ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
நேத்து அன்னையர் தினம்... முகப்புத்தகம், கட்செவியஞ்சல் எல்லா இடத்துலயும் 'Happy Mothers' Day' வாழ்த்துக்கள் தான்.. தாய் என்பவள் தெய்வத்துக்குச் சமானம், தாயான பின்பு தான் நீ பெண்மணி, தாய் என்பவள் தியாகத்தின் மறுவுரு... ஷ்ஷப்பா எவ்ளோ புகழாரங்கள், போற்றுதல்கள்... மெய்யாலுமே இதை பாத்து எனக்குப் புல்லரிச்சு போச்சு... அப்போ தான் என் ப்ரெயின்ல ஒரு கோட்ஸ் உதிச்சது...
அன்னையர்தின வாழ்த்துகள்நேத்து அன்னையர் தினம்... முகப்புத்தகம், கட்செவியஞ்சல் எல்லா இடத்துலயும் 'Happy Mothers' Day' வாழ்த்துக்கள் தான்.. தாய் என்பவள் தெய்வத்துக்குச் சமானம், தாயான பின்பு தான் நீ பெண்மணி, தாய் என்பவள் தியாகத்தின் மறுவுரு... ஷ்ஷப்பா எவ்ளோ புகழாரங்கள், போற்றுதல்கள்... மெய்யாலுமே இதை பாத்து எனக்குப் புல்லரிச்சு போச்சு... அப்போ தான் என் ப்ரெயின்ல ஒரு கோட்ஸ் உதிச்சது...
முகப்புத்தகத்தில் முழங்கிவிட்டு
தோசை முறுகலாக இல்லையென
தாயிடம் குறைபட்டு சாப்பிட்ட
உண்கலத்தைக் கழுவாது அகன்றான்
வாழ்த்து சொன்ன கோமகன்!
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, இந்த மாதிரி வாழ்த்துக்கள் தாய்மை துதிபாடல்கள் எல்லாம் நம்ம மக்களுக்கு அன்னையர் தினம் அன்னிக்கு மட்டும் தான் தோணுது... அதுவும் சமூக வலைதளங்கள்ல மட்டும் தான்... மறுநாள்ல இருந்து எல்லாம் சகஜமாயிடும்... அதோட வீடுகளிலோ அன்னையரின் நிலை தலைகீழ்... இதுக்கு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்... ஆனா எப்போதுமே 'விதிவிலக்குகள் விதியாவதில்லை'!