ஓம் சாயிராம்.
தோழமைகளே!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த நன்நாளில் உங்கள் அனைவரிடமும் ஒரு அன்பான கோரிக்கையுடன் வந்துள்ளேன்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மாபெரும் புரட்சியால், இன்று கதைகள் எழுதுவதிலும், அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அச்சு வடிவம் தாண்டி, இணையதளத்தில் பதிப்பித்த கதைகள் ஏராளம் என்ற நிலமை இன்று மாறி வருவதை நாம் காண்கிறோம். இம்மாற்றத்தில், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினருக்கும் நன்மைகள் உண்டு. அதிலேதும் சந்தேகம் இல்லை.
எழுத்தாளர்கள் முழு கதையும் ஒரே நேரத்தில் எழுதி, சரிபார்த்து அச்சிட வேண்டிய நெருக்கடி இல்லை. கதைக்கரு ஒன்று திட்டமிட்டு, சம இடைவெளியில் எபிசோடுகள் பதிப்பிக்கும் எளிய வழியை பெறுகிறார்கள்.
வாசகர்களும் ஒவ்வொரு எபிசோடாக படித்துப் பார்த்து, கதையுடம் பயணிக்கும் ஒரு இதமான அனுபவம் பெறுகிறீர்கள் என்று நம்புகிறேன்.
கதை எழுதும் கனவோடு வரும் எங்களுக்கு நீங்கள் தரும் உற்சாகம் தான் பெரிய ஊக்கம். கதையின் போக்கைப் பற்றிய நிறைகுறைகளை நீங்கள் வெளிப்படையாக சொல்லும் போது, அது எங்கள் எழுத்துப் பயணம் மேன்பட பேருதவியாக இருக்கிறது.
கதைகளை படிக்க நீங்கள் செலவிடும் நேரத்தில், எங்களுக்காக நேரம் ஒதுக்கி கருத்துக்களை சொல்லும் போது, எழுத வேண்டும் என்ற எங்கள் லட்சியத்தின் பாதையில் பிறவிப்பயன் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் பெரும்பாலானவர்கள் Silent Readersஆக இருப்பது தான் நிதர்சன உண்மை.
வாசகர்களே! எழுத வேண்டும் என்ற எங்கள் தனிப்பட்ட ஆசைக்காக தான் நாங்கள் எழுத வருகிறோம்; மனதிற்குப் பிடித்த விஷயம் என்றால், பலன்களை எதிர்பாராமல் செய்வது தான் உத்தமம். அதை நான் மறுக்கவில்லை;
எனினும் திறமைகளுக்கு கிடைக்கும் அடையாளங்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு தானே.
உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எங்கள் முயற்சிகளை மேன்படுத்தும் தூண்டுகோல். அதனால் சிரமம் பார்க்காமல் ஓரிரு சொற்களிலாவது உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். கருத்து என்று நான் குறிப்பிடுவது, நிறை குறைகள் இரண்டையும் தான்.
கருத்துக்கள் எழுதி பழக்கமில்லை என்று சொல்பவர்கள், குறைந்தபட்சம் Reaction EMOJI ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் எண்ணங்களை பகிருங்கள். அதுவும் எங்களுக்கு அதே அளவு உற்சாகம் கொடுக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
இத்தளத்தில் Memberஆக இல்லாமல், Guest Modeல் படிப்பவரா நீங்கள்!
நம் பாசத்திற்குறிய அட்மின் சகோதரி எழிலன்பு நமக்கு எழுதவும், படிக்கவும் பல வசதிகளை இத்தளத்தில் செய்து கொடுத்திருக்கிறார்.
எழுத்தாளர்களை ஊக்குவிக்க முடிந்தால் ரெஜிஸ்டர் செய்து படியுங்கள்; தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாது என்றால், உங்களை கட்டாயப்படுத்தவில்லை.
இத்தளத்தில் எழுதும் சில எழுத்தாளர்கள், இதைப்போன்ற Reaction Buttons எபிசோடின் இறுதியில் இணைத்துள்ளார்கள். இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்; இதற்கு தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
1000-2000 சொற்கள் கொண்ட எபிசோடு டைப் செய்து உங்களோடு பகிரும் எங்களுக்கு, நீங்கள் கருத்து வடிவில் எழுதும் ஓரிரு வார்த்தைகளே எங்கள் குறிக்கோளுக்கும், உழைப்புக்கும் சன்மானம். எனவே இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
இக்கோரிக்கையை நான் இத்தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரின் சார்பிலும் உங்களிடம் வைக்கிறேன். இத்தளத்தில் எழுதும் மற்ற எழுத்தாளர்களும் என் பணிவான வேண்டுகோளை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இப்பதிவில் ஏதேனும் தவறாக கூறியிருந்தால், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினரும் அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன்.
புதிய ஆண்டு, புத்துணர்வுடன் இதை எங்களுக்காக செய்யத் தொடங்குவீர்கள் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உற்சாகமூட்டும் வாசகர்களே, வற்றாத அன்புடம், இன்று போல் என்றும் கருத்துக்கள் சொல்லி எங்களை ஊக்குவியுங்கள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
@Ezhilanbu
தோழமைகளே!
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த நன்நாளில் உங்கள் அனைவரிடமும் ஒரு அன்பான கோரிக்கையுடன் வந்துள்ளேன்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மாபெரும் புரட்சியால், இன்று கதைகள் எழுதுவதிலும், அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அச்சு வடிவம் தாண்டி, இணையதளத்தில் பதிப்பித்த கதைகள் ஏராளம் என்ற நிலமை இன்று மாறி வருவதை நாம் காண்கிறோம். இம்மாற்றத்தில், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினருக்கும் நன்மைகள் உண்டு. அதிலேதும் சந்தேகம் இல்லை.
எழுத்தாளர்கள் முழு கதையும் ஒரே நேரத்தில் எழுதி, சரிபார்த்து அச்சிட வேண்டிய நெருக்கடி இல்லை. கதைக்கரு ஒன்று திட்டமிட்டு, சம இடைவெளியில் எபிசோடுகள் பதிப்பிக்கும் எளிய வழியை பெறுகிறார்கள்.
வாசகர்களும் ஒவ்வொரு எபிசோடாக படித்துப் பார்த்து, கதையுடம் பயணிக்கும் ஒரு இதமான அனுபவம் பெறுகிறீர்கள் என்று நம்புகிறேன்.
கதை எழுதும் கனவோடு வரும் எங்களுக்கு நீங்கள் தரும் உற்சாகம் தான் பெரிய ஊக்கம். கதையின் போக்கைப் பற்றிய நிறைகுறைகளை நீங்கள் வெளிப்படையாக சொல்லும் போது, அது எங்கள் எழுத்துப் பயணம் மேன்பட பேருதவியாக இருக்கிறது.
கதைகளை படிக்க நீங்கள் செலவிடும் நேரத்தில், எங்களுக்காக நேரம் ஒதுக்கி கருத்துக்களை சொல்லும் போது, எழுத வேண்டும் என்ற எங்கள் லட்சியத்தின் பாதையில் பிறவிப்பயன் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் பெரும்பாலானவர்கள் Silent Readersஆக இருப்பது தான் நிதர்சன உண்மை.
வாசகர்களே! எழுத வேண்டும் என்ற எங்கள் தனிப்பட்ட ஆசைக்காக தான் நாங்கள் எழுத வருகிறோம்; மனதிற்குப் பிடித்த விஷயம் என்றால், பலன்களை எதிர்பாராமல் செய்வது தான் உத்தமம். அதை நான் மறுக்கவில்லை;
எனினும் திறமைகளுக்கு கிடைக்கும் அடையாளங்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு தானே.
உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எங்கள் முயற்சிகளை மேன்படுத்தும் தூண்டுகோல். அதனால் சிரமம் பார்க்காமல் ஓரிரு சொற்களிலாவது உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். கருத்து என்று நான் குறிப்பிடுவது, நிறை குறைகள் இரண்டையும் தான்.
கருத்துக்கள் எழுதி பழக்கமில்லை என்று சொல்பவர்கள், குறைந்தபட்சம் Reaction EMOJI ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் எண்ணங்களை பகிருங்கள். அதுவும் எங்களுக்கு அதே அளவு உற்சாகம் கொடுக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
இத்தளத்தில் Memberஆக இல்லாமல், Guest Modeல் படிப்பவரா நீங்கள்!
நம் பாசத்திற்குறிய அட்மின் சகோதரி எழிலன்பு நமக்கு எழுதவும், படிக்கவும் பல வசதிகளை இத்தளத்தில் செய்து கொடுத்திருக்கிறார்.
எழுத்தாளர்களை ஊக்குவிக்க முடிந்தால் ரெஜிஸ்டர் செய்து படியுங்கள்; தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாது என்றால், உங்களை கட்டாயப்படுத்தவில்லை.
இத்தளத்தில் எழுதும் சில எழுத்தாளர்கள், இதைப்போன்ற Reaction Buttons எபிசோடின் இறுதியில் இணைத்துள்ளார்கள். இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்; இதற்கு தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
1000-2000 சொற்கள் கொண்ட எபிசோடு டைப் செய்து உங்களோடு பகிரும் எங்களுக்கு, நீங்கள் கருத்து வடிவில் எழுதும் ஓரிரு வார்த்தைகளே எங்கள் குறிக்கோளுக்கும், உழைப்புக்கும் சன்மானம். எனவே இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
இக்கோரிக்கையை நான் இத்தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரின் சார்பிலும் உங்களிடம் வைக்கிறேன். இத்தளத்தில் எழுதும் மற்ற எழுத்தாளர்களும் என் பணிவான வேண்டுகோளை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இப்பதிவில் ஏதேனும் தவறாக கூறியிருந்தால், எழுத்தாளர்கள் வாசகர்கள் இரு சார்பினரும் அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன்.
புதிய ஆண்டு, புத்துணர்வுடன் இதை எங்களுக்காக செய்யத் தொடங்குவீர்கள் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உற்சாகமூட்டும் வாசகர்களே, வற்றாத அன்புடம், இன்று போல் என்றும் கருத்துக்கள் சொல்லி எங்களை ஊக்குவியுங்கள்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
@Ezhilanbu