• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்போம்! - 13

Ezhilanbu

Administrator
Staff member
Writer
25) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.

எ-டு.

கூவா + குயில் = கூவாக் குயில்

அறியா + பிள்ளை = அறியாப் பிள்ளை

வேண்டா + தவம் = வேண்டாத் தவம்

காணா + காட்சி = காணாக் காட்சி

சொல்லா + சொல் = சொல்லாச் சொல்

நிலையா + பொருள் = நிலையாப் பொருள்

தீரா + துன்பம் = தீராத் துன்பம்

வாரா + செல்வம் = வாராச் செல்வம்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
26) சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர். மக்கு, தச்சு, செத்து, விட்டு, உப்பு, கற்று ஆகிய இவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்.

இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப (முறையே கௌ, சௌ, தௌ, பௌ வரையிலுள்ள எழுத்துகள்) என்னும் எழுத்துகள் வந்தால் வலி மிகும். அதாவது வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

மக்கு + பையன் = மக்குப் பையன்

தச்சு + தொழில் = தச்சுத் தொழில்

விட்டு + சென்றார் = விட்டுச் சென்றார்

செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்

உப்பு + கடை = உப்புக் கடை

கற்று + கொடுத்தார் = கற்றுக் கொடுத்தார்

பத்து + பாட்டு = பத்துப் பாட்டு

எட்டு + தொகை = எட்டுத் தொகை

எதிர்த்து + பேசினார் = எதிர்த்துப் பேசினார்

விற்று + சென்றான் = விற்றுச் சென்றான்

கேட்டு + கொண்டான் = கேட்டுக் கொண்டான்

கேட்டு + செய்தான் = கேட்டுச் செய்தான்

மீட்டு + தந்த = மீட்டுத் தந்த

பாட்டு + பாடு = பாட்டுப் பாடு
 

Santirathevan_Kadhali

✍️
Writer
25) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.

எ-டு.

கூவா + குயில் = கூவாக் குயில்

அறியா + பிள்ளை = அறியாப் பிள்ளை

வேண்டா + தவம் = வேண்டாத் தவம்

காணா + காட்சி = காணாக் காட்சி

சொல்லா + சொல் = சொல்லாச் சொல்

நிலையா + பொருள் = நிலையாப் பொருள்

தீரா + துன்பம் = தீராத் துன்பம்

வாரா + செல்வம் = வாராச் செல்வம்
sirapaana pathivu akka
 

Santirathevan_Kadhali

✍️
Writer
26) சொற்கள் க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர். மக்கு, தச்சு, செத்து, விட்டு, உப்பு, கற்று ஆகிய இவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்.

இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப (முறையே கௌ, சௌ, தௌ, பௌ வரையிலுள்ள எழுத்துகள்) என்னும் எழுத்துகள் வந்தால் வலி மிகும். அதாவது வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.

எ-டு.

மக்கு + பையன் = மக்குப் பையன்

தச்சு + தொழில் = தச்சுத் தொழில்

விட்டு + சென்றார் = விட்டுச் சென்றார்

செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்

உப்பு + கடை = உப்புக் கடை

கற்று + கொடுத்தார் = கற்றுக் கொடுத்தார்

பத்து + பாட்டு = பத்துப் பாட்டு

எட்டு + தொகை = எட்டுத் தொகை

எதிர்த்து + பேசினார் = எதிர்த்துப் பேசினார்

விற்று + சென்றான் = விற்றுச் சென்றான்

கேட்டு + கொண்டான் = கேட்டுக் கொண்டான்

கேட்டு + செய்தான் = கேட்டுச் செய்தான்

மீட்டு + தந்த = மீட்டுத் தந்த

பாட்டு + பாடு = பாட்டுப் பாடு
payanulla pathivu akka super
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom