• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மோகமுள்ளே குத்தாதே

Chithu

✍️
Writer
மோகமுள்ளே குத்தாதே


நிசப்தமே நிறைந்த அவ்வறையில் ஆசிரியர் மட்டுமே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அங்கே அவர் மட்டுமல்ல மாணவர்களும் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தனர்.

அனைவரின் அம்பகங்களும் தாளில் தான் இருந்தது. நமது நாயகியின் விழிகள் கூட தாளிடம் குத்தகைக்கு கொடுத்தது போல விழியகற்றாது தீவிரமாக பதிலை எழுதிக் கொண்டிருந்தாள்.

இது அவளுக்கு மூன்றாமாண்டு முதல் செம், கடைசி பரீட்சை. மிக எளிமையான பாடமாக இருக்க, எல்லாம் தெரிந்த கேள்விகளாகவும்இருக்க, மடமடவென எழுதினாள்.
வேறு வேறு வண்ணம் கொண்ட எழுதுக்கோலையும் உபயோகித்து பரீட்சை எழுத, அவளது கைப் பட்டு, அவ்வெழுதுகோல் கீழே விழுந்தது. அதை எடுக்க, கீழே குனிந்தாள். அப்போது உள்ளிலிருந்த மஞ்சள் வண்ண நாண் வெளியே எட்டிப் பார்த்தது. அதை வேகமாக எடுத்து உள்ளே போட்டாள்.
மீண்டும் பரீட்சையில் கவனம் செலுத்த, அது முடியாமல் தான் ஆருயிர் கணவனின் நினைவே வந்தது.


ஜாதகத்தில் இந்த வயதை விட்டால் இனி திருமணம் யோகம் பத்து வருடங்களுக்கு பிறகு தான் இருக்கிறதென்று சொல்லிவிட, தேஜஷ்வினிக்கு கல்யாணம் செய்திட முடிவு செய்தனர். பாவம் அவள் எவ்வளவு சொல்லியும் கெஞ்சியும் கேட்காதவர்கள் தூரத்து சொந்தம் என்று பேசி முடித்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அவளுக்கு விருப்பமில்லை என்பதால் போனில் கூட அவனிடம் பேசிக் கொள்ளவில்லை... முதல் நாள் நிச்சயம் மறுநாள் கல்யாணம். கதிருடன் நிற்கும் போது கொஞ்சம் தயக்கமும் பயமுமாக இருந்தது அவளுக்கு. அதை அவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிய முதலிரவிற்காக தேஜுவை உள்ளே அனுப்பு வைத்தனர்... உடல் நடுங்க, முத்து முத்தான வியர்வையுடன் உள்ளே நுழைந்தாள். அவளின் நிலை அறிந்த கதிரும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு அதை மேலும் கூட்டும் விதமாக, அவள் கைகளைப் பற்ற வெடுக்கென எடுத்துக் கொண்டு பின்னே நகன்றாள்.


"ஹேய் ரிலாக்ஸ், நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். இங்க பாருமா நானும் மனுசன் தான் ஏதோ துஷ்டனை கண்டது போல தள்ளி போற.. இங்க பாரு உன் பயம் எனக்கு புரியுது. முதல் நாள் அதுவும் பழக்கம் இல்லாத ஆண் கூட ஒரே அறையில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இனி நம்ம லைஃப்ல நாம ரெண்டு பெரும் தான் வாழணும். நாம ஏன் ஒருத்தரை ஒருத்தர் அண்டெர்ஸ்டாண்ட் பண்ணிட்டு வாழக்கூடாது. அண்ட் நீ இன்னும் படிச்சு முடிக்கல, நாம் இந்த டைம் யூஸ் பண்ணி முதல் ஃபிரண்டஸ் ஆகிட்டு அப்றம் லவ்வரஸ் ஆகி அப்றம் புருஷன் பொண்டாட்டி வாழலாமே உனக்கு ஒகேவா? உனக்கு ஒ.கேன்னா கொஞ்சம் சிரிக்கலாமே!" என்று உதட்டின் கீழ் விரலை விரித்து காட்டினான்.


அவன் அவ்வாறு சொன்னதும் தான் மூச்சே வந்து சிரித்தாள். அதன் பின் வந்த நாட்களில் இருவரும் முதலில் நட்போடும் பின் காதலோடும் கடத்தினர்.. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்திருந்தனர்.
இதற்கிடையில் அவளுக்கு பரீட்சை வர, அவனை தள்ளி வைத்திருந்தாள்... அவனும் அவளுக்கு தேவை எல்லாம் செய்தாலும் ஏக்க பார்வையுடன் தான் வலம் வந்தான்.
அப்போ அப்போ அவளை பார்ப்பது பெருமூச்சை விடுவதுமாக இருந்தான். அவ்வ போது காஃபி கொடுக்க, அவளுக்கு சமைத்து வைக்க, என இருந்தாலும் அவனது பார்வையில் மட்டுமே தாபமே இருந்தது.


"துஷ்டன்... இங்க வா..." அவனை அழைக்க, கண்களிலொரு மின்னல் வெட்ட, வேகமாக அவள் அருகில் வந்தான். "சொல்லு பேபி ஏதாவது வேணுமா..." இடைவெளியின்றி நெருங்கி நின்றான். இருவருக்கும் நடுவில் பார்த்தவள், "என்ன இது...? முதல்ல தள்ளி நில்லுடா"என்றாள். "மக்கும்" என நொடித்துக் கொண்டு நான்கு அடி தள்ளி நின்றான்.
"உன் பார்வையே சரியில்ல... எங்கிட்ட என்ன வேணும் உனக்கு?" என்றதும் "எஸ் பேபி அதான் பேபி எனக்கு உன் கிட்ட... " என வெட்கப் பட, "யோவ் என்னால பார்க்க முடியல துஷ்டன். சீக்கிரமா சொல்லு..." என்றதும் அவளை போலியாக முறைத்தவன், காதில் எதோ கிசு கிசுக்க, வாயில் கைவைத்து விழிகளைப் பெரிதாய் விரித்தாள்.

"என்னடி நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா...?"அச்சத்தில் அவனும் கேட்க, "தப்பா கேட்டுடீயா, எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா இது? எதோ நல்லவன் போல, படிச்சு முடிச்சதும் வச்சுக்கலாம் சொன்ன... இப்போ இப்படி கேக்குற? நீ ரொம்ப மோசம் டா துஷ்டன். உன்னை எப்படி எல்லாம் நினைச்சேன் ச்ச தள்ளி உட்காரு டா..." என கோபம் கொண்டு நகர்ந்து அமர்ந்தாள்.
"ஹேய் தேஜு சாரி டி, நானும் மனுசன் தானே எனக்கும் ஆசைகள் இருக்கும் தானே? நீ தாலிய வேற முன்னாடி தொங்க போட்டுகிற, அது, எனக்கு இது உன் பெண்டாட்டி டா, உனக்கு தான் டா சொந்தம் எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு சொல்லுது பேபி... நான் என்ன பண்ண? ப்ளீஸ் என்னை தப்பா எடுத்துக்காத தேஜு... நீ கேட்டதுனால தான் சொன்னேன்.. ப்ளீஸ் டி சாரி..." என பதறி மன்னிப்பு கேட்க,
"எங்கிட்ட பேசாத துஷ்டன் இங்க இருந்து போ..." எனக் கத்த, அவனும் பாவமாக முகத்தை வைத்து கொண்டே எழுந்து சென்றான். அதன் பின் அவளை அவன் நெருங்கவே இல்லை. ஆனால் தேவையானதை மட்டும் சரியாக செய்தான். மறுநாள் கல்லூரியிலும் இறக்கிவிட்டான். அவள் பேசுவாள் என்று நினைத்தான். ஆனால் அவள் எதுவும் கூறாது சென்று விட்டாள்.


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றான். இப்போது அதை எண்ணியவளுக்கு சிரிப்பே வர, தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் எழுத ஆரம்பித்தாள். பரீட்சை முடிய, அவள் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

இருவரும் மட்டுமே தனியாகத் தான் இருந்தனர். அவள் வந்து சாப்பிட்டு உறக்கத்தை போட்டு எழுந்து விட்டாள்.. பின் காஃபி கலக்கியவள், ஹாலில் அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டு பருகினாள். அவனும் வந்து சேர்ந்தான்.
தன்னை சுத்தம் செய்தவன் அவனும் காஃபியை எடுத்துக்கொண்டு இடைவெளி விட்டு நகர்ந்து அமர்ந்தவன் டிவியைப் பார்த்தான். அவள் எழுந்து கொள்ள, அவனுக்கு தான் உள்ளே ஊசியை வைத்து குத்தியது போலானது.

இருவரும் இரவு வரை பேசிக் கொள்ளவில்லை.. இரவு உணவு முடித்த பின் அவள் அறைக்கு செல்ல, அவனோ ஹாலில் சென்று படுத்தான். வெகுநேரம் அவன் வராமல் போக, எழுந்து சென்று பார்த்தாள், அவன் ஹாலில் படுத்திருப்பத்தை பார்த்தவள் கடுப்பாகி " துஷ்டன் இங்க வா..."


"போடி நான் வரலை... நீ தான் பக்கத்துல வந்தாலே துஷ்டனை போல தள்ளி போற ஒன்னும் வேணாம் போ... " என்று குழந்தையாய் சிணுங்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


"பச் இப்போ நீ வர போறீயா இல்லையா...? " எனக் குரலை உயர்த்தினாள். அவனும் உள்ளே நுழைய கதவை சாத்தியவள் அவனை பின்னின்று அணைத்தாள்.
"துஷ்டா சாரிடா, சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன் சாரி..." எனத் தலையை சரித்து கண்ணை சிமிட்டி மன்னிப்பு கோர, அதில் விழுந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது "போடி... " எனக் கைகளை விலகி கொண்டு நகர்ந்தான்.


"சாரி துஷ்டா! இனி இப்படி பண்ண மாட்டேன்... வா..." என காதில் கை வைத்து மன்னிப்பு கேட்டவள், கைகளை நீட்ட அவனும் வந்து அவளுக்குள் அடைக்கலமானான்.
"தப்பு பண்ணலாமா துஷ்டா...?" என்றதும் விலகி அவளை பார்த்தவன், " ஆமா, உனக்கு மட்டுமா அந்தக் ஃபீலிங்ஸ் இருக்கு, எனக்கும் தான் இருக்கு. இருந்தாலும் எக்ஸாம் முடியட்டும் வெயிட் பண்ணினேன். இதுக்கு மேல என்னால முடியாது துஷ்டா ஐ நீட் யூ..." என ஏக்கி இதழில் முத்தம் பதிக்க, அவனோ இதழை பிரிக்காது அவளை தூக்கி மஞ்சத்தில் சேர்ந்தான்... மூன்று மாத கால இருவரையும் குத்து கிழித்துக் கொண்டிருக்க மோகமுள் கொடுத்த காயத்திற்கு, மருந்தென காதலையும் காமத்தையுமிட்டு வலியை இல்லாது ஆக்கினார்கள்.


காத்திருந்த
இதயங்களில்
மோகமுள்
குத்தி
காயங்களாகிட,
காமம்
கலந்த
காதலும்
மருந்தென
வலியை
போக்கியது.
 

Latest profile posts

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 28
உமா அங்கே கழற்றிப்போடப்பட்டிருந்த செருப்பைக் கண்டதும் கோபம் தாளாமல் அதைக் கையில் எடுத்தார்.
ஆவேசமாக மூர்த்தியை நெருங்கியவர் மாறி மாறி அவரது கன்னத்தில் மொத்த கோபத்தையும் காட்டி செருப்பால் அடிக்கத் துவங்கினார்.
‘ஷப் ஷப்’பென செருப்பால் அடித்தவரின் கை தனியே கழண்டுவிடுவது போல வலித்தது என்றால் அடி வாங்கிய மூர்த்திக்கு எப்படி வலித்திருக்கும்?
அடித்து கை ஓய்ந்த பிறகு செருப்பைத் தரையில் வீசிய உமா “இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லய்யா… நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்ல” என்று கத்த
“வாயை மூடுடி… என் தயவுல தான இத்தனை நாள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த… அப்பிடி என்ன நான் பண்ணிட்டேன்? ஏதோ சபலத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன்… நான் ஆம்பளைடி… அப்பிடி இப்பிடி தான் இருப்பேன்… என்னை நம்பி வந்த நீ இதை அட்ஜஸ்ட் பண்ணணும்… இல்லனா நீயும் உன் பிள்ளையும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நடுத்தெருவுல தான் நிக்கணும்” என்றார் மூர்த்தி கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.
உமாவுக்கு வந்த ஆத்திரத்தை மறைக்காமல் வார்த்தையில் காட்டினார்.
“சீ! உன்னை மாதிரி பொண்டாட்டிக்கு உண்மையா இருக்க முடியாதவன் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நான் இருப்பேன்னு நினைச்சியா? எந்தக் காலத்துல நீ வாழுற? இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும் ஆடம்பர வாழ்க்கைக்காக புருசனோட ஒழுக்கக்கேட்டை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகமாட்டா… நான் ஏன்யா உன் கேவலமான குணத்தை அட்ஜஸ்ட் பண்ணணும்? நீ வக்கிரம் பிடிச்சவன் மட்டுமில்ல, மனோவியாதி உள்ளவன்… உன்னைச் சட்டம் சும்மாவிடாது… நீயாச்சு உன் பணமும் பவுசுமாச்சு… இதை நீயே வச்சு அழு… இத்தனை நாள் என் புருசனோட அன்பு உண்மையானதுனு கண்மூடித்தனமா நம்புனதால இங்க இருந்தேன்… எப்ப நீ இவ்ளோ கேவலமானவன்னு தெரிஞ்சுதோ அப்பவே உனக்கும் எனக்குமான உறவை மானசீகமா முறிச்சிட்டேன்”
மூர்த்தியிடம் ஆவேசமாகப் பேசிவிட்டு ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டு சமாதானபுர வீட்டிலிருந்து கிளம்பியவர் தந்தையிடம் அனைத்தையும் கூறிவிட்டு அறையில் வந்து அமர்ந்ததோடு சரி, பின்னர் யாரிடமும் பேசவில்லை.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-28.5469/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 27
சரபேஸ்வரன் அலுவலக உடையை மாற்றிவிட்டு வந்தவன் “நைட் டின்னருக்கு என்ன கவி?” என்று கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.
“உப்புமா”
அந்தப் பதிலில் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
“சேமியா உப்புமாவா? ரவா உப்புமாவா?”
சங்கவி அவனது கேள்விக்குப் பதில் சொல்லாது புருவத்தை உயர்த்தவும் காரணத்தைக் கூறினான் சரபேஸ்வரன்.
“எனக்கு உப்புமா சுத்தமா பிடிக்காது... கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா எனக்குப் பிடிக்காதுனு உப்புமா செய்யவே மாட்டாங்க தெரியுமா? சேமியா உப்புமா கூடப் பரவால்ல... ரவா உப்புமா இஸ் ஈக்வல் டு ஆலகால விசம்”
“குடும்பஸ்தன் ஆனதுக்குக் கிடைக்குற முதல் ரிவார்ட் இந்த உப்புமா தான்... இனிமே நான் வெண்ணி போட்டுக் குடுத்தாலும் அதைப் பாயாசம்னு நினைச்சுக் கண்ணை மூடிக் குடிச்சுட்டுப் பாராட்டப் பழகிக்கோங்க”
சங்கவிக்கு இருந்த அலுப்பில் அவள் பொறுமையாகப் பதில் சொன்னதே பெரிது!
சரபேஸ்வரனுக்கும் வேலைப்பளு அதிகமே! என்ன செய்யலாமென யோசித்தவன் திடுதிடுப்பென “கிளம்பு கவி” என்கவும் சங்கவி திகைத்தாள்.
“எங்க?”
“லாங் ட்ரைவ் போயிட்டு வருவோம்”
“இப்பவா? இப்பிடியேவா?”
சங்கவி தன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டாள்.
டீசர்ட்டும் பளாசோவும் அணிந்து க்ளட்சில் அடக்கிய கூந்தல் அலங்காரம் அவளுடையது. முட்டி வரை ஷார்ட்சும் டீசர்ட்டும் சரபேஸ்வரனின் உடை. இதோடா ‘லாங் ட்ரைவ்’ போக முடியும் என்பது அவளது கேள்வி.
ஆனால் சரபேஸ்வரனோ அவளைக் கையோடு இழுத்துச் சென்று பைக்கில் அமரச் சொல்லிவிட்டான்.
“நாம எங்க தான் போறோம்?”
“போரூர் டோல்கேட் வரைக்கும் போயிட்டு வருவோம்”
“எதே? இதைத் தான் லாங் ட்ரைனு சொன்னிங்களா?”
கடுப்போடு பைக்கின் சைலன்சரை உதைத்தாள் சங்கவி. அது சற்று சூடாக இருக்கவும் “ஐயோம்மா” எனக் காலை உதறியவளைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான் சரபேஸ்வரன்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-27.5463/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
“நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
“ஐயோ இல்லங்க”
உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
"அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
"நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
“கவி…”
“நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

#நித்யாமாரியப்பன்
ஹாய் ப்ரண்ட்ஸ்...
Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

உபயோகித்துப் பாருங்கள்.
நன்றி🙂

New Episodes Thread

Top Bottom