கோவிலில் தன் விருப்பத்தை
குங்குமம் வைத்து தெரிவித்து
காதலுக்கு மரியாதை செய்ய
காதலியும் காதலை உரைத்து
காதலுடன் காலார நடக்க....
காற்றில் கரையும் நறுமணம் போல
காதலர்கள் காதலில் கறைய.....
கோபத்தில் தனை மறந்து
காட்டுத்தனமாக அடித்த அடியில்
குடும்பமே எதிராய் நிற்க...
கணவனின் மௌனம் தாங்காமல்
கண்ணீரில் கரையும் லலிதா......