அன்பே உந்தன் சஞ்சாரமே.
ஆதி வெளி நாடு செல்லும்முன் தங்கை திருமணத்தை முடித்துவிட்டு அம்மாவை பார்த்துக்கொள்ள தன் திருமணத்தையும் முடித்து வெளி நாடு செல்கிறான்.பிரயு கணவனின் குடும்பத்தை கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்கிறாள்.கணவனின் பிரிவு ஒரு புறம்,மாமியாரின் மகள் பாசம்,வித்யாவின் குடும்ப வாழ்க்கையை பார்த்து ஏக்கம் இப்படி நாட்களை கடத்துகிறாள்.மகளின் வாழ்வில் இருக்கும் அக்கறை மகன் வாழ்வில் இருப்பதில்லை சில அம்மாக்களுக்கு.
அனைவரின் நடவடிக்கை,கணவனின் பிரிவு,குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் அழுத்தங்கள் சேர்ந்து பிரயுவின் உடல் நலம் சீர் கெடுகிறது.ஆதி தன் கோணத்தில் நினைத்திருக்க பிரயுவின் பார்வையில் தன் தவறு புரிகிறது.படிக்கும் நமக்கே ஆதியின் மீது எரிச்சல் வருகிறது.பிரயுவின் கேள்விகள் சுளீர்!எங்கிருந்தோ வரும் பெண் இவன் குடும்பத்தை கவனிக்கணுமாம்,இவன் தன் வேலையில் முன்னேறுவானாம்,இவன் அம்மா தன் பெண்ணை மட்டும் தாங்குவார்களாம்,என்ன ஒரு கொடுமை?!பிரயுவின் அப்பா மீதுதான் எனக்கு கடும் கோபம் வருது!என்ன ஆண்களோ?
தன் தவறு புரிந்து தவிக்கும் ஆதி!வழக்கம்போல மன்னிக்கும் மனைவி!வேறு என்ன செய்ய முடியும்?ஆண்களின் புரிதல் அவ்வளவுதான்!பெண்களின் இந்த குணங்கள் இல்லையென்றால் நம் ஊரில் குடும்ப அமைப்புகள் உடைந்து விடும்.
ஆதி வெளி நாடு செல்லும்முன் தங்கை திருமணத்தை முடித்துவிட்டு அம்மாவை பார்த்துக்கொள்ள தன் திருமணத்தையும் முடித்து வெளி நாடு செல்கிறான்.பிரயு கணவனின் குடும்பத்தை கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்கிறாள்.கணவனின் பிரிவு ஒரு புறம்,மாமியாரின் மகள் பாசம்,வித்யாவின் குடும்ப வாழ்க்கையை பார்த்து ஏக்கம் இப்படி நாட்களை கடத்துகிறாள்.மகளின் வாழ்வில் இருக்கும் அக்கறை மகன் வாழ்வில் இருப்பதில்லை சில அம்மாக்களுக்கு.
அனைவரின் நடவடிக்கை,கணவனின் பிரிவு,குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் அழுத்தங்கள் சேர்ந்து பிரயுவின் உடல் நலம் சீர் கெடுகிறது.ஆதி தன் கோணத்தில் நினைத்திருக்க பிரயுவின் பார்வையில் தன் தவறு புரிகிறது.படிக்கும் நமக்கே ஆதியின் மீது எரிச்சல் வருகிறது.பிரயுவின் கேள்விகள் சுளீர்!எங்கிருந்தோ வரும் பெண் இவன் குடும்பத்தை கவனிக்கணுமாம்,இவன் தன் வேலையில் முன்னேறுவானாம்,இவன் அம்மா தன் பெண்ணை மட்டும் தாங்குவார்களாம்,என்ன ஒரு கொடுமை?!பிரயுவின் அப்பா மீதுதான் எனக்கு கடும் கோபம் வருது!என்ன ஆண்களோ?
தன் தவறு புரிந்து தவிக்கும் ஆதி!வழக்கம்போல மன்னிக்கும் மனைவி!வேறு என்ன செய்ய முடியும்?ஆண்களின் புரிதல் அவ்வளவுதான்!பெண்களின் இந்த குணங்கள் இல்லையென்றால் நம் ஊரில் குடும்ப அமைப்புகள் உடைந்து விடும்.