• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💗7 Years of காவியத்தலைவன்_ பொறாமையால் அழிந்த மனிதனின் கதை😎

Nithya Mariappan

✍️
Writer
திரைப்படம் : காவியத்தலைவன்
இயக்குனர் : வசந்தபாலன்
வெளியான வருடம் : 2014


917yCYWyMOL._SS500_.jpg


என்னம்மா சினிமாவுக்குலாம் ரைட்டப்பானு வாசிக்கிற நீங்க யோசிக்கலாம் மக்களே! சில திரைப்படங்கள் பாடமாவும் மாறும்ங்கிறதுக்கு 'காவியத்தலைவன்' ஒரு சிறந்த உதாரணம்!

நாடக கம்பெனிகள் செழித்திருந்த கால கட்டத்தை நம்ம கண்ணு முன்னால கொண்டு வந்த படம் இது. கதாபாத்திரங்கள் நம்மளை அந்தக் காலக்கட்டத்துக்கே கூட்டிட்டு போயிருப்பாங்க.

கதைக்கரு என்னவோ சாதாரணமானது தான். ஒரே இடத்துல வளர்ற ரெண்டு கலைஞர்களில் ஒருத்தனுக்குக் கிடைக்கிற புகழ் இன்னொருத்தனை பொறாமை வலைக்குள்ள தள்ளுறதால அவன் எவ்வளவு வன்மத்தோட செயல்படுறான், கடைசில அவனுக்கு என்ன முடிவு கிடைக்குதுங்கிறதே இந்தப் படத்தோட கதை.

சிவதாஸ் சாமிகள் நடத்துற நாடக ட்ரூப்ல காளியும் கோமதியும் ஒன்னாவே வளர்றாங்க. காளிக்கு நல்லா பாட வரும். கோமதியும் நடிப்புல சளைச்சவன் இல்ல. ஒரு கட்டத்துல நாடக கம்பெனில ராஜபார்ட் வேஷம் போடுறவர் இல்லாம போனதால சிவதாஸ் சாமிகள் காளி, கோமதி ரெண்டு பேர்ல ஒருத்தரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படுது. அவரால காளி தேர்ந்தெடுக்கப்படுறான். இது கோமதிய கோவப்படுத்துது. அடுத்தடுத்து காளியோட வளர்ச்சிய பாத்து பொறாமைப்படுற கோமதி காளியும் ஜமீன் இளவரசியும் காதலிக்கிறத சிவதாஸ் சாமிகள் கிட்ட போட்டு குடுக்குறான். இதனால கோவப்பட்ட சாமிகள் காளிய சபிச்சிடுறார்.

குருபக்தி நிறைஞ்ச காளிக்கு சாமிகளோட கோவம் வருத்தத்தை உண்டாக்குது. அவர் கிட்ட மன்னிப்பு கேட்டவன் கிட்ட அவரும் இனிமே இளவரசிய மறந்துடணும்னு சத்தியம் வாங்கிடுறாரு. இது எல்லாத்துக்கும் காரணமான கோமதி நாடக கம்பெனில காளியோட இடத்தை பிடிச்சிடுறான்.

அதே நாடக கம்பெனில புதுசா சேருற வடிவு மேல கோமதிக்கு காதல் வருது. ஆனா அவளுக்கு காளிய தான் பிடிக்கும். இப்பிடியே போயிட்டிருக்கப்ப ஒரு நாள் இளவரசி தற்கொலை பண்ணிடுவா. அவ சாகுறப்ப காளியோட குழந்தைய சுமந்துட்டு தான் இறந்திருப்பா. இது தெரிஞ்சதும் காளி துக்கம் தாளாம சாமிகளை சபிச்சிடுவான். அவன் சாபமும் வேலை செஞ்சு சாமிகள் கை கால் வராம படுக்கைல விழுந்துடுவார்.

இதையெல்லாம் பயன்படுத்திக்கிட்ட கோமதி நாடக கம்பெனிய தன் வசப்படுத்திக்கிட்டு காளிய துரத்தி விட்டுருவான். வெளிநாடுகளுக்குலாம் போய் நாடகம் போட்டு பெரிய ராஜபார்ட் ஆகிடுவான். காளிய ஜெயிச்சிட்டோம்ங்கிற மமதைல இருக்குறவனுக்கு வடிவோட காதல் மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

ஒரு நாள் அவனுக்கு முடியாம போகறப்ப வேற வழியில்லாம நாடகத்துல ராஜபார்ட் கேரக்டரை காளிக்கு குடுப்பான். இத்தனை நாள் குடிகாரனா சுத்திட்டிருந்த காளி தனக்கு கிடைச்ச வாய்ப்பை சிறப்பா பயன்படுத்திப்பான். அந்த நாடகம் எல்லாரலயும் பாராட்டப்படும். தொடர்ந்து கோமதியோட உடல்நிலை சரியாகுற வரைக்கும் காளியே எல்லா நாடகத்துலயும் ராஜபார்ட் வேஷம் போடுவான். மறுபடியும் அவனுக்குப் பேர் புகழ் வரும். அதை பாத்து பொறாமைப்படுற கோமதி காளிக்கு விடுதலை போராட்டத்துல ஆர்வம் இருக்குறத கண்டுபிடிச்சு பிரிட்டிஷ் ஆட்களுக்கு போட்டுக் குடுத்துடுவான். அவங்க காளிய அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுருவாங்க. அங்க விடுதலைபோராட்டக்காரங்களோட ஃப்ரெண்ட்ஷிப் காளிக்கு கிடைக்கும்.

ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவனே வந்து ஜாமீனும் எடுப்பான் கோமதி. வெளிய வந்த காளி நாடகம் வழியா விடுதலை போராட்டத்த மக்கள் மத்தியில கொண்டு போய் சேர்ப்பான். அவனோட நாடக ட்ரூப்ல வடிவும் சேர்ந்துடுவா. அவங்களோட விடுதலை போராட்டம் கான்செப்ட் நிறைஞ்ச புதுமையான நாடகங்கள் மக்களை கவர ஆரம்பிச்சிடும். அதனால கோமதியோட பழங்கால நாடகங்கள் சரியா ஓடாம அவன் கம்பெனிய மூடுற நிலமை வந்துடும்.

அப்பவும் காளி தன்னோட ட்ரூப்ல அவனை சேர்த்து ராஜபார்ட் வேஷம் நீங்களே போடுங்கண்ணேனு சொல்லுவான். கோமதி வெளிய நடிச்சாலும் மனசுக்குள்ள இன்னும் அவன் மேல பொறாமையோட தான் இருப்பான். வடிவும் காளியும் காதலிக்கிறது வேற அவனோட பொறாமைய இன்னும் தூண்டிடும்.

அதனால சுதந்திர போராட்ட கான்செப்ட் நாடகம் ஒன்னு போடுறப்ப பிரிட்டிஷ்காரங்க வந்துடுவாங்க. காளி, கோமதி, வடிவு மூனு பேரும் தப்பிச்சு ஓடுவாங்க. வடிவை பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு கோமதிய அவளோட இருக்கும்படி சொல்லிட்டு ஓடுவான் காளி.

அப்ப கோமதி காளிய சுட்டுடுவான். காளிக்கு அவனோட சுயரூபம் அப்ப தான் தெரியும். கோமதி தனக்கு கிடைக்க வேண்டிய ராஜபார்ட் கேரக்டரை சாமிகள் அவனுக்குக் குடுத்ததுல ஆரம்பிச்சு வடிவோட காதல் வரைக்கும் சொல்லுவான். எல்லாமே காளிக்கு கிடைச்சதால அவனுக்கு கோபம்னு சொல்லி தன்னோட பொறாமைய நியாயப்படுத்த பார்ப்பான்.

ஆனா காளிக்கு முன்னாடியே கோமதியோட பொறாமை தெரிஞ்சிருக்கும். இளவரசியும் காளியும் காதலிக்கிறத அவன் கோமதிய தவிர வேற யாருக்கும் சொல்லிருக்க மாட்டான். சாமிகள் கிட்ட போட்டுக் குடுத்தது கோமதி தான்னு அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். அவனை ஜெயிலுக்கு அனுப்புனதும் கோமதி தான்னு காளிக்கு தெரியும்.

இதெல்லாம் தெரிஞ்சும் கோமதிய அவன் மதிக்க காரணம் அவன் கோமதிய தன்னோட அண்ணனா நினைச்சது தான். இந்த உண்மை கோமதியோட வன்மம் பொறாமைய துடைச்சிடும். அவன் மனசு மாறிடுவான்.

தான் கூட இருந்தவனோட வளர்ச்சிய பாத்து உண்டான பொறாமையால இவ்ளோ கேவலமான காரியத்த பண்ணிருக்கோம்னு வருத்தப்பட்டு சாகப்போவான். ஆனா காளி தன்னை சுடுனு கோமதி கிட்ட சண்டை போடுவான். அந்தச் சண்டைல துப்பாக்கி தானா வெடிச்சு காளி செத்துடுவான். மறுநாள் காளியோட இறுதி சடங்கு நடக்குறப்ப தான் வடிவு காளியோட குழந்தைய சுமக்குறத சொல்லுவா.

கோமதி காளியோட அஸ்திய கங்கைல கரைக்க எடுத்துட்டுப் போனவன் அஸ்தியோட சேர்ந்து தானும் கங்கைல மூழ்கிடுவான். இதோட எண்ட் கார்ட் போட்டுருவாங்க.

காளியா சித்தார்த் இயல்பான நடிப்பை குடுத்திருப்பார். பொறாமையும் கோபமும் கொண்ட வில்லன் கோமதியா ப்ரித்விராஜ் பாக்குற நம்மளை காண்டாக்குவார். இளவரசி கேரக்டரை விட வடிவா நடிச்ச வேதிகா மனசுல நிப்பாங்க.

ரஹ்மான் மியூசிக்ல 'யாருமில்லா தனி அரங்கில்' பாட்டு செமய்யா இருக்கும். ஷார்ட்டா சொல்லணும்னா an one time watchable periodic tragic drama🤗 பொறாமை ஒரு மனுசனை எவ்ளோ வன்மம் உள்ளவனா மாத்தும்ங்கிறத அழகா சொல்லுற இந்த மூவி என்னோட ஆல் டைம் ஃபேவரைட்ல ஒன்னு!​
 

Latest profile posts

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
“நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
“ஐயோ இல்லங்க”
உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
"அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
"நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
“கவி…”
“நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

#நித்யாமாரியப்பன்
ஹாய் ப்ரண்ட்ஸ்...
Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

உபயோகித்துப் பாருங்கள்.
நன்றி🙂

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 24
“இன்னைக்கு வளைகாப்புல கோமதிக்கு வளையல் போடுறப்ப அடுத்து எனக்குத் தான் வளைகாப்புனு எல்லாரும் கிண்டல் பண்ணுனாங்க”
“எதே? ஜீபூம்பானதும் வளைகாப்பு வச்சிட முடியுமா? அதுக்கு இன்னும் ஃபர்ஸ்ட் ஸ்டெப்பே எடுத்து வைக்கலயே”
நொந்து போய் பேசியவனைக் குறுஞ்சிரிப்போடு பார்த்தாள் சங்கவி.
“யார் உங்களை ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்கவிடாம தடுத்தாங்களாம்?”
சீண்டினாள் அவள். சரபேஸ்வரன் அவளது சீண்டலில் திகைத்துப்போனான்.
“ஏய் கவி! நீ என் கிட்ட விளையாடுறியா? டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் ஞாபகம் இருக்கா?”
பொறுப்பான கணவனாக நினைவூட்டினான் மனைவிக்கு. அவன் மனைவியோ அசட்டையாக தோளைக் குலுக்கினாள்
“டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை டெலிட் பண்ணிட்டேன்… இன்னுமா உங்களுக்குப் புரியல?”
“உன்னோட இந்த வார்த்தைய நான் ‘நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்னு’ எடுத்துக்கலாமா?”
“நான் எவ்ளோ ஆசையா பேசுறேன்… இப்ப கூட புரொபஷ்னல் வேர்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவிங்களா? உண்மைய சொல்லுங்க, அந்த எகனாமிக்ஸ் நோட்ல இருக்குற கவிதைய நீங்க தான் எழுதுனிங்களா?”
“ப்ராமிஷா நான் தான் எழுதுனேன் கவி... இப்ப எனக்குக் கவிதை சொல்லுற மூட் இல்ல… இல்லனா அழகா ஒரு கவிதைய எடுத்து விட்டிருப்பேன்”
“நம்பிட்டேன்”
அவள் இழுத்த விதத்தில் சிரித்தவன் “சில கவிதைய சொல்லுறதை விட செயல்ல காட்டுனா நல்லா இருக்குமாம்” என்றான் விசமமாக.
சங்கவி மீண்டும் நாணத்தில் பிடியில் சிக்கிக்கொண்டாள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-24.5442/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 23
சங்கவி வியப்பில் விழிகளை விரித்தாள்.
“ஏன் இப்பிடி பாக்குற?” என்றவனிடம்
“நீங்க எனக்காக யோசிக்கிறது புதுசில்ல… பட் உங்க அம்மா அக்காவ தாண்டி எனக்காக யோசிக்கிறிங்கல்ல, அது எனக்குப் புதுசு தான்” என்றாள் அவள்.
“அம்மாக்கு அப்பா இருக்குறார்… அக்காக்கு அவ பையன் இருக்குறான்… எனக்கு நீ மட்டும் தான இருக்குற? உனக்காக யோசிக்காம வேற யாருக்காக நான் யோசிக்கப்போறேன் சொல்லு”
சங்கவியின் மனம் சிலிர்த்து அடங்கியது. ஆனால் எல்லாம் ஒரு நொடி தான். இவன் உணர்ச்சிப்பூர்வமாக எதையாவது சொல்வதும், அதற்கு அவள் சிலிர்த்து மானசீகமாகச் சில்லறையைச் சிதறவிடுவதும், அடுத்த நாளே இவனது செய்கைகளில் மாற்றமில்லையென அவள் ஏமாறுவதும் வாடிக்கையாகிவிட்டதே இந்த இரு வாரங்களில்!
இன்று இப்படி சொல்பவன் நாளையே மாற்றிப் பேசினால்?
“இந்தத் தடவை உனக்கு ஏமாற்றம் இருக்காது கவி”
“பாக்கலாம் சரபன்”
தோளில் இருந்த அவனது கரத்தை விலக்கிவிட்டுச் செல்ல முயன்றவளை சீண்டும் எண்ணம் எழுந்தது அவனுக்குள்.
“சந்தானம் சார் வீட்டுல இப்பவும் அவங்க ஒய்ப் தான் அவருக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைப்பாங்களாம்… உனக்கு வேலை இல்லனா நீயும்…”
சரபேஸ்வரன் இழுக்கவும் கண்களில் அனலோடு திரும்பினாள் சங்கவி.
“நானும்…” கண்களை உருட்டிக் கேட்டாள் அவள்.
“குளிக்கக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேனு சொல்ல வந்தேன்மா… அதுக்கு ஏன் கோவப்படுற? புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி ஒரு நாளாச்சும் நடந்துக்குறியா? எப்பவும் எதிரி மாதிரியே பாக்குற”
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-23.5437/

#நித்யாமாரியப்பன்

New Episodes Thread

Top Bottom