• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கடலாக கண்ணானதே

Chithu

✍️
Writer
இந்தக் சிறுகதை முற்றிலும் எனது சொந்தப் படைப்பே...! யாரேனும் அடுத்தவர் படைபென்று வந்தால் ரிப்போர்ட் செய்யப்படும்...

கடலாக கண்ணானதே

தன்னெதிரே இருந்தவளின் கண்கள் சிவந்து கோபத்தைப் பிரதிபலித்து துளி துளியாய் விழி நீரை வார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டவனின் கண்களில் பெரும் ஆழியே சூழ் திருந்தது. தனது அலட்சியத்தால் தன்னவள், தண்டனை பெற்று வாழ்ந்திருக்கிறாள் என்று.
இதுவரையிலும் அப்பேதை தன்னிலை அறியாது பித்து பிடித்து அவனோடு குழந்தையாய் ஒன்றி, உறங்கி, உண்டு இருந்தவளுக்கு, பித்து தெளிய, அன்றிருவில் அவள் கண்ட அவனது வதனம் ஞாபகத்தில் வர, அவன் மேல் கோபப்பார்வை வீசினாள். அப்பார்வை எதிர்கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி அமர்ந்திருந்தான்.


"நீங்க செய்த தப்புக்கு பிராய்ச்சித்தம் செய்றீங்களா சார்? எவ்வளவு கெஞ்சினேன் என்னை காப்பாத்துங்கன்னு, நீங்க கேட்டீங்களா? இதுவே உங்க அக்கா , தங்கச்சி யாராவது அந்த இடத்துல இருந்திருந்தா காப்பாத்திருப்பீங்க தானே? உங்க வீட்டு பொண்ணுங்கன்ன ஒரு மாதிரியும் மத்த வீட்டுப் பொண்ணுங்க வேற மாதிரி பார்ப்பீங்க அப்படிதானே?" என்று கேள்வியால் குத்தி கிழிக்க,
"இல்ல காயூ... நான்?"என்னும் போதே தடுத்தவள், "காயூ இல்லை காயத்திரி" என்றாள் சன்னமாக,
"இருக்கட்டும், ஆனா நீ எப்பயும் எனக்கு என் காயூ தான். என் செல்லம் தான்" என்றவனின் இதழில் சிறு புன்முறுவல் வந்து போக அவள் முறைப்பில் அம்முறுவலை அடக்கினான்.



"இங்க பாரு காயூ..." என அழுத்தியவன், "நான் அந்த நேரத்துல கழுத்தளவு குடிச்சிருந்தேன் நிதானத்துல இல்ல. நீ வந்து வண்டில மோதும் போது உன் முகத்தை பார்த்தது தான். ஆனா, நான் இருந்த நிலமையில எனக்கு எதுவும் செய்ய தோணலை அங்கிருந்து கிளம்பிட்டேன். மறுநாள் நியூஸ் பேப்பர்ல உன் புகைப்படத்தை பார்த்தும் தான் உன்னைத் தேடி வந்தேன். ஆனால் அதிர்ச்சில உனக்கு எல்லாம் மறந்து நீ உன் சுயநினைவை இழந்துட்டன்னு டாக்டர் சொன்னங்க. உன்னை தேடி யாரும் வரலன்னும் சொன்னாங்க. அதான் உன்னை கூட்டிட்டு போய் நான் பார்த்துக்கிட்டேன்" என்று கூறி முடித்தாலும் அவள் கண்ணில் கோபம் குறையவில்லை.


" குடி, அந்த குடினால தானே நான் இந்த நிலைமையில் இருக்கேன். உங்க சுயநினைவை இழக்க வைக்கிற அந்தக் குடியில என்ன தான் இருக்கோ. குடிச்சா, எந்த தப்பு வேணா செய்ய சொல்லுமா? வேலை முடிச்சிட்டு என் வீட்டுக்கு போயிட்டு இருக்கும் போது என் ஸ்கூட்டி சரியா நின்னுடுச்சு, என்ன பண்ண தெரியமா பஸ் ஸ்டாண்ட்ல போய் நின்னேன்.. நாலஞ்சு குடிக்கார பசங்க என்னை பார்த்ததும் கிட்ட வந்த தப்பா நடந்துக்க பார்த்தாங்க. அவங்க கிட்ட இருந்து தப்பிச்சி ஓடிவரும் போது தான் உங்க வண்டில் மோதினேன். ஆனால் நீங்க என்னை பொருட்டாவே மதிக்காம வண்டியை எடுத்துட்டு போயிட்டீங்க. அந்தக் குடிக்கார பசங்க கையில் மாட்டி, என்னை..." முடிக்கும் தருவாயில் அழுகை முட்டிக் கொண்டி வந்தது.


"காயூ..." அவள் கைகளை அழுத்த, தட்டிவிட்டவள், " நீங்க, நிதானமா இருந்திருந்தால் என்னை நீங்க காப்பத்திருப்பீங்க தானே? நானும் அந்த பசங்க கிட்ட மாட்டி சீரழிஞ்சு இருக்க மாட்டேன். பைத்தியமாயிருக்க மாட்டேன்... என் வாழ்க்கையும் மத்த பொண்ணுங்க மாதிரி இருந்திருக்கும்..." என வேதனை கொண்டு அழ ஆரம்பித்தாள்.


"என்னை மன்னிச்சிடு காயூ, நான் பண்ணது தப்பு தான். அந்த பாழாப்போனா குடியினால் தான், என்னாலையும் அந்தப் பசங்கனாலையும் உன் வாழ்க்கை சீரழிந்து போச்சு. இப்போ அதெல்லாம் நினைக்காமல் ஒரு கெட்ட கனவா, அதை மறந்து புது பொறப்பா நினைச்சு வாழு காயூ... ப்ளீஸ்" எனக் கெஞ்ச, அமைதியாக இருந்தாள்.


"என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது காயூ, நீ உன் சுயநினைவை இழந்தாலும் என்னை ஒரு தாய போல பார்த்து கிட்ட, உன் கையால் கிடைக்கிற அந்த சின்ன சோத்து பருக்கையும் என் அம்மா கையால சாப்பிட்டது போல் இருக்கும். எனக்குன்னு இருக்கிற ஒரு சொந்தம் நீ தான் காயூ. என்னை விட்டு போகாத " எனக் கெஞ்சியழுதான்.


அவனது அழுகையை அவளால் பார்க்க முடியவில்லை." உங்க பேர் என்ன?" என வினவ, " விஷ்வா" என்றான். " நீங்க தான் என்னை பார்த்துக்கீட்டீங்களா?" என ஆர்வமாக கேட்க, " ஆமா, நீ என் கூட குழுந்தை போல் ஒட்டிகிட்ட, உனக்காக நான் ஒரு பாட்டியை வேலைக்கு வச்சேன். அவங்க தான் உன்னை குளிக்க வச்சு ட்ரெஸ் செஞ்சு பண்ணிவிடுவாங்க, சாப்பிடுறது மட்டும் எங்கிட்ட தான். மார்னிங் அவங்க உன்னை பார்த்துப்பாங்க, நையிட் முழுக்க என்கூட தான் இருப்ப" என்று எல்லாத்தையும் அவளிடம் சொல்ல, அவள் கண்கள் அகல விரிந்தது. " இப்போ உனக்கு நினைவு திரும்பிருச்சு தான் இருந்தாலும் என்னை விட்டு நீ போயிடுவியா? " என விழிகளில் தேக்கி வைத்த காதலையும் கெஞ்சுதல் பார்வையும் கண்டு அவளுக்குள் அதிர்வலைகள் வந்து போக, எதுவும் சொல்லாமல், " எனக்கு பசிக்குது எதாவது செஞ்சு கொண்டு வா" என்றாள் அச்சூழ்நிலையை மாற்றும் விதமாக, அவனும் வேக வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தான்.


லைட்டார் வைத்து அடுப்பை பற்றவைத்தவன் தோசை கல்லை வைத்தான். சூடாகும் வரை அமைதியாக நின்றவனுக்கு மீண்டும் அன்றைய நிகழ்வு ஞாபகம் வந்தது.

பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று கழுத்து வரைக்கும் குடித்து விட்டு வருபவனுக்கு சாலை சரிவர தெரியவில்லை வண்டி தாருமாறாக சென்றது. அவனே தன் கட்டுப்பாட்டில் இல்லை பிறகு வண்டி எப்படி இருக்கும் ? சரியாக அவன் வண்டி முன்னே வந்து மோதியவள், காப்பாத்த சொல்லி கெஞ்ச, அவளை பார்த்திருந்தவன் அவளை சட்டை செய்யாது அங்கிருந்து சென்று விட்டான்.
செய்தித்தாளில் அவளது புகைப்படமும் சம்பவம் நடந்த ஏரியாவையும் குறிப்பிட்டு செய்தியாக இருக்க, அதைக் கணித்து தான் அங்கு சென்றான். அவளோ, கற்பழித்த அதிர்ச்சியில் மூளை மழுங்கி பித்து பிடித்தது போலானாள். அதன் பின் அவளை பற்றி அவன் விசாரிக்க அவளுக்கு யாருமில்லை ஆசரமத்தில் வாழ்ந்தவள் என்றும் ஹாஸ்டல் தங்கிருப்பதாகவும் தெரியவந்தது.
அவளை அவனே அழைத்து வந்து வீட்டிலே பார்த்து கொண்டான். குழுந்தையாய் அவனோடு ஒட்டிக் கொண்டு வலம் வந்தவளை பார்க்க அப்படியொரு நிம்மதியும் ஆனந்தமும்... அவளைக் நன்கு கவனித்து கொண்டான்.
மீண்டும் ஏற்பட்ட ஓரு அதிர்ச்சியினால், அனைத்தும் அவளுக்கு ஞாபகம் வந்தது...


" உள்ள என்ன பண்ற? எனக்கு பசிக்கிது" மீண்டும் கத்த, கல்லும் காய்ந்திட, மாவை ஊற்றினான். கடலாக இருந்த கண்ணீரும் ஒற்றை ஆனந்த துளியானது.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom