• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடும் அறம்...

ஓம் சாயிராம்

தேடும் அறம்...

மானிடராய் பிறக்க நமக்கு கிடைத்த வரம் - அது


முற்பிறவியில் நாம் நல்வழியில் பின்பற்றிய அறம்!

அவ்வழியே நடப்போம் தினம்தோறும் - எளிதில்

உயரும் நம் வாழ்வாதாரம் - இதை

கடைப்பிடிக்க தேவையில்லை பெரும் தவம் - காரணம்

அன்பும் அடைக்கலமும் மட்டுமே இதன் தாரக மந்திரம்!



இத்தனை அற்புதமான நற்பண்பினை

எங்கே இழந்தோம்? எவ்விதம் மீட்போம்?



ஆழ்கடலில் விழுந்த கல் போல – இயந்திரமான

அவசர வாழ்க்கையில் தொலைத்து விட்டோமா-இல்லை

மளமளவென ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியில்

மனம் போன போக்கில் மறந்து விட்டோமா - இல்லை

நாகரிகம் காட்டிய சுகமான வழிபாதையில் - அதை

நாளடைவில் சுலபமாய் பறிகொடுத்து தான் விட்டோமா?



அன்பு செலுத்தி அழகாய் அரவணைப்போம் - பிறர்

ஆழ்மனதில் உள்ள துயரங்களை துடைப்போம்!

இயற்கை அன்னை எழில் குறையாமல் காப்போம் - என்றென்றும்

ஈண்டுநீர் போல அயராமல் உழைப்போம் – குறைவில்லாமல்

உணவை பகிர்ந்து, பசி பட்டிணியை ஒழிப்போம் - எப்போதும்

ஊரார் போற்ற இனிமையான நற்சிந்தனைகளை பேசுவோம்!

எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம் - பாடசாலையில்

ஏட்டுக் கல்வியுடன் அனுபவக் கல்வியும் சேர்த்துத் தருவோம் - வழிவழியாய்

ஐதிகம் என சான்றோர் சொன்ன பொன்மொழிகளை பின்பற்றுவோம்!

ஒற்றுமையாய் ஒருமித்த எண்ணங்களுடன் செயல்படுவோம் - வாழ்க்கையில்

ஓங்கி உயர்ந்து அனவைரும் நேசிக்கும் மனிதராய் இருப்போம் - என்றும்

ஔவை சொன்ன ‘நல்வழி’ படி நடப்போம்;

அஃதே இழந்த நற்பண்பினை மீட்போம்!



அன்றாடம் மற்றவர்கள் நலனில் அக்கறையாய் இருப்போம் - நம்மால்

முடிந்த உதவியை மன நிறைவுடன் செய்வோம் – அப்போது

விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை வெளியே எங்கும் தேடாமல்,

நமக்குள்ளே கண்டுகொள்வோம் நாம் தேடும் அறம்…




-வித்யா வெங்கடேஷ்
பின்குறிப்பு:
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.

இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் அன்புள்ளங்களே!
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அன்பும் அறனும்
ஆசையும் ஆவலும்
இன்பம் துன்பமும்
ஈகையும் பகையும்
உறவும் பிரிவும்
ஊக்கமும் உற்சாகமும்
எண்ணமும் செயலும்
ஏக்கம் நோக்கமும்
ஐயமுடன் வாழும் மானிடமே
ஒற்றுமையுடன் இருந்தால்
ஓராயிரம் கனவுகளை
நினைவாக்கலாம்!!!!!!

இன்றைய தலைமுறையினர்க்கு
நல்லதை எடுத்து சொல்வோம்
நல்லதை விதைத்து செல்வோம்!!!!

அழகான வரிகள்!!!!
அருமையான பதிவு!!!
மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி!!!!!
 
அன்பும் அறனும்
ஆசையும் ஆவலும்
இன்பம் துன்பமும்
ஈகையும் பகையும்
உறவும் பிரிவும்
ஊக்கமும் உற்சாகமும்
எண்ணமும் செயலும்
ஏக்கம் நோக்கமும்
ஐயமுடன் வாழும் மானிடமே
ஒற்றுமையுடன் இருந்தால்
ஓராயிரம் கனவுகளை
நினைவாக்கலாம்!!!!!!

இன்றைய தலைமுறையினர்க்கு
நல்லதை எடுத்து சொல்வோம்
நல்லதை விதைத்து செல்வோம்!!!!

அழகான வரிகள்!!!!
அருமையான பதிவு!!!
மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி!!!!!
நன்றிகள் பல தோழி! இன்னும் 'அன்பின் ஆழம்' தாக்கம் உங்களுக்கும் உள்ளதா😜😜உங்களுக்கும் என்னைப்போலவே 'அ' முதல் 'ஔ' வரை எழுதுவது பழக்கமாகிவிட்டதா :LOL::LOL:

ஔவை பாட்டி ஆத்திசூடி போலவே, உங்கள் கவிதை வரிகள் நறுக்கென்று இருக்கிறது. அருமயோ அருமை!!!
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom