• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நந்தவனம் குறுநாவல் போட்டி!

சிவஸ்ரீ

Active member
Member
நந்தவனம் குறுநாவல் போட்டி!

வணக்கம் நண்பர்களே!

முதல் முறையாக நமது தளத்தில் ஒரு போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நந்தவனம் குறுநாவல் போட்டி!

நந்தவனத்தில் எப்படி பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குமோ, அதே போல் நாவல் பூக்களையும் நந்தவனத்தில் மலர செய்வோம்!

குடும்பம் ஒரு கதம்பம் போல் குடும்ப கதை தான் நமது கதை களமாக அமைய போகிறது.

குடும்பத்தில் பந்தம், பாசம், காதல், நட்பு, பகை, ஒற்றுமை, வெறுப்பு, விருப்பு என்று அனைத்தும் அடங்கிவிடும். உங்கள் கைவண்ணத்தில் குடும்ப உறவுகளின் மகிமையை எடுத்துச் சொல்லுவோம்.

குடும்ப நந்தவனத்தை பூக்க வைக்க வாருங்கள்.

போட்டியில் வெல்லும் எழுத்தாளர்களுக்கான பரிசு தொகை

முதல் பரிசு :- 5000
இரண்டாம் பரிசு :- 3000
மூன்றாம் பரிசு :- 2000

வாசகர்களுக்கும் பரிசுகள் உண்டு.

தளத்தில் கருத்துக்கள், விமர்சனங்கள் பகிர்ந்து கொள்ளும் வாசகர்களுக்கு புத்தகப்பரிசு வழங்கப்படும்.

(அதிகமான கருத்துக்கள், விமர்சனங்கள் பதிவு செய்யும் பத்து வாசகர்களுக்கு தேர்ந்தெடுத்து வழங்கப்படும்)

# குடும்பம், காதல், நட்பு, பாசம், நகைச்சுவை என்று எல்லாம் கலந்த குடும்ப கதை கருவாக இருக்க வேண்டும்.

# தலைப்பு உங்கள் விருப்பம் போல் இருக்கலாம்.

# கதையில் காதல் காட்சிகள் முகம் சுளிக்கும் வண்ணம் இருக்க கூடாது.

# பிழையில்லாமல் எழுத வேண்டும்.

# ஜுலை ஒன்றாம் தேதியிலிருந்து கதையைத் தொடங்க வேண்டும்.

# அதற்கு முன் கதையைத் தொடங்குவது என்றாலும் ஆட்சேபனை இல்லை. ஆனால், முடிக்க வேண்டிய தேதிக்குள் முடித்துவிட வேண்டும்.

# கதையை முடிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 15. அன்று இரவு 12 மணிக்குள் பதிவு செய்துவிட வேண்டும்.

# 20000 இருந்து 25000 வார்த்தைகளுக்குள் கதையை முடிக்க வேண்டும்.

# உங்கள் சொந்த கற்பனை கதைகளாக மட்டுமே இருக்க வேண்டும்.

# வேறு தளத்திலோ, பத்திரிக்கையிலோ வெளிவந்த கதைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

# எழுத்தாளர்கள் உங்கள் பெயரை பதிய வேண்டிய கடைசி நாள் ஜூன் 30.

# எழுத்தாளர்கள் உங்கள் பெயரை மறைத்து தான் கதைகள் எழுத போகிறீர்கள். நந்தவனம் என்பதால் பூக்கள் பெயரில் நீங்கள் ஒரு முகப்புத்தக ஐடி ஓபன் செய்து கொள்ளலாம்.

# அதே போல் தளத்திலும் உங்கள் பூ பெயரில் ஒரு ஐடி ஓபன் செய்ய வேண்டும். அந்த பூ பெயர் ஐடியில் தான் தளத்தில் போஸ்ட் போட வேண்டும்.


# போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்கள் பெயர் அறிவிக்கும் வரை உங்கள் புனைபெயரை (பூக்கள் பெயர்) மட்டுமே உபயோகிக்க வேண்டும். உண்மையான பெயரை வெளிப்படுத்தக் கூடாது. மீறினால் அவர்கள் போட்டியில் இடம் பெற முடியாது.

# வாசகர்களின் vote மூலமாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்.

# உங்கள் கதையின் தலைப்புடன் [email protected] என்ற மின்னஞ்சலில் எழுத்தாளர்கள் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

# கதை நவம்பர் மாதம் இறுதி வரை தளத்தில் இருக்கும். அதற்கு பிறகு லிங்க் எடுப்பதும், தொடர்ந்து தளத்தில் வைத்திருப்பதும் எழுத்தாளர் விருப்பம் மட்டுமே.

# முதலில் பெயரை பதிவு செய்யும் 50 நபர்கள் மட்டுமே அனுமதி!

View attachment 324
Best wishes to All the writers💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom