால், இவனுக்கு வேண்டாமென்றா தோன்றும்? தன் நிலையை, இவர்கள் அறியாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்று எதையும் பகிராமல் விட்டு விட்டான் அற்புதன்.

தன்னுடைய அலுவலக வண்டியும், கணவனுடைய இரு சக்கர வாகனமும் ஒரே நேரத்தில் வீட்டை அடைவதை ஜன்னலின் வழியே பார்த்தவாறு இருந்தாள் யக்ஷித்ரா.

பிரேக்கை அழுத்தித் தன் வண்டியை நிறுத்தியவன், அந்த வாகனத்தில் இருந்து, மனைவி இறங்கி வருவதற்காக காத்திருந்தான் அற்புதன்.

அவள் கேப் - யை விட்டுக் கீழிறங்கியதும்,

"ஹாய் யக்ஷூ!" என்று உற்சாகம் பொங்க உரைத்தான் அவளது கணவன்.

"ஹாய்!" என இவளும் பதிலுக்குச் சொல்லி விட்டுக் கணவனின் முகத்தை ஆராய்ந்தவள், அது வழக்கத்திற்கு மாறாக ஒளிர்ந்து காணப்பட்டது. காலையில் தனக்கு வந்த எண்ணம் இப்போது இலேசாக எட்டிப் பார்க்க, வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டாள் யக்ஷித்ரா.

அவளது வேக நடையுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தானும் வந்து சேர்ந்தான் அற்புதன்.

"வாங்க! எப்போதாவது இப்படி நடக்குது" என்று கூறி, இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்ததும், முகம் விகசிக்க அவர்களை வரவேற்றார் கீரவாஹினி.

அவர்களும் புன்னகைத்து, ஒரு சில நிமிடங்களில், தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தனர்.

காலையில் பேச நேரம் கிடைக்காததால், இப்போது, அனைவரிடமும், தன் வீட்டிற்குப் போனதில் இருந்து, காலையில் வந்தது வரை, சுவாரசியமாகச் சொன்னவள், தாய் மற்றும் தங்கையும் ஓரளவிற்குத் தெளிந்து காணப்பட்டார்கள் என்பதையும் மூவரிடமும் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

அன்று கணவனிடம் தானே முன் வந்து கதையைக் கூறத் தொடங்கி விட்டாள்.

ஒரு சில பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிந்ததும்,
அதற்குப் பிறகான நாட்களில், பன்னிரெண்டாம் வகுப்பிற்கானப் பாடங்களை நடத்த தொடங்கி விடுவர்.

அதிலும், கணக்கு, வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவை முடிந்ததும், ஒரு வாரம் மட்டுமே மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அப்படியான நாட்களானாலும், மகள் வீட்டில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் செய்தார்
மீனா.

எப்போதும் போல,‌ மகள்களுடைய படிப்பைக் கவனித்தார் கிரிவாசன்.

அவரது செயல்களில் மாற்றங்கள் வந்ததா? என்றால், இல்லை!

இன்னும், ஏதாவது கோபம் ஏற்பட்டால், மீனா தான் பலியாடு. யக்ஷித்ராவும், யாதவியும் தான், தனக்கான உணவை அன்றைக்குச் சமைக்க வேண்டும் என்பது மாறவில்லை.

இந்தச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இதன் முக்கியத்துவத்தையும், இதில் பெறும் மதிப்பெண்கள் எவ்வளவு அத்தியாவசியம் என்பதையும் மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.

அதை மூளையில் ஏற்றிக் கொண்டு, "நான் காலேஜில் மேத்ஸ் தான் எடுக்கப் போறேன் நிவி" என்று தோழியிடம் கூறினாள் யக்ஷித்ரா.

"ஓஹோ! அதுக்கு மட்டும் அப்ளைப் பண்ண வேணாம். நாம மூனு கோர்ஸூக்கு அப்ளிக்கேஷன் போட்டு வைக்கலாம் யக்ஷி. எது கிடைக்குதோ, அதைப் படிப்போம்" என்றாள் நிவேதிதா.

ஒரே பாடத்திற்கு மட்டும் விண்ணப்பம் போட்டு வைத்தால் கிடைப்பது அரிது. அதுவும், நல்ல கல்லூரிகளில் இவர்கள் சேர வேண்டுமென்று காத்திருக்கின்றனர்.

யக்ஷித்ராவின் தங்கை யாதவியோ, பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் பிரிவிற்குப் போவதால், அவளுக்கு இந்த நிலை வரவில்லை.

ஆனால், மதிப்பெண்களைப் பற்றிய பயம் இருந்தது. அதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று வெளியில் ஜம்பமாக சுற்றிக் கொண்டு இருந்தாள் யாதவி.

சிறப்பு வகுப்புகள் முடிவடைந்து, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

அப்போது, "நீ எந்த சப்ஜெக்ட்டில் கம்மியா மார்க் வாங்கி இருக்கிற?" என்று அவளிடம் கேட்டார் கிரிவாசன்.

அதற்கு,"ஃபிசிக்ஸ் (இயற்பியல்) ப்பா!" எனப் பதிலளித்தாள்.

"சரி. அப்போ அதுக்குத் தனியாக டியூஷன் வைக்கவா?" என்றார்.

"இல்லைப்பா. ஒரே மிஸ் கிட்டயே படிக்கிறேன்" என்று கூறினாள் யக்ஷித்ரா.

"அடுத்தப் பரீட்சையில் உன் மார்க்கைப் பாத்துட்டுப் பேசுறேன்" என்று கூறி விட்டுப் போனார் கிரிவாசன்.

இப்படி அறிந்தும், அறியாமலும் மகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருந்ததால், அதற்கானப் பலனும் அடுத்து வந்த நாட்களில் கிடைத்தது மொத்தக் குடும்பத்திற்கும்.

- தொடரும்
 

Latest profile posts

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 28
உமா அங்கே கழற்றிப்போடப்பட்டிருந்த செருப்பைக் கண்டதும் கோபம் தாளாமல் அதைக் கையில் எடுத்தார்.
ஆவேசமாக மூர்த்தியை நெருங்கியவர் மாறி மாறி அவரது கன்னத்தில் மொத்த கோபத்தையும் காட்டி செருப்பால் அடிக்கத் துவங்கினார்.
‘ஷப் ஷப்’பென செருப்பால் அடித்தவரின் கை தனியே கழண்டுவிடுவது போல வலித்தது என்றால் அடி வாங்கிய மூர்த்திக்கு எப்படி வலித்திருக்கும்?
அடித்து கை ஓய்ந்த பிறகு செருப்பைத் தரையில் வீசிய உமா “இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லய்யா… நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்ல” என்று கத்த
“வாயை மூடுடி… என் தயவுல தான இத்தனை நாள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த… அப்பிடி என்ன நான் பண்ணிட்டேன்? ஏதோ சபலத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன்… நான் ஆம்பளைடி… அப்பிடி இப்பிடி தான் இருப்பேன்… என்னை நம்பி வந்த நீ இதை அட்ஜஸ்ட் பண்ணணும்… இல்லனா நீயும் உன் பிள்ளையும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நடுத்தெருவுல தான் நிக்கணும்” என்றார் மூர்த்தி கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.
உமாவுக்கு வந்த ஆத்திரத்தை மறைக்காமல் வார்த்தையில் காட்டினார்.
“சீ! உன்னை மாதிரி பொண்டாட்டிக்கு உண்மையா இருக்க முடியாதவன் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நான் இருப்பேன்னு நினைச்சியா? எந்தக் காலத்துல நீ வாழுற? இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும் ஆடம்பர வாழ்க்கைக்காக புருசனோட ஒழுக்கக்கேட்டை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகமாட்டா… நான் ஏன்யா உன் கேவலமான குணத்தை அட்ஜஸ்ட் பண்ணணும்? நீ வக்கிரம் பிடிச்சவன் மட்டுமில்ல, மனோவியாதி உள்ளவன்… உன்னைச் சட்டம் சும்மாவிடாது… நீயாச்சு உன் பணமும் பவுசுமாச்சு… இதை நீயே வச்சு அழு… இத்தனை நாள் என் புருசனோட அன்பு உண்மையானதுனு கண்மூடித்தனமா நம்புனதால இங்க இருந்தேன்… எப்ப நீ இவ்ளோ கேவலமானவன்னு தெரிஞ்சுதோ அப்பவே உனக்கும் எனக்குமான உறவை மானசீகமா முறிச்சிட்டேன்”
மூர்த்தியிடம் ஆவேசமாகப் பேசிவிட்டு ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டு சமாதானபுர வீட்டிலிருந்து கிளம்பியவர் தந்தையிடம் அனைத்தையும் கூறிவிட்டு அறையில் வந்து அமர்ந்ததோடு சரி, பின்னர் யாரிடமும் பேசவில்லை.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-28.5469/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 27
சரபேஸ்வரன் அலுவலக உடையை மாற்றிவிட்டு வந்தவன் “நைட் டின்னருக்கு என்ன கவி?” என்று கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.
“உப்புமா”
அந்தப் பதிலில் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
“சேமியா உப்புமாவா? ரவா உப்புமாவா?”
சங்கவி அவனது கேள்விக்குப் பதில் சொல்லாது புருவத்தை உயர்த்தவும் காரணத்தைக் கூறினான் சரபேஸ்வரன்.
“எனக்கு உப்புமா சுத்தமா பிடிக்காது... கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா எனக்குப் பிடிக்காதுனு உப்புமா செய்யவே மாட்டாங்க தெரியுமா? சேமியா உப்புமா கூடப் பரவால்ல... ரவா உப்புமா இஸ் ஈக்வல் டு ஆலகால விசம்”
“குடும்பஸ்தன் ஆனதுக்குக் கிடைக்குற முதல் ரிவார்ட் இந்த உப்புமா தான்... இனிமே நான் வெண்ணி போட்டுக் குடுத்தாலும் அதைப் பாயாசம்னு நினைச்சுக் கண்ணை மூடிக் குடிச்சுட்டுப் பாராட்டப் பழகிக்கோங்க”
சங்கவிக்கு இருந்த அலுப்பில் அவள் பொறுமையாகப் பதில் சொன்னதே பெரிது!
சரபேஸ்வரனுக்கும் வேலைப்பளு அதிகமே! என்ன செய்யலாமென யோசித்தவன் திடுதிடுப்பென “கிளம்பு கவி” என்கவும் சங்கவி திகைத்தாள்.
“எங்க?”
“லாங் ட்ரைவ் போயிட்டு வருவோம்”
“இப்பவா? இப்பிடியேவா?”
சங்கவி தன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டாள்.
டீசர்ட்டும் பளாசோவும் அணிந்து க்ளட்சில் அடக்கிய கூந்தல் அலங்காரம் அவளுடையது. முட்டி வரை ஷார்ட்சும் டீசர்ட்டும் சரபேஸ்வரனின் உடை. இதோடா ‘லாங் ட்ரைவ்’ போக முடியும் என்பது அவளது கேள்வி.
ஆனால் சரபேஸ்வரனோ அவளைக் கையோடு இழுத்துச் சென்று பைக்கில் அமரச் சொல்லிவிட்டான்.
“நாம எங்க தான் போறோம்?”
“போரூர் டோல்கேட் வரைக்கும் போயிட்டு வருவோம்”
“எதே? இதைத் தான் லாங் ட்ரைனு சொன்னிங்களா?”
கடுப்போடு பைக்கின் சைலன்சரை உதைத்தாள் சங்கவி. அது சற்று சூடாக இருக்கவும் “ஐயோம்மா” எனக் காலை உதறியவளைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான் சரபேஸ்வரன்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-27.5463/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
“நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
“ஐயோ இல்லங்க”
உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
"அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
"நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
“கவி…”
“நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

#நித்யாமாரியப்பன்
ஹாய் ப்ரண்ட்ஸ்...
Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

உபயோகித்துப் பாருங்கள்.
நன்றி🙂

New Episodes Thread

Top Bottom