• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

ஓம் சாயிராம்.

தோழமைகளே!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த நன்நாளில் உங்கள் அனைவரிடமும் ஒரு அன்பான கோரிக்கையுடன் வந்துள்ளேன்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மாபெரும் புரட்சியால், இன்று கதைகள் எழுதுவதிலும், அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அச்சு வடிவம் தாண்டி, இணையதளத்தில் பதிப்பித்த கதைகள் ஏராளம் என்ற நிலமை இன்று மாறி வருவதை நாம் காண்கிறோம். இம்மாற்றத்தில், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினருக்கும் நன்மைகள் உண்டு. அதிலேதும் சந்தேகம் இல்லை.

எழுத்தாளர்கள் முழு கதையும் ஒரே நேரத்தில் எழுதி, சரிபார்த்து அச்சிட வேண்டிய நெருக்கடி இல்லை. கதைக்கரு ஒன்று திட்டமிட்டு, சம இடைவெளியில் எபிசோடுகள் பதிப்பிக்கும் எளிய வழியை பெறுகிறார்கள்.

வாசகர்களும் ஒவ்வொரு எபிசோடாக படித்துப் பார்த்து, கதையுடம் பயணிக்கும் ஒரு இதமான அனுபவம் பெறுகிறீர்கள் என்று நம்புகிறேன்.

கதை எழுதும் கனவோடு வரும் எங்களுக்கு நீங்கள் தரும் உற்சாகம் தான் பெரிய ஊக்கம். கதையின் போக்கைப் பற்றிய நிறைகுறைகளை நீங்கள் வெளிப்படையாக சொல்லும் போது, அது எங்கள் எழுத்துப் பயணம் மேன்பட பேருதவியாக இருக்கிறது.

கதைகளை படிக்க நீங்கள் செலவிடும் நேரத்தில், எங்களுக்காக நேரம் ஒதுக்கி கருத்துக்களை சொல்லும் போது, எழுத வேண்டும் என்ற எங்கள் லட்சியத்தின் பாதையில் பிறவிப்பயன் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவர்கள் Silent Readersஆக இருப்பது தான் நிதர்சன உண்மை.

வாசகர்களே! எழுத வேண்டும் என்ற எங்கள் தனிப்பட்ட ஆசைக்காக தான் நாங்கள் எழுத வருகிறோம்; மனதிற்குப் பிடித்த விஷயம் என்றால், பலன்களை எதிர்பாராமல் செய்வது தான் உத்தமம். அதை நான் மறுக்கவில்லை;
எனினும் திறமைகளுக்கு கிடைக்கும் அடையாளங்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு தானே.

உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எங்கள் முயற்சிகளை மேன்படுத்தும் தூண்டுகோல். அதனால் சிரமம் பார்க்காமல் ஓரிரு சொற்களிலாவது உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். கருத்து என்று நான் குறிப்பிடுவது, நிறை குறைகள் இரண்டையும் தான்.

கருத்துக்கள் எழுதி பழக்கமில்லை என்று சொல்பவர்கள், குறைந்தபட்சம் Reaction EMOJI ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் எண்ணங்களை பகிருங்கள். அதுவும் எங்களுக்கு அதே அளவு உற்சாகம் கொடுக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

இத்தளத்தில் Memberஆக இல்லாமல், Guest Modeல் படிப்பவரா நீங்கள்!

நம் பாசத்திற்குறிய அட்மின் சகோதரி எழிலன்பு நமக்கு எழுதவும், படிக்கவும் பல வசதிகளை இத்தளத்தில் செய்து கொடுத்திருக்கிறார்.

எழுத்தாளர்களை ஊக்குவிக்க முடிந்தால் ரெஜிஸ்டர் செய்து படியுங்கள்; தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாது என்றால், உங்களை கட்டாயப்படுத்தவில்லை.

இத்தளத்தில் எழுதும் சில எழுத்தாளர்கள், இதைப்போன்ற Reaction Buttons எபிசோடின் இறுதியில் இணைத்துள்ளார்கள். இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்; இதற்கு தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

Reaction Buttons.jpg



1000-2000 சொற்கள் கொண்ட எபிசோடு டைப் செய்து உங்களோடு பகிரும் எங்களுக்கு, நீங்கள் கருத்து வடிவில் எழுதும் ஓரிரு வார்த்தைகளே எங்கள் குறிக்கோளுக்கும், உழைப்புக்கும் சன்மானம். எனவே இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

இக்கோரிக்கையை நான் இத்தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரின் சார்பிலும் உங்களிடம் வைக்கிறேன். இத்தளத்தில் எழுதும் மற்ற எழுத்தாளர்களும் என் பணிவான வேண்டுகோளை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்பதிவில் ஏதேனும் தவறாக கூறியிருந்தால், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினரும் அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன்.

புதிய ஆண்டு, புத்துணர்வுடன் இதை எங்களுக்காக செய்யத் தொடங்குவீர்கள் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உற்சாகமூட்டும் வாசகர்களே, வற்றாத அன்புடம், இன்று போல் என்றும் கருத்துக்கள் சொல்லி எங்களை ஊக்குவியுங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@Ezhilanbu
 

Nithya Mariappan

✍️
Writer
ஓம் சாயிராம்.

தோழமைகளே!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த நன்நாளில் உங்கள் அனைவரிடமும் ஒரு அன்பான கோரிக்கையுடன் வந்துள்ளேன்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மாபெரும் புரட்சியால், இன்று கதைகள் எழுதுவதிலும், அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அச்சு வடிவம் தாண்டி, இணையதளத்தில் பதிப்பித்த கதைகள் ஏராளம் என்ற நிலமை இன்று மாறி வருவதை நாம் காண்கிறோம். இம்மாற்றத்தில், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினருக்கும் நன்மைகள் உண்டு. அதிலேதும் சந்தேகம் இல்லை.

எழுத்தாளர்கள் முழு கதையும் ஒரே நேரத்தில் எழுதி, சரிபார்த்து அச்சிட வேண்டிய நெருக்கடி இல்லை. கதைக்கரு ஒன்று திட்டமிட்டு, சம இடைவெளியில் எபிசோடுகள் பதிப்பிக்கும் எளிய வழியை பெறுகிறார்கள்.

வாசகர்களும் ஒவ்வொரு எபிசோடாக படித்துப் பார்த்து, கதையுடம் பயணிக்கும் ஒரு இதமான அனுபவம் பெறுகிறீர்கள் என்று நம்புகிறேன்.

கதை எழுதும் கனவோடு வரும் எங்களுக்கு நீங்கள் தரும் உற்சாகம் தான் பெரிய ஊக்கம். கதையின் போக்கைப் பற்றிய நிறைகுறைகளை நீங்கள் வெளிப்படையாக சொல்லும் போது, அது எங்கள் எழுத்துப் பயணம் மேன்பட பேருதவியாக இருக்கிறது.

கதைகளை படிக்க நீங்கள் செலவிடும் நேரத்தில், எங்களுக்காக நேரம் ஒதுக்கி கருத்துக்களை சொல்லும் போது, எழுத வேண்டும் என்ற எங்கள் லட்சியத்தின் பாதையில் பிறவிப்பயன் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவர்கள் Silent Readersஆக இருப்பது தான் நிதர்சன உண்மை.

வாசகர்களே! எழுத வேண்டும் என்ற எங்கள் தனிப்பட்ட ஆசைக்காக தான் நாங்கள் எழுத வருகிறோம்; மனதிற்குப் பிடித்த விஷயம் என்றால், பலன்களை எதிர்பாராமல் செய்வது தான் உத்தமம். அதை நான் மறுக்கவில்லை;
எனினும் திறமைகளுக்கு கிடைக்கும் அடையாளங்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு தானே.

உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எங்கள் முயற்சிகளை மேன்படுத்தும் தூண்டுகோல். அதனால் சிரமம் பார்க்காமல் ஓரிரு சொற்களிலாவது உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். கருத்து என்று நான் குறிப்பிடுவது, நிறை குறைகள் இரண்டையும் தான்.

கருத்துக்கள் எழுதி பழக்கமில்லை என்று சொல்பவர்கள், குறைந்தபட்சம் Reaction EMOJI ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் எண்ணங்களை பகிருங்கள். அதுவும் எங்களுக்கு அதே அளவு உற்சாகம் கொடுக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

இத்தளத்தில் Memberஆக இல்லாமல், Guest Modeல் படிப்பவரா நீங்கள்!

நம் பாசத்திற்குறிய அட்மின் சகோதரி எழிலன்பு நமக்கு எழுதவும், படிக்கவும் பல வசதிகளை இத்தளத்தில் செய்து கொடுத்திருக்கிறார்.

எழுத்தாளர்களை ஊக்குவிக்க முடிந்தால் ரெஜிஸ்டர் செய்து படியுங்கள்; தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாது என்றால், உங்களை கட்டாயப்படுத்தவில்லை.

இத்தளத்தில் எழுதும் சில எழுத்தாளர்கள், இதைப்போன்ற Reaction Buttons எபிசோடின் இறுதியில் இணைத்துள்ளார்கள். இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்; இதற்கு தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

View attachment 278


1000-2000 சொற்கள் கொண்ட எபிசோடு டைப் செய்து உங்களோடு பகிரும் எங்களுக்கு, நீங்கள் கருத்து வடிவில் எழுதும் ஓரிரு வார்த்தைகளே எங்கள் குறிக்கோளுக்கும், உழைப்புக்கும் சன்மானம். எனவே இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

இக்கோரிக்கையை நான் இத்தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரின் சார்பிலும் உங்களிடம் வைக்கிறேன். இத்தளத்தில் எழுதும் மற்ற எழுத்தாளர்களும் என் பணிவான வேண்டுகோளை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்பதிவில் ஏதேனும் தவறாக கூறியிருந்தால், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினரும் அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன்.

புதிய ஆண்டு, புத்துணர்வுடன் இதை எங்களுக்காக செய்யத் தொடங்குவீர்கள் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உற்சாகமூட்டும் வாசகர்களே, வற்றாத அன்புடம், இன்று போல் என்றும் கருத்துக்கள் சொல்லி எங்களை ஊக்குவியுங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@Ezhilanbu
💗💗💗புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
இனிய புத்தண்டு வாழ்த்துக்கள்.....
நானும் முதலில் silent reader ராகத்தான் இருந்தேன் .
எனக்கு கருத்துக்கள் போடுவதில் ஆர்வம் அதிகம்
ஆனால் நம் கருத்துக்கள் சரியாக சொல்கிரோமோ அல்லது அவர்கள் மனதை புண்படுத்தி விடுவோமோ என்று ஒரு தயக்கம் இருக்கும்
முதலில் பதிவு செய்வது எப்படி என்று தெரியாமல் இருந்தேன்
பிறகு பதிவு செய்து கருத்துகளை இப்பொழுது தான் பதிய தொடங்கி உள்ளேன்...
எழுத்தாளரை போலவே வாசகர்களாகிய எங்களுக்கும் உங்களுடன் நாங்கள் படிக்கும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிரோம்....
எங்கள் கருத்துக்கு மதிப்பளித்து எங்களுக்கும் நன்றி கூறும் தங்களின் வார்த்தைகளும் எங்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்...
இரு கை தட்டினால்தான் ஓசை வரும் அது போல இருவரின் புரிதல்தான் நம்மை நகர்த்திச் செல்லும்.....
பகிர்வோம்
மகிழ்வோம்...
 
💗💗💗புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்
நன்றிகள் பல சகோதரி!
திடீரென்று மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்:D

முதலில் லைக்/வாழ்த்துடன் வந்ததற்கு மிக்க நன்றி தோழி! உங்களுக்கு நினைவிருக்கிறதா! நீங்கள் Anne Frank பற்றி பதிவிட்ட அந்த தகவல் படித்ததில் என்னுள் பெரும் மாற்றத்தை உணர்ந்தேன் என்று முன்னமே உங்களிடம் சொல்லியிருக்கேன். இன்று புத்தாண்டு நாளில் உங்களிடமிருந்து வாழ்த்து வந்ததும் அதே பேருவகையை உணர்கிறேன்.

ஆன்லைனில் எழுதுவது படிப்பது அனைத்தும் எனக்கு புதுசு. கதை எழுதிக்கொண்டிருந்த வரை, என்னால் நிறைய படிக்கமுடியவில்லை.

ஒரு வாசகராக, இந்த புதுவருடம் Ongoing Story படித்து, கருத்துக்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் புதிதாக கதை பதிவிடுவதை கவனித்தேன். உங்கள் கதையோடு தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

வாசகர்களிடம் கோரிக்கை வைக்கும் நானும் அதை பின்பற்ற வேண்டும் அல்லவா:love::love:
 
இனிய புத்தண்டு வாழ்த்துக்கள்.....
நானும் முதலில் silent reader ராகத்தான் இருந்தேன் .
எனக்கு கருத்துக்கள் போடுவதில் ஆர்வம் அதிகம்
ஆனால் நம் கருத்துக்கள் சரியாக சொல்கிரோமோ அல்லது அவர்கள் மனதை புண்படுத்தி விடுவோமோ என்று ஒரு தயக்கம் இருக்கும்
முதலில் பதிவு செய்வது எப்படி என்று தெரியாமல் இருந்தேன்
பிறகு பதிவு செய்து கருத்துகளை இப்பொழுது தான் பதிய தொடங்கி உள்ளேன்...
எழுத்தாளரை போலவே வாசகர்களாகிய எங்களுக்கும் உங்களுடன் நாங்கள் படிக்கும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிரோம்....
எங்கள் கருத்துக்கு மதிப்பளித்து எங்களுக்கும் நன்றி கூறும் தங்களின் வார்த்தைகளும் எங்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்...
இரு கை தட்டினால்தான் ஓசை வரும் அது போல இருவரின் புரிதல்தான் நம்மை நகர்த்திச் செல்லும்.....
பகிர்வோம்
மகிழ்வோம்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி!
முதலில் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். புதிய முகம் என்று பாராமல், ஒவ்வொரு எபிசோடுக்கும் நீங்கள் பதிவிட்ட கருத்துக்கள் எனக்கு மேலும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை தந்தது.

உங்களைப் போல தான் நானும்; இணைய தளத்தில் பல விஷயங்கள் புலப்படவே இல்லை. எழுத தொடங்கிய பிறகு ஒவ்வொன்றாய் கற்றுக்கொண்டேன். சகோதரி எழிலன்பு நான் கேட்ட கணக்கில்லா சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் தந்ததால் இதன் நுட்பங்களை புரிந்துகொண்டேன்.

நேர்மறை கருத்துக்களை சொல்லி தளத்திலுள்ள அத்தனை எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நீங்கள் தயங்கலாமா:oops::love:

உங்கள் கவிதை கருத்துக்களுக்கு நான் தீவிர ரசிகை என்று சொன்னால் அது மிகையாகாது தோழி!🤗🤗🤗🤗

இரு கைத்தட்டினால் தான் ஓசை வரும் என்று நீங்கள் சொன்னது மிகச் சரி; எழுத்தாளராக கருத்துக்கள் எதிர்பார்க்கும் போது, வாசகர்களாய் மற்ற எழுத்தாளர்களின் கதைகளுக்கு கருத்து சொல்வது தான் உத்தமம்.

உங்கள் அளவிற்கு என்னால் பல கதைகள் ஒரே சமயத்தில் படிக்க முடியாது; சிறிது காலம் Reader Modeல் கதைகள் படிக்கப் போகிறேன். கட்டாயம் கருத்துக்கள் பதிவிடுவேன்:love::love:
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom