குறுநாவல் போட்டி ஆரம்பம் முதல் முடிவு வரை மிகச்சிறப்பாக நடத்திட்டீங்க எழில். போட்டியாளராக சில நாட்களும், வாசகியாக பல நாட்களும், எழுத்தாளர்களுடன் சில நேரங்களும், பூக்களுக்குள் ஒளிந்திருந்ததும் அதே எழுத்தாளர் தான் என்று தெரியாமல் பல நேரங்களிலும் பேசிப்பழகி, கதைக்குக் கருத்து, விமர்சனம் தருகிறேன் என்ற பெயரில் மொக்கை போட்டு இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
போட்டியின் காலவகாசம் நீடிக்க முடியாது என்று நீங்கள் அறிவித்த போது, ஒரு போட்டியாளராக வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், சொன்ன தேதிக்குள் கதை எழுதி முடித்த எழுத்தாளர்களின் உழைப்பிற்கு நியாயம் செய்யவேண்டும் என்று நீங்கள் அதில் குறிப்பிட்டிருந்த காரணம் அருமை எழில். எல்லாவிதத்திலும் கண்ணியமான முறையில் நீங்கள் போட்டி நடத்தியவிதம் அற்புதம்.
வாசகியாக என்னை அடையாளம் கண்டுகொண்டும், இந்தியாவில் அம்மா வீட்டிற்குப் புத்தகம் அனுப்புவீர்களா என்று கேட்டதும், உடனே சம்மதம் தெரிவித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் மா.