ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
கண்ணம்மாவை காதலியாக எண்ணி வர்ணிக்கும் பாரதியின் வரிகள்இதை படிக்கிறப்ப யாருமே இதை விட அழகா தன்னோட காதலிய வர்ணிக்கவே முடியாதுனு தோணும்...
பாடல் : சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
எழுதியவர் : பாரதி
கண்ணம்மாவை காதலியாக எண்ணி வர்ணிக்கும் பாரதியின் வரிகள்இதை படிக்கிறப்ப யாருமே இதை விட அழகா தன்னோட காதலிய வர்ணிக்கவே முடியாதுனு தோணும்...
பாடல் : சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
எழுதியவர் : பாரதி
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
இந்த பாடலை ஆடியோவாகவும் கேட்டு பாருங்க