• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முகில் இசைக்கும் ரேணு கானம் ❤

திருமணம் மூலம் இணையும் இரு மனம் பற்றிய கதை. எனது முதல் சிறுகதை. தவறுகள் இருப்பின் தயங்காமல் தெரிவிக்கவும். விமர்சனத்தை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். மிக்க நண்றி.


ரேணுகா தன் கையில் இருந்த கண்ணாடி வளையல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அது அவள் கணவன் முகிலன் அவளுக்கு திருமணமான பிறகு முதன் முதலில் வாங்கி கொடுத்தது. அது அவர்கள் திருமணம் முடிந்த மறுதினம்...

"ரேணு" என்ற அழைப்பைக் கேட்டு நாணி தலைகுனிந்து நின்றாள் ரேணுகா . ஏனெனில் அவளை அழைப்பது முகிலன். அவள் அருகே வந்து மெல்ல அவள் முகம் பற்றி தூக்கி அவள் கண்களைப் பார்த்தபடி நின்றான் அவன்.

புதுமணப் பெண்ணுக்கே உறித்தான அச்சத்தை மெல்ல ஒதுக்கி அவனை அழைக்க வாய் திறந்தவள் தடுமாறினாள். என்னவென்று அழைப்பது இதுவரை அதற்கான அவசியம் எதுவும் அமையவில்லை.

திருமணம் தாய், தந்தை பார்த்து நிச்சயித்தது. திருமணம் மீது பெரிதாக விருப்பமோ, ஆசையோ இல்லை அவளுக்கு. அதனால் மாப்பிள்ளைக்கு வெளிமாநிலத்தில் வேலை, விடுமுறை இல்லை என பெண் பார்க்கும் போது மட்டுமே வந்து சென்றது அவளுக்கு பெரியதாகத் தோன்றவில்லை.

அதன் பிறகு திருமணத்திற்கு முன்தினம் தான் அவனை அவள் சந்தித்தது. அதுவும் மணமேடை அருகே வரும் போது தான். அன்று நிச்சயதார்த்தம் எனவே மோதிரம் மாற்றும்படி கூற அவன் எதிரே நிற்கும்படியானது.

முகிலன் முதலில் கையை நீட்ட அவள் கை நடுங்கியது. அதை மறைக்க அவன் கையை பற்றும்படி ஆனது அது அவளுக்கு வெட்கமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவன் அறிமுகம் இல்லாத ஆண் அல்லவா இதுவரை.

பின் அவள் கையை நீட்ட சொல்ல அவள் கை முன்பைவிட அதிகமாக நடுங்கியது. அதை அவனும் உணர்ந்தானோ என்னவோ அவள் கையை அவனது இடது கையால் அழுத்தமாக பற்றி கொண்டான். பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணமாக பிடித்திருப்பது போல் தான் தோன்றும். ஆனால் அவள் மட்டுமே அறிவாள் அவன் கைகள் தரும் அழுத்தமும் அது ஒரு வகையில் அவள் மனதில் நிம்மதி அளித்ததையும்.

மோதிரம் மாற்றிய பின் அவளை அவன் அருகே அமர சொன்னதும் அந்த அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஒரு ஓரமாகவே அமர்ந்தாள். அவனை இடித்துவிட கூடாது என்பது அவளுக்கு. ஆனால் சிறுமி ஒருத்தி அவள் அருகே அமர வேறு வழியின்றி அவனை நெருங்கி அமர்ந்தாள்.

அவர்கள் கைகள் உரசி கொள்வதே அவளுக்கு பயமாக இருந்தது. 'ஒருவேளை அவன் அதை தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?' என்று தோன்றினாலும் வேறு வழியின்றி அப்படியே அமர்ந்திருந்தாள். பின் அவள் கவனம் அதில் பதிய முடியாத நிலை. உறவுகள் வருகை, அடுத்த அடுத்த நிகழ்வுகள் என அன்றைய நாள் இனிதே முடிந்தது.

மறுநாள் காலை திருமணமும் இனிதே முடிந்தது. தாலி கட்டும் வரையுமே அவள் மனம் ஏதோ சஞ்சலத்திலே இருந்தது. தாலி அணிவிக்கும் போது அவன் முகம் பார்க்க அவன் புன்னகைத்தான் அதுவே அவள் மனதிற்கு அமைதி சேர்த்தது.

திருமணம் முடிந்த பின்னும் பல சடங்குகள் நடந்தது. இருவர் வீட்டிலும் உறவுகள் அதிகம் என்பதால் அவர்கள் பேச முயற்சித்தாலும் முடியவில்லை. அன்றைய இரவில் உறவு பெண்கள் புடைசூழ அவளை அவன் அறைக்கு அனுப்பி வைத்தனர். அதுதான் அவர்கள் தனிமையில் சந்திக்கும் முதல் தருணம்.

அவனிடம் பேச வேண்டும் சில கேள்விகள் கேட்க வேண்டும் என பலவும் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், "ரேணு" என மென்மையாக அழைத்தபடி அவன் அவள் அருகே வந்து நிற்க்கவும் அவள் செய்வது அறியாது உறைந்து நின்றுவிட்டாள்.

அவன் அவள் கையில் வைத்திருந்த பாலை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்துவிட்டு அதுவரையுமே அப்படியே நின்ற அவளிடம் திரும்பி மெல்ல அவள் கை பற்றி இழுத்து அணைத்து கொண்டான் . அன்று கைபடவே பயந்தவள், இன்று அவன் அணைப்பில் பயம் அனைத்தும் அடங்குவது போல் உணர்ந்தாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்த பின் அவளை விடுவித்தான். அவள் கையை மட்டும்விடாது பற்றி அழைத்து வநது அமர வைத்து தானும் அருகே அமர்ந்து பேசத் தொடங்கினான்.

"ரேணுமா நான் உன்கிட்ட நிறைய பேசனும், உன்னை பத்தி நானும் என்னை பத்தி நீயும் புரிஞ்சிகனும், அதுக்கு அப்புறம் தான் நாம வாழ்க்கையை ஆரம்பிக்க வேணும்னு எனக்கு ஆசை. நம்ம நிச்சயதார்த்தம் அப்போ நீ மோதிரம் போடும் போதே உன் நிலை எனக்கு புரிஞ்சது. கல்யாணம் முன்னே உன்க் கூட பேசி பழகி இருந்தால் உனக்கு நல்லா இருந்திருக்கும். அதனால உனக்கு எப்போ என்னை முழுமையாக ஏத்துக்க முடியுமோ அன்னிக்கி... நம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இப்போ அமைதியா தூங்கு சரியா" என்றான். அவள் தலையசைத்தாள். அவன் இப்படி பேசுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

"உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கனுமா? " என்று கேட்க அவள் ஆம் இல்லை என்று இரு விதமாகவும் தலை அசைக்க அவன் சிரித்துவிட்டான். " இன்னும் நம்ம வாழ்க்கை முழுக்க இருக்கு. கவலைபடமா தூங்கு" என்றவன் அடுத்த பக்கம் சென்று படுத்துக் கொண்டான். அவளும் சிறிது நேரம் அவனையேப் பார்த்திருந்துவிட்டு உறங்கினாள்.

அடுத்த நாள் காலை ஏதோ சத்தம் கேட்டு விழித்தவள் தான் அவனை அணைத்தபடி உறங்குவதை அறிந்து வெட்கினாள். சிறுவயது முதல் வந்தப் பழக்கத்தின் வினை . அவன் உறக்கம் கலையாது எழுந்து சென்றவள் தயாராகி கீழே சென்றுவிட்டாள். அவன் இருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.

கீழே வந்தவளிடம் காபி கொடுத்து அனுப்ப வேறு வழி தெரியாது அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் அவள். அவள் வருவாள் என்று அவன் அறிந்திருக்க வேண்டும். தலைவரை இழுத்து போர்த்திக் கொண்டு இருந்தான் . அதுவே நன்மை என்று காபி கப்பை அவன் பக்கத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாள். அதன் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறாள்.

அவனோ அவள் தவிப்பை பார்த்து மெல்ல புன்னகை செய்தான். பின் ஏதோ சொல்ல வர அதற்க்குள் யாரோ வருவது போல் இருக்க இருவருமே விலகி நின்றனர். உறவினர் அனைவரும் வந்துவிட காலை உணவு முடித்தனர். மதியம் மறு வீட்டு விருந்து இருப்பதால் இவர்களை கோவிலுக்கு முதலில் சென்று வரும்படி சொன்னதால் வெளியே வந்தனர்.

அவன் காரின் அருகே சென்றதும் இவளும் அவன் பின்னே சென்றாள். அவள் முன் இருக்கையில் அமர்ந்ததும் காரை ஓட்ட தொடங்கினான். கார் அமைதியாக சென்றுக் கொண்டிருந்தது. ஏனோ அவளுக்கு அது பிடிக்கவில்லை . தன்னை அறியாமலே " ஏன் அமைதியாகவே வரீங்க எதாவது பேசலாமே " என்றதுதான் தாமதம் காரை உடனே நிறுத்தினான் அவன்.

"என்கிட்டயா பேசற?" என்று நெஞ்சில் கை வைத்தபடி அவன் கேட்க அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள் அவள். அவனும் சிரித்தான். " எப்பா தப்பிச்சேன். எங்க என்கிட்ட மட்டும் பேசா மடந்தையாவே இருந்துடுவியாேனு பயந்துட்டேன். ஏன்மா காலைல கூட காபி வச்சிட்டு ஓடிட்ட. சரி நானே பேசலாம்னு வந்தா அமைதியா இருக்க. மத்தவங்க கிட்டமட்டும் நல்லா பேசுன" என கேட்டான்.

"அது வந்து... ஏதோ தயக்கம்... உங்களை எப்படி கூப்பிடனு புரியல அதான்" என்றாள் முகம் சிவந்தபடி.. அதை கேட்டவன் " நீ என்னை என்னவேனா சொல்லி கூப்பிடு. வாடானு போடானு கூட சொல்லிக் கூப்பிடலாம் ஆனா நாம மட்டும் இருக்கும் போது மட்டும் தான். எல்லாரும் இருக்கும் போது முகிலன் இல்ல முகில் எப்படிவேனா பெயர் சொல்லி கூப்பிடு" என்றான்.

' அவங்க வீட்டிலயும், நண்பர்களும் முகில்னு கப்பிடுவாங்க. நாமலும் அப்படியே கூப்பிட முடியாது' என யோசித்தவள் " முகி" என்றாள் . "அப்படி கூப்பிடவா" என அவனிடம் திரும்பி கேட்க அவன் பதில் கூடுக்காது அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

பின் கோயிலை சென்றடைந்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்துக் கொண்டிருந்தனர் . அப்பொழுது வேடிக்கை பார்த்தபடி வந்தவள் கண்கள் வளையல்கள் விற்பனை செய்யும் கடையின் முன் அடுக்கி வைக்கபட்டிருந்த கண்ணாடி வளையவ்கள் மீது பதிந்தது. அவளுக்கு கண்ணாடி வளையல்கள் மேல் காதல் என்று கூட சொல்லலாம். தனக்கு பிடித்தமானவர்களிடம் மட்டுமே உரிமையுடன் கேட்டு வாங்கிவிடுவாள். ஆனால் இன்று?

முகி அவளுக்கு மட்டுமே உரிமையுடையவன் தான் ஆனால் அவனிடம் எப்படி கேட்பது என தயங்கியபடி விட்டுவிட்டாள். இவள் இப்படி எண்ணியபடி காரின் அருகே வந்துவிட்டாள் . திரும்பி பார்க்க அவன் அப்பொழுது தான் ஃபோன் பேசியபடி வந்து கொண்டிருந்தான்.

அவள் அருகே வந்தவன் உள்ளே அமரும்படி செய்கை காட்ட ' சரி' என தலையசைத்துவிட்டு உள்ளே அமர்ந்து கொண்டாள். உள்ளே அமர்ந்தவள் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவனும் வந்துவிட்டான்.

அவன் கையில் ஏதோ வைத்திருக்க என்னவென்று அவள் கேட்க " நம்ம வீட்டில இருக்க குட்டி பசங்களுக்கு எதாவது வாங்கிட்டு வானு அம்மா சொன்னாங்க அதான் " என்றான். " சரி " என்றாள்.

" உனக்கு பாட்டு கேட்க பிடிக்குமா ?" என அவன் கேட்டபடி காரை ஓட்டி கொண்டிருந்தான்.

" ம்... ரொம்ப பிடிக்கும் . உங்களுக்கு முகி ?" என அவள் அவனிடம் கேட்க " எனக்கும் ரொம்ப பிடிக்கும் வேலை முடிஞ்சு வந்தா களைப்பா இருக்கும். அந்த நேரம் பாட்டு கேட்பேன். அந்த மாதிரி நேரம் கிடைக்கும் போதுலாம் கேட்பேன். அது எனக்கு எப்பவும் துணையா இருக்கும். இனிமே அந்த மாதிரி எல்லா நேரமும் கேட்க முடியுமானு தெரியல" என்றான்.

"ஏன் ?" என்று அவள் கேட்க " அதான் இனி நீ வந்துட்ட இல்லை என் துணையா " என்று பதில் சொன்னதும் அவள் விழித்தாள்.

" பாட்டு நாம எப்ப கேட்போம் அதிகமா? நாம சந்தோஷமா இல்ல கஷ்டமா இருக்கும் போது தான . அந்த மாதிரி சந்தோஷமோ இல்ல கஷ்டமோ அதை பகிர்ந்துக்கவும் ஆறுதல் கூறவும் நீ வந்துட்டியே " என விளக்கம் சொல்லிவிட்டு காரை நிறுத்தினான்.

அப்பொழுது தான் பார்த்தாள் அவர்கள் வீடு வந்துவிட்டது என்பதை . ஏனோ அவன் விளக்கம் அவள் மனதை நெகிழ செய்தது. அது மட்டுமில்லாது அவனது விளக்கம் அவள் மீதான அவன் காதலையும் விளக்கிவிட்டது. 'அவன் தன்னை ஏற்றுக் கொண்டது உண்மையானாள் அவள் மனம் அவனை ஏற்க தான் காத்துக்கொண்டிருக்கிறானா ? ' . தன் எண்ணங்களில் முழுகி இருந்தவளை கை பற்றி இழுத்தான் அவன் .

" ஏய் பார்த்துமா . இவ்ளோ நேரம் அதுல கால் வச்சியிருப்ப . எங்க இருக்கு உன் கவனம்?" என கீழே இருந்த வரிசை தட்டுக்களை சுட்டிகாட்டி அவன் கேட்க அவளோ வெட்கபட்டாள். அவன் உடனே புரிந்து கொண்டான்.

" ஓ, ரேணுமா மனசு முழுக்க நான் தானா? நான் இங்க உன் முன்னே இருக்கப்ப நீ எதுக்கு மனசுல என்னோட பேசுற. நேரடியா என் கிட்ட பேசு சரியா " என்றுவிட்டு அவள் கன்னத்தை தட்டிவிட்டு சென்றான்.

பின் அவர்கள் மறு வீட்டு விருந்து முடித்துவிட்டு அங்கேயே தங்கும்படி கூறியதால் அன்றைய இரவு அவள் அறையில் கழிக்க வேண்டிய நிலை. அது அவளுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவள் தயங்கியபடி வெளியேவே நிற்க உள்ளே சென்ற அவனோ " ஏன் ரேணு உன் அறை தான உள்ளே வா என்ன பயம்?". என கேட்டான்.

அவள் தயங்கியபடியே உள்ளே வந்தவள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தாள். ' அவள் கட்டில் சிறியது அவனதுவிட . இருவர்க்கு இடம் உண்டு. ஆனால் நேற்று மாதிரி எதாவது நடந்துவிட்டாள் அதுதான் அவள் தயக்கம் அதை எப்படி அவன்கிட்ட சொல்லமுடியும் ' என நினைத்தபடி நின்றாள்.

" ரேணுமா இப்படி உட்காரு இதோ வரேன் " என்றுவிட்டு வெளியே சென்றான். ' இந்த நேரம் என்னவா இருக்கும் ' என நினைத்து கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தவன் அவள் அருகே அமர்ந்து கையை நீட்ட சொல்ல அவள் அப்படியே செய்ய அவள் கையில் வைத்தான் அதை ' கண்ணாடி வளையல்கள் ' .

அவளுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை அவனை நிமிர்ந்து பார்க்க ." நீ இந்த வளையலை பார்த்தபடி இருந்தியா அப்ப உன்னை நான் கூப்பிட்டேன் நீ கவனிக்கல அப்பதான் உனக்கு கண்ணாடி வளையல்னா ரொம்ப பிடிக்கும்னு உங்க அம்மா சொன்னது நினைவு வந்தது " என்றான்.

"எங்க அம்மாவா எப்போ " என அதுதான் முக்கியம் போல கேட்டாள். "ம்... உன்கிட்ட நான் பேசல தான் ஆனா உங்க வீட்டுல எல்லாரிடமும் பேசிட்டுதான் இருந்தேன் " என்றான்.

"ஆமா " என்றாள் அவள். அந்த விஷயம் அவளுக்குத் தெரியும்.

" ஒரு நாள் அப்படி பேசிட்டு இருக்கும போது நீ வந்து வளையல் வாங்கனும்னு சொல்லிட்டு பணம் கேட்ட அவங்களும் கொடுத்து அனுப்பிட்டு என்கிட்ட சொன்னாங்க " என்றான்.

" அப்படியா நீங்க பேசும் போது நான் எப்படி அங்க வந்தேன் " என அவனிடம் கேட்டாள்.

"ம் அதுவும் சொல்லி இருக்காங்க. நான் பேசுறன்னு தெரிஞ்சாலே நீ அந்த பக்கமே வர மாட்டியாமே... அன்னிக்கி ஏதோ விவரம் தேவைபட்டது அது பார்த்துட்டு இருந்தாங்க அதான் நான் லைன்ல இருந்தது உனக்கு தெரியல" என்றான்.

"ம்" என்று தலையசைத்துவிட்டு அந்த வளையல்களை எடுத்து அணிய முற்பட அவன் தடுத்தான். ஏன் என்பது போல் அவள் பார்க்க " இந்த வளையல்களை நீ இப்ப போட கூடாது ." என்றவனை அவள் பாவமாக பார்க்க அவன் சிரித்துவிட்டு " நீ என்கிட்ட அங்கேயே கேட்டு வாங்கி இருந்தனா இப்ப போட்டு இருக்கலாம் ஆனா நீ கேட்கல. ஏன்னா உனக்கு என்கிட்ட அந்த அளவுக்கு உரிமை கொடுக்க இ்ன்னும் தயக்கம். உன் நிலைமையும் எனக்கு புரியுதுமா " என்றவன் அவள் கைபற்றி...

" என் நிலைமையும் நீ புரிஞ்சிக்கனும் ரேணுமா . நாம இப்படியே இருக்க முடியாது . உனக்கு எவ்வளவு நாள் தேவைபட்டாலும் நான் காத்துக்கிட்டு இருப்பேன் . நீ என்னை முழுசா ஏத்துகிட்டனு உனக்கு மனசுல படுதோ அன்னிக்கி இதை போட்டுக்க அப்ப நான் உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்" என்றான்.

அவள் சரியென மெல்ல தலையசைக்க " இப்ப நீ எதுக்கு தயங்கறனும் எனக்கு புரியுது. நேற்று மாதிரி இன்னிக்கும் நடந்துடும்னு உன்க்கு பயம் அதுதானே" என கேட்க அவள் தினரிபோனாள்.

" உங்களுக்கு தெரியுமா முகி ?" என கேட்டாள் . " ம் தெரியும் . நான் உனக்கு முன்னயே எழுந்துட்டேன். நீ என்ன பண்ண இருக்கனு பார்க்க தான் அப்படியே இருந்தேன். நீ தான் என் முகத்தை கூட பார்க்காம எழுந்து ஒடிட்ட" என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

"இப்பவே நம்ம வாழ்க்கை தொடங்க வேண்டாம்னு சொன்னது உனக்கு என்னை மனசார பிடிக்கனும்னு தான். அதுகாக என்னைவிட்டு ஒதுங்கியே இருக்கனும்னு இல்லை சரியா" என்று கேட்க

"சரி" என்றாள். அவளுக்கு அவனை நினைக்க பெருமையாக இருந்தது . இப்படி அவள் மேல் அன்பு காட்டும் அவன் மேல் அவளு்க்கு காதல் வராம இருக்குமா? நேற்றைய நிகழ்வில் சரிய தொடங்கிய அவள் மனது இன்றைய நிகழ்வில் முழுவதுமாக அவன் காலடியில் சரணடைந்துவிட்டது.

ஆனால் உடனே அவள் மனதை அவனிடம் வெளிபடுத்த அவள் தயாராக இல்லை. அவன் எப்படி அவளைப் பற்றி அனைத்தும் அறிந்து அவள் விருப்பம்படி செயல்படுகிறானோ, அதுபடி அவனை பற்றி அறிந்துக் கொண்ட பிறகு தான் அவனிடம் தன் மனதை வெளிபடுத்த வேண்டும் என நினைத்தபடி உறங்கினாள்.

பின் மறுநாள் அவன் வீட்டிற்கு சென்றனர் . அங்கே ஒரு ஐந்து நாள் இருந்துவிட்டு அதன் பிறகு அவனுடன் அவளும் அவன் வேலை பார்க்கும் ஊரில் தங்குவதாக ஏற்பாடு. அவன் வீட்டில் இருந்த ஐந்து நாட்களும் அவனைத் தவிர மற்ற எல்லாருடனும் அதிக நேரம் செலவிட்டு அவனைப் பற்றி நன்கு தெரிந்துக் கொண்ட பின்னரே அவனுடன் கிளம்பி சென்றாள்.

அவர்கள் அங்கே சென்ற பின் இருவராலும் நீண்ட நேரம் செலவிட்டு தங்கள் விருப்பங்களை பகிர்ந்துக் கொள்ள முடிந்தது. ஒரு குடும்ப தலைவியாக அனைத்து பொறுப்புகளையும் அறிந்து திறம்பட செயல்படவும் , அக்கம் பக்கம் பழக்கம் ஏற்படுத்தி கொள்ளவும், என அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை . அவனும் வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தான். அப்படியே இரண்டு மாதம் கடந்துவிட்டது.

"ரேணு" என்ற அழைப்பு கேட்டு தன் நினைவுகளில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்பினாள். இன்று அவன் வாங்கி கொடுத்த அந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டிருக்கிறாள். இன்று அவன் பிறந்த நாள் அதனால் தான் இத்தனை நாள் காத்திருந்தாள்.

"ரேணுமா இந்த நேரம் வெளியே என்ன..." என்று கேட்டபடி வந்தவன் அவளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான். திருமணமான அன்று இரவு அவள் உடுத்தியிருந்த அதே புடவையுடன், அதற்கு பொருத்தமாக அவன் வாங்கி கொடுத்த கண்ணாடி வளையல்களுடன் அவள்.

அவன் அருகே சென்ற அவள் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் முகி " என்று கூறிவிட்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவன் போன்று அவளை அணைத்துக்கொண்டான்.

"உங்க ரேணு கானமா நான் இருக்க தயார்" என்றாள். முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் நின்றான். பின் அவளை ஏற்றுகொண்டதன் அச்சாரத்தை அவள் இதழ்களில் சமர்பித்தான்.

சுபம்
 

Baby

Active member
Member
திருமணம் மூலம் இணையும் இரு மனம் பற்றிய கதை. எனது முதல் சிறுகதை. தவறுகள் இருப்பின் தயங்காமல் தெரிவிக்கவும். விமர்சனத்தை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். மிக்க நண்றி.


ரேணுகா தன் கையில் இருந்த கண்ணாடி வளையல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அது அவள் கணவன் முகிலன் அவளுக்கு திருமணமான பிறகு முதன் முதலில் வாங்கி கொடுத்தது. அது அவர்கள் திருமணம் முடிந்த மறுதினம்...

"ரேணு" என்ற அழைப்பைக் கேட்டு நாணி தலைகுனிந்து நின்றாள் ரேணுகா . ஏனெனில் அவளை அழைப்பது முகிலன். அவள் அருகே வந்து மெல்ல அவள் முகம் பற்றி தூக்கி அவள் கண்களைப் பார்த்தபடி நின்றான் அவன்.

புதுமணப் பெண்ணுக்கே உறித்தான அச்சத்தை மெல்ல ஒதுக்கி அவனை அழைக்க வாய் திறந்தவள் தடுமாறினாள். என்னவென்று அழைப்பது இதுவரை அதற்கான அவசியம் எதுவும் அமையவில்லை.

திருமணம் தாய், தந்தை பார்த்து நிச்சயித்தது. திருமணம் மீது பெரிதாக விருப்பமோ, ஆசையோ இல்லை அவளுக்கு. அதனால் மாப்பிள்ளைக்கு வெளிமாநிலத்தில் வேலை, விடுமுறை இல்லை என பெண் பார்க்கும் போது மட்டுமே வந்து சென்றது அவளுக்கு பெரியதாகத் தோன்றவில்லை.

அதன் பிறகு திருமணத்திற்கு முன்தினம் தான் அவனை அவள் சந்தித்தது. அதுவும் மணமேடை அருகே வரும் போது தான். அன்று நிச்சயதார்த்தம் எனவே மோதிரம் மாற்றும்படி கூற அவன் எதிரே நிற்கும்படியானது.

முகிலன் முதலில் கையை நீட்ட அவள் கை நடுங்கியது. அதை மறைக்க அவன் கையை பற்றும்படி ஆனது அது அவளுக்கு வெட்கமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவன் அறிமுகம் இல்லாத ஆண் அல்லவா இதுவரை.

பின் அவள் கையை நீட்ட சொல்ல அவள் கை முன்பைவிட அதிகமாக நடுங்கியது. அதை அவனும் உணர்ந்தானோ என்னவோ அவள் கையை அவனது இடது கையால் அழுத்தமாக பற்றி கொண்டான். பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணமாக பிடித்திருப்பது போல் தான் தோன்றும். ஆனால் அவள் மட்டுமே அறிவாள் அவன் கைகள் தரும் அழுத்தமும் அது ஒரு வகையில் அவள் மனதில் நிம்மதி அளித்ததையும்.

மோதிரம் மாற்றிய பின் அவளை அவன் அருகே அமர சொன்னதும் அந்த அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஒரு ஓரமாகவே அமர்ந்தாள். அவனை இடித்துவிட கூடாது என்பது அவளுக்கு. ஆனால் சிறுமி ஒருத்தி அவள் அருகே அமர வேறு வழியின்றி அவனை நெருங்கி அமர்ந்தாள்.

அவர்கள் கைகள் உரசி கொள்வதே அவளுக்கு பயமாக இருந்தது. 'ஒருவேளை அவன் அதை தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?' என்று தோன்றினாலும் வேறு வழியின்றி அப்படியே அமர்ந்திருந்தாள். பின் அவள் கவனம் அதில் பதிய முடியாத நிலை. உறவுகள் வருகை, அடுத்த அடுத்த நிகழ்வுகள் என அன்றைய நாள் இனிதே முடிந்தது.

மறுநாள் காலை திருமணமும் இனிதே முடிந்தது. தாலி கட்டும் வரையுமே அவள் மனம் ஏதோ சஞ்சலத்திலே இருந்தது. தாலி அணிவிக்கும் போது அவன் முகம் பார்க்க அவன் புன்னகைத்தான் அதுவே அவள் மனதிற்கு அமைதி சேர்த்தது.

திருமணம் முடிந்த பின்னும் பல சடங்குகள் நடந்தது. இருவர் வீட்டிலும் உறவுகள் அதிகம் என்பதால் அவர்கள் பேச முயற்சித்தாலும் முடியவில்லை. அன்றைய இரவில் உறவு பெண்கள் புடைசூழ அவளை அவன் அறைக்கு அனுப்பி வைத்தனர். அதுதான் அவர்கள் தனிமையில் சந்திக்கும் முதல் தருணம்.

அவனிடம் பேச வேண்டும் சில கேள்விகள் கேட்க வேண்டும் என பலவும் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், "ரேணு" என மென்மையாக அழைத்தபடி அவன் அவள் அருகே வந்து நிற்க்கவும் அவள் செய்வது அறியாது உறைந்து நின்றுவிட்டாள்.

அவன் அவள் கையில் வைத்திருந்த பாலை வாங்கி அருகிலிருந்த டீபாய் மீது வைத்துவிட்டு அதுவரையுமே அப்படியே நின்ற அவளிடம் திரும்பி மெல்ல அவள் கை பற்றி இழுத்து அணைத்து கொண்டான் . அன்று கைபடவே பயந்தவள், இன்று அவன் அணைப்பில் பயம் அனைத்தும் அடங்குவது போல் உணர்ந்தாள்.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்த பின் அவளை விடுவித்தான். அவள் கையை மட்டும்விடாது பற்றி அழைத்து வநது அமர வைத்து தானும் அருகே அமர்ந்து பேசத் தொடங்கினான்.

"ரேணுமா நான் உன்கிட்ட நிறைய பேசனும், உன்னை பத்தி நானும் என்னை பத்தி நீயும் புரிஞ்சிகனும், அதுக்கு அப்புறம் தான் நாம வாழ்க்கையை ஆரம்பிக்க வேணும்னு எனக்கு ஆசை. நம்ம நிச்சயதார்த்தம் அப்போ நீ மோதிரம் போடும் போதே உன் நிலை எனக்கு புரிஞ்சது. கல்யாணம் முன்னே உன்க் கூட பேசி பழகி இருந்தால் உனக்கு நல்லா இருந்திருக்கும். அதனால உனக்கு எப்போ என்னை முழுமையாக ஏத்துக்க முடியுமோ அன்னிக்கி... நம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இப்போ அமைதியா தூங்கு சரியா" என்றான். அவள் தலையசைத்தாள். அவன் இப்படி பேசுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.

"உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கனுமா? " என்று கேட்க அவள் ஆம் இல்லை என்று இரு விதமாகவும் தலை அசைக்க அவன் சிரித்துவிட்டான். " இன்னும் நம்ம வாழ்க்கை முழுக்க இருக்கு. கவலைபடமா தூங்கு" என்றவன் அடுத்த பக்கம் சென்று படுத்துக் கொண்டான். அவளும் சிறிது நேரம் அவனையேப் பார்த்திருந்துவிட்டு உறங்கினாள்.

அடுத்த நாள் காலை ஏதோ சத்தம் கேட்டு விழித்தவள் தான் அவனை அணைத்தபடி உறங்குவதை அறிந்து வெட்கினாள். சிறுவயது முதல் வந்தப் பழக்கத்தின் வினை . அவன் உறக்கம் கலையாது எழுந்து சென்றவள் தயாராகி கீழே சென்றுவிட்டாள். அவன் இருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.

கீழே வந்தவளிடம் காபி கொடுத்து அனுப்ப வேறு வழி தெரியாது அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் அவள். அவள் வருவாள் என்று அவன் அறிந்திருக்க வேண்டும். தலைவரை இழுத்து போர்த்திக் கொண்டு இருந்தான் . அதுவே நன்மை என்று காபி கப்பை அவன் பக்கத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாள். அதன் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறாள்.

அவனோ அவள் தவிப்பை பார்த்து மெல்ல புன்னகை செய்தான். பின் ஏதோ சொல்ல வர அதற்க்குள் யாரோ வருவது போல் இருக்க இருவருமே விலகி நின்றனர். உறவினர் அனைவரும் வந்துவிட காலை உணவு முடித்தனர். மதியம் மறு வீட்டு விருந்து இருப்பதால் இவர்களை கோவிலுக்கு முதலில் சென்று வரும்படி சொன்னதால் வெளியே வந்தனர்.

அவன் காரின் அருகே சென்றதும் இவளும் அவன் பின்னே சென்றாள். அவள் முன் இருக்கையில் அமர்ந்ததும் காரை ஓட்ட தொடங்கினான். கார் அமைதியாக சென்றுக் கொண்டிருந்தது. ஏனோ அவளுக்கு அது பிடிக்கவில்லை . தன்னை அறியாமலே " ஏன் அமைதியாகவே வரீங்க எதாவது பேசலாமே " என்றதுதான் தாமதம் காரை உடனே நிறுத்தினான் அவன்.

"என்கிட்டயா பேசற?" என்று நெஞ்சில் கை வைத்தபடி அவன் கேட்க அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள் அவள். அவனும் சிரித்தான். " எப்பா தப்பிச்சேன். எங்க என்கிட்ட மட்டும் பேசா மடந்தையாவே இருந்துடுவியாேனு பயந்துட்டேன். ஏன்மா காலைல கூட காபி வச்சிட்டு ஓடிட்ட. சரி நானே பேசலாம்னு வந்தா அமைதியா இருக்க. மத்தவங்க கிட்டமட்டும் நல்லா பேசுன" என கேட்டான்.

"அது வந்து... ஏதோ தயக்கம்... உங்களை எப்படி கூப்பிடனு புரியல அதான்" என்றாள் முகம் சிவந்தபடி.. அதை கேட்டவன் " நீ என்னை என்னவேனா சொல்லி கூப்பிடு. வாடானு போடானு கூட சொல்லிக் கூப்பிடலாம் ஆனா நாம மட்டும் இருக்கும் போது மட்டும் தான். எல்லாரும் இருக்கும் போது முகிலன் இல்ல முகில் எப்படிவேனா பெயர் சொல்லி கூப்பிடு" என்றான்.

' அவங்க வீட்டிலயும், நண்பர்களும் முகில்னு கப்பிடுவாங்க. நாமலும் அப்படியே கூப்பிட முடியாது' என யோசித்தவள் " முகி" என்றாள் . "அப்படி கூப்பிடவா" என அவனிடம் திரும்பி கேட்க அவன் பதில் கூடுக்காது அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

பின் கோயிலை சென்றடைந்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்துக் கொண்டிருந்தனர் . அப்பொழுது வேடிக்கை பார்த்தபடி வந்தவள் கண்கள் வளையல்கள் விற்பனை செய்யும் கடையின் முன் அடுக்கி வைக்கபட்டிருந்த கண்ணாடி வளையவ்கள் மீது பதிந்தது. அவளுக்கு கண்ணாடி வளையல்கள் மேல் காதல் என்று கூட சொல்லலாம். தனக்கு பிடித்தமானவர்களிடம் மட்டுமே உரிமையுடன் கேட்டு வாங்கிவிடுவாள். ஆனால் இன்று?

முகி அவளுக்கு மட்டுமே உரிமையுடையவன் தான் ஆனால் அவனிடம் எப்படி கேட்பது என தயங்கியபடி விட்டுவிட்டாள். இவள் இப்படி எண்ணியபடி காரின் அருகே வந்துவிட்டாள் . திரும்பி பார்க்க அவன் அப்பொழுது தான் ஃபோன் பேசியபடி வந்து கொண்டிருந்தான்.

அவள் அருகே வந்தவன் உள்ளே அமரும்படி செய்கை காட்ட ' சரி' என தலையசைத்துவிட்டு உள்ளே அமர்ந்து கொண்டாள். உள்ளே அமர்ந்தவள் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவனும் வந்துவிட்டான்.

அவன் கையில் ஏதோ வைத்திருக்க என்னவென்று அவள் கேட்க " நம்ம வீட்டில இருக்க குட்டி பசங்களுக்கு எதாவது வாங்கிட்டு வானு அம்மா சொன்னாங்க அதான் " என்றான். " சரி " என்றாள்.

" உனக்கு பாட்டு கேட்க பிடிக்குமா ?" என அவன் கேட்டபடி காரை ஓட்டி கொண்டிருந்தான்.

" ம்... ரொம்ப பிடிக்கும் . உங்களுக்கு முகி ?" என அவள் அவனிடம் கேட்க " எனக்கும் ரொம்ப பிடிக்கும் வேலை முடிஞ்சு வந்தா களைப்பா இருக்கும். அந்த நேரம் பாட்டு கேட்பேன். அந்த மாதிரி நேரம் கிடைக்கும் போதுலாம் கேட்பேன். அது எனக்கு எப்பவும் துணையா இருக்கும். இனிமே அந்த மாதிரி எல்லா நேரமும் கேட்க முடியுமானு தெரியல" என்றான்.

"ஏன் ?" என்று அவள் கேட்க " அதான் இனி நீ வந்துட்ட இல்லை என் துணையா " என்று பதில் சொன்னதும் அவள் விழித்தாள்.

" பாட்டு நாம எப்ப கேட்போம் அதிகமா? நாம சந்தோஷமா இல்ல கஷ்டமா இருக்கும் போது தான . அந்த மாதிரி சந்தோஷமோ இல்ல கஷ்டமோ அதை பகிர்ந்துக்கவும் ஆறுதல் கூறவும் நீ வந்துட்டியே " என விளக்கம் சொல்லிவிட்டு காரை நிறுத்தினான்.

அப்பொழுது தான் பார்த்தாள் அவர்கள் வீடு வந்துவிட்டது என்பதை . ஏனோ அவன் விளக்கம் அவள் மனதை நெகிழ செய்தது. அது மட்டுமில்லாது அவனது விளக்கம் அவள் மீதான அவன் காதலையும் விளக்கிவிட்டது. 'அவன் தன்னை ஏற்றுக் கொண்டது உண்மையானாள் அவள் மனம் அவனை ஏற்க தான் காத்துக்கொண்டிருக்கிறானா ? ' . தன் எண்ணங்களில் முழுகி இருந்தவளை கை பற்றி இழுத்தான் அவன் .

" ஏய் பார்த்துமா . இவ்ளோ நேரம் அதுல கால் வச்சியிருப்ப . எங்க இருக்கு உன் கவனம்?" என கீழே இருந்த வரிசை தட்டுக்களை சுட்டிகாட்டி அவன் கேட்க அவளோ வெட்கபட்டாள். அவன் உடனே புரிந்து கொண்டான்.

" ஓ, ரேணுமா மனசு முழுக்க நான் தானா? நான் இங்க உன் முன்னே இருக்கப்ப நீ எதுக்கு மனசுல என்னோட பேசுற. நேரடியா என் கிட்ட பேசு சரியா " என்றுவிட்டு அவள் கன்னத்தை தட்டிவிட்டு சென்றான்.

பின் அவர்கள் மறு வீட்டு விருந்து முடித்துவிட்டு அங்கேயே தங்கும்படி கூறியதால் அன்றைய இரவு அவள் அறையில் கழிக்க வேண்டிய நிலை. அது அவளுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவள் தயங்கியபடி வெளியேவே நிற்க உள்ளே சென்ற அவனோ " ஏன் ரேணு உன் அறை தான உள்ளே வா என்ன பயம்?". என கேட்டான்.

அவள் தயங்கியபடியே உள்ளே வந்தவள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தாள். ' அவள் கட்டில் சிறியது அவனதுவிட . இருவர்க்கு இடம் உண்டு. ஆனால் நேற்று மாதிரி எதாவது நடந்துவிட்டாள் அதுதான் அவள் தயக்கம் அதை எப்படி அவன்கிட்ட சொல்லமுடியும் ' என நினைத்தபடி நின்றாள்.

" ரேணுமா இப்படி உட்காரு இதோ வரேன் " என்றுவிட்டு வெளியே சென்றான். ' இந்த நேரம் என்னவா இருக்கும் ' என நினைத்து கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தவன் அவள் அருகே அமர்ந்து கையை நீட்ட சொல்ல அவள் அப்படியே செய்ய அவள் கையில் வைத்தான் அதை ' கண்ணாடி வளையல்கள் ' .

அவளுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை அவனை நிமிர்ந்து பார்க்க ." நீ இந்த வளையலை பார்த்தபடி இருந்தியா அப்ப உன்னை நான் கூப்பிட்டேன் நீ கவனிக்கல அப்பதான் உனக்கு கண்ணாடி வளையல்னா ரொம்ப பிடிக்கும்னு உங்க அம்மா சொன்னது நினைவு வந்தது " என்றான்.

"எங்க அம்மாவா எப்போ " என அதுதான் முக்கியம் போல கேட்டாள். "ம்... உன்கிட்ட நான் பேசல தான் ஆனா உங்க வீட்டுல எல்லாரிடமும் பேசிட்டுதான் இருந்தேன் " என்றான்.

"ஆமா " என்றாள் அவள். அந்த விஷயம் அவளுக்குத் தெரியும்.

" ஒரு நாள் அப்படி பேசிட்டு இருக்கும போது நீ வந்து வளையல் வாங்கனும்னு சொல்லிட்டு பணம் கேட்ட அவங்களும் கொடுத்து அனுப்பிட்டு என்கிட்ட சொன்னாங்க " என்றான்.

" அப்படியா நீங்க பேசும் போது நான் எப்படி அங்க வந்தேன் " என அவனிடம் கேட்டாள்.

"ம் அதுவும் சொல்லி இருக்காங்க. நான் பேசுறன்னு தெரிஞ்சாலே நீ அந்த பக்கமே வர மாட்டியாமே... அன்னிக்கி ஏதோ விவரம் தேவைபட்டது அது பார்த்துட்டு இருந்தாங்க அதான் நான் லைன்ல இருந்தது உனக்கு தெரியல" என்றான்.

"ம்" என்று தலையசைத்துவிட்டு அந்த வளையல்களை எடுத்து அணிய முற்பட அவன் தடுத்தான். ஏன் என்பது போல் அவள் பார்க்க " இந்த வளையல்களை நீ இப்ப போட கூடாது ." என்றவனை அவள் பாவமாக பார்க்க அவன் சிரித்துவிட்டு " நீ என்கிட்ட அங்கேயே கேட்டு வாங்கி இருந்தனா இப்ப போட்டு இருக்கலாம் ஆனா நீ கேட்கல. ஏன்னா உனக்கு என்கிட்ட அந்த அளவுக்கு உரிமை கொடுக்க இ்ன்னும் தயக்கம். உன் நிலைமையும் எனக்கு புரியுதுமா " என்றவன் அவள் கைபற்றி...

" என் நிலைமையும் நீ புரிஞ்சிக்கனும் ரேணுமா . நாம இப்படியே இருக்க முடியாது . உனக்கு எவ்வளவு நாள் தேவைபட்டாலும் நான் காத்துக்கிட்டு இருப்பேன் . நீ என்னை முழுசா ஏத்துகிட்டனு உனக்கு மனசுல படுதோ அன்னிக்கி இதை போட்டுக்க அப்ப நான் உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்" என்றான்.

அவள் சரியென மெல்ல தலையசைக்க " இப்ப நீ எதுக்கு தயங்கறனும் எனக்கு புரியுது. நேற்று மாதிரி இன்னிக்கும் நடந்துடும்னு உன்க்கு பயம் அதுதானே" என கேட்க அவள் தினரிபோனாள்.

" உங்களுக்கு தெரியுமா முகி ?" என கேட்டாள் . " ம் தெரியும் . நான் உனக்கு முன்னயே எழுந்துட்டேன். நீ என்ன பண்ண இருக்கனு பார்க்க தான் அப்படியே இருந்தேன். நீ தான் என் முகத்தை கூட பார்க்காம எழுந்து ஒடிட்ட" என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

"இப்பவே நம்ம வாழ்க்கை தொடங்க வேண்டாம்னு சொன்னது உனக்கு என்னை மனசார பிடிக்கனும்னு தான். அதுகாக என்னைவிட்டு ஒதுங்கியே இருக்கனும்னு இல்லை சரியா" என்று கேட்க

"சரி" என்றாள். அவளுக்கு அவனை நினைக்க பெருமையாக இருந்தது . இப்படி அவள் மேல் அன்பு காட்டும் அவன் மேல் அவளு்க்கு காதல் வராம இருக்குமா? நேற்றைய நிகழ்வில் சரிய தொடங்கிய அவள் மனது இன்றைய நிகழ்வில் முழுவதுமாக அவன் காலடியில் சரணடைந்துவிட்டது.

ஆனால் உடனே அவள் மனதை அவனிடம் வெளிபடுத்த அவள் தயாராக இல்லை. அவன் எப்படி அவளைப் பற்றி அனைத்தும் அறிந்து அவள் விருப்பம்படி செயல்படுகிறானோ, அதுபடி அவனை பற்றி அறிந்துக் கொண்ட பிறகு தான் அவனிடம் தன் மனதை வெளிபடுத்த வேண்டும் என நினைத்தபடி உறங்கினாள்.

பின் மறுநாள் அவன் வீட்டிற்கு சென்றனர் . அங்கே ஒரு ஐந்து நாள் இருந்துவிட்டு அதன் பிறகு அவனுடன் அவளும் அவன் வேலை பார்க்கும் ஊரில் தங்குவதாக ஏற்பாடு. அவன் வீட்டில் இருந்த ஐந்து நாட்களும் அவனைத் தவிர மற்ற எல்லாருடனும் அதிக நேரம் செலவிட்டு அவனைப் பற்றி நன்கு தெரிந்துக் கொண்ட பின்னரே அவனுடன் கிளம்பி சென்றாள்.

அவர்கள் அங்கே சென்ற பின் இருவராலும் நீண்ட நேரம் செலவிட்டு தங்கள் விருப்பங்களை பகிர்ந்துக் கொள்ள முடிந்தது. ஒரு குடும்ப தலைவியாக அனைத்து பொறுப்புகளையும் அறிந்து திறம்பட செயல்படவும் , அக்கம் பக்கம் பழக்கம் ஏற்படுத்தி கொள்ளவும், என அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை . அவனும் வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தான். அப்படியே இரண்டு மாதம் கடந்துவிட்டது.

"ரேணு" என்ற அழைப்பு கேட்டு தன் நினைவுகளில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்பினாள். இன்று அவன் வாங்கி கொடுத்த அந்த கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டிருக்கிறாள். இன்று அவன் பிறந்த நாள் அதனால் தான் இத்தனை நாள் காத்திருந்தாள்.

"ரேணுமா இந்த நேரம் வெளியே என்ன..." என்று கேட்டபடி வந்தவன் அவளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான். திருமணமான அன்று இரவு அவள் உடுத்தியிருந்த அதே புடவையுடன், அதற்கு பொருத்தமாக அவன் வாங்கி கொடுத்த கண்ணாடி வளையல்களுடன் அவள்.

அவன் அருகே சென்ற அவள் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் முகி " என்று கூறிவிட்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவன் போன்று அவளை அணைத்துக்கொண்டான்.

"உங்க ரேணு கானமா நான் இருக்க தயார்" என்றாள். முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் நின்றான். பின் அவளை ஏற்றுகொண்டதன் அச்சாரத்தை அவள் இதழ்களில் சமர்பித்தான்.

சுபம்
குட்டியான க்யூட் லவ் ஸ்டோரி... வாழ்த்துகள்..
 

பிரிய நிலா

Well-known member
Member
அழகான கதை சிஸ்..
சொல்ல வேண்டியதை கூட்டாமல் குறையாமல் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்...
புதிதாக திருமணம் ஆனதும் சில பெண்களுக்கு வரும் இயல்பான பயத்தையும் அதை அழகாக கையாண்டு அவர்களின் வாழ்க்கையை தொடங்கிய கணவனின் குணத்தையும் இதைவிட அழகாக எடுத்துக் காட்டிட முடியாது..

மேலும் நிறைய எழுதுங்கள் சிஸ்..
 
அழகான கதை சிஸ்..
சொல்ல வேண்டியதை கூட்டாமல் குறையாமல் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்...
புதிதாக திருமணம் ஆனதும் சில பெண்களுக்கு வரும் இயல்பான பயத்தையும் அதை அழகாக கையாண்டு அவர்களின் வாழ்க்கையை தொடங்கிய கணவனின் குணத்தையும் இதைவிட அழகாக எடுத்துக் காட்டிட முடியாது..

மேலும் நிறைய எழுதுங்கள் சிஸ்..
மிக்க நன்றி சிஸ்😍😍😍😀
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom