ஓம் சாயிராம்
மானிடராய் பிறக்க நமக்கு கிடைத்த வரம் - அது
முற்பிறவியில் நாம் நல்வழியில் பின்பற்றிய அறம்!
அவ்வழியே நடப்போம் தினம்தோறும் - எளிதில்
உயரும் நம் வாழ்வாதாரம் - இதை
கடைப்பிடிக்க தேவையில்லை பெரும் தவம் - காரணம்
அன்பும் அடைக்கலமும் மட்டுமே இதன் தாரக மந்திரம்!
இத்தனை அற்புதமான நற்பண்பினை
எங்கே இழந்தோம்? எவ்விதம் மீட்போம்?
ஆழ்கடலில் விழுந்த கல் போல – இயந்திரமான
அவசர வாழ்க்கையில் தொலைத்து விட்டோமா-இல்லை
மளமளவென ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியில்
மனம் போன போக்கில் மறந்து விட்டோமா - இல்லை
நாகரிகம் காட்டிய சுகமான வழிபாதையில் - அதை
நாளடைவில் சுலபமாய் பறிகொடுத்து தான் விட்டோமா?
அன்பு செலுத்தி அழகாய் அரவணைப்போம் - பிறர்
ஆழ்மனதில் உள்ள துயரங்களை துடைப்போம்!
இயற்கை அன்னை எழில் குறையாமல் காப்போம் - என்றென்றும்
ஈண்டுநீர் போல அயராமல் உழைப்போம் – குறைவில்லாமல்
உணவை பகிர்ந்து, பசி பட்டிணியை ஒழிப்போம் - எப்போதும்
ஊரார் போற்ற இனிமையான நற்சிந்தனைகளை பேசுவோம்!
எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம் - பாடசாலையில்
ஏட்டுக் கல்வியுடன் அனுபவக் கல்வியும் சேர்த்துத் தருவோம் - வழிவழியாய்
ஐதிகம் என சான்றோர் சொன்ன பொன்மொழிகளை பின்பற்றுவோம்!
ஒற்றுமையாய் ஒருமித்த எண்ணங்களுடன் செயல்படுவோம் - வாழ்க்கையில்
ஓங்கி உயர்ந்து அனவைரும் நேசிக்கும் மனிதராய் இருப்போம் - என்றும்
ஔவை சொன்ன ‘நல்வழி’ படி நடப்போம்;
அஃதே இழந்த நற்பண்பினை மீட்போம்!
அன்றாடம் மற்றவர்கள் நலனில் அக்கறையாய் இருப்போம் - நம்மால்
முடிந்த உதவியை மன நிறைவுடன் செய்வோம் – அப்போது
விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை வெளியே எங்கும் தேடாமல்,
நமக்குள்ளே கண்டுகொள்வோம் நாம் தேடும் அறம்…
-வித்யா வெங்கடேஷ்
பின்குறிப்பு:
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.
இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் அன்புள்ளங்களே!
தேடும் அறம்...
மானிடராய் பிறக்க நமக்கு கிடைத்த வரம் - அது
முற்பிறவியில் நாம் நல்வழியில் பின்பற்றிய அறம்!
அவ்வழியே நடப்போம் தினம்தோறும் - எளிதில்
உயரும் நம் வாழ்வாதாரம் - இதை
கடைப்பிடிக்க தேவையில்லை பெரும் தவம் - காரணம்
அன்பும் அடைக்கலமும் மட்டுமே இதன் தாரக மந்திரம்!
இத்தனை அற்புதமான நற்பண்பினை
எங்கே இழந்தோம்? எவ்விதம் மீட்போம்?
ஆழ்கடலில் விழுந்த கல் போல – இயந்திரமான
அவசர வாழ்க்கையில் தொலைத்து விட்டோமா-இல்லை
மளமளவென ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியில்
மனம் போன போக்கில் மறந்து விட்டோமா - இல்லை
நாகரிகம் காட்டிய சுகமான வழிபாதையில் - அதை
நாளடைவில் சுலபமாய் பறிகொடுத்து தான் விட்டோமா?
அன்பு செலுத்தி அழகாய் அரவணைப்போம் - பிறர்
ஆழ்மனதில் உள்ள துயரங்களை துடைப்போம்!
இயற்கை அன்னை எழில் குறையாமல் காப்போம் - என்றென்றும்
ஈண்டுநீர் போல அயராமல் உழைப்போம் – குறைவில்லாமல்
உணவை பகிர்ந்து, பசி பட்டிணியை ஒழிப்போம் - எப்போதும்
ஊரார் போற்ற இனிமையான நற்சிந்தனைகளை பேசுவோம்!
எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வோம் - பாடசாலையில்
ஏட்டுக் கல்வியுடன் அனுபவக் கல்வியும் சேர்த்துத் தருவோம் - வழிவழியாய்
ஐதிகம் என சான்றோர் சொன்ன பொன்மொழிகளை பின்பற்றுவோம்!
ஒற்றுமையாய் ஒருமித்த எண்ணங்களுடன் செயல்படுவோம் - வாழ்க்கையில்
ஓங்கி உயர்ந்து அனவைரும் நேசிக்கும் மனிதராய் இருப்போம் - என்றும்
ஔவை சொன்ன ‘நல்வழி’ படி நடப்போம்;
அஃதே இழந்த நற்பண்பினை மீட்போம்!
அன்றாடம் மற்றவர்கள் நலனில் அக்கறையாய் இருப்போம் - நம்மால்
முடிந்த உதவியை மன நிறைவுடன் செய்வோம் – அப்போது
விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை வெளியே எங்கும் தேடாமல்,
நமக்குள்ளே கண்டுகொள்வோம் நாம் தேடும் அறம்…
-வித்யா வெங்கடேஷ்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் நடத்திய கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.
இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் அன்புள்ளங்களே!