• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அறிமுகம்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே!

இங்கே உங்களைப் பற்றி நீங்கள் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் நண்பர்களே!

முதலில் என்னைப் பற்றி...

நான் ஒரு இல்லத்தரசி. நாவல்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்து விட்டு, எழுதவேண்டும் என்ற ஆசையில் எழுத வந்துவிட்டேன்.

இதுவரை பதிமூன்று தொடர்கதைகளை முடித்திருக்கிறேன்.

இன்னும் நிறைய எழுத ஆசை உண்டு.

வாசகர்கள் உங்கள் ஆதரவில் தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். :giggle:
 

Bobby Alfred

New member
Member
வணக்கம் தோழியரே.கதை படிக்க மிகவும் பிடிக்கும். இல்லத்தரசியாகிய நான் தங்கள் கதைகளை விரும்பி படிப்பேன். சில சமயம் கருத்து க்கள் பதிவு செய்து உள்ளேன். புதிய தளத்திற்கு என் வாழ்த்துகள்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் தோழியரே.கதை படிக்க மிகவும் பிடிக்கும். இல்லத்தரசியாகிய நான் தங்கள் கதைகளை விரும்பி படிப்பேன். சில சமயம் கருத்து க்கள் பதிவு செய்து உள்ளேன். புதிய தளத்திற்கு என் வாழ்த்துகள்
welcome sis
Thank you ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Hi sis, your stories are just amazed.... keep rock.... I am new to this site.... what are the stories you have written? I just read 2 stories only.
வெல்கம் சிஸ்.
எனது அனைத்துக் கதைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ரீரன் செய்து கொண்டிருக்கிறேன் சிஸ்.

இந்த லிங்கில் சென்று பாருங்கள்



 

பிரிய நிலா

Well-known member
Member
அடடா இத்தனை நாளாக இதை நான் பார்க்கவே இல்லையே...

நான்தான் பிரிய நிலா... இப்போ சைட்ல கொஞ்சம் பேரை எனக்கு தெரியும். ஒரு சிலருக்கு என்னை இப்போ தெரியும்னு நினைக்கறேன்..

கிட்டத்தட்ட முக்கால்வாசி பேருடைய கதைகளை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்...

எல்லாருமே ரொம்ப அருமையா கதையை எடுத்துட்டு போறாங்க. கீப் கோயிங் ஆல்...

என்னைப் பத்தி சொல்லனும்னா நிறைய படிக்க பிடிக்கும். காதல் குடும்பம் சார்ந்த கதைகள்னா விடாமல் படிப்பேன். பேய் திகில் மர்மம் கொலை போன்ற கதைகளை தொடவே மாட்டேன்..

அவ்ளோ தான் நம்மைப் பத்தி..
 

Yuvanandhini

✍️
Writer
வணக்கம் மக்களே, நான் யுவி தளத்திற்கு புதியவள், இப்போ தான் இந்த தளத்தையே பார்த்தேன் அதனால இனிமேல் ஒவ்வொரு கதையாக படிக்கணும், நானும் ஒரு கதை எழுத்துறேன், அதை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க.
என்னை பற்றி சொல்லனும்னா நான் சென்னைல இருக்கேன் இதுவரை ஒரு கதை தான் எழுதி இருக்கேன் ஒரு சிறு கதை எழுதியிருக்கேன், எழுத்து உலகத்துக்கு மிக புதியவள் அவ்ளோதான்.:love::giggle:🤗
 
🙏ஓம் சாய்ராம்🙏

வணக்கம், அன்பு நெஞ்சங்களே!
இந்த தளத்திற்கு நான் புதிய முகம். தளத்திற்கு மட்டுமல்ல, ஆன்லைனில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் கூட. எழுத்துலகில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்று லாக்டௌனில்(Lockdown) நான் கற்ற பாடங்களில் ஒன்று.

முதலில், வாய்ப்பு கொடுக்கும் அன்பு சகோதரி எழிலன்பு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்🙏🙏

என்னை பற்றியும், நான் இத்தளத்தில் பதிவு செய்யவிருக்கும் கதையை பற்றியும் முடிந்தளவிற்கு சுருக்கமாக இங்கு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னை பற்றி:
அமெரிக்காவில் பணிபுரிய வந்த கணவன்மார்களோடு வந்த இல்லத்தரசிகளில் நானும் ஒருத்தி. சலிக்காமல் புத்தகங்கள் படிப்பேன்; பொழுதுக்கும் பாடல்கள் கேட்பேன்; அதனால் “I am feeling bored!” என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. தற்போது ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். எங்கள் நகரத்தில் இருக்கும் தமிழ் பள்ளியிலும் பாடம் கற்றுக்கொடுக்கின்றேன்.

கதை எழுத ஆர்வம்….
சில வருடங்களுக்கு முன்பே கதை எழுத ஒரு ஆசை மலர்ந்தது. அப்போது இங்கு நடந்த “NaNoWriMo” என்ற போட்டியில் பங்கெடுத்துக்கொண்டேன். ஏனோ அதில் மனநிறைவு இல்லை. சற்று சிந்தித்து பார்த்ததில், மொழிதான் காரணம் என்று புரிந்து கொண்டேன். தாய்மொழியில் எழுதும் போது, எண்ணங்கள் அழகாக வடிவம் எடுப்பது போன்ற ஒரு உணர்வு.

கனவுகள் கதைகளாய் உருவெடுத்தன….
கனவுகள் நம் ஆழ்மனதின் பிரதிபலிப்பு என்று எங்கோ படித்த ஞாபகம். எனக்கும் நிறைய கனவுகள் வரும். அதில் சில, நெஞ்சைவிட்டு நீங்காத அளவுக்கு அத்தனை நெருக்கமாக இருந்தன. அவற்றை மையமாக வைத்து எழுத தொடங்கியதே இந்த எழுத்து பயணம்.

என் முதல் கதை – “அன்பின் ஆழம்”
கதையை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்படி உதவியும், ஊக்குவித்தும், விட்டுக்கொடுத்தும் வாழ்கிறார்கள் என்பது பற்றியே....

கதைக்கு பெயர் சூட்டுவது எவ்வளவு சிரமம் என்று முதல் கதையிலேயே உணர்ந்துவிட்டேன். அதனால், தமிழ் எழுத்து வரிசையில் பெயர்கள் வைக்கலாம் என்று நினைத்தேன். (இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று ஆசை தான்) …. என்னாலான முயற்சி நிச்சயமாக எடுப்பேன்….அதற்கு மேல் கடவுள் விட்ட வழி.

கதையை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்🙏

👇கதைக்கான லிங்க் இதோ 👇

💙அன்பின் ஆழம்💙


 
Last edited:

பிரிய நிலா

Well-known member
Member
🙏ஓம் சாய்ராம்🙏

வணக்கம், அன்பு நெஞ்சங்களே!
இந்த தளத்திற்கு நான் புதிய முகம். தளத்திற்கு மட்டுமல்ல, ஆன்லைனில் படிப்பதற்கும், எழுதுவதற்கும் கூட. எழுத்துலகில் மாபெரும் புரட்சி ஏற்ப்பட்டு இருக்கிறது என்று லாக்டௌனில்(Lockdown) நான் கற்ற பாடங்களில் ஒன்று.

என்னை பற்றியும், நான் இத்தளத்தில் பதிவு செய்யவிருக்கும் கதையை பற்றியும் முடிந்தளவிற்கு சுறுக்கமாக இங்கு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னை பற்றி:
அமெரிக்காவில் பணிப்புரிய வந்த கணவன்மார்களோடு வந்த இல்லத்தரசிகளில் நானும் ஒருத்தி. சலிக்காமல் புத்தகங்கள் படிப்பேன்; பொழுதுக்கும் பாடல்கள் கேட்பேன்; அதனால் “போர்” என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. தற்போது ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். எங்கள் நகரத்தில் இருக்கும் தமிழ் பள்ளியிலும் பாடம் கற்றுக்கொடுக்கின்றேன்.

கதை எழுத ஆர்வம்….
சில வருடங்களுக்கு முன்பே கதை எழுத ஒரு ஆசை மலர்ந்தது. அப்போது இங்கு நடந்த “NaNoWriMo” என்ற போட்டியில் பங்கெடுத்துக்கொண்டேன். ஏனோ அதில் மனநிறைவு இல்லை. சற்று சிந்தித்து பார்த்ததில், மொழிதான் காரணம் என்று புரிந்து கொண்டேன். தாய்மொழியில் எழுதும் போது, எண்ணங்கள் அழகாக வடிவம் எடுப்பது போன்ற ஒரு உணர்வு.

கனவுகள் கதைகளாய் உருவெடுத்தன….
கனவுகள் நம் ஆழ்மனதின் பிரதிபலிப்பு என்று எங்கோ படித்த நியாபகம். எனக்கும் நிறைய கனவுகள் வரும். அதில் சில, நெஞ்சைவிட்டு நீங்காத அளவுக்கு அத்தனை நெருக்கமாக இருந்தன. அவற்றை மையமாக வைத்து எழுத தொடங்கியதே இந்த எழுத்து பயணம்.

என் முதல் கதை – “அன்பின் ஆழம்”
கதையை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்படி உதவியும், ஊக்குவித்தும், விட்டுக்கொடுத்தும் வாழ்கிறார்கள் என்பது பற்றியே....

கதைக்கு பெயர் சூட்டுவது எவ்வளவு சிரமம் என்று முதல் கதையிலேயே உணர்ந்துவிட்டேன். அதனால், தமிழ் எழுத்து வரிசையில் பெயர்கள் வைக்கலாம் என்று நினைத்தேன். (இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று ஆசை தான்) …. என்னாலான முயற்சி நிச்சயமாக எடுப்பேன்….அதற்கு மேல் கடவுள் விட்ட வழி.

உங்கள் கருத்துக்களையும், நிறைகுறைகளையும், பகிர்ந்து கொள்ளுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏

வாய்ப்பு கொடுக்கும் சகோதரி எழிலன்பு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்🙏
நல்வரவு சிஸ்...நிறைய வாசியுங்கள் உங்களது கதைகளை பதிவிடுங்கள்.. நிச்சயமாக அனைவரும் படிப்போம்
 
நல்வரவு சிஸ்...நிறைய வாசியுங்கள் உங்களது கதைகளை பதிவிடுங்கள்.. நிச்சயமாக அனைவரும் படிப்போம்
ஊக்கத்திற்கு நன்றி சகோதரி 🙏
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom